Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவிற்கு நிகரான துரோகி இராசதுரை – உணர்ச்சிகரமாக சிவாஜிலிங்கம் வழங்கிய செவ்வி (காணொளிகள்)

Featured Replies

img_78022-300x187.jpgதந்தை செல்வா நினைவு நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சரும்

தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் முன்னாள் முக்கியஸ்தருமான செல்லையா இராசதுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான என்.கே சிவாஜிலிங்கம் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து நிகழ்வில் இருந்து வெளியேறியிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்கள்.

http://thaaitamil.com/?p=17151

யாழ் மண்ணில் சொறிநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

ஹிந்திய சொறி நாய்களின் தொல்லைகளை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும்!

சிவாஜிலிங்கத்துக்கு ஒரு சபாஷ்!

இராசதுரை அரசகட்சிக்குத் தாவியதற்கு தமழர்விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்தின் செயற்பாடுதான் காரணம். கிழக்குத் தமிழ்த் தலைவர்களை ஒதுக்கத் துணிந்தமையினால் இந் நிகழ்வு ஏற்பட்டது.

இராசதுரை அரசகட்சிக்குத் தாவியதற்கு தமழர்விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்தின் செயற்பாடுதான் காரணம். கிழக்குத் தமிழ்த் தலைவர்களை ஒதுக்கத் துணிந்தமையினால் இந் நிகழ்வு ஏற்பட்டது.

மிகவும் தவறான பிரதேசவாதக் கருத்து.

மிகவும் தவறான பிரதேசவாதக் கருத்து.

இதில் பிரதேசவாதக் கருத்து என்ன இருக்கிறது.?

இராஜதுரை அன்று அமிதலிங்கம் சிவசிதம்பரம் ஆகியோரால் ஒதுக்கப்பட்டிருந்தார். அதனால்தான் தமிழர்விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சியின் சார்பில் இராஜதுரை மட்டக்களப்பில் போட்டியிட்டு முதன்மைத் தேர்வாளரானார்.

இதில் பிரதேசவாதக் கருத்து என்ன இருக்கிறது.?

இராஜதுரை அன்று அமிதலிங்கம் சிவசிதம்பரம் ஆகியோரால் ஒதுக்கப்பட்டிருந்தார். அதனால்தான் தமிழர்விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சியின் சார்பில் இராஜதுரை மட்டக்களப்பில் போட்டியிட்டு முதன்மைத் தேர்வாளரானார்.

அமிர்தலிங்கத்தை வடக்கின் தலைவர் என்றது அப்பட்டமான பிரதேச வாதம். உங்கள் அப்பட்டமான பிரதேச வாத கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

முதலில் அவர் ஒதுக்கப்பட்டார் என்பது தவறு. ஒழுக்கம் கெட்ட அவரது தகுதிக்கு ஏற்ற இடமே வழங்கப்பட்டது. அதாவது பொறுக்கி, பச்சோந்தி ராஜதுரை போல ஒழுக்கம் கெட்ட ஜென்மங்கள் கிழக்கில் இருந்தாலும் அவர்களை யாரும் ஒதுக்கக் கூடாது என்கிறீர்கள்? இல்லை என்றால் உங்களைப் போன்றவர்கள் கிழக்குத் "தலைவர்கள்" வடக்குத் தலைவர்களால் ஒதுக்கப்பட்டார்கள் என்று கூச்சலிட ஆரம்பித்துவிடுவீர்கள்.

அரசில் கருணாவும் தனது தவறை மறைக்க பிரதேசவாதத்தை கையில் எடுத்தான். கிழக்கின் ராஜதுரை கருணாவைப் போல் தமிழன விரோத அரசில் இணைந்ததை சரி என்று நீங்கள் கூறுவதும் பிரதேச வாதம் தான்.

நானும் கிழக்கில் இருப்பதால் இவர்களைப் பற்றி நன்றாக அறிவேன்!

