Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூக்களை வண்டு,ஈ மொய்ப்பது எப்படி..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nedukkalapoovan

  • Replies 128
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சி பூவை நின்று பார்க்க தொடங்கிட்டார்...

இனி மழையில நனைய வேணும்போல் தோன்றும்.

அடுத்த கட்டம் வாழ்கையில் நனைவதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல காலத்துக்கு முன்னரே பூக்களை நின்று பார்க்க வெளிக்கிட்டன். மழைல நனைஞ்சு போட்டு தான் இரண்டாவது காணொளி பிடிக்கப்பட்டுள்ளது..! பூக்கள் நனைந்திருக்கின்றனவல்லவா..! அது மழை நீரில் தான்..!

ஆனால் வாழ்கையில் நனைகிறேன் என்று ரசிக்கவே முடியாத ஜென்மங்களிடம் மாட்டிட்டு நான் முழிக்கத் தயார் இல்லை..! பூக்களை ரசிப்பது மனதுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி..! :):lol:

அடுத்த கட்டம் வாழ்கையில் நனைவதுதான்.

அவர் வாழ்க்கையில் நனையமாட்டார் வாழ்க்கையில் நுழைவார்

(ஆண்)

வண்டின் கண்ணில் ஆடும் பூ காளை கண்ணில்லை

பெண்ணை கண்ட கண்கள் பூவைக்கண்டதில்லை,

காதல் கொண்ட நெஞ்சம் தேனைக் கண்டு திகட்டாது

காளை காணும் கனவு உன் காதல் நினைவில் நனையத்தானே

(பெண்)

தலைவன் காலை ஆராதித்து தலைவி அணியும் மலரே

தேடிவந்த தலைவனுக்கு சேதி ஒன்று சொல்லு

வாடி இந்த பாவை வருந்தி அழைத்து நின்றாள் காலம்

தாழ்தி வந்தும் தான் இந்த பூவை காய்வதென்ன

(ஆண்)

வாடி நிலத்தில் வீழாமல் வண்டு வந்து கொத்தாமல்

தேடி வந்தேன் தஞ்சம் உன்னை தேவை ஓன்று சொல்ல

என்னை கொஞ்சம் தந்தேன் பாவை இந்த உலகை மறந்தேன்

உன்னை கண்ணில் ஒத்திப்பார்க்க என்னை ஒப்பு கொள்ளு

[size=2]பி.கு: கண்ணதாசன் பாணியில் ஒன்றை முயற்சித்தேன். ஆனால் அவர் போல் சொற்கள் இல்லாமல் சிலம்பம் ஆடும் கலையை என்னால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. நிறைய எழுத வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.[/size]

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சிகளுக்கேற்ற கவிதை... அழகு..! நன்றி.. மல்லையூரான்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இயற்கை

நாங்கள் மட்டும் எப்படியப்பா

அதைச்செய்யாமல் இருக்கமுடியும்???

இயற்கையோடு ஒத்துப்போவதை வரவேற்கணுமல்லவா?? :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களுக்குப் பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள்

சின்ன வண்டு எம்மாத்திரம் தாவித்தாவிப் பருகுகின்றது தேனை.

அதைப்பார்க்க நாங்கள் மழையில் நனைவதைவிட

வாழ்க்கையென்னும் கடலில் நீந்துவது சிறந்தது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப விசுகு அண்ணாக்கும் பூக்களைப் போல.. ஓரறிவும்.. வண்டுகளைப் இரண்டறிவுமா..??! ஆறறிவில மிச்சம் எல்லாம் எங்க..??!

அது போகட்டும்..

தேன் குடிக்கும் வண்டின் வாயிறுப்பு தேன் குடிக்க என்று பிரத்தியேகமாக அமைந்தது.

ஆனால் ஈ க்கு அப்படியல்ல. அது ஸ்பொஞ் போல ஒற்றி உறிஞ்சிக் கொள்வது.. அது கூட பூவில தேன் குடிக்குது..! அது தான் ஆச்சரியமா பார்த்துக் கொண்டேன்..!

picture-61.png

தேன் குடிக்கும் வண்டு வாயுறுப்பு.

040%20Morphology%20of%20a%20fly%20(lateral).jpg

ஈ யின் ஸ்பொஞ் போன்ற வாயுறுப்பு.

