Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்!

விஜயநகரம் (ஆந்திரா): மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்ற தாயை, அவரது 70 வயதையும் பொருட்படுத்தாமல் நைசாக ஏமாற்றிப் பேசி சுடுகாட்டில் விட்டு விட்டுப் போய் விட்டார் ஒரு ஆந்திர இளைஞர். நெஞ்சப் பதற வைக்கும் இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வயது 70 ஆகிறது. இவருக்கு ஒரே மகன், பெயர் சீனு. சீனுவுக்குத் திருமணமாகி விட்டது, மனைவி, குழந்தைகள் உள்ளனர். மகனுடன் வசித்து வந்தார் இந்த மூதாட்டி.

தனது மாமியாரை சீனுவின் மனைவி மதிப்பதில்லையாம். எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்தபடி இருப்பாராம். மேலும், இந்தக் கிழவியை எங்காவது போய் விட்டு விட்டு வாங்க என்றும் சீனுவுன் சண்டை போட்டபடி இருப்பாராம்.

மனைவியா, தாயா என்று குழம்பிப் போன சீனு கடைசியில் மனைவியின் பேச்சுக்கு மதி மயங்கி, தாயை எங்காவது கொண்டு போய் விட்டு விட முடிவு செய்தார். இதையடுத்து வெளியில் போய் விட்டு வரலாம் என்று கூறி தாயாரை அழைத்துக் கொண்டு கிளம்பினார். நேராக விசாகப்பட்டனம் வந்தார். அங்கிருந்து ஆட்டோவில் ஸ்ரீராம் நகர் என்ற இடத்திற்குப் போனார். அங்குள்ள சுடுகாட்டுக்கு வந்த அவர் அங்கு தாயாரை உட்கார வைத்து விட்டு சிறிது நேரத்தில் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன் என்று கூறிச் சென்றார். பிறகு வண்டி ஏறி தனது ஊருக்குத் திரும்பினார்.

மகன் சாப்பாடு வாங்கி வருவான் என்று பரிதாபமாக காத்திருந்த அந்த மூதாட்டி, நீண்ட நேரமாகியும் மகன் வராததால் பரிதவித்துப் போனார். இப்படியே கிட்டத்தட்ட 10 நாட்களாகி விட்டது. சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் சுடுகாட்டிலேயே படுத்துக் கிடந்துள்ளார் இந்த பரிதாபத் தாய்.

இனியும் மகன் வர மாட்டான் என்று அவருக்குத் தெரிந்து போனதால் அப்படியே மெதுவாக எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்று ஊருக்குப் போனார். ஆனால் பசி மயக்கம் தாங்க முடியாததால் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.

பதறிப் போன ஊர் மக்கள் அவருக்கு சாப்பாடு கொடுத்து ஆறுதல் கூறி விசாரித்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் அந்த மூதாட்டியின் மகனைக் கண்டுபிடித்து அவரிடம் தாயாரை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த மகனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அது பொருத்தமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்...

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டக்கட்பண்ணிவிட்டால் மனைவிக்கு கிட்டபோகமுடியுது . பிறகு தாய்ப்பாசம் தன்னாலவரும் . :lol:

சுடு காட்டில் இவனை உயிரோடு கிடத்தி எரிக்க வேண்டும் என்று தீர்ப்புக்கூறும்படி

பணிவாக கேட்டுக்கொள்கிறேன் my lord ........ :(:unsure::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சுடு காட்டில் இவனை உயிரோடு கிடத்தி எரிக்க வேண்டும் என்று தீர்ப்புக்கூறும்படி

பணிவாக கேட்டுக்கொள்கிறேன் my lord ........ :(:unsure::icon_mrgreen:

எய்ந்தவள் இருக்க அம்பு ஆகிய ஆணை நோவதே எங்களுக்கு தொழிலாப் போச்சு.

