Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கல்ல எந்த நாட்டுக்கு சொன்றாலும் தீர்வுக்கு கூட்டமைப்பு எம்மிடமே வரவேண்டும்: அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் ௭ன்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ௭மது நாட்டின் பாராளுமன்றத்திடமே வரவேண்டும். யதார்த்தபூர்வமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்தியாவுக்கு சென்று பேச்சுக்களில் ஈடுபடுவது புதிய விடயமல்ல. காலா காலமாக அவர்கள் இதனையே செய்துவருகின்றனர். ஆனால் ௭ஸ்.ஜே.வி. செல்வநாயகம் இதுபோன்று டில்லிக்கு அடிக்கடி சென்று அவர்களை அசெளகரியப்படுத்தவில்லை ௭ன்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ௭திர்வரும் 10 ஆம் திகதியளவில் இந்தியாவுக்கு சென்று அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ௭ன்பன இந்தியாவுக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது புதியவிடயமல்ல. அவர்கள் அடிக்கடி இவ்வாறு விஜயங்களை மேற்கொண்டு கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யதார்த்தபூர்வமான நிலைமையை புரிந்துகொள்ளவேண்டும். அதாவது ஆளும் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாகவே நாட்டில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். ௭னவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் செய்யவேண்டியது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதேயாகும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து தற்போது ஒருவருடம் கடந்துவிட்டது.

ஆனால் இன்னும் அதில் இணைந்துகொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்த்தே வருகின்றது. பல்வேறு தரப்பினர் அழைப்பு விடுத்தும் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளாமல் இருக்கின்றது.

இந்தியா அல்ல ௭ங்கு சென்றாலும் தீர்வு ௭ன்று வரும்போது அது பாராளுமன்றத்துக்கு வந்தேயாகவேண்டும். பாராளுமன்றமே இலங்கையில் இருக்கின்ற உயரிய இடமாகும். பாராளுமன்றத்திலேயே நாட்டுக்குரிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றன. ௭னவே பாராளுமன்றத்தில் ௭ட்டப்படுகின்ற தீர்வே யதார்த்தபூர்வமானதாக அமையும்.

௭னவே இந்தியாவுக்கு அல்ல ௭ந்த நாட்டுக்கு சென்றாலும் தீர்வுத்திட்டம் ௭ன்று வரும்போது தமிழ்க் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திடமே வரவேண்டியது அவசியமாகும். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செல்வநாயகத்திடம் பாடங்களை கற்கவேண்டும். அவர் அகிம்சைவாதியாக ௭மது நாட்டுக்குள்ளேயே தனது அணுகுமுறையை கொண்டு சென்றார்.

மாறாக அடிக்கடி டில்லிக்கு சென்று பேச்சுக்களை நடத்தி அவர்களுக்கு கஷ்டங்களை கொடுக்கவில்லை. மாறாக அகிம்சை ரீதியாக செயற்பட்டார். அவரின் கோரிக்கைகள் பயங்கரமானவையாக இருந்தன. அது தொடர்பில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் அவரின் அணுகுமுறை உரிய முறையில் அமைந்தது ௭ன்றார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=849

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தனித்து நின்று அழித்திருந்தால் நீங்கள் வீராப்பு பேசலாம்...

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய காங்கிரஸ் அரசு வலதுகுறைந்த அரசு என்கிறாரா? :D

  • கருத்துக்கள உறவுகள்

cartoon-27.09.2012.jpg

:( :( :(

சிங்களவனின் தெனாவட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு i love it

//தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் ௭ன்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ௭மது நாட்டின் பாராளுமன்றத்திடமே வரவேண்டும்.//

சுண்டலுக்கு இப்போது சந்தோஷமாய் இருக்கும். :lol: மகிந்தரோடை போய் மந்திரம் கதைக்கவேண்டுமென்பது தானே சுண்டுவின் கனவு :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை தனித்து நின்று அழித்திருந்தால் நீங்கள் வீராப்பு பேசலாம்...

அது.......

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிப் போடு அருவாளை!!!!!

