Jump to content

திருந்தவே திருந்தாது நம்ம இனம்...


Recommended Posts

aar9nc.jpg

பிரான்ஸ் லாச்சப்பலில் உள்ள இலங்கை அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக ஐ.நா தலைவரும், தமிழீழத்தில் சிங்கள அரசு நடாத்துக்கொண்டு இருக்கிற படுகொலைகளை தட்டிக்கேட்கும் கதாநாயகனுமாகிய ஆர்யா என்ற நடிகருக்கு நம்ம மக்கள் கொடுத்த வரவேற்பில் ஆர்யா எனி ஐரோப்பாவிலே செட்டில் ஆகிடலாம் என்ற ஒரு முடிவை எடுத்திருப்பார்.

அந்த அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு வந்த ஆர்யாவோடு போட்டோ எடுக்கனும் என்றால் அந்த கடையில 20 சீடிக்கள் வாங்கனுமாம் என்று அறிவித்தல் விடப்பட்டதாம், பல அகதி தமிழர்கள் முண்டியடிச்சு ஆர்யாவோடு சேர்ந்து நிண்டு போட்டோ எடுத்தாக தகவல் வந்தது, அதனைவிட பல அகதி தமிழர்கள் ஆர்யாவை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பல் வழங்கி நன்றாக பராமரித்து அனுப்பி தங்களுக்குள் சந்தோசப்பட்டுக்கொண்டார்களா

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

:lol::lol::lol:

இனியும் தமிழகத் தமிழர்கள் மட்டுமே சினிமா மோகம் கொண்டவர்கள் என்ற கருத்துடையவர்கள் சிந்திப்பாராக...

எங்க ஊரே பரவாயில்லை போல இருக்கே?

Link to comment
Share on other sites

:lol::lol::lol:

இனியும் தமிழகத் தமிழர்கள் மட்டுமே சினிமா மோகம் கொண்டவர்கள் என்ற கருத்துடையவர்கள் சிந்திப்பாராக...

எங்க ஊரே பரவாயில்லை போல இருக்கே?

இந்த விடயத்தில் நான் உமது பக்கம்... :( :cry: :cry:

Link to comment
Share on other sites

சினிமா மோகத்துல உலகத்திலேயே ரொம்ப மோசம் தெலுங்கர்கள் தான்.... ஆந்திராவிலே ஒரு ஊரிலே ஒரு தெருவிலேயே 36 தியேட்டர்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.....

Link to comment
Share on other sites

சினிமா மோகத்துல உலகத்திலேயே ரொம்ப மோசம் தெலுங்கர்கள் தான்.... ஆந்திராவிலே ஒரு ஊரிலே ஒரு தெருவிலேயே 36 தியேட்டர்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.....

2வது சனத்தொகை கூடிய மாநிலம் தானே? அப்ப அப்படித்தான் இருக்கும்,,

அட அது பறவாயில்லையே..அவங்கள் (தெலுங்கர்கள்) தங்களுக்கெண்டு ஒரு நாடு (அட்லீஸ் சொந்தமா மாநிலம் வைச்சிருக்கிறாங்க), இது அகதியா மாற்றான் நாட்டில வாழ்ந்துகொண்டு இந்தியாவில இருந்து ஒருத்தரை அதுவும் நடிப்பை தொழிலை கொண்ட ஒருவரை அழைத்து, (இதில் அவரது நேரத்தை வீணடிச்சதும் பத்தாமல், தாங்கள் பிரான்சில் இரவு பகலா வேலை செய்த அலுப்பையும் பாராது ரொம்ப உணர்ச்சிவசப்படுறதைப்பார்த்

Link to comment
Share on other sites

விடுப்பா... ஆப்கானிஸ்தானிலேயே இப்போ இந்த நிலைமை தான்.... இந்திப் படங்கள் அங்கே சக்கைப்போடு போடுது.... டிக்கெட் எடுக்க தியேட்டர் வாசலில் வெத்து குத்து எல்லாம் நடக்குதாம்....

