Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டன் மேயர் வேட்பாளர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்: இலங்கை அரசாங்கம் புலம்பல்!

Featured Replies

லண்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் இருவர், தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக

Boris+Johnson+Ken+Livingstone.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

லிவிங்ஸ்டனின் எதிர் வேட்பாளரான கொன்சவேட்டிவ்வின் போரிஸ் ஜோன்ஸனும் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக இலங்கை அரசாங்க குற்றம் சுமத்தியுள்ளது.

லேபர் கட்சியில் இருந்து கென் லிவிங்ஸ்டனும், கான்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பொறிஸ் ஜோன்சனும் போட்டியிடுகின்றனர். இத் தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. வெற்றிபெற்றது யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் லேபர் கட்சியைச் சேர்ந்த கென் லிவிங்ஸ்டன் அவர்களே வெற்றிபெறுவார் என சில ஆங்கில ஊடகங்கள் கருத்துக்கணிப்பு மூலம் தெரிவித்துள்ளனர்

இவ்விரு வேட்ப்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி இருந்தது. இவர்கள் வெல்வதாயின் தமிழர்கள் வோட்டுகள் அவசியம் என்ற நிலையும் தோன்றியது. இதனால் இவ்விரு வேட்ப்பாளர்களும் தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் அணுகி தமக்கு ஆதரவு தருமாறு வேண்டியுள்ளனர். இதில் போட்டியிட்ட ஒருவர், தாம் வென்றால் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஒன்றை லண்டன் மத்திய நகரப் பகுதியில் நிறுவுவேன் எனப் பகிரங்க வாக்குறுதியை வழங்கியிருந்தார். பதிலுக்கு மற்றைய வேட்ப்பாளர், தாம் வெற்றியடைந்தால் மே 18 நல்லபடியாக நடக்க அனைத்து உதவிகளையும் செய்வேன் எனத் தெரிவித்தார்.

இதனால் பொறிஸ் ஜோன்சனும், மற்றும் கென் லிவிங்ஸ்டனும் புலிகளுக்கு ஆதரவான மேயர்கள் என இலங்கை அரசு நேற்றைய தினம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இவர்கள் தமிழர்களுடனும், புலிகளின் முன்னணி அமைப்புகளுடனும் சேர்ந்து இயங்குவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

http://nilavaram.com...news&Itemid=461

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு தமிழர்களைப் புலிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் சொன்னார்கள்.இப்போது வெள்ளைக்காரங்களைப் புலிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் சொல்கிறார்கள்.நன்றாகச் சொல்லட்டும்.உலகத்துக்கு மெதுமெதுவாக உண்மை புரியட்டும்.பயங்கரவாத அரசின் பொய்யான செய்தியை நம்பி ஒரு இனத்தின் அழிவுக்கு உதவியாக இருந்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு அவர்களைச் சுடட்டும்.

நாங்கள் B.B.C ஐ "ரோ" என்று சொல்வது போல .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் B.B.C ஐ "ரோ" என்று சொல்வது போல .

நாங்கள் என்றால் ?! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசை யாரும் இப்போ ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வோட் போட‌ப் போகவில்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களின் பலம் லண்டன் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளிலும்

மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது.

அதைப் புரிந்து கொண்ட சிங்களத்திற்கு எரிச்சல் ஏற்படுவது புதிதல்ல.

சிறிலங்காவில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்களென்றால் இப்போது அழிக்க முடியாதளவிற்கு உலகமெல்லாம் புலிகள்.

சிறிலங்காவில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்களென்றால் இப்போது அழிக்க முடியாதளவிற்கு உலகமெல்லாம் புலிகள்.

ஆனால் காட்டுக்குள் இருக்கும் புலிக்கும் கூட்டுக்குள் (ZOO) இருக்கும் புலிக்கும் இடையில் பென்னாம் பெரிய வித்தியாசம் பாருங்கோ .

ஆனால் காட்டுக்குள் இருக்கும் புலிக்கும் கூட்டுக்குள் (ZOO) இருக்கும் புலிக்கும் இடையில் பென்னாம் பெரிய வித்தியாசம் பாருங்கோ .

தாயகப் புலிகளும் புலத்துப் புலிகளுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.