Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓஓ என் பழையவளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ..... என் பழையவளே

வருடங்கள் எத்தனை போனபின்பும்

உன்நினைவுகளில் நான்

என்நினைவுகளை நீ எத்தனையாவது

பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய்

உன்பெயரை மறக்க நான்உண்ட

தூக்கமாத்திரை கூட தோத்து போனதே

நீ மாறியிருக்கிறாய்

கண்ணருகே கருவளையம்

கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால்

உதடுகள்மட்டும் அதேசிரிப்பு

இப்போதும் நாம் பேச போவதில்லையா??

பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள்

பேச முடியாத போது சந்திக்கிறோம்

உன்நினைவுகள் உன்குழந்தையைபோல

உறங்கியிருக்கலாம்

ஆனாலும் ஒரேயொரு கேள்விதான்

நீயும் என்னை காதலித்தாயா??

இது மீள் பிரசுரம் என்னுடைய பழைய வலைப்பக்கத்தை நோண்டிபொழுது அகப்பட்டது

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதி 4 வருடம் ஆகிவிட்டது இன்னும் அவள் பதில் சொல்லவில்லையா? oooo...poor guy..heee..

சாத்து அண்ணா, உங்களை கதை பகுதிக்குள் தான் கண்டிருக்கிறன். இன்று தான் கவிதை, ஹைக்கூ கவிதை பகுதிக்குள் கண்டனான்.

தொடருங்கள். :)

பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள்

பேச முடியாத போது சந்திக்கிறோம்

எனக்கு பிடித்த வரிகள் இவை. :)

Edited by துளசி

[size=5]சாத்தின் கவிதையும் சுப்பர்![/size]

[size=5]சாத், புல நாயை மறந்திட வேண்டாம்[/size]!

உந்த பழைய பிசாசுகள் இப்பதான் ஆவியாக வந்து பலரை பாடாய் படுத்தினம் .

மறந்து போயிருந்த நானும் "கண் மறைந்த ஓவியம் " என கிறிக்கிவிட்டு கொஞ்சநாளா அதே நினைவு .லண்டனில் இருக்கும் போது பார்க்க விரும்பாத நான் போன மாதம் போனால் போகுதென்று ஒரு போன் கோல் போட்டேன் .ஆள் ஒரே ஆங்கிலம் ,ஒரு இரண்டு நிமிடம் குடும்ப விபரம் மட்டும் கேட்டதுடன் கணவன் இறந்த துக்கத்தில் இருப்பார் என்று வேறு எதற்கும் தாவாமல் நானே நன்றி சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டேன் .

தொலைபேசி இலக்கம் எப்படி எடுத்தேனா? கணவர் மிக பிரபலமான ஒருவர் .

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ..... என் பழையவளே

வருடங்கள் எத்தனை போனபின்பும்

உன்நினைவுகளில் நான்

என்நினைவுகளை நீ எத்தனையாவது

பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய்

உன்பெயரை மறக்க நான்உண்ட

தூக்கமாத்திரை கூட தோத்து போனதே

நீ மாறியிருக்கிறாய்

வெட்டிப் புதைத்த, காதல் விதைகள்,

வேர்விட்டு வளர்கின்றன!

வேதனையின் நீர்பாய்ச்சி,

விளைந்த பயிர்கள் அவை!

மூவாயிரம் காதல்கள்,

முளைவிட்டுப் படர்ந்தாலும்,

முதல் காதல், என்றுமே,

முதல் காதல் தான்!

கண்களின் கருவளையங்கள்,

கண்மையிட்ட கண்களாகவே,

கண்களில் தெரியும்!

உண்மைக் காதல்கள்,

ஒரு போதும் அழிந்ததில்லை!

இன்னும் உங்களுக்குச் சந்தேகம்,

என்னை நீ காதலித்தாயா, என்று!

ஏனெனில், நீ ஒரு ஆண்மகன்! :D

உந்த பழைய பிசாசுகள் இப்பதான் ஆவியாக வந்து பலரை பாடாய் படுத்தினம் .