முகல்-ஈ-ஆஸம் என்ற திரைப்படம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டது... இப்போது அதே பிரிண்டையே வண்ணமாக்கி வெளியிட்டு இருக்கிறார்கள்.... இந்தியாவில் அவ்வளவாக வசூல் இல்லை.... ஆனால் அந்தப் படம் இப்போது ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் சக்கை போடு போடுகிறது.... சினிமா மோகம் உலகம் முழுவதுக்குமே இருக்கிறது.....

Link to comment
Share on other sites

உந்த சினிமா மோகம்..............வையந்திமாலாவை கட்டினால் கட்டுவன் ...அல்லது கட்டாமால் இருப்பனென்று ....ஒரு பெரிசு ஒன்று கல்யாணமே கட்டாமல் பைத்தியமாக திரிஞ்சுது...வடமராட்சி பக்கத்திலை...........................

Link to comment
Share on other sites

பானுமதியுடன் ஒரு இரவை கழிப்பதற்காக ஒரு தியேட்டரை எழுதிக் கொடுத்தவர் எல்லாம் சென்னையில் இருந்திருக்கிறார்கள்.....

Link to comment
Share on other sites

பானுமதியோடையா.....வேறை ஆரோடையோ இணைத்து பேசின மாதிரி....இருக்கு

அந்த....அடுக்குமொழியான்.....நான

Link to comment
Share on other sites

நான் அறிந்தவரை ஆர்யா ஒரு இலங்கைத் தமிழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அறிந்தவரை ஆர்யா ஒரு இலங்கைத் தமிழர்

உதென்ன வசம்பு புதுக்கதை விடுறீர் ? ஆர்யா இலங்கையரா ? நீர்மாறி ஆகாசை ஆர்யா என்றீர்போலை.

Link to comment
Share on other sites

mathanarasa wrote:

உதென்ன வசம்பு புதுக்கதை விடுறீர் ? ஆர்யா இலங்கையரா ? நீர்மாறி ஆகாசை ஆர்யா என்றீர்போலை.

இதே களத்தில் ஆர்யா இலங்கையைச் சேர்ந்தவர் என வாசித்ததாக ஞாபகம். தெரிந்தவர்கள் யாராவது இதனைத் தெளிவுபடுத்தினால் நல்லது.

Link to comment
Share on other sites

ஆர்யா ஒரு muslim என்று நினைக்கின்றேன்...

நானும் அப்படித்தான் கேள்விப் பட்டிருக்கிறேன்... அவர் Model ஆக பணியாற்றிய காலத்தில் அவர் கோயமுத்தூர் காரர்... முஸ்லிம் என்று கேள்விப் பட்டதாக ஞாபகம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள விட இஞ்ச எங்கட தமிழ் பொடியள் எத்தின பேர் ஆயிரம் மடங்கு வடிவானவங்கள் இருக்கிறாங்கள். நடிக்க சந்தர்ப்பம் வழங்கின பிச்சு உதறி போடுவாங்கள். ஆனா பெரிய ஆள் ஆன பிறகு தலைக்கணம் இல்லாமல் இருக்கிறாங்களோ என்டது தெரியா. ஈழத்தில சினிமா உருவாக்கப்படும் போது இந்தியன்கள் எல்லாம் யாரை நம்பி படம் எடுக்க போகினம் என்டு பாப்பம். சத்தியராய் ஒரு படத்தில சொல்லுவார் "வெளிநாட்டுக்காரன் என்டா மாலை போட்டு வரவேற்கிறீங்க ஆனா அதுவே உள்ளுர் காறணா இருந்தா செருப்பால அடிக்கிறீங்க"

Link to comment
Share on other sites

பார்த்தீரா ஒரு உதாரணம் சொல்வதற்கே ஒரு இந்திய நடிர் சொன்னதைத் தான் உம்மால் எழுத முடிகிறது. :P :lol:

Link to comment
Share on other sites

mathanarasa wrote:

உதென்ன வசம்பு புதுக்கதை விடுறீர் ? ஆர்யா இலங்கையரா ? நீர்மாறி ஆகாசை ஆர்யா என்றீர்போலை.

