Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனித்து தான் போட்டி: முடிவை மாற்றியது முஸ்லிம் காங்கிரஸ்!

Featured Replies

[size=5]தனித்து தான் போட்டி: முடிவை மாற்றியது முஸ்லிம் காங்கிரஸ்![/size]

இலங்கையில் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்தே போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

[size=3]ஏற்கனவே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் அறிவித்திருந்தனர்.[/size]

[size=3][size=4]இந்த நிலையில், மீண்டும் இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]தனித்துப் போட்டியிடுவதா, அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தமிழ்த் தேசியக் [/size][/size]

[size=3][size=4]கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்வதா என்ற முடிவுகளை எடுக்கமுடியாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலதரப்பு பேச்சுவார்த்தைகளை கடந்த வாரத்தில் நடத்திவந்தது.[/size][/size]

[size=4]நெருக்கடி[/size]

[size=3][size=4]கட்சியின் உச்சபீடமும் ஒன்றுக்கு இரண்டு தடவைகூடி, அரசுடன் தான் இணைந்துபோட்டியிட வேண்டும் என்று தீர்மானங்களை எடுத்திருந்ததாக கட்சி வட்டாரங்கள் அறிவித்தன.[/size][/size]

[size=3][size=4]எனினும், இந்த தீர்மானம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துக்குள் தொடர்ந்தும் இழுபறி நீடிப்பதாகவும் அக்கட்சியின் பிரமுகர்கள் தெரிவித்திருந்தனர்.[/size][/size]

[size=3][size=4]இந்த நிலையில், அரசுடன் தேர்தல் உடன்பாடொன்றில் கைச்சாத்திடும் பணி அடுத்த கட்டமாக நடக்கும் என்று கூறிவந்த முஸ்லிம் காங்கிரஸ், தனித்துதான் போட்டி என்று இன்று புதன்கிழமை திடீரென அறிவித்துவிட்டது.[/size][/size]

[size=3][size=4]ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் அதாவுல்லா தலைமையிலான தேசியக் காங்கிரஸ், ரிசாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் பங்கீடு தொடர்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தன.[/size][/size]

[size=3][size=4]இந்தநிலையில்,திடீர் திருப்பமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் தனித்துதான் போட்டியிடும் என்றும் மத்தியில் ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியில் தொடர்ந்தும் பங்கெடுக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளூர் ஊடகங்களுக்கு இன்று அறிவித்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]தேர்தலின்போது அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/07/120718_muslimcongressalone.shtml

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]முஸ்லிம் காங்கிரஸின் முடிவு வரவேற்கத்தக்கது: சம்பந்தன்[/size]

[size=4]

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்...

'முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் எடுத்திருக்கும் முடிவை நாங்கள் வரவேற்கின்றோம். [size=5]இறுதியாக ஏமாற்றப்படாது இப்போதே அவர்கள் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்[/size]. தமிழ் பேசும் இனத்தின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும் வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்கும் இந்த முடிவு சிறப்பானதொன்றாக அமையுமென நாங்கள் நம்புகின்றோம். தமிழ் பேசும் மக்களை மதிக்காத, அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அரசாங்கத்திற்கு துணைபோகாமல் இருப்பதென்று முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம்' என்று மேலும் கூறினார்.

[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/44910-2012-07-18-07-46-45.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான ஒரு முடிவை தான் நாங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்தோம் . ஆயினும் தமிழ் தேசிய [size=4]கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் .... ஒரே ஒரு சந்தேகம் தேர்தல் முடிவுகளின் பின் என்ன செய்வார்கள் என்பது தான் ??? மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணத்தை ஆழுவார்களா இல்லையா என்பது தான் அந்த சந்தேகம் .. [/size][size=4]தேர்தல் முடிவுகளின் பின் [/size]தமிழ் தேசிய [size=4]கூட்டமைப்புடன் இணைந்[/size]து இணக்கபாட்டுடன் ஆட்சியை நடத்துவார்களாயின் மிகவும் சந்தோஷம் ....எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்பம் .