காட்சிகளுக்கேற்ற கவிதை... அழகு..! நன்றி.. மல்லையூரான்..! :)

பதிந்து முடிய அரை மணித்தியாலத்தை வீணாக்கிவிட்டேனே என்று கவலப்பட்டேன். இன்னொருதிரியில் உருப்படியாக ஏதாவது எழுத்தியிருக்கலாம் என்று நினத்தேன். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை

பாராட்டுக்கள்

ஒளித்து வைக்காதீர் திறமைகளை.

ஏன் ராசா நெடுக்கு

எங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் ரசித்து பார்க்க வராது

எங்களுக்கு தெரிந்தமாதிரி ரசிப்பதில் தங்களுக்கேன் இழக்காரம்?? :lol::D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ராசா நெடுக்கு

எங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் ரசித்து பார்க்க வராது

எங்களுக்கு தெரிந்தமாதிரி ரசிப்பதில் தங்களுக்கேன் இழக்காரம்?? :lol::D :D

இதிலென்ன இழக்காரம்.. நீங்க அப்படி நினைக்கிறது தான் தப்பு..! பூவில இதழ் வழியும் தேன் குடிக்கிறது சகஜம் தானே..! ஆனால் அதை கட்டாயமாக்கிறது தான்.. சரியா தெரியல்ல..! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன இழக்காரம்.. நீங்க அப்படி நினைக்கிறது தான் தப்பு..! பூவில இதழ் வழியும் தேன் குடிக்கிறது சகஜம் தானே..! ஆனால் அதை கட்டாயமாக்கிறது தான்.. சரியா தெரியல்ல..! :lol::)

நாங்கள் சுழியன்கள் அன்றோ?? :lol::D :D

பூக்களும் வண்டும் நல்லாருக்கு.

கே பாலச்சந்தரின் பழைய சினிமாக்களில் 'சிம்பாலிக் ஷாட்' ஆக வருவது மாதிரி வண்டு, தேடித் தேடி தேன் குடிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அழகான கவிதை மல்ஸ் அண்ணா அப்பிடியே தமிழ் சூரியன் அண்ணாட்ட குடுத்திங்கன்னா பாடல் ஆகி தருவார் ஒரு நாள்....

பூவை வண்டு மொய்ப்பது

பூவையரை ஆண்கள் மொய்ப்பது

இயற்கையின் விதி அல்லவோ? நெடுக்ஸ் அண்ணா

நாங்களும் வண்டு மாதிரி குடிச்சிட்டு பறந்திட்டே இருக்கணும் அடுத்த பூவை நோக்கி....

:D

மல்லை

பாராட்டுக்கள்

ஒளித்து வைக்காதீர் திறமைகளை.

நன்றி விசுகண்ணா. முயற்சிக்கிறேன்

நல்ல அழகான கவிதை மல்ஸ் அண்ணா அப்பிடியே தமிழ் சூரியன் அண்ணாட்ட குடுத்திங்கன்னா பாடல் ஆகி தருவார் ஒரு நாள்....

நன்றி சுண்டல். அனுப்பி வைக்கிறேன். அவரின் வசதிப்படி.

வணக்கம் மல்லை நலமா வாழ்த்துக்கள் உங்கள் அற்புதமான கவிதைக்கு .............உங்கள் ஆசை நிறைவேற்றப்படும்.........

அன்புடன் தமிழ்சூரியன்

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லை நலமா வாழ்த்துக்கள் உங்கள் அற்புதமான கவிதைக்கு .............உங்கள் ஆசை நிறைவேற்றப்படும்.........

அன்புடன் தமிழ்சூரியன்

உங்கட ஒலி ஒளி பேழைக்கு இந்தக் காணொளிக் காட்சிகளும் அவசியம் என்றால் எடுத்துக் கொள்ளலாம்..! youtube downloader இன் உதவியுடன் காணொளிகளை தரவிறக்குப் பாவிக்கலாம்..!

மல்லையூரானின் முயற்சிக்கு அது ஒரு நல்ல விளைவை இட்டுத் தரும்.. என்று நினைக்கிறேன்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேனீ ஒரு வினாடிக்கு, 80 முறை இறகுகளை அடித்து பறக்குமாம்,

அது கிட்டத்தட்ட ஒரு உலங்கு வானூர்தியை போல, பூவிலிருந்து சில சென்ரி மீற்றர் உயர்ந்து தான்... தனது திசையை நோக்கி, ப‌யணிக்கும் என்று... ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்கள்.

நெடுக்ஸ்சின் ரசனை... நன்றாக உள்ளது. :)

உங்கட ஒலி ஒளி பேழைக்கு இந்தக் காணொளிக் காட்சிகளும் அவசியம் என்றால் எடுத்துக் கொள்ளலாம்..! youtube downloader இன் உதவியுடன் காணொளிகளை தரவிறக்குப் பாவிக்கலாம்..!