அமிர்தலிங்கத்தை வடக்கின் தலைவர் என்றது அப்பட்டமான பிரதேச வாதம். உங்கள் அப்பட்டமான பிரதேச வாத கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

முதலில் அவர் ஒதுக்கப்பட்டார் என்பது தவறு. ஒழுக்கம் கெட்ட அவரது தகுதிக்கு ஏற்ற இடமே வழங்கப்பட்டது. அதாவது பொறுக்கி, பச்சோந்தி ராஜதுரை போல ஒழுக்கம் கெட்ட ஜென்மங்கள் கிழக்கில் இருந்தாலும் அவர்களை யாரும் ஒதுக்கக் கூடாது என்கிறீர்கள்? இல்லை என்றால் உங்களைப் போன்றவர்கள் கிழக்குத் "தலைவர்கள்" வடக்குத் தலைவர்களால் ஒதுக்கப்பட்டார்கள் என்று கூச்சலிட ஆரம்பித்துவிடுவீர்கள்.

அரசில் கருணாவும் தனது தவறை மறைக்க பிரதேசவாதத்தை கையில் எடுத்தான். கிழக்கின் ராஜதுரை கருணாவைப் போல் தமிழன விரோத அரசில் இணைந்ததை சரி என்று நீங்கள் கூறுவதும் பிரதேச வாதம் தான்.

நானும் கிழக்கில் இருப்பதால் இவர்களைப் பற்றி நன்றாக அறிவேன்!

நான் கிழக்கைச் சேர்ந்தவனல்ல.

இராஜதுரை ஒதுக்கப்பட்டதற்குக் கூறப்பட்ட அப்பட்டமான புனைகதையது. அக்கதை உண்மையானால் அதற்குக் காரணமான பெண் எதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரசார மேடைகளில் அனுமதிக்கப்பட்டா?

கருணாவோடு ஒப்பிடக் கூடிய அளவிற்கு இராஜதுரை துரோகியல்ல. அப்படியானால் சிவாஜிலிங்கமும் அந்த வர்க்கம்தான்.

விடுதலைக் கூட்டணியினரிடையே ஏற்பட்ட தலைமைப் பதவிப்போட்டிகள்தான் இராஜதுரை ஒதுக்கப்படக் காரணம். ஒழுக்கக் குறைவுகள் இருந்திருக்குமானால் கிழக்கில் இராஜதுரையைத் தேர்ந்தெடுத்த மக்கள் என்ன ஒழுக்கக்குறையுள்ளவரின் பின்னேயா நின்றார்கள்?

இராஜதுரை ஒதுக்கப்பட்டதற்குக் கூறப்பட்ட அப்பட்டமான புனைகதையது. அக்கதை உண்மையானால் அதற்குக் காரணமான பெண் எதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரசார மேடைகளில் அனுமதிக்கப்பட்டா?

உங்கள் வாயால் ஒருசில உண்மைகள்!

விடுதலைக் கூட்டணியினரிடையே ஏற்பட்ட தலைமைப் பதவிப்போட்டிகள்தான் இராஜதுரை ஒதுக்கப்படக் காரணம். ஒழுக்கக் குறைவுகள் இருந்திருக்குமானால் கிழக்கில் இராஜதுரையைத் தேர்ந்தெடுத்த மக்கள் என்ன ஒழுக்கக்குறையுள்ளவரின் பின்னேயா நின்றார்கள்?

அந்த நேரத்தில் ராஜதுரையின் பொறுக்கித்தனத்தை உணராத கிழக்கு மக்கள் பிரதேசவாதத்துக்கு விலை போனார்கள்! அதன் பின்னர் மக்கள் தவறை உணர்ந்து விட்டனர்! அதனால் தான் ராஜதுரை மலேசியா ஓடவேண்டி வந்தது!

கருணாவோடு ஒப்பிடக் கூடிய அளவிற்கு இராஜதுரை துரோகியல்ல. அப்படியானால் சிவாஜிலிங்கமும் அந்த வர்க்கம்தான்.

சிவாஜிலிங்கம் தமிழன உரிமைகளை அடகுவைத்து இந்திய பயங்கரவாதிகளின் தாளத்துகேற்ப எதேச்சாதிகார அரசியல் செய்யும் சம்பந்தன் போன்ற பச்சோந்திக் கும்பலால் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதைக் காரணம் காட்டி அவர் தமிழின விரோதிகளுடன் இன்றுவரை கூட்டுச் சேரவில்லை. இங்கு பெரும் தவறு செய்தது சிவாஜிலிங்கம் அல்ல. அவர் போட்டியிட்டிருந்தால் நிறைய வாக்குகளை வாங்கி விடுவார் என்று கவலைப்பட்ட எதேச்சாதிகார பச்சோந்திக் கும்பல் தான் தவறு செய்தது.