இந்த முடிவால் கிழக்குமாகாணம் வெளிநாடுகள் நினைக்குமாப்போல் அரச ஆதிகத்திலிருந்து விடுபட ஒரு கதவு திறப்பாக அமையாது. சம்பந்தருக்கு ஒரிரு தொகுதிகளில் கூடிய வெற்றி கிடைக்கலாம்.

ராவூப் கக்கீம் சில கட்சி ஆதரவாளர்கள் பிரிந்து போய்விடாமலிருக்கு பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் ஒரே நேரத்தில் காட்டுகிறார். அதாவது இவர் பதவிக்கு தவிக்கும் அங்கத்தவர்கள் அரசஆக்கிரமிப்பிலிருந்து விடுபடமுடியாமல் இருப்பதை நிவிர்த்திக்காமல், தற்காலிகமாக முஸ்லீம் மக்களுக்கு தானும் ஒரு உண்மை முஸ்லீமாக நடித்து வாக்குக்களை தேர்தல்வரை காப்பாற்ற முயல்கிறார். ஆனால் ஆபத்தான பாம்பையும் (முஸ்லீம்மக்களின் வாக்கு) மீனையும்(மந்திரிப்பதவியை காட்டும் அரசு) விட தமிழ்-முஸ்லீம் மக்களின் விடுதலைகளுக்கு உதவத்தக்க வெளிநாடுகளுக்கு காட்டத்தக்கதாக மூன்றாவதொன்று இவரிடம்மில்லை.

எது நடந்தாலும் அரசாங்க ஆக்கிரமிப்பிலிருந்து எந்தவொருமுஸ்லீம் கட்சியும் விடுபடத்தக்க அரசியல் சூழ்நிலை இலங்கையில் இல்லை.கக்கீம் எங்கும் தப்பி ஓடிவிடாதபடி அரசாங்கம் ஏற்கனவே வழிகளை அமைத்தபின்தான் பிள்ளையானை பதவி விலகச்சொன்னது. சரியான நேரத்தில் பிள்ளையான் பதவி விலகாவிட்டால் வெறுமையான பொன்சேக்காவின் அறையின் கதவுகள் பிள்ளையானுக்காகத்தான் திறந்திருக்கும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தலில் வென்ற பின் மீண்டும் அரசுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்த்தலில் வென்ற பின் மீண்டும் அரசுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இப்படியான சிறுபான்மைக்கட்சிகள் உலகெங்கும் இருக்கின்றன.தேர்தல் களத்தில் நல்லவர்களாக நடித்து விட்டு............அமைச்சர் பதவிகளுக்காக எந்தக்கட்சியிலும் இணைவார்கள்.தொப்பி பிரட்டிகள் எனும் பட்டம் முஸ்லீம்களுக்கு உரியதல்ல.உலகத்திற்கும்.......அதில் விசேடமாக எம்மவருக்கு சாலப்பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் காங்கிரசின் முடிவானது வரவேற்கத் தக்கதாயினும், இன்றைய காலகட்டத்திலே ஒரு சிறந்த முடிவாக இருந்திருக்கக் கூடிய முடிவு எதென்று பார்ப்போமாயின், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதேயாகும். சிறபான்மையினங்களின் இருத்தல் கேள்விக்கள்ளாகியுள்ள நிலையில் சிறுபான்மைக் கட்சிகள் தனித்தனியாகப் பயணிக்க முனைவதானது சிறுபானமையினராகிய எமக்கு ஆபத்தானதாகும். ஏதோ மகிந்தாவோடு இணையாது தனியே மு.கா போட்டியிடுவதை மட்டும் வைத்து, வரவேற்கிறோம்! சரியான முடிவு என்று நிற்காமல் தொடர் சந்திப்பக்களையும் மு.கா வோடும், முஸ்லிம் சகோதரர்களான சாதாரண மக்களோடும் உரையாடல்களை நிகழ்த்தி இறுக்கமான பிணைப்பொன்றினை ஏற்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டும். நாம் இரண்டுபடுவது மேலும் மேலும் எமக்கடையே சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தவே வழிசெய்யும்.

