Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள் இவை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Siththamaruthtuvam-150-seithy.jpg

மூலிகை மருந்துகள்:

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் 'குமரி' என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

நன்றி: சித்தாந்தம்

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் 'குமரி' என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்"

முகத்தில் தினம் பூசினால், எந்த கெமிக்கல் பூச்சுகளும் தேவையில்லை, முகம் பழு பழுப்பாக இருக்கும்

(என் இளமையின் ரகசியம், :lol::D பிள்ளைகளுக்கு விரும்பமில்லை, ஒருநாள் இது பூசி காய்ந்த பின் மகள் கொஞ்சிப்போட்டு பத்து தடவை வாய் கொப்பளித்தா கஞ்சல் தாங்காமல், அதன்பின் கேட்டபின்தான் கொஞ்சுவா)

தீ பட்ட காயம், ... சகலத்திற்கும் நல்லது

உடையார்

சோற்றுக் கற்றாளை என்றால் என்ன? எங்கிருந்து எடுக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்

சோற்றுக் கற்றாளை என்றால் என்ன? எங்கிருந்து எடுக்கிறீர்கள்?

கற்றாளையைத் தெரியாதா தப்பிலி மட்டக்களப்பில் அது நிறைய இருக்குது கண்டு இருக்கிறன் :) அதின்ட‌ மணத்திற்கு பாம்பு வரும் :( [பாம்பு அதில இருக்குது என்று சொல்றவையள்]

கற்றாளையைத் தெரியாதா தப்பிலி மட்டக்களப்பில் அது நிறைய இருக்குது கண்டு இருக்கிறன் :) அதின்ட‌ மணத்திற்கு பாம்பு வரும் :( [பாம்பு அதில இருக்குது என்று சொல்றவையள்]

கற்றாளையைத் தெரியும் ரதி. இங்கு Aloe Vera என்று சொல்வார்கள். மரம் வைத்திருக்கிறேன். இது சோற்றுக் கற்றாளை என்று உள்ளது. வேறயோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்,

சோற்றுக் கற்றாழையா? சேற்றுக் கற்றாழையா?

சோறு எனில் அப்பெயருக்கு என்ன காரணம்?

சேறு எனில் பொருந்தலாம் எனினும் கற்றாழை உவர் நிலப் பயிர் என நினைக்கின்றேன்.

தகவல் தெரிந்தால் பகிருங்கள். நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார்

சோற்றுக் கற்றாளை என்றால் என்ன? எங்கிருந்து எடுக்கிறீர்கள்?

aloe_vera-300x265.gif

[size=4]இதனைத்தான் சோற்று கற்றாழை என்பார்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

சோற்றுக் (சோத்துக்) கற்றாழை - aloe vera

கற்றாழை வரண்ட வலயத் தாவரம் என்பதால் சேற்றில் வளர்வதில்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாளையைத் தெரியும் ரதி. இங்கு Aloe Vera என்று சொல்வார்கள். மரம் வைத்திருக்கிறேன். இது சோற்றுக் கற்றாளை என்று உள்ளது. வேறயோ தெரியாது.

எல்லாம் ஒன்று தான் தப்பிலி பெயர் தான் மருகி தங்களுக்கு ஏற்ற மாதிரி கூப்பிடுகிறார்கள்...ஆமாம் அதை உங்கட வீட்டில எப்படி வளர்க்கிறீங்கள்?

aloe_vera-300x265.gif

[size=4]இதனைத்தான் சோற்று கற்றாழை என்பார்கள். [/size]

அட அவனா நீ :D

பெயர்தான் மாறியிருக்கு தமிழரசு.

ஆமாம் அதை உங்கட வீட்டில எப்படி வளர்க்கிறீங்கள்?

பூந்தொட்டிக்குள் வைத்து வளர்க்கிறேன். குளிருக்கு (கார்த்திகை - பங்குனி) வீட்டிற்குள் வைத்து வளர்ப்பேன்.

சிறிய பூந்தொட்டிக்குள், அடுக்களை யன்னலோரம் வைத்தால் நன்றாக வளரும்.

  • கருத்துக்கள உறவுகள்

aloe_vera-300x265.gif

[size=4]இதனைத்தான் சோற்று கற்றாழை என்பார்கள். [/size]

ஆமாம் தப்பிலி இதுதான் ALoe Vera, இதிலும் பல வகையிருக்கு, படத்தில் உள்ள மாதிரி இருப்பதுதான் ஊரில் சோற்றுக் கற்றாளை என்று சொல்கின்றவர்கள்.

இதன் பூவை சிறு இறால் உடன் வறுத்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.

ஒரு பூ இப்ப பூத்திருக்கு படம் எடுத்து போடுகிறேன் பிறகு. சிவப்பு பூதான் நல்லது, மஞ்சள் பூ நான் பாவிப்பதில்லை, அதை காட்டுக் கற்றாளை என் ஊரில் சொல்லுகிறவர்கள்.

http://www.aloeveraproducts.com.au/

http://en.wikipedia.org/wiki/Aloe_vera

பூந்தொட்டிக்குள் வைத்து வளர்க்கிறேன். குளிருக்கு (கார்த்திகை - பங்குனி) வீட்டிற்குள் வைத்து வளர்ப்பேன்.