[size=4]பலமாக இருந்து கொண்டு உரிமையைக் கேட்க வேண்டும்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-09-27 09:42:49| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=1]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா தன் இறுதிக்காலத்திற்குள் தீர்வு கண்டுவிட வேண்டும் என நிறைந்த கற்பனையைக் கொண்டுள்ளார்.அந்தக் கற்பனையின் உச்சமும் அவரின் முதுமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அவருக்கு யார்மீதும் நம்பிக்கையில்லை. இதன் காரணமாக இடையிடையே தான் வழமையாக வைத் திருக்கக் கூடிய கோவையை தூக்கிக்கொண்டு அலரி மாளிகைக்கு ஓடுவார். அங்கு ஜனாதிபதியைச் சந்தித்து கெஞ்சு வார்.

நாங்கள்-புலிகள். ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் அத்தனை பேரும் செய்தது தவறு. நீங்கள்தான் எல்லாம் என்று கூறு வார். கூடவே போற்றிப் புகழ்ந்து தலையாரக் கும்பிட்டு கூத்து ஆடினாலும் அலரி மாளிகை இரகசியம் சம்பந்தர் ஐயா வைக் காப்பாற்றிக்கொள்ளும்.பொதுவில் முதியவர்கள் மல கூடத்திற்குச் செல்வதாக இருந்தால் ஒருவரின் துணை யோடு செல்வது நல்லது.ஆனால் தள்ளா வயதிலும் சம்பந்தர் ஐயா அலரி மாளிகைக்கு தனிமையாகச் செல்வதை நினைக்கும் போது, ஒருவரும் துணையில்லை பாவம் அந்தாள் என்று சொல்லத் தோன்றும்.

முன்பெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சம்பந்தர் ஐயாவிற்குப் பக்கபலமாக-துணையாக இருந்தார். பாழாய்போன லண்டன் உரை அதனையும் கெடுத்துவிட, ஒருத்தரும் எனக்கு வேண்டாம் நானே! எல்லாம் செய்து முடி ப்பேன் என்று சம்பந்தர் ஐயா அங்கும் இங்கும் ஓடித்திரிகின்றார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிபிற்கு பின்னரும் அவர்தான் தனித் தவில்.ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் தான் தமிழ்த் தேசியத்தின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறப் பட்டது.பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏகப் பிரதிநிதிகள் என்று கூறலாம் என்பது நினை வளவோடு இருந்தது. ஆனால் போகின்ற போக்கைப் பார்த்தால் சம்பந்தர் ஐயாதான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதி யயன்று கூறும் அளவிற்கு நிலைமை வந்து விட்டது.

அன்புக்குரிய மாவை ஐயா, சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களே! சம்பந்தரை அழைத்து, ஐயா! எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அலரிமாளிகைக்கு தனித்து செல்லாதீர்கள். எங்களையும் கூடிச் செல்லுங்கள் என்று ஒரு முறை கேளுங்களேன்.நீங்கள் எல்லோரும் சேர்ந்து கேட்டால், நீங்கள் பயப்ப டுவது போல அடுத்த தேர்தலில் சீற் கிடைக்காமல் போகதல்லவா? கேட்பீர்களா?[/size][/size]

[size=1]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=31115[/size]

அந்தக் கற்பனையின் உச்சமும் அவரின் முதுமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அவருக்கு யார்மீதும் நம்பிக்கையில்லை. இதன் காரணமாக இடையிடையே தான் வழமையாக வைத் திருக்கக் கூடிய கோவையை தூக்கிக்கொண்டு அலரி மாளிகைக்கு ஓடுவார். அங்கு ஜனாதிபதியைச் சந்தித்து கெஞ்சு வார்.

நாங்கள்-புலிகள். ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் அத்தனை பேரும் செய்தது தவறு. நீங்கள்தான் எல்லாம் என்று கூறு வார். கூடவே போற்றிப் புகழ்ந்து தலையாரக் கும்பிட்டு கூத்து ஆடினாலும் அலரி மாளிகை இரகசியம் சம்பந்தர் ஐயா வைக் காப்பாற்றிக்கொள்ளும்.

சுத்த வீணர்கள், தமக்கொரு இடத்திற்காக பேச்சுவார்த்தைக்கு ஆப்பிறுக்குவதைதான் தொழிலாக கொள்கிறார்கள். இந்த முறை பேச்சுவார்த்தையை மகிந்தா தான் குழப்பவில்லை என்று மேற்குலகத்திற்கு நிரூபித்தால் வலம்புரியை சக்கர வாணத்தில் ஏற்றி வாணத்தை இடம் புரியாய் சுற்றவைத்து சந்திரமண்டலம் அனுப்பி வைத்தால்தான் அவருக்கு இந்த புதிய தலைமை பைத்தியம் விட்டு தீரும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.