அவரை கருணா போன்ற கயவர்களுடன் துளியும் ஒப்பிட முடியாது.

உங்கள் வாயால் ஒருசில உண்மைகள்!

அந்த நேரத்தில் ராஜதுரையின் பொறுக்கித்தனத்தை உணராத கிழக்கு மக்கள் பிரதேசவாதத்துக்கு விலை போனார்கள்! அதன் பின்னர் மக்கள் தவறை உணர்ந்து விட்டனர்! அதனால் தான் ராஜதுரை மலேசியா ஓடவேண்டி வந்தது!

சிவாஜிலிங்கம் தமிழன உரிமைகளை அடகுவைத்து இந்திய பயங்கரவாதிகளின் தாளத்துகேற்ப எதேச்சாதிகார அரசியல் செய்யும் சம்பந்தன் போன்ற பச்சோந்திக் கும்பலால் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதைக் காரணம் காட்டி அவர் தமிழின விரோதிகளுடன் இன்றுவரை கூட்டுச் சேரவில்லை. இங்கு பெரும் தவறு செய்தது சிவாஜிலிங்கம் அல்ல. அவர் போட்டியிட்டிருந்தால் நிறைய வாக்குகளை வாங்கி விடுவார் என்று கவலைப்பட்ட எதேச்சாதிகார பச்சோந்திக் கும்பல் தான் தவறு செய்தது.

அவரை கருணா போன்ற கயவர்களுடன் துளியும் ஒப்பிட முடியாது.

இராஜதுரையை நீக்குவதற்காக வெளியிடப்பட்ட கதைகளில் ஒன்று எனக் கூறிய பின்பும் அதை உண்மையென்கிறீர்களே. ! தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டபோது உறுப்பினர்களின் கால அடிப்படையில் இராஜதுரையும் பதவிக்குரியவராகத்தானிருந்தார். அந்தவகையில் பிரச்சனைகள் ஏற்பட்டபோதுதான் இராஜதுரை பிரிந்து தேர்தலில் நிற்க நேரிட்டது. இராஜதுரைக்கு எதிராகக் கூட்டணியில் போட்டியிட்டவருக்கு ஆதரவாக பிரசாரங்களும் கட்டுக்கதைகளும் கிழக்கில் பரவவிடப்பட்டது.என்னுடைய கேள்வி அதுதான். அப்படிச் சோடிக்கப்பட்ட பெண் எவ்வாறு பிரசார மேடைகளில் அனுமதிக்கப்பட்டார்?ஆகவே இராஜதுரைக்கு எதிரான பிரசாரம் பொய்யானது. உண்மையைச் சொல்லப்போனால் கூட்டமைப்பினராலோ அல்லது தமிழரசுக் கட்சியினாலோ கிழக்கு மக்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை. தேர்தல்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டனர்.கட்சியின்பதவிகள் மக்களது தேவைகள் கிழக்கு மக்களுக்கு கொடுக்கப்படவில்லை. மேலும் சொல்லப்போனால் வேலைவாய்ப்புகள் கூட யாழ்ப்பாணத்தவரைக் கொண்டே நிரப்பப்பட்டது.இது பிரதேசவாதமாக உங்களால் கருதப்பட்டால் அது அப்படியேயாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி 20 வருடங்கள் தமிழருக்கு சார்பாக.... ஒரு கூக்குரல் கூட... கொடுக்க முடியாத ராசதுரை,

என்ன... விளக்குமாத்துக்கு, சந்திரனகாசனோடை... கூட்டுச் சேர்ந்து, சமாதிக்கு வரவேணும்.

தமிழருக்காக என்று கூறிக்கொண்டு எந்த அரசியல்வாதியும் தங்களுக்காகத்தானே இன்னுமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாத்துக்கும்....."ரோ"கரா தான் காரணம்.

