Jump to content

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......


Recommended Posts

அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகளால் ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் 220 g cadbury chocolate நிறையை 200 g ஆமாக குறைக்க போவதாக அறிவித்திருக்கு அந்த நிறுவனம்......சரி நிறைய குறைக்கிறீங்க....விற்கின்ற விலையை குறைப்பீங்களா எண்டா....என்ன நக்கலா.....அதெல்லாம் குறைக்க முடியாது என்டுறாங்கோ.......

Link to comment
Share on other sites

  • Replies 3.2k
  • Created
  • Last Reply

ஸ்பெஷலாக எதையாவது செய்யுங்கள் டோணி.. "சி.எஸ்.கே". கோச் பிளம்மிங் வேண்டுகோள்/////

ம்கும் அவர் புரியாணி வேணும் எண்டா ஸ்பெஷல் லா செஞ்சு கொடுப்பாரு வேணுமா?

Link to comment
Share on other sites

மோடி யாழ்ப்பாணம் போறாராமே?

நல்லூர் முருகன் கோயில் பக்கம் போனால் மோடியின் குருத்தாவை கழட்டாமல் விடமாட்டாங்க உள்ள.....

Link to comment
Share on other sites

ஆனானப்பட்ட மகிந்தா , பொன்சேகா போன்றவர்களையே ஷர்ட் கழட்ட வைத்த நல்லூர் முருகன்.... மோடி அந்த பக்கம் போனால் கழட்டாமல் விடுவாரா?

அரோகரா ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இன்னும் கொஞ்ச நாட்களில் விசு அண்ணாவும் அல்லேலூயா என்று கொண்டு திரிவதை நாங்கள் கணாலாம்.....

 

சொந்த வாழ்விலும்

பொது வாழ்விலும் 

பல சோதனைகளையும் தடைகளையும்  தாண்டியிருக்கின்றேன்

தாண்டுகின்றேன்

இதுவரை அதை கடவுளால் நிவர்த்தி  செய்யமுடியும் என்ற நம்பிக்கை வரவில்லை.....

 

அப்படியொரு நாள் வந்தால்

இந்த காட்டுக்கத்தல் எல்லாம் பிடிக்காது

அமைதியாக ரஐனியைப்போல் இமயமலைச்சாரல் தான் பிடிக்கும்... :icon_idea:

Link to comment
Share on other sites

ஸ்பெஷலாக எதையாவது செய்யுங்கள் டோணி.. "சி.எஸ்.கே". கோச் பிளம்மிங் வேண்டுகோள்/////

ம்கும் அவர் புரியாணி வேணும் எண்டா ஸ்பெஷல் லா செஞ்சு கொடுப்பாரு வேணுமா?

 

ஹைதராபாத் புரியாணி? :D

 

Link to comment
Share on other sites

விமான நிலையத்தில் ஒருவர் கைது? ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை: அரியம் எம்.பி////

இலங்கையில் இப்பொழுது வந்திருப்பது கடவுளின் ஆட்சி.....அந்த கடவுளின் ஆட்சியில் தமிழர்களுக்கு சகல வசதிகளும் கிடைக்க போகும் இந்த நேரத்தில்.....அரியம் எம்பி இப்பிடி சொல்லலாமா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்தில் ஒருவர் கைது? ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை: அரியம் எம்.பி////

இலங்கையில் இப்பொழுது வந்திருப்பது கடவுளின் ஆட்சி.....அந்த கடவுளின் ஆட்சியில் தமிழர்களுக்கு சகல வசதிகளும் கிடைக்க போகும் இந்த நேரத்தில்.....அரியம் எம்பி இப்பிடி சொல்லலாமா.......

 

லாபாய்....லாபாய்.......

எங்கலுக்கு ஒரு ஓட்டு போட்டா எள்ளாம் இளவசம்......

வாடிவெண்ட...வாடிவெண்ட...அம்மே வாடிவெண்ட.....

ஒன்ட பொள்ளைய காணேல்ல...காணேல்ல....இன்னொண்ணை பெத்துக்கோ...போ...போ..லாபாய்..லாபாய்..

