Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டேட்டிங் போறீங்களா? இதை படிச்சுட்டு போங்க...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"அடியாத மாடு படியாது" மிகவும் பிற்போக்குத் தனமான சிந்தனை. பிள்ளைகளை அடித்து வளர்ப்பது அவர்களை கொடூரமானவர்களாகவும், ஒருவகை மன நோயாளிகளாகவுமே மாற்றும். விசுகு அண்ணா, உங்கள் பிள்ளைகள் இன்னமும் வளர்ந்து முடியவில்லை என்பதையும் நீங்கள் இல்லாத போது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நானறிய 25 வயசு மட்டும் நல்ல பெயர் வாங்கிய பிள்ளைகள் பின்னர் சுத்த கழிசடைகளாக மாறியதை பேர், ஊருடன் அறிவேன். அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு இடுப்பு பட்டியால் அடித்தது, அடிப்பது பெருமைப்பட வேண்டிய விடயம் அல்ல. உண்மையில் கேவலமான விஷயம். வெளியில் யாருக்கும் சொல்லி விடாதீர்கள். நிச்சயம் உங்களை கொண்டுபோய் உள்ளுக்குத் தான் போடுவார்கள் அத்துடன் பெரிய அபராதமும் கட்டவேண்டி வரும். பிள்ளைகளுக்கு அடிப்பதும் ஒருவகை Child abuse தான். உங்கள் பிள்ளைக்கு அடிப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை என்பது கசப்பான உண்மை. எனக்கு அப்பா அடித்திருக்கிறார், அதுவும் சின்ன வயசில தான். நாங்கள் மூவருமே ஆம்பிளைப் பிள்ளைகள் 13/14 வயதின் பின்னர் அப்பாவோ அம்மாவோ எங்கள் யாருக்குமே அடித்தது கிடையாது. அடிக்க வேண்டிய தேவையும் நாங்கள் வைக்கவில்லை. எனது அப்பாவும் அம்மாவும் எங்களுடன் நண்பர்கள் போலத்தான் பழகினார்கள். அவர்களுடன், எதுவும் எப்பவும் பயமில்லாமல் கதைக்கக் கூடியதாக இருந்தது. எனது சில நண்பர்கள் அவர்களின் தகப்பன் மாரை நினைத்தால் நடுங்குவார்கள். எனது அப்பாவுக்கு நான் எப்பவுமே நடுங்கினது கிடையாது. அவர்மீது அளவுகடந்த பாசத்தையும் மரியாதையையும் வைத்திருக்கிறேன். அவர்கள் அந்தக் காலத்திலேயே, ஊரிலேயே அப்படி எங்களை வளர்த்ததை இப்போது நினைக்க வியப்பாக இருக்கிறது. எனக்கு எண்டு பிள்ளை வரும்போதும் ஒரு போதும் கை வைக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பெல்ட் அடி பற்றி தம்பட்டம் அடிப்பவர்களுக்கு நாங்கள் ஒன்றுமே மணிக்கணக்காக இருந்து எழுத வேண்டியது இல்லை..நாங்கள் எழுதியும் அவர்கள் மாறப் போவது இல்லை...

விசுகு, உங்கள் பிள்ளைகள், அவர்களது பிள்ளைகளையும் அடித்து வளர்ப்பார்களாயின்; நீங்கள் உங்கள் பிள்ளைகளை அடித்து வளர்த்த முறை சரியெனக் கூறுவேன். அப்படி அவர்கள் அடித்து வளர்க்கத் தொடங்கியபின், இங்கு வந்து பதியுங்கள், அப்போது நான் ஒத்துக் கொள்கிறேன், அடித்து வளர்ப்பதும் நல்லது என்று. உங்கள் பிள்ளைகள் தங்கள் எண்ணத்திற்கேற்பவோ, தாங்களாகவே முடிவுகளை எடுக்கக்கூடிய பக்குவத்திற்கோ இன்னும் வரவில்லை. அவர்கள் இன்னும் தங்கள் முடிவுகளை உங்களை அனுமதி கேட்டுத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் வெளியுலகத்தைப் பார்க்காதவர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. உங்கள் பிள்ளைகளைப் பற்றி அவர்கள் முப்பது வயதைத் தாண்டிய பிறகுதான் முழுமையாகச் சொல்ல முடியும். அப்போதுதான் அவர்கள் உலகத்தோடு போராடத் தொடங்கியிருப்பார்கள். அதற்குப் பின்னர்தான் வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறியத் தொடங்குவார்கள். அதற்குப் பின்னர்தான் எது சரியான முறை, எது தவறான முறை என அறிந்து கொள்வார்கள்.