பக்கத்திலை இருக்கிற முனியப்பர், பாத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்சிறி நான் இராஜதுரைக்காக் கதைக்கவில்லை. பிழைகள் எல்லாப் பக்கங்களிலும் இருக்கிறது. இதே சிவாஜிலிங்கமும் குழப்பங்களை உண்டாக்கியவர்தான். காரணம் பதவி.

இதே நிலைதான் அன்றும். குழப்பங்களுக்குக் காரணமானவர்கள் இன்று குத்துக் கரணம் போடவேண்டியநிலை.

சிவாஜிலிங்கத்தின் நடவடிக்கைக்கு டெலோ கண்டனம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 35ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நடந்து கொண்ட முறை குறித்து தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டெலோவின் தலைவரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் டெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த 26-04-2012 ஆம் திகதி தந்தை செல்வாவின் 35 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் தந்தை செல்வா நினைவு அரங்காவல் குழுவினரால் ஏற்பாடு செய்திருந்த நிலையில் குறித்த நிகழ்வில் சிவாஜிலிங்கம் நடந்து கொண்ட முறை தமிழீழ விடுதலை இயக்கத்தவர்கலாகிய எங்களுக்கு மிகவும் மண வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24-04-2012 அன்று பத்திரிக்கை வாயிலாக தந்தை செல்வா நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தஇராசதுரைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்போவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.

இது சம்பந்தமாக எங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் கூடி சிவாஜிலிங்கத்திடம் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார்கள். இவற்றை சிவாஜிலிங்கம் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இவற்றுக்குப்பின் கட்சியின் கூட்டுப்பொறுப்பையும் மீறி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை இவருடைய தனிப்பட்டதே தவிர கட்சிக்கும் இந்த நடவடிக்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை குறிப்பிடுவதோடு இந்த விடயம் சம்பந்தமாக இவரிடம் இருந்து விளக்கம் கோர இருப்பதோடு தேவை ஏற்படும் பட்சத்தில் இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விரும்பத்தகாத செயல் நடந்தமைக்காக நாங்கள் சம்பந்தப்பட்ட அரங்காவல் குழுவினரிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றோம்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/40078-2012-04-28-05-57-09.html

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதுரை அன்று அமிதலிங்கம் சிவசிதம்பரம் ஆகியோரால் ஒதுக்கப்பட்டிருந்தார். அதனால்தான் தமிழர்விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சியின் சார்பில் இராஜதுரை மட்டக்களப்பில் போட்டியிட்டு முதன்மைத் தேர்வாளரானார்.

Like This

இறைவன்

இராசதுரை தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில்தான் போட்டியிட்டார்.காசிஆனந்தன் தமிழரசுக்கட்சிசார்பில் போட்டியிட்டார்.அமிர்தலிங்கம் முதலானோர் காசி ஆனந்தனுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதே உண்மை.ஆனால் கட்சிக்குள் நிலவிய குழப்பங்களுக்காக இனத்தையே காட்டிக் குடுத்த இராசதுரை போன்றவர்களை மன்னிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தவிர மற்ற எல்லோரும் துரோகி :(

  • கருத்துக்கள உறவுகள்

இராசதுரை தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில்தான் போட்டியிட்டார்.காசிஆனந்தன் தமிழரசுக்கட்சிசார்பில் போட்டியிட்டார்.அமிர்தலிங்கம் முதலானோர் காசி ஆனந்தனுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதே உண்மை.ஆனால் கட்சிக்குள் நிலவிய குழப்பங்களுக்காக இனத்தையே காட்டிக் குடுத்த இராசதுரை போன்றவர்களை மன்னிக்க முடியாது.

இதுதான் உண்மை

இறைவனின் கருத்தை ஏற்கமுடியவில்லை.

எமக்குள் பிரச்சினைகள் இருந்தால் சிங்களவனிடம்தான் சரணடையணும் என்பதைத் தொடக்கி வைத்தவரே இவர்தான்...

இதன் மூலம் தமிழர்கள் சிங்களவருருடனும் நிற்கின்றனர். எனவே தமிழருக்கென்று ஒரு பிரதேதசம் இல்லை என்ற தெளிவற்ற நிலையை சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுத்தவர் இவரே.