இதே களத்தில் ஆர்யா இலங்கையைச் சேர்ந்தவர் என வாசித்ததாக ஞாபகம். தெரிந்தவர்கள் யாராவது இதனைத் தெளிவுபடுத்தினால் நல்லது.

இங்கு ஆகாஷ் தான் இலங்கையர் என் கருத்தடப்பட்டது. :roll:

Link to comment
Share on other sites

நண்பர்களே எனக்கு இதிலொண்றும் தவறாக தெரியவில்லை ஏனெனில் வியாபாரம் விளம்பரத்த்திலும் தங்கியிருக்கிறது ஏன் ttn, deepam ஆகியவற்றில் கருவாட்டடில்லிருந்து கருவேப்பிலை வரைக்கும் சினிமா பிரபல்யங்கள்தானே அதையேற்று பார்க்கும் நீங்கள் இதைமட்டும் குறை காண்பது ஏனோ ?

Link to comment
Share on other sites

இந்த விடயம் பற்றி விசாரித்ததில் பாரீசில் அந்த கடை திறந்தவர் இந்தியாவின் பிரபல முன்னாள் திரை பட தயாரிப்பு மற்றும் திரைபட படப்பிடிப்பு நகர் நடாத்திய வி;ஜிபி பன்னீர் செல்வத்தின் மகனும் மற்றும் அவரது உறவினர் ஒருவர் பெயர் முரளி என்பவருமே சேர்ந்து திறந்த கடைக்கே ஆர்யா வந்ததாகவும் ஆனால் அந்த திறப்பு விழாவிற்கு விழம்பர உத்தியாக வேறு பிரபல நடிக நடிகைகள் வருகை தர போவதாக முன்னரே தகவல்கள் தெரிவிக்கபட்டதாகவும் அறிய முடிகிறது பாரிசில் லா சப்பல் என்கிற பகுதி எப்பவுமே தமிழர் நிரம்பி வழிகிற பகுதி என்பது குறிப்பிட தக்கது எனவே சும்மா விடுப்பு பாக்கவே கன சனம் கூடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும் மேலதிகமாக புகை படங்கள் கேட்டிருக்கிறென் கிடைத்ததும் இணைக்கிறேன்

Link to comment
Share on other sites

முதலில் புராணத்தை விட்டுட்டு

செயல்பட்டுக் காட்டுங்க........

கோணிக் கோணி நடக்கிறவங்க

மற்றவங்கள பார்த்து நிமிர்ந்து நடக்கச் சொல்றதைப் பார்க்கும் போதுதான்......... :)

Link to comment
Share on other sites

முதலில் புராணத்தை விட்டுட்டு

செயல்பட்டுக் காட்டுங்க........

கோணிக் கோணி நடக்கிறவங்க

மற்றவங்கள பார்த்து நிமிர்ந்து நடக்கச் சொல்றதைப் பார்க்கும் போதுதான்......... :)

என்ணண்ணா சொல்லிறீங்க ஒண்டும் புரியல்ல????

Link to comment
Share on other sites

ப்ரியசகி

நீங்கள் ஏன் விளம்பரம் பற்றிச் சொல்கின்றீர்கள். தேசியத் தொலைக்காட்சியே விசேட நிகழ்ச்சிகளுக்கு கங்கைஅமரன் மணிவண்ணன் போன்றவர்களைத் தானே சிறப்பு விருந்தினர்களாக அழைக்கின்றனர். அது பற்றி எந்தவித கருத்தும் சொல்ல மாட்டார்கள். கடை உரிமையாளர் இந்தியராக இருந்தால் என்ன இலங்கையராக இருந்தால் என்ன அதன் திறப்பு விழாவை எப்படி நடத்தவது என்பது அவரின் தனிப்பட்ட விடயம். இந்திய நடிகர்களின் படங்களை வெளியிட்டு பணம் பார்க்கும் போது உந்த எண்ணங்கள் எல்லாம் எங்கு போனதோ???