பிள்ளைகளை அடித்து வளர்ப்பது மிகவும் தவறு. நீங்கள் அடிப்பதால் பிள்ளைகள் யாரும் திருந்துவதில்லை. உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அடக்கி வாசிக்கிறார்கள். அதே கட்டுப்பாட்டை நீங்கள் இடையில் நிறுத்திப் பாருங்கள். அவர்கள் எவ்வாறு திமிறுவார்கள் என்று அப்போது விளங்கும். அடித்து வளர்ப்பது மிகவும் பாதகமான விளைவுகளையே தரும். எமது இளைஞர், இளைஞிகள் வழிமாறிப் போவதற்கும், சுடுபடுவதற்கும் அடித்து வளர்ப்பதும் ஒரு முக்கிய காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடித்து வளர்ப்பதில் உடன்பாடில்லை.. ஆனால் சின்னத் தட்டு தட்டுவதற்கு சட்டத்திலேயே இடமிருக்கிறது.. :D

அடிப்பதைத் தவிர்த்து தாய் தந்தையர் மனம் கோணாது நடந்துகொள்ள வேண்டும் என்கிற பக்குவத்தைப் பிள்ளைகளிடம் விதைக்க வேண்டும். அதுபோல பெற்ரோரும் பிள்ளைகள் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும். சின்னப்பிள்ளைதானே என்று எகத்தாளமாகப் பேசிக்கொண்டிருந்தால் அவர்களும் ஆரம்பித்துவிடுவார்கள். பிள்ளைகள் உங்களைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடிதானே.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உறவுகள் எழுதுவதைப் பார்க்க....

சில தந்தையர், விடிய எழும்பியவுடன் பிள்ளைக்கு, பெல்ற்ரால்.... அடித்துவிட்டுத் தான்... அடுத்த அலுவல் பார்க்க போகின்றார்கள் போல்... நினைத்து எழுதுகின்றார்கள் என நினைக்க, ஆச்சரியமாகவும் கவலையாகவும் உள்ளது. எனது மகனுக்கு, நாலு வயதில்... அடித்தேன். ஆனால்... நல்ல அடி. அதன் பிறகு, இனிமேல்... குளப்படி செய்தால்... பெல்ரால் தான் அடி விழும் என்று சொல்லி... ஒரு மொத்த பெல்ற்ரை எல்லோரின் கண்ணில் படும் படியான இடத்தில்... கொழுவி வைத்துள்ளேன். அந்த பெல்ற்றுக்கு இன்றுவரை... வேலை இருக்கவில்லை. காரணம் பிள்ளைகளும்.. குள‌ப்படி செய்யவில்லை. பல பெற்றோர் பிள்ளைகளை செல்லமாக வளர்ப்பதாக நினைத்து... ஒரு அடியும் கொடுக்காமல் பிள்ளைகளின் வாழ்வை பழுத்தாக்கிய சம்பவங்கள்.... மகனின் வயதில், கின்ரர் கார்டினிலிருந்து படித்து வந்த அயல் ஜேர்மன்கார‌ பிள்ளைகளின் வாழ்வைப் பார்க்க கவலையாக உள்ளது. நன்றாக படித்து வந்த, பிள்ளைகள்... தாய், தகப்பனின் அதீத செல்லத்தால்... அவர்கள் கண்முன்னே கெட்டுப்போய் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

"அடிக்கின்ற கைதான் அணைக்கும்."

"ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது."

போன்ற முதுமொழிகள், சும்மா... சொல்லப் பட்டதல்ல. அனுபவபூர்வமாக அறிந்து... முன்னோர்கள் கூறியவை. :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் திரும்பத் திரும்ப கருத்துக்களை பகிர்ந்து கொள்வதனால் சிலருக்கு வெறுப்பாக கூட இருக்கலாம்..ஆனால் சொல்ல வேணும் போல் இருந்தால் எழுத தானே வேண்டும்....கண்டிப்பாக குளப்படி பண்ணும் பிள்ளைகளுக்கு பின் பக்கத்தில் அடிப்பத்தற்கு அனுமதி இருக்கிறது.அதே நேரம் எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் அடித்தால் இவர்கள் யாரு கேட்பதற்கு என்ற போருள் பட யாரும் எடுத்து விடாதீர்கள்..பெல்ட் பாவிப்பது தான் கவலைகயாக இருக்கிறது.ஏன் உங்கள் நாடுகளில் எல்லாம் சிறிய பிரம்பு (தடிகள்)கிடைப்பதே இல்லையா..பெல்ட்டால் அடித்தால் தான் மனசுக்கு திருப்தியாக இருக்குமா....வீட்டில் தாய்க்கோ,தந்தைக்கோ மனசளவில் பிள்ளகைள் மரியாதை வைத்திருக்க வேணும்...அதுவே பெற்றோரைக் கண்டாலே பயந்து நடுங்கும் நிலை இருக்க கூடாது.....

ஆம் பெற்றோரின் அதீத செல்லத்தினால் கெட்டுப் போகிற,போன பிள்ளைகளையும் தெரியும்...இங்கும் நல்ல பிள்ளைகளாக இருந்து தலை கீழாக மாறிய பிள்ளைகளும் இருக்கிறர்கள்..பக்கத்தில் போய் இருந்து ஏன் அப்பன் இப்படி மாறீட்டீர் என்று கேட்டால், அவர்கள் சொல்லும் ஒவ்வொரு விடையமும் பெற்றோரின் மீதான குற்றமாகத் தான் இருக்கும்,இருக்கிறது..வயது வந்த பிள்ளைக்கு சொல்ல முடீயுமா 5 டொலர் ரீ சேர்ட் தான் வாங்கி போடனும் அதற்கு மேல் விலையுள்ள எந்த உடுப்பும் வாங்கக் கூடாது..பள்ளி விட்டு வந்ததும் கோயில் சோறு தான் சாப்பாடு. இப்படி ரொம்ப கஞ்சல் தனம் பண்ணுவது...இன சனங்களை கண்டால் அந்தப் பிள்ளைகளுக்கு கோவத்தை உண்டு பண்ணும் விதமாக அண்ணா வாறார் அடி விழப் போகிறது. அல்லது அக்கா வாறா பேசப் போகிறா. என்று இல்லாதவற்றை பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பதனாலயே பிள்ளைகள் பெற்றோரில் இருந்து அன்பு,பாசம் என்றால் என்ன வென்று தெரியாத ஒரு நிலைக்கே போய்க் கொண்டு இருக்கிறார்கள்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உறவுகள் எழுதுவதைப் பார்க்க....

சில தந்தையர், விடிய எழும்பியவுடன் பிள்ளைக்கு, பெல்ற்ரால்.... அடித்துவிட்டுத் தான்... அடுத்த அலுவல் பார்க்க போகின்றார்கள் போல்... நினைத்து எழுதுகின்றார்கள் என நினைக்க, ஆச்சரியமாகவும் கவலையாகவும் உள்ளது.

பல பெற்றோர் பிள்ளைகளை செல்லமாக வளர்ப்பதாக நினைத்து... ஒரு அடியும் கொடுக்காமல் பிள்ளைகளின் வாழ்வை பழுத்தாக்கிய சம்பவங்கள்....

