Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீரிஸ் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள்

Featured Replies

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர்; ஜி.எல்.பீரிஸ் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேறிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்து அவர் பதவி விலகவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமக்கு நம்பிக்கையான மூத்த அமைச்சர்களுடன் அமைச்சர் பீரிஸ் மனந்திறந்து பேசியதாகவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக கூறியதாகவும் தெரியவருகிறது.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம மீண்டும் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது. அதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ரோஹித போகொல்லாகம தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவாரென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இதேவேளை அமைச்சர் ரெஜனோல்ட் கூரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கடுமையாக விமர்சித்தாரெனவும், இதனால் அவரது அமைச்சர் பதவி பறிபோகலாமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11557

  • கருத்துக்கள உறவுகள்

சரியான போட்டி

தோல்வியில் துவழ்வது தெரிகிறது

ஊற்றுங்கள் எண்ணையை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பீரிசுக்கு காசு வைத்தால் நிறைய தகவல்களை தருவான்.  பிரிவும் நிரந்தரம். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர்; ஜி.எல்.பீரிஸ் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

smiley.gifsmiley.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சரியான போட்டி

தோல்வியில் துவழ்வது தெரிகிறது

ஊற்றுங்கள் எண்ணையை.....

இப்படி சொல்லவேண்டும்.............

ஊத்துங்கடா எண்ணையை .........லகலகலகலகலகலகலகலகளக்.............................

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சொல்லவேண்டும்.............

ஊத்துங்கடா எண்ணையை .........லகலகலகலகலகலகலகலகளக்.............................

அப்படித்தான் எழுதணும்

ஆனால் இன்னும் தனி மனிதத்தாக்குதல் என்றால் என்ன என்று வரைவிலக்கணம் வரவில்லை. அதுவரை மாட்டிக்கொள்ளத்தயாராக இல்லை. :lol::D :D

  • தொடங்கியவர்

மந்திரிகள் எப்படியோ அப்படியே மன்னனும் அமைவான் என்பது உலக வழக்கு.

ஒபாமா பதவியேற்றபொழுது தனக்கு ஆமா போடுகிறவர்களை விட தனது முடிவுகளுக்கு சவால் விடுக்கும் மந்திரிகளே தேவை என்றார். மேலும் கட்சி பேதங்களை தாண்டி நாட்டுக்கு உழைக்ககூடியவர்களை அமர்த்தினார்.

அப்படித்தான் எழுதணும்

ஆனால் இன்னும் தனி மனிதத்தாக்குதல் என்றால் என்ன என்று வரைவிலக்கணம் வரவில்லை. அதுவரை மாட்டிக்கொள்ளத்தயாராக இல்லை. :lol::D :D

:D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :icon_idea:

நீங்க என்ன லைற்றைப்போட்டாலும் நான் கொஞ்சம் உசாராகத்தான் இருக்கின்றேன்.

பயங்கரவாதத்துக்குள்ள நாம மாட்டிக்கிட்டது போல இதுக்குள்ளயும் மாட்டிக்கொள்வதாக இல்லை.

என்னைப்பொறுத்தவரைக்கும் இரண்டுக்கும் வரைவிலக்கணும் இன்னும் கண்டு பிடிக்கல. :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனிசன் சந்திரிக்காவின் காலத்தோடு ஓய்வு பெற்றிருந்தால் ஓரளவு மரியாதையாவது இருந்திருக்கும், :)

பதவி ஆசை யாரைத்தான் விட்டது ...... ^_^

இருந்தாலும் பேராசிரியருக்கு பேராசை கூடாது :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனை அழிக்க... பாடுபட்ட ஹெகலிய ரம்புக்வெல பல்கனி தாவும் போது, தவறி விழுந்து ஆஸ்பத்திரியில்....

பீரிஸுக்கு, சுவிஸில் நிற்கும் போதே... வயித்தாலை அடி ஆரம்பிச்சிட்டுது. அப்பவே... தெரியும், ஆள்... அவுட் ஆகப் போகுதெண்டு.

அடுத்து யார்?

பீரிஸுக்கு, சுவிஸில் நிற்கும் போதே... வயித்தாலை அடி ஆரம்பிச்சிட்டுது. அப்பவே... தெரியும், ஆள்... அவுட் ஆகப் போகுதெண்டு.

அடுத்து யார்?

மேர்வின் சில்வா .....................அல்லது டாக்கி.....................மிகவும் ........பொருத்தமானவர்கள்.. :D

  • தொடங்கியவர்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் முன்னெடுத்த செயற்பாடுகளை அவதானித்த இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு ”ஜெனீவா லொஸ் பீரிஸ்” என்ற பட்டப்பெயரை சூடியிருந்தார். ஜெனீவாவில் இலங்கைக்கெதிரான பிரேரணையில் அமெரிக்கா வெற்றிகொண்டதை அடுத்து இந்தப் பெயர் அவருக்கு நிரந்தரமானது.