Link to comment
Share on other sites

இங்கு இலங்கை தமிழர் நடத்தும் டிடின் ல் ..வரும் விளம்பரங்களைப்பார்த்தால்..கூ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டி20 உலகக்கோப்பை: கவலை தரும் ரோஹித், ஹர்திக் - குழப்பமான சிக்னல் தரும் இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ’வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ள’ அணியாக (favourites) ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் நுழைகிறது. அடுத்த நான்கு வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி, ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளையும் தீவிர ஆய்வுகளையும் எதிர்கொள்ளும். 2007 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு முதலாவது உலகக்கோப்பையை வென்ற இந்தியாவால் அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியவில்லை. பணம், செல்வாக்கு மற்றும் திறமை இருந்த போதிலும் முக்கிய கிரிக்கெட் சாம்பியன் பட்டங்கள் இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. 2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பிறகு இந்தியா எந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர்களில் பட்டம் வென்றதில்லை. அதன் பிறகு, மூன்று சிறந்த கேப்டன்கள் - எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மற்றும் இரண்டு பிரபலமான தலைமை பயிற்சியாளர்கள் - ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மற்ற தொடர்களில் சிறந்த வெற்றிகளை பெற்ற போதிலும், ஐசிசி தொடர்களில் தோல்வியடைந்தனர். கடந்த ஆண்டு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த துரதிர்ஷ்டத்தை இந்தியா இந்த முறை முறியடிக்க முடியுமா? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல் பந்தயங்களில் அதிக ரன் குவித்த விராட் கோலி, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். இந்திய அணித் தேர்வில் குழப்பமான சிக்னல் 2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), வீரர்களின் உடல் தகுதியை மதிப்பிடுவதற்கும், இந்திய அணியின் தேர்வில் செல்வாக்கு செலுத்தும் அம்சமாகவும் இருந்துவருகிறது. டி20 போட்டிகளுக்கும், சில சமயங்களில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இது பொருந்தும். ஐபிஎல் பந்தயங்களில் நிலவும் கடுமையான போட்டியும், அழுத்தமும் வீரர்களின் திறனையும், மன உறுதியையும் சோதிக்கிறது. இருப்பினும் ஐபிஎல் 2024 இன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குழப்பமான சமிக்ஞைகளை அளிக்கிறது. ரோஹித் ஷர்மாவின் அதிரடி தொடக்க பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஒரு வீரரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடும் ரிங்கு சிங் 15 வீரர்கள் கொண்ட முக்கிய அணியில் இல்லை. ரிசர்வ் வீரர்களில் அவரும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த 'பெரிய சாதனையாளர்' என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த சுப்மன் கில், ரிசர்வ் வீரர்களில் ஒருவராக உள்ளார். விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் 2024-ல் அதிக ரன்கள் எடுத்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களில் கூட இல்லை. சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கெய்க்வாட் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, இந்தியாவின் 2022 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷல் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல்-லில் மட்டை வீச்சாளர்களை நடுநடுங்க வைத்த பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. நட்சத்திர வீரர்கள் கோலி, பும்ரா ஐபிஎல் 2024 இன் ஃபார்ம் அடிப்படையில் பல வீரர்களைச் சேர்த்தது மற்றும் குறிப்பிடத்தக்க சில புறக்கணிப்புகள், பாரம்பரிய தேர்வு முறைக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளது. விராட் கோலியும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்கள். போட்டியின் நடுப்பகுதியில் கோலியின் ஸ்டிரைக் ரேட் மீதான விமர்சனம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பிறகு