மறந்து போயிருந்த நானும் "கண் மறைந்த ஓவியம் " என கிறிக்கிவிட்டு கொஞ்சநாளா அதே நினைவு .லண்டனில் இருக்கும் போது பார்க்க விரும்பாத நான் போன மாதம் போனால் போகுதென்று ஒரு போன் கோல் போட்டேன் .ஆள் ஒரே ஆங்கிலம் ,ஒரு இரண்டு நிமிடம் குடும்ப விபரம் மட்டும் கேட்டதுடன் கணவன் இறந்த துக்கத்தில் இருப்பார் என்று வேறு எதற்கும் தாவாமல் நானே நன்றி சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டேன் .

தொலைபேசி இலக்கம் எப்படி எடுத்தேனா? கணவர் மிக பிரபலமான ஒருவர் .

அர்ஜுன், நீங்களும் எங்களில் ஒருவரே!

அதனால் தான், இப்படியான ஆசைகள் வருகின்றன!

எனக்கும் தான் இப்படி ஆசைகள், இடைக்கிடை வரும்!

கறந்த பால் முலைக்கேறுமா, என நினைத்து விலகி விடுவேன்!

உங்கள் கதையைக் கேட்டால், ஏறும் போலத்தான் தெரிகின்றது! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதி 4 வருடம் ஆகிவிட்டது இன்னும் அவள் பதில் சொல்லவில்லையா? oooo...poor guy..heee..

4 இல்லை கவிதை எழுதி 7 வருசமாச்சுது :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்து அண்ணா, உங்களை கதை பகுதிக்குள் தான் கண்டிருக்கிறன். இன்று தான் கவிதை, ஹைக்கூ கவிதை பகுதிக்குள் கண்டனான்.

தொடருங்கள். :)

எனக்கு பிடித்த வரிகள் இவை. :)

டுல்சி எனது ஆரம்பம் கவிதையும் நாடகமும் தான் பாடசாலை நாட்களில் பின்னர்தான் கதை எழுதத் தொடங்கியது :)

உந்த பழைய பிசாசுகள் இப்பதான் ஆவியாக வந்து பலரை பாடாய் படுத்தினம் .

மறந்து போயிருந்த நானும் "கண் மறைந்த ஓவியம் " என கிறிக்கிவிட்டு கொஞ்சநாளா அதே நினைவு .லண்டனில் இருக்கும் போது பார்க்க விரும்பாத நான் போன மாதம் போனால் போகுதென்று ஒரு போன் கோல் போட்டேன் .ஆள் ஒரே ஆங்கிலம் ,ஒரு இரண்டு நிமிடம் குடும்ப விபரம் மட்டும் கேட்டதுடன் கணவன் இறந்த துக்கத்தில் இருப்பார் என்று வேறு எதற்கும் தாவாமல் நானே நன்றி சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டேன் .

தொலைபேசி இலக்கம் எப்படி எடுத்தேனா? கணவர் மிக பிரபலமான ஒருவர் .

பழசு எல்லாம் பிசாசுகளாகி விட்டதா எனக்கென்னமோ அப்ப தேவதைகளாய் தெரிந்தவை இப்பவும் தேவதைகளாய்தான் ஆனால் கொஞ்சம் வயதான தேவதைகளாய் :lol: :lol:

வெட்டிப் புதைத்த, காதல் விதைகள்,

வேர்விட்டு வளர்கின்றன!

வேதனையின் நீர்பாய்ச்சி,

விளைந்த பயிர்கள் அவை!

மூவாயிரம் காதல்கள்,

முளைவிட்டுப் படர்ந்தாலும்,

முதல் காதல், என்றுமே,

முதல் காதல் தான்!

கண்களின் கருவளையங்கள்,

கண்மையிட்ட கண்களாகவே,

கண்களில் தெரியும்!

உண்மைக் காதல்கள்,

ஒரு போதும் அழிந்ததில்லை!

இன்னும் உங்களுக்குச் சந்தேகம்,

என்னை நீ காதலித்தாயா, என்று!

