Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகளில் குண்டு தாக்குதல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]10(675).jpg [/size][/size]

[size=2][size=4](எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.மாறன்)

கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர்கள் இருவரின் வீடுகளில் இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் கலைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட்டின் சாய்ந்தமருது இல்லத்திற்கும், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் சாய்ந்தமருது இல்லத்திற்குமே இவ்வாறு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (படங்கள் - எஸ்.எம்.எம்.றம்ஸான், ஹனீக் அஹமட்)

haneek1.jpg

haneek2.jpg

6(1332).jpg

7(1342).jpg

9(1048).jpg

8(1224).jpg[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...6-04-32-00.html[/size][/size]

[size=4]குண்டுவீசியர்வகள் யார் என்று கோத்தாவுக்கும் அரசுக்கும் [/size]தெரியும் .

[size=4]அமெரிக்காவுக்கு எதிராக போராடியது போன்று முஸ்லீம்கள் வீதியில் இறங்கி எதிர்த்து போராடவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது குண்டுத்தாக்குதல், அடுத்து, கழிவு எண்ணை, மலம், நாயின் கழுத்து, இரத்தம் என்று போடுவார்கள்.

எதையும்... தாங்கும் இதயம், முஸ்லீம்களுக்கு வர வேண்டும்.

தமிழனுடன் சேர்ந்து போராடியிருந்தால்... முஸ்லீம்களுக்கு இந்த நிலை வந்திருக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெரு நாயை அடித்தால் யார் கேட்பது .......... அந்த நிலைதான் சிறிலங்காவில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களிற்கு ................. என்னும் என்னென்ன நடக்குமோ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது குண்டுத்தாக்குதல், அடுத்து, கழிவு எண்ணை, மலம், நாயின் கழுத்து, இரத்தம் என்று போடுவார்கள்.

எதையும்... தாங்கும் இதயம், முஸ்லீம்களுக்கு வர வேண்டும்.

தமிழனுடன் சேர்ந்து போராடியிருந்தால்... முஸ்லீம்களுக்கு இந்த நிலை வந்திருக்குமா?

தமிழர் ஆண்டாண்டு காலமாக அனுபவிப்பதை இப்போது தான் முஸ்லிம்கள் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழருடன் சேர்ந்து போராடியிருந்தால் இதை என்றோ அனுபவிக்க ஆரம்பித்திருப்பார்கள். அவர்கள் இவ்வளவு காலமும் தப்பியிருந்ததே தமிழருடன் சேராத காரணத்தால்தான். அவர்கள் தமிழருடன் இன்றும் சேர தயங்குவதற்கு காரணம் இவ்வாறான அனுபவங்களை தவிர்க்க விரும்புவதே.

கோட்டை மாதிரி இருந்த வீட்டுக்கு குண்டெறிந்து போட்டாங்கள் படுபாவிகள்.

உவன் பிளையானாகத்தான் இருக்கும்.

[size=5] அரசு தனது பயங்கரவாத செயல்களை சர்வதேசத்தின் முன் மறைக்கப்பார்க்கின்றது.[/size]

கோட்டை மாதிரி இருந்த வீட்டுக்கு குண்டெறிந்து போட்டாங்கள் படுபாவிகள்.

உவன் பிளையானாகத்தான் இருக்கும்.

உலாமாக்களுக்கு முன்னர் அரசுடன் சேரமாட்டோம் என்று சத்தியம் செய்ய வைத்த தலைமை தானும் படான்... என்று நடந்து முடித்திருக்கு. இது மு.காவுகுள் ஒரு பிரச்சனை வெடிக்க வழி சமைத்திருக்கிறது. ஏமாற்றப்பட்ட அங்கத்தவர்களுக்கு அகிம்சை வழிக்கான தீர்வு இல்லை. அதாவது அகிம்சையை பின்பற்றினால் அவர்கள் உலமாகளின் முன் செய்த சத்தியத்தை மீற வேண்டும். எனவே இந்த வெடிப்பு வன்முறையில்தான் காட்டப்படத்தக்கது. பாதிக்கபட்டவர்களுக்கு அப்படிதன்னும் வெளிக்காட்ட முடியாதுபோய்விட்டால் தமிழர்கள் அமத்த படுவது போல இதில் பாதிக்க பட்ட அங்கத்தவர்களும் அமத்தப்பட்டு போக வேண்டியதுதான். எனவே இதன் உண்மையை அயலவர்கள்தான் என்ன நடந்தது என்று கூறமுடியும்.