 

 

maithri.gif

அன்னியோன்யமான இவர்கள் எப்படி எதிருக்கு எதிர் ஆனார்கள்?????????

Link to comment
Share on other sites

நடிகை ரம்பாவின் 4.5 கோடி நகைகள் கொள்ளை.....////

ஏன்பா ரம்பா கனடாக்கு வாக்கப்பட்டு போகும் போது இந்த நகைகள எல்லாம் கொண்டு போகாம தான் போனவங்களா?

அம்புட்டு நம்பிக்கை... போல ஆத்துக்காரர் மேல.....

Link to comment
Share on other sites

இலங்கையில் திருமணப் பதிவு கட்டணம் 1000 ரூபாவாக

குறைக்கப்பட்டுள்ளது...../////

தட் எத்தின திருமணம் வேணும்னாலும் பண்ணிக்கோங்க மொமென்ட்....

Link to comment
Share on other sites

மைத்திரி அங்கிள் திருமண பதிவு கட்டனத்த 1000 ரூபாயால் குறைத்ததுக்கு பின்னால் மிகப்பெரிய செய்தியை சொல்ல வாராரு.....இனிமேல் போராட்டம்

புரட்சி ... அது இதுன்னு களத்தில இறங்காம கல்யாணத்த கட்டிபோட்டு குழந்தை குட்டிங்க எண்டு இருங்க எண்டு.... மைத்திரி மாமாக்கு தெரியும் கல்யாணம் கட்டினா அப்புறம் அதில இருந்த அவனால மீளவே முடியாது என்று.....

Link to comment
Share on other sites

என்னை அறிந்தால் படம் அஜீத்துக்காக பாக்கிறீங்களோ இல்லையோ கண்டிப்பா கெளதம் மேனன் என்ற சிறந்த இயக்குநருக்காக பாருங்கள்.....இந்த திரைப்படத்தின் வெற்றியில் தான் அவருடைய வாழ்வே அடங்கி இருக்கு.....பலரும் கைவிட்ட நிலையில் அஜித் படம் நடிக்க ஒப்புக்கொண்டதே ..அவரை மேலே தூக்கி விடத்தான்......

Link to comment
Share on other sites

என்னை அறிந்தால் படம் அஜீத்துக்காக பாக்கிறீங்களோ இல்லையோ கண்டிப்பா கெளதம் மேனன் என்ற சிறந்த இயக்குநருக்காக பாருங்கள்.....இந்த திரைப்படத்தின் வெற்றியில் தான் அவருடைய வாழ்வே அடங்கி இருக்கு.....பலரும் கைவிட்ட நிலையில் அஜித் படம் நடிக்க ஒப்புக்கொண்டதே ..அவரை மேலே தூக்கி விடத்தான்......

Link to comment
Share on other sites

என்னப்பா தி மு க வில் இருந்து கழட்டி விடப்பட்டதுகளும் ஒதுக்க பட்டதுகளும் அம்மாவின் காலில் போய் விழ போகுதுங்கலாமே .... கொஞ்ச நேரத்தில்......,

சனி மாற்றம் கருணாநிதிக்கு நன்கு வேலை செய்யிது.....

Link to comment
Share on other sites

இயக்குனர் கவுதமன் மலையாளியாக இருக்கலாம் ஆனால் தமிழ் இயக்குனர்களை விட தனது படங்களுக்கு அழகிய தமிழில் பெயர் வைக்க கூடியவர்.....

‪#‎என்னை‬ அறிந்தால்

Link to comment
Share on other sites

பாகிஸ்தானின் 'கழுத்து நரம்பு' காஷ்மீர்: நவாஸ் ஷெரீப் கொக்கரிப்பு/////

பாத்து அறுத்திட போறாங்க........நரம்ப....

Link to comment
Share on other sites

காதல் மணம் புரிந்தவர்கள் கண்ணியமாய் வாழ்ந்து காட்டும் போது தான், அக்காதல் கவுரவிக்கப்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் 'கழுத்து நரம்பு' காஷ்மீர்: நவாஸ் ஷெரீப் கொக்கரிப்பு/////

பாத்து அறுத்திட போறாங்க........நரம்ப....