ஜெனீவா செயற்பாடுகள் குறித்து கொதிப்படைந்திருந்த நிலையில், இதுகுறித்து அறிந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, ”அவனுக்கு லொஸ் பீரிஸ் அல்ல ‘கிரேட் கயிறு பீரிஸ்’ என்ற பட்டம்சூட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகையொன்றின் ஆசிரியரைச் சந்தித்த மகிந்த ராஜபக்‌ஷ, ஜீ.எல்.பீரிஸ் அதிகமாக வாக்குறுதிகளுக்குப் பதிலாக கயிறுகளையே தருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இதுகுறித்து ஆசிரியர் தலையங்கமொன்றை எழுதியுள்ள குறித்த பத்திரிகை ஆசிரியர் இதனை மையப்படுத்தி கேலிச்சித்திரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஜீ.எல்.பீரிஸ் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சுப் பதவியில் நீடித்தால் இலங்கைக்குப் பாதகமான நிலையே ஏற்படும் என கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மிலிந்த மொரகொட, முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.

GL_Mahinda1.jpg

அத்துடன், வெளிவிவகார அமைச்சரின் செயற்பாடுகளை ஜெனீவா சென்றிருந்த ஊடகவியலாளர்கள் சிலரும் ஜனாதிபதி முன்னிலையில் பகிரங்கமாக விமர்சித்திருந்தனர்.

ஜனாதிபதி தனக்கு ”கயிறு பீரிஸ்” என பட்டம் சூட்டியிருப்பதை அறிந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர், முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், சஜின்வாஸ் குணவர்தன எம்.பி, ஷேனுகா செனவிரத்ன ஆகியோரே ஜனாதிபதிக்கு கயிறு கொடுத்ததாகக் கூறியுள்ளார். தனது வர்த்தக நண்பர்கள் சிலரை நேற்று முன்தினம் இரவு சந்தித்தபோது ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா சென்ற மொஹான் பீரிஸ் இரவு வேளைகளில் பியானோ வாசித்து, வாசித்து இருந்ததாகவும், சேனுகா செனவிரத்னவின் தாளத்திற்கு அவர் ஆடியதாகவும் ஜீ.எல்.பீரிஸ் தனது நண்பர்களிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.co...%25e0%25af%2587

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் தனிமனிதர்கள் மூலம்(கதிர்காமர்,பீரிஸ்,தாமரா, ரோஹித போகொல்லாக)சர்வதேசத்திற்க்கு கயிறு கொடுக்கலாம் என சிங்கள தலைமை நினைத்தால் அதை போல ஒரு முட்டாள் தனம் வேறு ஒன்றுமில்லை

பீரிஸ் ... இராஜினாமா செய்ய முடியாது!!.. அப்படி பீரிஸ் விலகுவதாயின் மகிந்த துரத்தினால் மட்டுமே இல்லை இராஜினாமா செய் நீ என மகிந்த சொன்னால் மட்டுமே!!

... பீரிஸுடன் யு.என்.பியில் இருந்து ராஜித, மிலிந்த கொம்பனி போனதே என்ன இழுத்ததே ... அத்தனை பேரையும் மகிந்த கூப்பிட்டு அவர்களது நிதி மோசடிகள், லஞ்சங்கள், பெண் நோய்களின் ஆதாரங்களை முன் போட்டு விட்டு .. வரப்போகிறீர்களோ? இல்லை அம்பலப்படுத்தட்டுமா? என்ற போடு போட்டதும் சுருண்டார்களாம்!! .. அப்படி அகப்பட்ட பீரிஸ் .. நினைத்ததை செய்ய முடியுமா?????????

மனம், ரோஷம் இல்லாத பீரிஸ் இன்னொரு ஆறுமுகம் தொண்டமான் போன்றவன் தான்.

பீரிசை மே-18 வரைக்கும் தேவை. பீரிசு நிறைய வாக்குறுதிகளுடன் வந்து கிளின்டன் அமையாரை சந்திப்பார். அதன் பின்னர் தேவைக்கு ஏற்ப அவர் வீடுபோகலாம்.

பீரிஸ் பதவியில் இருக்கும்வரைதான் வெள்ளை வானை நினைத்து தூக்கத்தை இழக்கவேண்டியிருக்கும். பதவி போய்விட்டால் அவரை தேடி வெள்ளைவான் வரக்கூடிய சந்தர்பம் அரிது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.