Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரொன்று கரைகிறது.... இளங்கவி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]உயிரொன்று கரைகிறது...[/size]

[size=3]கவிதை - இளங்கவி[/size]

பெயரில் சிவந்தன் - அவன்

தமிழீழத்தின் சிவந்தமண்...

தன் இனம் சிறிது சிறிதாய்

அழிவதைப் பார்க்கமுடியாமல்

தம் உயிரையே உருக்கி

நம் உரிமையை

உரக்கச் சொல்லத் துணிந்தவன்.....

அன்று...

ஆயிரம் மைல்கள் நடந்தான்

அவன் உடலிலன்று

வலுவிருந்தது....

இன்று....

உணவையும் நீரையும்

மட்டும் கொண்டு

இயங்கும் உயிர்க் கோளத்தையே

உருக்கத்துணிந்து விட்டான்

அதை உயிரின் எல்லைவரை

உருக்கியும் விட்டான்...

பெற்றோரை மறந்து...

மணம் கொண்ட

மனையாளை மறந்து....

தன் உயிரணுவில் உதித்த

பிள்ளையையும் மறந்து......

உரிமையை இழந்து தவிக்கும்

உனக்கும் எனக்குமாய்

திலீபன் வழினின்று

தன்னையே

உருக்கிக் கொண்டிருக்கிறான்...

ஆனாலும் நாம்

உடலுக்கு மிஞ்சிய உணவு.....

தமிழ் உணர்வு மழுங்கிய நினைவு.....

அவன் கண்களைப் பார்த்து

ஆறுதல் வார்த்தை கூட

சொல்லவே முடியாத

நிலையா உனக்கு தமிழா....!

எம் உணர்வு செத்துவிட்டால்

நீ எப்படி ஈழம் காண்பாய்....

அவன் ஒற்றைத் தமிழனாய்

இருந்து உனக்குப் போராட....

நீயோ லட்சம் தமிழனாய் இருந்தும்

ஒற்றைவிரல் விட்டு

எண்ணும் எண்ணிக்கையில் கூட

அவனுடன் இல்லாவிட்டால்

எப்படி உன் இனம்

அழிவதைக் காப்பாய்.....

எப்படி உன் உரிமைப் போரை

ஒன்றிணைக்கப் பாடுபடுவாய்....

எப்படி ஒன்று படுவாய்.......

சிந்தியடா தமிழா....!

சிவந்தன் காதுகளில்

உன் உரிமைப் போரில்

நாமும் பங்கெடுப்போம் என்று

சொல்லிவாடா தமிழா...!

வானம் இடிந்து விழுந்தாலும்

பகைவர் கூட்டம்

எம்மை நெரித்தாலும்.....

பன்னாடும் எம்

உரிமைப் போரை மறுத்தாலும்

ஓர் தீலிபனல்ல

நாம் பல லட்சம் திலீபனாய்....

நாம் ஒற்றை

சிவந்தனல்ல..

பல லட்சம் சிவந்தன்களாய்

புற்றீசல் போல் புறப்படுவோமென்று

சொல்லிவாடா தமிழா....!

உயிரைக் கரைக்கும்

உன் இனக் குழந்தயொன்று....

தன் இனமே தன்னை கைவிட்டதே

எனும் நினைவில்

அவன் மனத்தையும் உருக்கிவிடாதே.....

அவன் மாற்றான் பிள்ளையல்ல

நம் மண்ணீன்ற பிள்ளை...

அவன் மனவுறுதி தேவை

என் மண்மீட்புப் போருக்கு.....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி ஐயா

சிவந்தனை யெனீவா நோக்கிய பயணத்தின்போது 4 தரம் சந்தித்தேன்

மிகவும் துணிச்சலான தமிழருக்கான போராட்டப்பாதையில் ஆணித்தரமான கொள்கைப்பிடிப்புள்ள இளைஞன்.

அவரது முயற்சிகள் வெற்றியடையணும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.