ஏனெனில், நீ ஒரு ஆண்மகன்! :D

புங்கையூரன் அண்ணா, பொண்ணுங்களுக்கு சார்பா கவிதை எழுதியிருக்கிறீங்கள். வாழ்த்துகள்.. :) :) :)

டுல்சி எனது ஆரம்பம் கவிதையும் நாடகமும் தான் பாடசாலை நாட்களில் பின்னர்தான் கதை எழுதத் தொடங்கியது

பழசு எல்லாம் பிசாசுகளாகி விட்டதா எனக்கென்னமோ அப்ப தேவதைகளாய் தெரிந்தவை இப்பவும் தேவதைகளாய்தான் ஆனால் கொஞ்சம் வயதான தேவதைகளாய்

ஓ அப்ப இனி கவிதையையும் தொடருங்கோ. :) (துளசியை "டுல்சி" ஆக்கிப்போட்டியள் :o:D)

அர்ஜுன் அண்ணாவை அவர் காதலி பிசாசு என்று சொல்லியிருப்பா. :lol: அந்த கோவத்திலை அவவை அர்ஜுன் அண்ணா பிசாசு எண்டு சொல்லுறார். வேறொன்றுமில்லை. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பழைய பிசாசுகள் இப்பதான் ஆவியாக வந்து பலரை பாடாய் படுத்தினம்... :)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கவிதையில் பல வரிகளை காலம் அழித்துவிட்டதா அல்லது சாத்திரியின் சேமிப்புகோப்பிலிருந்து அழிந்துவிட்டதா ?

இக்கவிதை எழுதப்பட்ட காலத்தில் யாழில்தான் பதிவாகியிருந்தது. பழையவள் பழைய நினைவுகளோடு மன்னாரில் விதவையாக வாழ்வதாய் தகவல். :mellow:

(பிற்குறிப்பு :- புலநாயால் மனிசரை புலனாய அனுப்ப வேண்டாம்)

உந்த பழைய பிசாசுகள் இப்பதான் ஆவியாக வந்து பலரை பாடாய் படுத்தினம்... :)

ஆவிகள் காலம்கடந்துதான் ஆட்களை துரத்தும்போல :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மறந்து போயிருந்த நானும் "கண் மறைந்த ஓவியம் " என கிறிக்கிவிட்டு கொஞ்சநாளா அதே நினைவு .

ஓவியம் எப்போதும் தனது கர்வத்தை இழப்பதில்லை அதுபோலவே நினைவுகளும்.

[size=5]பழையவள் பழைய நினைவுகளோடு மன்னாரில் விதவையாக வாழ்வதாய் தகவல். [/size]

[size=5]சாந்தி உதுகளை போய் அதுவும் சாத்துக்கு நினைவுபடுத்துவதா? :rolleyes:[/size][size=5] [/size] [size=5]பெடி நாளைக்கு மன்னாரில் தான்[/size] [size=5]காலை உணவே [/size] :lol:

கவிதை நன்றாக இருக்கிறது.

அதன் பின்னணி கதையையும் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கவிதையில் பல வரிகளை காலம் அழித்துவிட்டதா அல்லது சாத்திரியின் சேமிப்புகோப்பிலிருந்து அழிந்துவிட்டதா ?

இக்கவிதை எழுதப்பட்ட காலத்தில் யாழில்தான் பதிவாகியிருந்தது. பழையவள் பழைய நினைவுகளோடு மன்னாரில் விதவையாக வாழ்வதாய் தகவல். :mellow:

(பிற்குறிப்பு :- புலநாயால் மனிசரை புலனாய அனுப்ப வேண்டாம்)

ஆவிகள் காலம்கடந்துதான் ஆட்களை துரத்தும்போல :icon_idea:

மன்னாரில் வாழ்வதாக தகவல் எனக்கும் கிடைத்தது நான்தான் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்த விரும்பவில்லை :(

கவிதை நன்றாக இருக்கிறது.

அதன் பின்னணி கதையையும் எழுதுங்கள்.

தப்பிலி அந்த பழையவளின் கதையும் நான் எழுதிக்கொண்டிருக்கும் புத்கத்தில் எழுதியிருக்கிறேன் :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.