Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்று சக்திகளுக்கு ஆசியா விளையாட்டு மைதானமல்ல: ஜனாதிபதி மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda60_60(1).jpg

[size=2][size=4]எங்கள் செல்வத்தையும் இயற்கை மற்றும் மனித வளங்களையும் எதிர்ப்பார்த்திருக்கும் மாற்று சக்திகளுக்கு ஆசியாக் கண்டமானது விளையாட்டு மைதானமாக ஒருபோதும் காணப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆசியா அதன் வலையத்தின் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் செயற்படும். அது, பல எல்லைகளைக் கொண்டிருப்பது போல சவால்களுக்கும் முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாங்கள் ஆசியாவின் விடியலுக்காக காத்திருக்கின்றோம். சர்வதேச சக்திகளின் தேவையற்ற தலையீடுகளுக்கு முகங்கொடுத்து ஆசியாவின் புதிய ஒளியாக திகழ்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை குவைத்தில் ஆரம்பமாகியது. குவைத் அமீர் ஷெய்க் சபா அல் - அஹமட் அல் - ஜபார் அல் – சபா தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...6-16-10-53.html[/size][/size]

[size=5]சிங்களப் பயங்கரவாதிகள் முற்றாக அழியும் போது ஆசியாவின் விடியல் நிகழும்! [/size]

[size=2][size=4]எங்கள் செல்வத்தையும் இயற்கை மற்றும் மனித வளங்களையும் எதிர்ப்பார்த்திருக்கும் மாற்று சக்திகளுக்கு ஆசியாக் கண்டமானது விளையாட்டு மைதானமாக ஒருபோதும் காணப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [/size][/size]

cartoon2(319).jpg

[size=5]IMF உதவியிலையே தங்கி இருக்கும் ஸ்ரீலங்கா அரசு [/size]

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=reply_post&f=85&t=96998&qpid=812350

மாற்று சக்திகளுக்கு ஆசியா விளையாட்டு மைதானமல்ல: ஜனாதிபதி மஹிந்த

உங்க விளையாட்டுக்கு ஒரு எல்லையே இல்லையா..? :D

யப்பான், சீனா, இந்தியா இப்போது எல்லா கிறண்டுகளிலும் விளையாடுகிறார்கள். சீனா, தெருவாலை போன கில்லாடிகளை இலங்கையில் நல்ல விளையாட்டு விளையாடலாம் என்று அழைத்து வந்திருக்கு. ஆகவே கூட்டத்தில் எழும்பி நிண்டு சீனாவை திட்டும்.

அமெரிக்காவிடம் GSP + வேண்டாம் என்றும் சொல்லிவிடலாம்.

Edited by மல்லையூரான்

[size=4]iran1(13).jpg[/size]

[size=4]ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக குவைத் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நிஜாத்தை இன்று புதன்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார். [/size]

[size=4]iran2(20).jpg[/size]

http://tamilmirror.lk/--main/50704-2012-10-17-15-13-12.html

Mahinda60_60(1).jpg

[size=2][size=4]எங்கள் செல்வத்தையும் இயற்கை மற்றும் மனித வளங்களையும் எதிர்ப்பார்த்திருக்கும் மாற்று சக்திகளுக்கு ஆசியாக் கண்டமானது விளையாட்டு மைதானமாக ஒருபோதும் காணப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆசியா அதன் வலையத்தின் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் செயற்படும். அது, பல எல்லைகளைக் கொண்டிருப்பது போல சவால்களுக்கும் முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாங்கள் ஆசியாவின் விடியலுக்காக காத்திருக்கின்றோம். சர்வதேச சக்திகளின் தேவையற்ற தலையீடுகளுக்கு முகங்கொடுத்து ஆசியாவின் புதிய ஒளியாக திகழ்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை குவைத்தில் ஆரம்பமாகியது. குவைத் அமீர் ஷெய்க் சபா அல் - அஹமட் அல் - ஜபார் அல் – சபா தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...6-16-10-53.html[/size][/size]

உண்மையில் ஒரு ராஜ தந்திரம் தெரிந்த பொறுப்பான தலைவர் இப்படியா உரையாற்றுவார் ........... அதுக்குள்ள தலையங்கம் தலையங்கமாய் ,திரி திரியாய் எழுதுங்கோ தேசியத்தலைவருக்கு ஆயுதம் தூக்கமட்டும்தான் தெரியுமென்று ..

  • கருத்துக்கள உறவுகள்

mr_090209_01.jpg

ஆமா.. ஆசியாவின் பெரிய வல்லரசின் தலைவர் சொல்லுறார் கேளுங்கோ..!

கடாபியை கைகுலுக்கி அனுப்பி வைச்சிட்டார். எனி.. ஈரான் அதிபர். கடைசியில தான் போகச் சரி..! :D:icon_idea:

தன்னை காப்பற்றுவதுக்கு ஆசிய நாடுகளை முன்வருமாறு கூறுகிறார்.