வயதான ஒரு மூதாட்டி மேல் மனிதாபிமான உணர்வு கூட அற்ற ஒரு வகை அரக்கி போல.. இருக்கிறாள்.. அந்த ஆணின் மனைவி. அவள் தான் அவனின் இந்த நிலைக்கு ஒரு காரணமும் கூட..! அவளைத் திருத்தியிருந்தால்.. அந்த வீடே மகிழ்வோடு இருந்திருக்கும்..! :):icon_idea:

எய்ந்தவள் இருக்க அம்பு ஆகிய ஆணை நோவதே எங்களுக்கு தொழிலாப் போச்சு.

வயதான ஒரு மூதாட்டி மேல் மனிதாபிமான உணர்வு கூட அற்ற ஒரு வகை அரக்கி போல.. இருக்கிறாள்.. அந்த ஆணின் மனைவி. அவள் தான் அவனின் இந்த நிலைக்கு ஒரு காரணமும் கூட..! அவளைத் திருத்தியிருந்தால்.. அந்த வீடே மகிழ்வோடு இருந்திருக்கும்..! :):icon_idea:

தீர்ப்பை மாற்றி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன் My Lord . :D:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பை மாற்றி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன் My Lord . :D:icon_idea:

நாட்டாண்மை... தீர்ப்பை மாத்து. :icon_mrgreen::lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவளைத் திருத்த முடியாமல் மனைவி சொல் கேட்டு தாயை சுடுகாட்டுக்கு அனுப்பும் கணவனுக்கு என்ன தண்டனை குடுத்தால் தகும் ?

  • கருத்துக்கள உறவுகள்

அவளைத் திருத்த முடியாமல் மனைவி சொல் கேட்டு தாயை சுடுகாட்டுக்கு அனுப்பும் கணவனுக்கு என்ன தண்டனை குடுத்தால் தகும் ?

அரிச்சந்திர மகாராசா செய்த, 'வெட்டியான்' வேலை! :D

அது சரி அந்த மனுசனுக்கும் ஆம்பிளை பிள்ளை இருக்குத்தானே. அவன் நேரம் வரும்போது பார்த்துக்கொள்வான். அவன் காலத்தில் ஓட்டோ தேவை இல்லை. தன் காரையே பயன்படுத்திக்கொள்வான். :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவளைத் திருத்த முடியாமல் மனைவி சொல் கேட்டு தாயை சுடுகாட்டுக்கு அனுப்பும் கணவனுக்கு என்ன தண்டனை குடுத்தால் தகும் ?

மனைவியின், தலையணை மந்திரத்தால் தான்... இவ்வளவும் நடந்தபடியால்,

அவ‌ரை... கொஞ்ச‌ நாள் பிற‌ந்த‌ வீட்டுக்கு அனுப்பி, த‌லைய‌ணை இல்லாத‌ க‌ட்டிலில் ப‌டுக்க‌ விட‌ வேணும். :icon_idea:

எந்த வினைக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு !

இவனை கொள்ளிக்கட்டையாலேயே அடித்து சாக்கொள்ள வேண்டும். கொஞ்சமாவது இரக்கம் இருந்து இருந்தால் கடைசி வஜோதிபர் மடத்திலாவது சேர்த்து இருப்பான். நான் அது சரி என்று சொல்ல வில்லை. சுடலையிலும் பார்க்க பறவாய் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எய்ந்தவள் இருக்க அம்பு ஆகிய ஆணை நோவதே எங்களுக்கு தொழிலாப் போச்சு.

வயதான ஒரு மூதாட்டி மேல் மனிதாபிமான உணர்வு கூட அற்ற ஒரு வகை அரக்கி போல.. இருக்கிறாள்.. அந்த ஆணின் மனைவி. அவள் தான் அவனின் இந்த நிலைக்கு ஒரு காரணமும் கூட..! அவளைத் திருத்தியிருந்தால்.. அந்த வீடே மகிழ்வோடு இருந்திருக்கும்..! :):icon_idea:

சொல்லுவார் சொல்வார் கேட்பார்க்கு எங்கே மதி? :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.