Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய அரசு உத்தரவாதம் அளித்தால் தெரிவுக்குழுவில் இணைவோம்: கூட்டமைப்பு.

Featured Replies

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தாம் பங்கேற்று அதன் மூலம் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பது தொடர்பில் இந்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே பாராளும்னறத் தெரிவுக் குழுவில் அங்கம் பெற முடியும் என்றும் அது கூறியுள்ளது.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனை மேற்கோள் காட்டி ” கொழும்பு பேஜ்” இணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து நாம் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தெரிவித்துள்ளோம். அத்துடன இலங்கைக்கு முன்னர் வருகை தந்திருந்த இந்திய பாராளுமன்ற அனைத்துக் கட்சி எம்.பிக்களிடமும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் விளக்கியுள்ளோம்.

ஆகவே, நாம் சிறிலங்கா அரசின் பாராளுமனறத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமாயின் அதற்கான உத்தரவாதத்தை இந்தியா எமக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மட்டுமே நாம் பங்கு கொள்வோம்.

ஈழத்தமிழர் பிரச்சினையை மையமாகக் கொண்டு சிறிலங்கா அரசினால் முன்னர் அமைக்கப்பட்ட பல குழுக்களின் சிபார்சுகள் ஆலோசனைக்குக் கூட உட்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார் என அந்த இணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான எதிர்காலப் பேச்சுவார்த்தைகளின் போது தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என்றும் இரு தரப்புக்குமிடையிலான எதிர்காலப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான ஓர் உந்து சக்தியாக மட்டுமே செயற்பட போவதாகவும் புதுடில்லி அரசு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளமை தெரிந்ததே.

http://thaaitamil.com/?p=33920

சுரேஷ் இந்தியக் காட்டுமிராண்டிகளின் அடிவருடி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

உத்தரவாதம் கொடுத்தாலும் இலங்கையை மீறிஅதனை இந்தியாவால் காப்பாற்ற முடியாது என்பது இன்னுமா தெரியவில்லை?

என்ன வகை உத்தரவாதம் என்பது விளங்கவில்லை. இந்தியா இரணுவத்துடன் வந்து திணித்த 13ம் திருத்தம் கவனிப்பார் அற்று கிடக்கிறது. இதைவிட இந்தியாவால் என்ன உத்தரவாதம் கொடுக்க முடியும்?

இன்று இந்தியா நடைமுறைப்படுத்த விரும்புவது 13ம் திருத்தம். அதை ஆரம்பத்திலே கூட்டமைப்பு தன்னும் ஏற்கவில்லை. 13ம் திருத்தம் இன்று மிக சீரழிந்த நிலையில் ஜனாதிபதி என்ற மட்டையிடம் திரும்ப திரும்ப அடி வாங்கிய பந்தாக இருக்கிறது. இந்தியாவின் ஒரே நோக்கம், ராஜபக்ஷ எந்த நிலையிலும் மேற்கு நாடுகளுடன் ஒத்து போகாரென்பதால், இறுதியாக அவை இலங்கையில் ஏதாவது தீர்வை கொண்டுவருமும் தான் முந்திவிடவேண்டுமென்பதாகும். இதற்காகத்தான் மகிந்தாவுடன் கதைத்துப்பார்த்துவிட்டு இந்தியா கூட்டமைப்பை கூப்பிடுகிறது. கூட்டமைப்பு இந்த அழைப்பை எதாவது ஒருகாரணம் காட்டி தவிர்த்திருந்திருக்கலாமாயின் அது மிக நல்ல நடவடிக்கையாக இருந்திருக்கும்.

இந்தியா, இந்த முறை தன்னிடம் இருக்கும் ஐ.நா.மீளாராய்வு அறிக்கையை வைத்து ராஜபக்ஷவை மிரட்ட முயன்றிருக்கும். பதிலிற்கு அவர் வழமைபோல் சீனாவை காட்டி மிரட்டி இருப்பார். இந்தியா கூட்டமைப்பை கூப்பிட்டு அறிக்கையை காட்டி மிரட்ட பார்க்கிறது. கூட்டமைப்பு அதற்கு இடம் கொடுக்க கூடாது. நாம் இந்த அறிக்கையில் அதிகம் தங்கியில்லை. மார்ச் 2013 வரும் பிரேரணை மிளாய்வுதாலால் மட்டுமே எமக்கு ஏதாவது பலன் வரும் என்வே கூட்டமைப்பு இந்தியாவுக்கு எந்த வகையிலும் விட்டுக்கோடுக்க கூடாது.

எத்தனை உத்தரவாதம்......... எத்தனை ஒப்பந்தம் ..........................ஆனால் முடிவுகள் ஒன்றுமட்டும்தான் என்பதையே இன்றுவரை நாம் கண்ட உண்மை ....................