... தாய், தகப்பனின் அதீத செல்லத்தால்... அவர்கள் கண்முன்னே கெட்டுப்போய் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

"அடிக்கின்ற கைதான் அணைக்கும்."

"ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது."

போன்ற முதுமொழிகள், சும்மா... சொல்லப் பட்டதல்ல. அனுபவபூர்வமாக அறிந்து... முன்னோர்கள் கூறியவை. :)

நன்றி சிறி

மற்றும் கருத்து எழுதிய உறவுகளுக்கு

விசுகண்ணா

அதீத நம்பிக்கை வைக்கிறார். அது அவருக்கு பாதகமாக வரக்கூடாது என்ற அன்பையே காண்கின்றேன். நன்றிகள்.

நீங்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள் நான் பெற்ற பிள்ளைகள் அவர்கள்.

என்னைத்தவிர எவரும் அவர்களை தண்டிப்பதை நான் இதுவரை அனுமதித்ததில்லை. இறகுகளுக்குள் வைத்து பாசமாக வளர்க்கின்றேன்.

நல்லதொரு நண்பன் நான் அவர்களுக்கு.

அதே நேரம் சரியானதை பாராட்டவும் ஊக்குவிக்கவேண்டிய நேரத்தில் ஊக்குவித்தலும்

கண்டிக்கவேண்டிநேரத்தில் கண்டித்தலும் தண்டிக்கவேண்டிய விடயங்களுக்கு தண்டித்தலுமே ஒரு தகப்பனுடைய கடமை.

ஒரு தகப்பனின் பிள்ளை மீதான பாசம் என்பது பிள்ளைக்கு தெரியக்கூடாது.

இது எனது தகப்பனார் எனக்கு பிள்ளை பிறந்தபோது சொன்னது.

(இன்று பல பெற்றோர் தமது பிள்ளைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் இருப்பதற்கு காரணம் இவர்களது பாசத்தை அவர்கள் தவறாக புரிந்துகொண்டு பயன்படுத்துவதை இவர்களது பாசம் தடுத்தலே)

  • கருத்துக்கள உறவுகள்

நான் திரும்பத் திரும்ப கருத்துக்களை பகிர்ந்து கொள்வதனால் சிலருக்கு வெறுப்பாக கூட இருக்கலாம்..ஆனால் சொல்ல வேணும் போல் இருந்தால் எழுத தானே வேண்டும்....கண்டிப்பாக குளப்படி பண்ணும் பிள்ளைகளுக்கு பின் பக்கத்தில் அடிப்பத்தற்கு அனுமதி இருக்கிறது.அதே நேரம் எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் அடித்தால் இவர்கள் யாரு கேட்பதற்கு என்ற போருள் பட யாரும் எடுத்து விடாதீர்கள்..பெல்ட் பாவிப்பது தான் கவலைகயாக இருக்கிறது.ஏன் உங்கள் நாடுகளில் எல்லாம் சிறிய பிரம்பு (தடிகள்)கிடைப்பதே இல்லையா..பெல்ட்டால் அடித்தால் தான் மனசுக்கு திருப்தியாக இருக்குமா....வீட்டில் தாய்க்கோ,தந்தைக்கோ மனசளவில் பிள்ளகைள் மரியாதை வைத்திருக்க வேணும்...அதுவே பெற்றோரைக் கண்டாலே பயந்து நடுங்கும் நிலை இருக்க கூடாது.....

------

இதில், வெறுப்படைய என்ன இருக்கு யாயினி :) .

எதிர்காலச் சந்ததிக்கு, பயன் பெறக்கூடிய‌ நல்ல, ஒரு ஆரோக்கியமான விவாதம் இது.

பிரம்பால் அடித்தால்.... பிள்ளைக்கு நோகும் என்ற படியால்... தான், பெல்ற்ரை வைத்து வெருட்டுவது.