 

கழுத்து நரம்பு காஷ்மீர் என்டால் இனித் தலை , முடி  எல்லாம் டில்லி வரை வரும்போல கிடக்கு.....!

 

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் கடைசி பக்கங்களை நாங்களே எழுதுவோம்.......

வடகொரியா முழக்கம்.////

மிச்ச பக்கத்த யாரு எழுதுவா?

தட் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மொமென்ட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் கடைசி பக்கங்களை நாங்களே எழுதுவோம்.......

வடகொரியா முழக்கம்.////

மிச்ச பக்கத்த யாரு எழுதுவா?

தட் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மொமென்ட்

 

எங்க சுண்டல் போல.. :lol:

அடிக்கடி நெருப்போட விளையாட பிடிக்குது போல... :icon_idea:

13ம் பக்கத்தை காணோம் என்று வராமலிருக்கட்டும் :D

Link to comment
Share on other sites

5 ரூபா கொடுத்தால் காங்கிரஸ் உறுப்பினர்

அட்டை பெறலாம் - இளங்கோவன்.///

50 பைசா தான் இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியுமா? இளங்கோவன்

Link to comment
Share on other sites

இலங்கையில் திறந்தநிலை ஜனநாயகம்!- அமெரிக்கா மகிழ்ச்சி////

அமெரிக்கா அதிகாரிக்கு சிங்களம் திங்க கொடுத்த அப்பத்துக்கே இந்த கருத்து வருதெண்டா கறி சோறு ஆக்கி போட்டிருந்தா என்னவெல்லாம் சொல்லுவாங்கோ?

Link to comment
Share on other sites

பெயர் ராபர்ட் முகாபே.......வயதோ 90....... இன்றும் ஆபிரிக்காவின் முக்கிய நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே அதிபர்......வயது என்னவோ 90தான் ஆனால் இவரின் சுறுசுறுப்புக்கு முன்னாள் பல நாட்டு இளம் அதிபர்கள் எல்லாம் வெறும் தூசு தான்..90வயதில் பலர் முடங்கியே போடுவார்கள்......ஆனால் மனிதர் இன்னும் ஒவ்வொரு நாடுகளுக்கும் பறந்து திரிகின்றார்......1980 களில் இருந்து இன்று வரை இவர் தான் நாட்டின் தலைமகன்.....மேற்குலக நாடுகள் எல்லாம் இவரை பதவியில் இருந்து இறக்க செய்யாத வேலைகளே இல்லை.....ஆனாலும் மனிதர் அவற்றை எல்லாம் சமாளித்தடி இன்னும் பதவியில்.....முழுக்க முழுக்க ஆக்கிரமிக்க சென்ற வேல்லைகளிடம் குவிந்திருந்த அனைத்து செல்வங்களையும் முக்கிய விவசாய நிலங்களையும் மண்ணின் மைந்தர்களான கறுப்பர்களுக்கு கிடைக்க செய்தவர்.....அதனால் கறுப்பர்களின் ஹீரோ......எப்படா பதவியில் இருந்து இறங்குவார் என்று எதிர்கட்சிகள் பாத்துக்கொண்டிருக்க அவரோ....இப்போதைக்கு போவதாக தெரியவில்லை.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதிக்குப் போவதாகத் தெரியவில்லை என்டால் என்ன அர்த்தம்...., பதவியிலிருந்தா , பாரிலிருந்தா...!! :o  :)

 

எதுவாகிலும் நல்ல செயல்கள் செய்யும் நல்ல ஜீவன் இன்னும் நெடுங்காலம் வாழட்டும்...!!!   :D  :D

Link to comment
Share on other sites

காதலர் தினத்தில் ஜோடிகளாக திரிபவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் -இந்து முன்னனி////

ஏனுங்க ரோடுல ஜோடியா போற ஆடு மாடு நாய் பூனை இதுங்களையும் பிடிச்சி கல்யாணம் கட்டி வைப்பீங்களா அன்னைக்கி...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.