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவையடுத்து இனிமேல் மகிந்த இந்தியாவின் மூலம் எப்படியாவது கூட்டமைப்பை தெரிவுக் குழு என்னும் கிணற்றிற்க்குள் தள்ளி விட்டுறுவான் பிறகு என்ன கூட்டமைப்பு (சிங்க கொடியை)கைல பிடிச்சிக் கொண்டு கைலாசம் போக வேண்டியதான்.

கூட்டமைப்புக்கு தெரிவுக்குழுவுக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியா உத்தரவாதம் தந்தது என்று சொல்லிக் கொண்டு போக வேண்டியதுதான்.

'புலிகள் அழிந்தால் இந்தியா ஒரு தீர்வு பெற்றுத் தரும்' என்ற மாதிரிதான் இதுவும். இந்தியா நினைத்திருந்தால் / அவர்களால் முடியுமென்றால் இந்த மூன்றரை வருடங்களில் இந்தியாவினாலேயே ஒரு தீர்வைத் திணித்திருக்க முடியும். உண்மை நிலை, இந்தியாவால் சிறிலங்காவைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை.

தமிழர் தரப்பு மீண்டும் மீண்டும் இந்திய மாயையில் நம்பியிருந்து, இந்திய நலனிற்குப் பாவிக்கப் படாமல் மற்றைய நாடுகளிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்.

கூட்டமைப்புக்கு தெரிவுக்குழுவுக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியா உத்தரவாதம் தந்தது என்று சொல்லிக் கொண்டு போக வேண்டியதுதான்.

அதற்குள் என்ன அவசரம் இதை கூட்டமைப்புக்கு சொல்லிக்கொடுத்திட வேண்டுமென்று..

மூன்று வருடங்களின் பின்னர் கூட்டமைப்புடன் சேர்ந்து போராட அங்கு போகும் பொது சொல்லிக்கொடுக்க முடியாதா?

எப்படியோ 100 வருடங்கள் எடுக்கும் ஒரு தீர்வு வந்து சேர.

முதலில் சமஸ்டி....., பின்னர் மாகாணம்....., பின்னர் பொலிசு-காணி, .....அதன்பின்னர் மகிந்தாவுக்கு ஒரு ஆட்டம் சொல்லிவிட்டு இருந்து ஆற அமர ஒரு தடவை களைப்பாறி.....மூன்று வ்ருடம் கழித்து . அவிட்டேன் சொல்லி விட்டு எழும்பி .....

பின்னர் இந்த யாழ்ப்பாணத்து மட்டக்களப்பு சனங்களுக்கு பலஸ்தீனியரின் கல்லெறி பயிற்றுவிக்க குறைந்தது ஒரு மூன்று வருடம். ....

அதன்பின்னர் போராட வர மறுக்கும் இந்த சனங்களையும் ஒரேமிக்க அழைத்துகொண்டு போகலாம் தானே தெரிவுக்கு குழுவுக்கு....

இதுதானே போரில் தோற்றால் வரத்தக்க போதனைகள். தோற்றவன் எப்போதுமே பிழை என்பதை நாம் மட்டும் தனிய மாற்ற முடியுமா?

எப்போதும் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ளூம் ஒருவரின் கதை(உண்மை).

கிராமத்துக்குள் பாம்பு வந்தால் கூட்டம் கூடும். பாம்பை அடிக்க துடிப்பான பலசாலிகளுக்கு வீடு வீடாக ஓடுவார்கள். பாரிய சத்தங்களுடன் கிளுவம் தடிகள் வேலிகளில் இருந்து முறிக்கப்படும். சிறுவர்களை கட்டி இழுத்துகோண்டு பெண்கள் சற்று தள்ளி கூடுவார்கள். இளம் வட்டுகள் சுற்றி நின்று ஆர்ப்பாரிப்பார்கள். அனுபவசாலிகள் முன் நகர்ந்து பாம்பை தலையில் அடிப்பார்கள். இறந்த பின் தடியால் தட்டிதட்டி அசைவிருக்கா என பார்ப்பார்கள். அதன் பின் குப்பை கூட்டி, மண்ணெண்ணை ஊற்றி பாம்பபை எரிப்பார்கள்.

அரைக்கிராமம் ஆடிபோய்விட்ட இந்த பாம்படி நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போது திருவாளர் நற்சொல்(புனை பெயர்) தனது முற்றத்தில் சாக்குக்கட்டிலில் படுத்திருப்பார். பாம்பு எரியத்தொடங்கிய அசுகைகளை கேட்டவுடன் எழும்பி அந்த இடத்திற்கு வருவார், வழமைபோல் எரிவது என்ன என்று கேட்பார். அதன் பின் தன் போதனையை ஆரம்பிப்பார் "அட நான் முத்தத்திலை தானே படுத்திருந்தனான். இந்த சின்ன பாம்புக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் போட்ட னீங்கள் கூப்பிட்டிருந்தால் வந்து நான் ஒருக்க கும்பிட்டவுடன் பாம்பு தானாவே போயிருக்குமே " என்பார்.