இவர் செய்தது சரியென்றால் பிள்ளையான் முரளிதரன் வரை சரிதான்......???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்காக என்று கூறிக்கொண்டு எந்த அரசியல்வாதியும் தங்களுக்காகத்தானே இன்னுமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

இதுதான் உண்மை.. தேசியம், பிரதேசவாதம் என்று எல்லாம் சாமானிய மக்களை உசுப்பிவிடுவது வெறும் சுயநல அரசியலுக்கும், பதவி ஆசைக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேச வாதத்தை தூண்டியவர்களில் இவரும் ஒருவர்,

இவர் அன்று தமிழர்களுக்கு செய்த துரோகத்துக்காக ஸ்ரீலங்கா பரிசாக உயர்தானிகராக மலேசியாவில் பணிக்கமர்த்தி இருந்தது ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசு.

இராசதுரை தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில்தான் போட்டியிட்டார்.காசிஆனந்தன் தமிழரசுக்கட்சிசார்பில் போட்டியிட்டார்.அமிர்தலிங்கம் முதலானோர் காசி ஆனந்தனுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதே உண்மை.ஆனால் கட்சிக்குள் நிலவிய குழப்பங்களுக்காக இனத்தையே காட்டிக் குடுத்த இராசதுரை போன்றவர்களை மன்னிக்க முடியாது.
இதுதான் உண்மைஇறைவனின் கருத்தை ஏற்கமுடியவில்லை.எமக்குள் பிரச்சினைகள் இருந்தால் சிங்களவனிடம்தான் சரணடையணும் என்பதைத் தொடக்கி வைத்தவரே இவர்தான்...இதன் மூலம் தமிழர்கள் சிங்களவருருடனும் நிற்கின்றனர். எனவே தமிழருக்கென்று ஒரு பிரதேதசம் இல்லை என்ற தெளிவற்ற நிலையை சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுத்தவர் இவரே.இவர் செய்தது சரியென்றால் பிள்ளையான் முரளிதரன் வரை சரிதான்......???

சரி நீங்கள் சொல்வதே உண்மையாக இருக்கட்டும். தமிழர்கூட்டண சார்பில் போட்டியிட்ட இராஜதுரையை ஆதரிக்காமல் காசியானந்தனை ஆதரித்ததன் காரணம் இராஜதுரையை ஒதுக்க வேண்டும் என்பதனாலேயே என்பது புலனாகிறது.

கிழக்கு மக்களை மிகவும் ஒதுக்கப் புறப்பட்டதன் பலன் இப்படியாகிறது. தமிழனைத் தமிழனே ஒதுக்கி அடக்கியாளும் எண்ணம் கொண்டால் அடக்கப்படும் தமிழன் எங்கு போவான்? யாழ்ப்பாணத்தவரின் கீழே அடங்கியிருக் வேண்டுமென்றா விசுகு விரும்புகிறீர்கள்.

மொத் இனத்திற்கும் விடுதலை வேண்டும். ஆனால் வடக்கின் ஆளுகைக்குக் கீழ் கிழக்கு இருக்க வேண்டும். அதை மீறித் தானாக முடிவெடுத்தவர்தான் துரோகி.

தமிழரசுக் கட்சியாலோ தமிழர்கூட்டணியினராலோ கிழக்கு மக்களுக்கு எதுவும் செய்துவிடப்படவில்லை. அப்போதைய அரசுகள் சில அபிவிருத்தியைச் செய்து கொடுத்தன. அல்லது அரசைச் சார்ந்திருந்த தமிழர்களால் விருத்தி நடவடிக்கைகள் செய்து கொடுக்கப்பட்டது. இவைகளெல்லாம் மறுக்கப்பட முடியாதவை.

விடுதலைப்புலிகளின் காலத்தில்தான் கிழக்கு மாகாணத்தில் வட மாகாணத்தவர் பணிபுரியப் பயந்தார்கள் அதனால் நிலை இப்போது மாற்றமடைந்திருக்கிறது. கூட்டமைப்பு அமைக்கப்பட்டபோது சம்பந்தர் தமைமைப் பொறுப்பை ஏற்றதும் அதனால்தான். புலிகள் இல்லாதிருந்தால் யாராவது ஒரு வட மாகாணத்தவரே தலைவராக வந்திருப்பார்.

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.