அவர் அற்புதமாக பேட்டிங் செய்து சந்தேகப்பட்டவர்களை அமைதிப்படுத்தினார். முன்னணி ரன் எடுத்தவர் என்ற முறையில் அவர் கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். பும்ரா மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்காவிட்டாலும் (மூன்றாவது இடத்தைப் பிடித்தார்) அவர் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தார் என்பது உண்மை. அவரது பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் சிக்கனமாக இருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாகவே அவர் கொடுத்தார். அவர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டாலும் கூட பும்ராவின் அபாரமான திறமையும், ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அவரை ஆக்கியது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு அற்புதமான டெஸ்ட் தொடரின் மூலம் பும்ரா, சம கால வேகப்பந்து வீச்சாளர்களில் நிகரில்லாதவராக திகழ்கிறார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, குல்தீப் யாதவ் (வலது) மற்றும் ரவீந்திர ஜடேஜா (இடது) இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்கின்றனர். ரிஷப் பந்தின் வலுவான மறுபிரவேசம் இந்த அணியில் கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஒப்பாக நான் கருதும் ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே. இது ஐபிஎல் 2024 இல் அவர் செய்த சாதனைகளின் புள்ளிவிவரங்களுக்காக அல்ல. மாறாக உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து அவர் செய்த குறிப்பிடத்தக்க மற்றும் வலுவான மறுபிரவேசத்திற்காக. இந்த காயம் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு அவரை ஆட்டத்தில் இருந்து விலக்கி வைத்திருந்தது. இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்த ரிஷப் பந்தின் சுதந்திரமான, அதிரடியான மற்றும் புதுமையான பேட்டிங் மீண்டும் திரும்பியிருப்பது உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நம்பிக்கையை தருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் அதிரடி வீரர் சிவம் துபே. ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இங்கிருந்து இந்திய அணியின் பலம் குறையத் தொடங்குகிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் 2024 இல் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால் சிறப்பாக எதையும் சாதிக்கவில்லை. மற்ற வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றனர். பும்ராவின் முக்கிய ஜோடியான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பெரும்பாலான நேரங்களில் பின்தங்கியே இருந்தார்.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து ரிஷப் பந்த் ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்திய அணிக்கு கவலை தரும் ரோஹித், ஹர்திக் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிட்ச்கள் (ஆடுகளங்கள்) எப்படி இருக்கும் என்பது உலகக் கோப்பையில் எல்லா அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். ஆனால் மூன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நிலையற்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் (புதியவர்கள் கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர்) இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலின் கூர்மை குறைவாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மோசமான ஐபிஎல் ஃபார்ம்தான் முக்கிய கவலை. மும்பை இந்தியன்ஸில் கேப்டன்சி மாற்றத்தால் எழுந்த சர்ச்சை அணியின் ஒற்றுமையை பாதித்தது. தொடக்க பேட்ஸ்மேனாக ரோஹித்தின் அதிரடி பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இது ஒருநாள் உலகக் கோப்பையில் நிரூபணமானது. பினிஷர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டர் என பாண்டியாவின் ஆல்ரவுண்டர் திறமையும் முக்கியமானது. பாண்டியா தனது ஆட்டத்திறமையின் உச்சத்தில் இல்லாமல் இருப்பது அணியின் சமநிலையை சீர்குலைக்கக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி தலைமையிலான இந்திய அணி, 2007ஆம் ஆண்டு முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்றது. டி20 உலகக்கோப்பை யாருக்கு? இந்தியாவின் தேர்வாளர்கள் நெருக்கடி காலத்திட்டம் உட்பட எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பல நட்சத்திர வீரர்கள் கேள்விக்குரிய ஃபார்மில் இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டில் உள்ள திறமையின் ஆழம் இதை சாத்தியமாக்குகிறது. ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு ஒரு சோதனைக் களமாகவும், உலகெங்கிலும் உள்ள (பாகிஸ்தான் தவிர) சிறந்த டி20 வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பை உருவாக்கிய பல வீரர்கள் தங்கள் நாட்டிற்காக களம் இறங்கத் தயாராக உள்ளனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் மற்றும் கடந்த ஆண்டு முதல் வெற்றிகளைக் குவித்து வரும் ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டத்திற்கான முக்கிய போட்டியாளர்களில் அடங்குவார்கள். உலகக் கோப்பையின் முந்தைய 8 சீசன்களில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஆறு வெவ்வேறு நாடுகள் சாம்பியன் ஆயின. கிரிக்கெட்டின் இந்த வடிவத்தில் எந்த ஒரு அணியும் வெற்றிபெறக் கூடும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இந்தியாவின் பேட்டிங் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆதிக்கத்தை தக்க வைக்குமா இந்தியா? ஆப்கானிஸ்தான் போன்ற வலுவாக போராடக் கூடிய அணிகள், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்த முடியும். ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதை செய்து காட்டியது. இந்த உலகக் கோப்பை போட்டியின் வெற்றியாளரைக் கணிப்பது சிரமம் என்பது மட்டுமல்ல, முற்றிலும் முட்டாள்தனமானதும் கூட. எல்லா அணிகளும் தங்கள் உச்ச திறனுடன் விளையாட வேண்டும். லீக் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இரண்டு பரம எதிரிகளுக்கு இடையேயான போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் "முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய" போட்டியாகக் கருதப்படுகிறது. உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்தப் பந்தயம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே தோல்வியை விரும்பாது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் (ODI மற்றும் T20) பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளை குவித்துள்ள இந்தியா, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தாண்டி தங்கள் பார்வையை செலுத்த வேண்டும். பாகிஸ்தானை வீழ்த்துவது ஒரு படிக்கல் மட்டுமே. உலகக் கோப்பையை வெல்வதே முந்தைய இழப்புகளுக்கு ஈடுசெய்வதாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/ckkk69xgl6qo
    • சென்ற தலைமுறையினர் மாமிசத்தை கிழமைக்கு ஒரு முறைதான் உண்பார்கள். அதுகும் கோவில் கொடியேற்றங்கள் தொடங்கி விட்டால் மாதக் கணக்கில் மரக்கறி உணவுதான். இப்போதைய மரக்கறிகள் கூட... இரசாயனம் கலந்த விளைச்சலுடன் தான் கிடைக்கின்றது.   இன்று  கிழமையில் 6 நாளும் மாமிசம்தான். அந்த இறைச்சி தரும் மிருகங்களும், பறவைகளும் ஆரோக்கியமாகவும், சதைப்பிடிப்பாகவும் இருக்க  அதிக ஊட்ட  சத்துக்களையும், நோய் எதிர்ப்பு குளிசைகளான "அன்ரி பயோட்டிக்" போன்ற மருந்துகளை உணவில்   அளவுக்கு அதிகமாகவே கலந்து கொடுக்கும் போது... அந்த இறைச்சியை உண்ணும் மனிதனும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து ஒரு கட்டத்ததில்  நோயாளி ஆகி விடுகின்றான். எங்கும் எதிலும் வியாபாரம் முக்கியமாகி விட்ட நிலையில் மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. 
    • முதல் 8 ஓவர்களில் கனடாவின் பக்கம் இருந்த ஆட்டம் அடுத்த 5 வர்களில் அமேரிக்கா பக்கம் திரும்பியது. முதல் போட்டியில் என் கணிப்பு வென்றது🤣
    • 👍..... இப்படியே எல்லா அணிகளும், கனடா போல, அமெரிக்காவோட விளையாடினால், அமெரிக்கா உலக கோப்பையையே வென்றுவிடும்....🤣 🤣.... நான் இப்ப ஃபோன் எடுத்தால், 'கிரிக்கட்டா, அப்படின்னா என்ன?' என்று கேட்பாங்கள் நந்தன்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.