என்னடா ஒன்றும் இதுவரைக்கும் நடக்கவில்லை என்று பார்த்தேன் தொடங்கிவிட்டதா

[size=5] எந்நன்றி செய்தார்க்கும் உய்வில்லை [/size]

கைக்குண்டு எறிந்தவர்களும் முஸ்லீம்களாகத்தான் இருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் வேலையாக இருக்காது.

இது அமரிக்க இஸ்ரேலிய கைகுயளிகளின் வேலை. கிழக்கில் முஸ்லிம்கள் ஆட்சி வந்தது பிடிக்காமல் தாக்குகிறார்கள். கிழக்கு முஸ்லிம் சார்பில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்ம் எச்சரிக்கை செய்கிறேன் இன்னும் இப்பிடி பேடித்தனமான தாக்குதல் தொடர்ந்தால் கிழக்கு படை மேற்கு நோக்கி நகரும் . அணு தாக்குதல் செய்ய வேண்டி வரும் ரொம்ப கவனமா இருங்கோ

ஜெமீலின் அடியாட்களே எனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்! - முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் குற்றச்சாட்டு!!

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சாந்தமருதில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஏ.எம். ஜெமீலுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தினால் அவரின் அடியாட்களே எனது வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என கலைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் குற்றம் சுமத்தியுள்ளார்.

அம்பாறை, சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஆகிய இருவரினதும் வீடுகள் மீதும் நேற்று அதிகாலை 1.45 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது அப்துல் மஜீத்தின் குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோதும் அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால் வீட்டின் முன்புறம் சிறிது சேதத்துக்குள்ளாகியுள்ளது அதுபோல், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸினுடைய வீட்டிற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இது விடயமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'இந்தப் படுபாதகச் செயலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலினுடைய அடியாட்களே செய்திருக்கிறார்கள் என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகின்றேன். நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சாந்தமருதில் வெற்றிபெற்ற உறுப்பினர் ஏ.எம். ஜெமீலுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடே இந்தத் தாக்குதலாகும்.

மக்கள் ஒன்றை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். கட்சிக்கு வழங்கப்பட்ட கிழக்கு மாகாண அமைச்சர்களை நியமிக்கும் முழுப்பொறுப்பையும் நாடாளுமன்றக் குழுவும், கட்சியின் உயர்பீடமும் இணைந்து கட்சியின் தலைவரிடம் ஒப்படைத்திருந்தது. தலைமைத்துவத்தின் தீர்மானத்தின்படியே ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் மன்சூர் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

இந்த விடயத்தில் நானும் கல்முனை முதல்வரும் தலையிட்டு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால், ஜெமீல் தரப்பினர் கல்முனை முதல்வரையும், என்னையும் களங்கப்படுத்தி, மக்கள் மத்தியில் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முனைகிறார்.

நானும், கல்முனை மேயரும்தான் தனக்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப் பதவியைத் தடுத்ததாக ஜெமீல் சாய்ந்தமருது மக்களிடம் கூறி வருகின்றார். இந்த ஆத்திரத்தில்தான் அவர் எனது வீட்டின் மீதும், கல்முனை மேயரின் சக நண்பரான மாநகரசபை உறுப்பினர் பிர்தௌஸினுடைய வீட்டின் மீதும் தனது அடியாட்களைக் கொண்டு ஜெமீல குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

கடந்த மாகாணசபைக்கு வேட்பாளர்களை நியமிக்கும் போது எனக்கு துரோகம் இழைக்கப்பட்டிருந்தும் நான் அவற்றை எல்லாம் மறந்து தேர்தல் பரப்புரைகளில் இவர்களுக்கு அயராது பாடுபட்டேன். அவ்வாறிருந்தும், அமைச்சுப் பதவி கிடைக்காமையினால் எங்களை சீண்டும் கீழ்த்தரமான செயலை செய்வது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

எங்களுக்கும் கிழக்கு மாகாணசபை அமைச்சர்களை நியமித்ததற்கும் எவ்வித தொடர்புமில்லை. இவ்வாறான பாதகச் செயலைச் செய்து ஊர்வாதத்தை துண்டிவிடும் இந்தச் செயலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எமது கட்சியின் தலைவரிடம் கோரிக்கை விடுக்க இருக்கிறோம். எமது தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் நாடு திரும்பியதும் நாம் இந்தக் கோரிக்கையை முன்வைப்போம்.

அதேவேளை, எனது மகனையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெமீலின் அடியாட்கள் மிரட்டியுள்ளனர். இதுவிடயமாக பூரண தகவலை நான் வெளியிடுவேன்' என முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத் மேலும் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=3823781a-7789-4b82-b0a8-564b39216e52

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.