நீங்கள்... பெல்ரால், அடிப்பது என்றால்... சினிமாப் படங்களில் வரும் சவுக்கடியை... நினைத்து, ரென்சனாகி உள்ளீர்கள் என நினைக்கின்றேன். :D:lol:

இந்த விடயங்கள் எல்லாம் பலவருடங்கள் செய்த ஆராய்சிகளின் முடிவாக எடுக்கப்பட்டவை .மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்திய நாடுகள் நாகரீகமடைந்தவை என்பது உலகறிந்த உண்மை ,இல்லை நாம் மாற மாட்டோம் காட்டுமிராண்டிகளாகவே இருப்போம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது.

எம்மவர் பலர் புலம் பெயர்ந்தும் அந்த நிலைப்பாட்டில் இருப்பது மிக மனவருத்தற்குரிய விடயம் .பிள்ளைகள் வளர்ப்பில் மட்டுமல்ல எமது கலாச்சாரம் என்ற பேரில் இன்னமும் வடலிக்கு பின்னால் போய் குந்தினால் தான் அவர்களுக்கு திருப்தி .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயங்கள் எல்லாம் பலவருடங்கள் செய்த ஆராய்சிகளின் முடிவாக எடுக்கப்பட்டவை .மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்திய நாடுகள் நாகரீகமடைந்தவை என்பது உலகறிந்த உண்மை ,இல்லை நாம் மாற மாட்டோம் காட்டுமிராண்டிகளாகவே இருப்போம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது.

எம்மவர் பலர் புலம் பெயர்ந்தும் அந்த நிலைப்பாட்டில் இருப்பது மிக மனவருத்தற்குரிய விடயம் .பிள்ளைகள் வளர்ப்பில் மட்டுமல்ல எமது கலாச்சாரம் என்ற பேரில் இன்னமும் வடலிக்கு பின்னால் போய் குந்தினால் தான் அவர்களுக்கு திருப்தி .

ஐயா

எந்த நிலையிலும் நானோ என் பிள்ளையோ மேலத்தேசவராக மாறிவிடக்கூடாது என்பது தான் விருப்பம்.

அவனே நொந்து போய் எமது வாழ்வை பார்த்து பிரமிக்கின்றான்.

(நேற்றும் ஒரு பிரெஞ்சுக்ககாறன் அழுது கொண்டு போறான்

பொடி 16 வயதில பள்ளிக்குடத்தை கோட்டை விட்டுவிட்டுதாம். ஏனென்றால் கிழமையில் ஒரு நாள்தான் பாடசாலை போகுமாம். தட்டிக்கேட்டா தனியப்போகப்போறன் எண்டுதாம்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயங்கள் எல்லாம் பலவருடங்கள் செய்த ஆராய்சிகளின் முடிவாக எடுக்கப்பட்டவை .மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்திய நாடுகள் நாகரீகமடைந்தவை என்பது உலகறிந்த உண்மை ,இல்லை நாம் மாற மாட்டோம் காட்டுமிராண்டிகளாகவே இருப்போம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது.

எம்மவர் பலர் புலம் பெயர்ந்தும் அந்த நிலைப்பாட்டில் இருப்பது மிக மனவருத்தற்குரிய விடயம் .பிள்ளைகள் வளர்ப்பில் மட்டுமல்ல எமது கலாச்சாரம் என்ற பேரில் இன்னமும் வடலிக்கு பின்னால் போய் குந்தினால் தான் அவர்களுக்கு திருப்தி .

செத்தவீட்டில் கூட அழாத மனிதரல்லாவா நீங்கள்?அழுதாலும் பெரிய பிறேம் போட்ட கறுப்புக்கண்ணாடி போடுத்தான் அழுவீர்களாக்கும்.இதுதான் மேலைத்தேய நாகரீகம்.முன்வீட்டில் மரண அல்லோகலம் நடந்தாலும்......அமைதியாக பார்ட்டியுடன் பணியாரம் சுடுவதுதான் அவர்கள் கலாச்சாரம்.குந்தியிருப்பது கூட உடல் நலத்திற்கு நலம்.இதனால் சிறுநீரக நோய்கள் இல்லாமல் போகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.