உண்மையில் ஒரு ராஜ தந்திரம் தெரிந்த பொறுப்பான தலைவர் இப்படியா உரையாற்றுவார் ........... அதுக்குள்ள தலையங்கம் தலையங்கமாய் ,திரி திரியாய் எழுதுங்கோ தேசியத்தலைவருக்கு ஆயுதம் தூக்கமட்டும்தான் தெரியுமென்று ..

ஒரு இரண்டு நிமிட பேச்சில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் ஏன் அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் அந்தாள் என்னமாதிரி ஐஸ் வைத்திருக்கின்றார் .

இதுதான் ஒரு தலைவருக்கு தேவை .

அதைவிட்டு கொழுவி விடுகின்றோம் என அலுவல் பார்த்து இரண்டிடமும் அடி வாங்க கூடாது

ஒரு இரண்டு நிமிட பேச்சில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் ஏன் அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் அந்தாள் என்னமாதிரி ஐஸ் வைத்திருக்கின்றார் .

இதுதான் ஒரு தலைவருக்கு தேவை .

அதைவிட்டு கொழுவி விடுகின்றோம் என அலுவல் பார்த்து இரண்டிடமும் அடி வாங்க கூடாது

ஆசியாவை ஆழுவது இந்தியாவும் ,சீனாவும் இல்லை தோழர் ....................மேற்குலகமும், அமெரிக்காவும்...............இதுகூட தெரியாமல் அரசியலில் எழுத வந்து விட்டீர்கள் ...............நீங்கள் வந்த இடம் அதுவாச்சே புரிந்து கொள்கிறேன் நண்பா ............ :icon_idea:

[size=4]இன்று மேற்குலகம் வெறுக்கும் ஒரு நாடான ஈரானின் தலைவருடன் நெருக்கமாக உள்ளேன் என்பதை மகிந்தா காட்டுவது அரசியல் சாணக்கியம் ஆகாது.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அவர்கள் இருக்கவேண்டும் என்று சொன்னால் நீங்களும் சர்வதேசத்திடம் கை ஏந்துவதை நிறுத்தவேண்டும். அவர்களின் நாட்டை ஈடு வைத்து அவர்களின் உதவியில் வயிற்றை கழுவும் நீங்கள் சொன்னா அது அசிங்கமாக இருக்காதா ? ஜோசித்தல்லவா உங்களை போன்ற பொறுப்பில் இருப்பவர்கள் அறிக்கை விடவேண்டும்.

ஒரு இரண்டு நிமிட பேச்சில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் ஏன் அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் அந்தாள் என்னமாதிரி ஐஸ் வைத்திருக்கின்றார் .

இதுதான் ஒரு தலைவருக்கு தேவை .

அதைவிட்டு கொழுவி விடுகின்றோம் என அலுவல் பார்த்து இரண்டிடமும் அடி வாங்க கூடாது

"எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு"

TVவியில் போகும் ஒர் பேட்டியை பார்த்துவிட்டு துள்ளுவது சிலரின் இயல்பு. அரசியலில் யாரும் இரண்டு நிமிட வார்த்தைகளில் ஏமாறுவது கிடையாது. இலங்கை மேற்கு நாடுகளுக்கும் இந்தியா, சீனா, யப்பான், லிபியா, ஈரான், கியூபா, ருஸ்சியா போன்ற நாடுகளுக்கும் 2008-2009 களில் டிமிக்கி கொடுத்து ஆயுதம் வாங்கியது இந்த இரண்டு நிமிட பேச்சினால் அல்ல. நுனிப்புல்லை கடித்து விட்டு "நான் கண்டு பிடித்துவிடேன்" என்று துள்ளினால் அதை பார்த்து அரிசுன் தான் இந்த நூற்றாண்டின் அரசியல் சாணக்கியன் என்று யாரும் ஏமாற மாட்டார்கள்.

சிலரின் மனம் நாணல் மாதிரி நீர் எந்தப்பக்கம் ஓடுகிறதோ அந்தபக்கம் சரியும். அன்று படிக்கும் புத்தகத்தில் அல்லது பார்த்த நிகழ்சியில் அவர்களின் opinion தங்கியுள்ளது. கணவாய் எந்த நிலத்தில் ஓடுதோ அந்த நிலத்து நிறத்தை காட்டும். சுயமாக சிந்திக்க மறப்பது அவர்களின் தவறு. அது ஒரு வகை அப்பாவித்தனம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவின் மேட்டுக்குடிகள் ஆசியா ஏழை மக்களின் முதுகில் சவாரி விட ஆசியாவின் எழுச்சி பற்றி கதைக்கினம்.....இது கிறிக்கட்டு விளையாட்டில் சில மேல்தட்டினரின் சொல்லும் கருத்தை ஒத்துள்ளது அதாவது அவுஸ்ரேலியாவில் வாழ்வினம் கிறிக்கட்டில் முதல் சிறிலங்காவுக்கு ,அடுத்து இந்தியாவுகு,பிறகு பாகிஸ்தான் பின்புதான் அவுஸ்ரெலியாவுக்கு ......நாங்கள் சப்போர்ட் பண்ணுவோம் எண்பார்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.