மல்லையூரானின் முயற்சிக்கு அது ஒரு நல்ல விளைவை இட்டுத் தரும்.. என்று நினைக்கிறேன்..! :):icon_idea:

நன்றி ....நானும் அப்படியே நினைத்தேன் ............நிச்சயமாக என்னால் முடிந்தளவு முயற்சிக்கிறேன் :)

வணக்கம் தமிழ்சூரியன். நன்றாகவே இருக்கிறேன். நீங்கள் எப்படி?

உங்கள் முயற்சிக்கு நன்றி தமிழ் சூரியன். வரிகளில் ஏதாவது மாற்றங்கள் தேவையாயின் முயற்சிக்கலாம்.

ஒளிப்படத்தை உங்களுக்கு தரவரும் நெடுக்கருக்கும் நன்றி.

விளையாட்டாகவே எப்போதும் கருத்து எழுதும் சுண்டல், நான் விளையாட்டாக எழுதியதை கணக்கிலெடுக்கத்தக்கதாக்கி இசை அமைக்கலாம் என்று யோசனையோடு வந்தவர் அவருக்கும் நன்றி.

இதில் உங்களுக்கு உதவவரும் மற்றையோர்களுக்கும் நன்றி.

Edited by மல்லையூரான்

நன்றிகள் வேண்டாம் மல்லை. இது கூட எமது திறமைகளை நாம் ஒன்றுபட்டு வளர்த்துக்கொள்வதற்கு எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம் என்றே கூறலாம்..........அதற்காக இந்த யாழ் களத்திற்கு நாம் என்றுமே நன்றியுள்ளவராய் இருக்க வேண்டும்............அத்துடன் உங்கள் கன்னிக்கவிதையை இசையாக்கும் முயற்சி 25 வீதம் முடித்துவிட்டேன்.........இன்னும் ஓரிரு நாட்களில் முழுமை பெற்றுவிடும் என்று நினைக்கிறேன்........நாம் ஒன்றிணைந்து கலையூடாக எம் திசை நோக்கி பயணிப்போம் :)

நெடுக்ஸ் அண்ணா,

இந்த திரியை பார்த்து விட்டு தான் சுண்டல் அண்ணா உங்களை அப்பிடி கலாய்ச்சாரா? :D பாராட்டுகள்... தொடர்ந்து பூக்களையும் குருவிகளையும் காதலிச்சுக்கொண்டிருங்கோ..... :D

(ஆண்)

வண்டின் கண்ணில் ஆடும் பூ காளை கண்ணில்லை

பெண்ணை கண்ட கண்கள் பூவைக்கண்டதில்லை,

காதல் கொண்ட நெஞ்சம் தேனைக் கண்டு திகட்டாது

காளை காணும் கனவு உன் காதல் நினைவில் நனையத்தானே

(பெண்)

தலைவன் காலை ஆராதித்து தலைவி அணியும் மலரே

தேடிவந்த தலைவனுக்கு சேதி ஒன்று சொல்லு

வாடி இந்த பாவை வருந்தி அழைத்து நின்றாள் காலம்

தாழ்தி வந்தும் தான் இந்த பூவை காய்வதென்ன

(ஆண்)

வாடி நிலத்தில் வீழாமல் வண்டு வந்து கொத்தாமல்

தேடி வந்தேன் தஞ்சம் உன்னை தேவை ஓன்று சொல்ல

என்னை கொஞ்சம் தந்தேன் பாவை இந்த உலகை மறந்தேன்

உன்னை கண்ணில் ஒத்திப்பார்க்க என்னை ஒப்பு கொள்ளு

[size=2]பி.கு: கண்ணதாசன் பாணியில் ஒன்றை முயற்சித்தேன். ஆனால் அவர் போல் சொற்கள் இல்லாமல் சிலம்பம் ஆடும் கலையை என்னால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. நிறைய எழுத வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.[/size]

மல்லை அண்ணாவுக்கு அரசியலில் தான் ஆர்வம் என்று நினைத்தன். பாட்டு, கவிதை எல்லாம் எழுத தெரியுது. :) தொடர்ந்து எழுதுங்கோ. :) அடுத்த கவிதை எப்ப?

  • கருத்துக்கள உறவுகள்

ஆ நாளைக்கு மெயில் ல போட்டு விடுறராம் அட்ரஸ் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.