எமக்காக தன்னை உருக்கும் அந்த இளைஞனுடன் இறைவன் துணையிருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இழந்த உயிர்கள் போதும்,இனிமேலும் உயிர் இளப்பு போராட்டங்கள் வேணாமே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வேறை காலம் நேரம் தெரியாமல், நாங்கள் இப்ப சமர் ஹோலிடேயிலை கசூரினா பீச்சிலை பியர் அடிச்சு,உருண்டு பிரண்டு நல்லூர் திருவிழாவிலை பிகர்பார்த்து நயினை நாக பூசனி அம்மன் கோயில்லை சோத்து ஆன்டிகளின் சைஸ்(இடுப்பு ^_^ ) பார்த்து பிறவிப்பயனை அடைஞ்சு கொண்டு இருக்கும் போது உவனுக்கு வேலையில்லாமல் சும்மா உண்ணாவிர்தம்,கிண்ணாவிரதம் எண்டுகொண்டு. :unsure:

ஒரு வேளை உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டால் கூட தியாகிகள்,வீரவேங்கைகள் பட்டியலில் பத்தோடை பதினொன்டா படம் வச்சு,மாலை போடுவம், முடிஞ்சால் ஒருசில வருடங்களுக்கு ஆண்டுக்கொரு கவிதை வடிக்கிறதோடை எங்கண்டை தேசியக்கடமை முடிஞ்சிடும். அப்புறம் என்ன????? <_<^_^

டிஸ்கி: நல்ல ஆக்சன் படம் போடுங்கப்பா வந்து விசிலடிக்கிறம். :o:wub::icon_idea:

[size=3](திருத்தம்: இறுதி வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.)[/size]

Edited by ஜீவா

சிவந்தன் அண்ணாவை பற்றிய உங்கள் கவிதைக்கு நன்றி. ILC வானொலியில் கதைக்கும் போது மிகவும் சோர்வாக கதைத்தார்.

யாயினி அக்கா கூறியது போல் உயிரிழப்பு போராட்டங்களை நானும் விரும்பவில்லை.

காரணம் மனிதனின் உயிரை மதிப்பவர்கள் தான் உண்ணாவிரதத்திற்கும் மதிப்பு கொடுப்பார்கள். ஆனால் இன்றைய நிலையில் உண்ணாவிரதம் இருப்பவர் இறந்தாலும் பரவாயில்லை என்று கண்டும் காணாமலும் இருக்கும் உலகின் மத்தியில் உண்ணாவிரதத்தை மேற்கொள்வதால் எந்த பிரயோசனமும் கிடைக்க போவதில்லை.

இவர் தனது உண்ணாவிரதத்தால் ஈழத்தமிழரின் போராட்டத்தை உலகத்திற்கு மேலும் பரப்புரை செய்யலாம். ஆனால் இவர் இறந்தால் கூட இவர் போராடியதற்கு பலனாக எவரும் உரிமையை மீட்டுத்தர போவதில்லை. உண்ணாவிரதம் இருந்து உயிரை இழப்பதிலும் பார்க்க உயிருடன் இருந்து வேறு பல போராட்டங்களை செய்வது மேல்.

ஆனாலும் நிச்சயம் தமிழீழ பற்றுடன் இருக்கும் சிவந்தன் அண்ணாவுக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள், இளங்கவி!

எமது, உள்ளக்குமுறல்களை, இந்த உண்ணாவிரதங்கள் மூலம் வெளிக்காட்ட முயல்கிறோம்!

ஆனாலும், உயிரை உருக்குபவர் சிலர்!

உருகிப் போன உயிர்களை விலை பேசுபவர் பலர், என்ற நிலையில், சாணேற முழம் சறுக்குகின்றது!

இந்த உண்ணாவிரதங்கள், எமதினத்தை ஒன்று படுத்துமேனின், அது எமக்கு வெற்றியே!!!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி இளங்கவி

ஆயுதப் போராட்டம், அகிம்சைப் போராட்டம், இதையெல்லாம் விடுத்து

அறிவியல் போராட்டம் என ஒன்றை நாங்கள் ஆரம்பித்தால் என்ன ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு நன்றி ஐயா

சிவந்தனை யெனீவா நோக்கிய பயணத்தின்போது 4 தரம் சந்தித்தேன்

மிகவும் துணிச்சலான தமிழருக்கான போராட்டப்பாதையில் ஆணித்தரமான கொள்கைப்பிடிப்புள்ள இளைஞன்.

அவரது முயற்சிகள் வெற்றியடையணும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.

எமக்காக தன்னை உருக்கும் அந்த இளைஞனுடன் இறைவன் துணையிருக்கணும்.