பழையனவற்றை கடந்து ஒவ்வொருவரது தனித்துவங்களை பரஸபரம் ஏற்றுக்கொண்டு எமது கரங்களை இறுகப்பற்றுதலே இன்றுள்ள ஒரே தெரிவாகும்.

  • தொடங்கியவர்

[size=4]முஸ்லீம் சமூகம் உடைபட்ட அனைத்து சிறுபான்மை சமூகங்களும் இன்று ஒரு வரலாற்று திருப்பு முனையில் உள்ளன. [/size]

[size=4]வெற்றிப்பெருமிதம் கொண்டு நிற்கும் சிங்கள இனவாத அரசுடன் தனிப்பட்ட நலன்களுக்காக கை கோர்த்தால் ... இந்த சிறுபான்மை இனங்கள் தங்கள் தனித்துவத்தை முழுமையாக விரைவில் இழந்துவிடும். [/size]

விரைவில் மீண்டும் முடிவை மாற்றலாம்!

-------

சம்பந்தனுக்கு வேறு தொழிலே இல்லை!

இதுக்கு ஹகீம் தொப்பி பிரட்டியதும் விழுந்தடித்து வாழ்த்தியவர், சிறையில் சிங்களப் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு காயமுற்ற கைதிகளின் நிலை பற்றி இன்றுவரை ஒரு அறிக்கையும் விடவில்லை!

  • தொடங்கியவர்

2012-07-18.jpg

கக்கீம் ஏதோ பகிடி விடுகிறார்போல. எவ்வளவுக்கு மாட்டியிருக்கிறார் எனப்து போகப்போகத்தான் தெரியும். இவரால் அரசை எதிர்த்து பேசமுடியாத நிலையில் ஏன் தனித்து போட்டிக்கு போகிறார். தொகுதிகள் தந்தது காணாது என்று தனிய போட்டி போடுகிறார் ஆனால் இதில் அரசு கொடுக்க மறுத்த இடங்களில் தான் வேட்பாளர்களை போடுவாரா அல்லது போடமாட்டாரா?

தனித்துப் போட்டியிடுவதற்கு மகிந்தவின் ஆசியை பெறவில்லையாம் ஹக்கீம் [ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 06:48 GMT ] [ தா.அருணாசலம் ]

rajapaksa.jpgகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆசியைப் பெறவில்லை என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆளும் கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்திருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று திடீரென தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது.

வேட்பாளர் பட்டியலில் இடம் ஒதுக்குவதில் இணக்கம் ஏற்படத் தவறியதால், தனித்துப் போட்டியிட முடிவெடுத்த ரவூப் ஹக்கிம் அதுபற்றி சிறிலங்கா அதிபரிடம் தனது முடிவை அறிவித்து, ஆசி பெற்றதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அப்போது, “ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து கொண்டு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக பரப்புரை செய்யக் கூடாது. நீங்கள் தனித்துப் போட்டியிட்டாலும், நாம் கூட்டணியாக வெற்றிபெற முனைவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்“ என்று சிறிலங்கா அதிபர் கூறியதாகவும், அதற்கு ரவூப் ஹக்கிம் இணங்கியதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்தநிலையிலேயே, ரவூப் ஹக்கிம் தனித்துப் போட்டியிட சிறிலங்கா அதிபரின் ஆசியைப் பெறவில்லை என்று பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20120719106624

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தளவில் முஸ்லீம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது

என்பது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும் கிழக்கில் அதன் இருப்பிற்கும்

ஆபத்தானதாகவே முடியும். ஆட்சியமைக்கும் போது பல சிக்கல்களுக்கு

விடை கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.