இருட்டு நேரத்திலை அரிக்கன் லாம்போடை பாம்படிக்கிறது வேறு. அடித்துமுடிந்தபின் அதை வைத்து அரசியல் தலைமை பெற்றுக்கொள்ளத்தெரிந்திருப்பது வேறு. அதிலும் சொல்லும் கையாலாகாத கதைகள்........

'புலிகள் அழிந்தால் இந்தியா ஒரு தீர்வு பெற்றுத் தரும்' என்ற மாதிரிதான் இதுவும். இந்தியா நினைத்திருந்தால் / அவர்களால் முடியுமென்றால் இந்த மூன்றரை வருடங்களில் இந்தியாவினாலேயே ஒரு தீர்வைத் திணித்திருக்க முடியும். உண்மை நிலை, இந்தியாவால் சிறிலங்காவைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை.

தமிழர் தரப்பு மீண்டும் மீண்டும் இந்திய மாயையில் நம்பியிருந்து, இந்திய நலனிற்குப் பாவிக்கப் படாமல் மற்றைய நாடுகளிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்.

மிகவும் யதார்த்தமான கருத்து.

சிங்களப் பயங்கரவாதிகளின் தமிழினக் கொலைகளுக்கு பெருந்துணை போவததைத் தவிர இந்தியக் காட்டுமிராண்டிகளால் வேறொன்றையும் கடந்த 20 வருடங்களில் செய்ய முடியவில்லை.

தமிழ் தரப்பு மேலை நாடுகளுடன் கூடிய நல்லுறவை ஏற்படுத்தும் அதே நேரத்தில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தி தமிழினப் படுகொலை வரலாற்றை அவர்களுக்கு கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு, தெரிவுக் குழுவுக்குப் போவதால், ஒன்றையும், உருப்படியாகப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை!

இந்தியா வாக்குறுதி, கொடுத்தாலும், அது, தனது, வாக்குறிதிகளைக் காப்பாற்றியதாகச் சரித்திரமும் இல்லை.

பேசாமல் இருந்தால், வெளிநாடுகளை, இந்தப் பிரச்சனை, தொடர்ந்து அரித்துக் கொண்டிருக்கும்!

அவ்வாறான நிலையில், அகதிகள் பிரச்சனை, சர்வதேச போர்க்குற்றப் பிரச்சனை, எனப் பல எமது பிரச்சனையுடன், தொடர்பு பட்டிருப்பதால், ஐக்கிய நாடுகள் சபை, ஏதாவது செய்தே ஆக வேண்டும்!

இந்தியா புலிகளை, அழித்துவிட்டதாகப் பெருமை பேசிக்கொண்டாலும், புலிகள் இல்லாத வெற்றிடம், அவர்களது, அடி அடிவயிற்றுப் பகுதியையும், எதிரிகள் பார்வைக்குத் திறந்து விட்டுள்ளது!

எனவே, இந்தியாவும், இந்தப் பிரச்னையை, முடிவுக்குக் கொண்டுவர ஏதாவது, உருப்படியாகச் செய்ய வேண்டும்,

இல்லாவிட்டால், இந்தியாவின் இருப்பே, கேள்விக்குறியாகி விடும்!

தெரிவுக்குழுவுக்கு போவதனால் தீர்வு எதைனையும் கூட்டமைப்பினால் பெற முடியும் என்று நான் சொல்லவில்லை. இதைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

தெரிவுக்குழுவுக்கு போகாததை வைத்து சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தையை நடத்தாது நிற்கிறது. மேற்குலகுமும் இது பற்றிய அழுத்தம் எதையும் கொடுப்பதாகக் காணோம்.

ஆகவே பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் அல்லது தவிர்க்கும் தந்திரத்தை முறியடிக்க நாம் தெரிவுக்குழுவுக்கு போகத்தான் வேண்டும். வேறு வழியில்லாமல் எடுக்கும் முடிவாகத்தான் இது இருக்கும்.

தெரிவுக்குழுவை வைத்தும் பேச்சுவார்த்தையை நீண்ட காலம் சிறிலங்கா அரசு இழுத்தடிக்கும். அதற்காக கையாள வேண்டிய யுக்திகளையும் நாம் வகுக்க வேண்டியிருக்கும்

உறுதியாக எதையுமே செய்யமுடியாத நிலையின் கடை நிலையே உறுதிமொழி.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.