விசுகு அண்ணா

சிவந்தனைப் பார்த்தபோது அவன் உடல்தான் சோர்ந்துபோயுள்ளதே தவிர அவன் உள்ளம் சோர்ந்ததாகத் தெரியவில்லை, அப்படியொரு மனத்திடமுள்ளவனாகத் தான் தெரிகிறான்...

அவன்முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை இழந்த உயிர்கள் போதும்,இனிமேலும் உயிர் இளப்பு போராட்டங்கள் வேணாமே....

யாயினி

உலகம் அகிம்சை போராட்டத்துக்கும் கூட தற்போது மதிப்பளிக்காத இந்தக் காலகட்டத்தில் ஒரு இளைஞன் தனதுயிரைப் பணயம் வைத்து ஒரு போராட்டத்தில் ஈடுபாடிருக்கிறான என்பது அவன் தாய்மண்ணில் வைத்திருக்கும் பற்றையும் அவன் மனவுறுதியையும் காட்டுகிறது.

எந்தவொரு உயிரும் அநியாயமாகப் பிரியக்கூடாது என்பதுதான் எல்லோருடைய விருப்பமும்...

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உயிரொன்று கரைகிறது...[/size]

[size=3]கவிதை - இளங்கவி[/size]

வானம் இடிந்து விழுந்தாலும்

பகைவர் கூட்டம்

எம்மை நெரித்தாலும்.....

பன்னாடும் எம்

உரிமைப் போரை மறுத்தாலும்

ஓர் தீலிபனல்ல

நாம் பல லட்சம் திலீபனாய்....

நாம் ஒற்றை

சிவந்தனல்ல..

பல லட்சம் சிவந்தன்களாய்

புற்றீசல் போல் புறப்படுவோமென்று

சொல்லிவாடா தமிழா....!

உயிரைக் கரைக்கும்

உன் இனக் குழந்தயொன்று....

தன் இனமே தன்னை கைவிட்டதே

எனும் நினைவில்

அவன் மனத்தையும் உருக்கிவிடாதே.....

அவன் மாற்றான் பிள்ளையல்ல

நம் மண்ணீன்ற பிள்ளை...

அவன் மனவுறுதி தேவை

என் மண்மீட்புப் போருக்கு.....

இளங்கவி

படைப்பிற்குப் பாராட்டுகள்!

வரிகள் மனங்களில் நிறையட்டும்

மண்மீட்க என்ன செய்வோம்

என்றனைவரும் சிந்தை கொண்டெழுகவே!

  • கருத்துக்கள உறவுகள்

படைப்புக்கு பாராட்டுகளும் நன்றிகளும் இளங்கவி .

Edited by நந்தன்26

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா

சிவந்தனைப் பார்த்தபோது அவன் உடல்தான் சோர்ந்துபோயுள்ளதே தவிர அவன் உள்ளம் சோர்ந்ததாகத் தெரியவில்லை, அப்படியொரு மனத்திடமுள்ளவனாகத் தான் தெரிகிறான்...

அவன்முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்...

உண்மைதான்.

இங்கு அவன் நடந்து வந்தநேரம் நாம் பல கூறுகளாக நின்றிருந்தோம். அது அவனையும் பாதித்திருந்ததை அறிந்து அவனுக்கு அந்த குறை தெரியாமல் பார்த்துக்கொண்டோம்.

(எமது ஊர்ச்சங்கம் ஊடாக).

தேவையான சகலதும் செய்த கொடுத்தோம்.

கடைசியாக பரிசிலிருந்து 150 கிலோமீற்றர் சென்ற பின்பும் தேவையான பொருட்களுடன் போய்ச்சந்தித்து வழியனுப்பியபோது அண்ணா யெனீவாவில் உங்களை நான் தேடுவேன் என்றான். யெனீவாவில் என்னைக்கண்டதும் தோழில் சாய்ந்தான். கண்கள் பனித்திருந்தன.

அவனது கொள்கைப்பிடிப்பும் தேசியம் மீதான பற்றும் எல்லோருடனும் அன்பாக பேசும் தன்மையும் மிகவும் என்னைக்கவர்ந்தன. அந்தவகையில் அவனை எம் சொத்தாகவே பார்க்கின்றேன். இவர்களை நாம் இழந்துவிடக்கூடாது என்பதே எனது வேண்டுதல். ஆனாலும் அவர்கள் தானே இவற்றையும் செய்யவேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]கவிதைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் இளங்கவி . [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.