சிறிய பூந்தொட்டிக்குள், அடுக்களை யன்னலோரம் வைத்தால் நன்றாக வளரும்.

விரைவில் இனப்பெருக்கம் செய்யக் கூடிய தாவரம், ஈசியாக வளர்க்கலாம், தண்ணியும் அதிகம் தேவையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாளையைத் தெரியாதா தப்பிலி மட்டக்களப்பில் அது நிறைய இருக்குது கண்டு இருக்கிறன் :) அதின்ட‌ மணத்திற்கு பாம்பு வரும் :( [பாம்பு அதில இருக்குது என்று சொல்றவையள்]

ரதி தாழை மரத்தில்தான் பாம்புகள் இருக்கும். தாழம்பூ வாசத்திற்கு பாம்புகள் அதிகம் வரும்,

பிகு: அத்துடன் வெள்ளவத்தை கடற்கரையில் உல்லாசமாக பொழுதைப் போக்கவும் தாழ மரங்கள் மிகவும் உதவியாக இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை வீட்டையும் இரண்டு கற்றாளை யன்னல்லை கிடந்து காயுது........காடு,வனாந்தரம் எண்டு இருக்கிறதுகளை ஏனப்பா வீட்டுக்கை கொண்டுவந்து வைக்கிறியள் எண்டு......என்ரை ஆளுட்டை கேட்டன்.........வீட்டுக்கை இப்பிடியான முள்ளுதாவரங்கள் வைச்சால் நாவூறு படாதாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை வீட்டையும் இரண்டு கற்றாளை யன்னல்லை கிடந்து காயுது........காடு,வனாந்தரம் எண்டு இருக்கிறதுகளை ஏனப்பா வீட்டுக்கை கொண்டுவந்து வைக்கிறியள் எண்டு......என்ரை ஆளுட்டை கேட்டன்.........வீட்டுக்கை இப்பிடியான முள்ளுதாவரங்கள் வைச்சால் நாவூறு படாதாம். :D

நாவூறு படாமல், இருக்க... வீட்டுக்கு வெளியிலை.... பூசணிக்காயை கட்டி, தூக்கிவிடுங்கோவன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்,

சோற்றுக் கற்றாழையா? சேற்றுக் கற்றாழையா?

சோறு எனில் அப்பெயருக்கு என்ன காரணம்?

சேறு எனில் பொருந்தலாம் எனினும் கற்றாழை உவர் நிலப் பயிர் என நினைக்கின்றேன்.

தகவல் தெரிந்தால் பகிருங்கள். நன்றி.

[size=4]கற்றாழையின் உள் பகுதியை சோறு என்று அழைப்பார்கள். ஜெல்லி போல வழு வழுபாக் வெள்ளையாக இருக்கும். மூன்று நான்கு தண்ணீரில் கழுவிய பின் பச்சையாகவோ வேறு எதனுடனுமோ பாவிக்கலாம் ஊரில் இருக்குபோது அருமை புரியவில்லை. இங்கு தெய்வம்போல போற்றுகிறார்கள் .ஒரு ( செடி )கன்று பன்னிரண்டு டொலருக்கு வாங்கி சட்டிகளில் வளர்கிறார்கள். குளிர் பானமாக ( ஜூஸ் )தயார் பண்ணி விற்கிறார்கள். சலக்கடுப்புக்கு உகந்ததாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நன்றி [/size]நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கற்றாழையின் உள் பகுதியை சோறு என்று அழைப்பார்கள். ஜெல்லி போல வழு வழுபாக் வெள்ளையாக இருக்கும். மூன்று நான்கு தண்ணீரில் கழுவிய பின் பச்சையாகவோ வேறு எதனுடனுமோ பாவிக்கலாம் ஊரில் இருக்குபோது அருமை புரியவில்லை. இங்கு தெய்வம்போல போற்றுகிறார்கள் .ஒரு ( செடி )கன்று பன்னிரண்டு டொலருக்கு வாங்கி சட்டிகளில் வளர்கிறார்கள். குளிர் பானமாக ( ஜூஸ் )தயார் பண்ணி விற்கிறார்கள். சலக்கடுப்புக்கு உகந்ததாம். [/size]

நல்ல விளக்கம், நன்றி அக்கா,

நாதமுனி எனக்கு விபரம் தெரியா ஏன் சோற்று கற்றாளை என, அக்கா நல்ல விளக்கம் தந்துள்ளா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கற்றாழையின் உள் பகுதியை சோறு என்று அழைப்பார்கள். ஜெல்லி போல வழு வழுபாக் வெள்ளையாக இருக்கும். மூன்று நான்கு தண்ணீரில் கழுவிய பின் பச்சையாகவோ வேறு எதனுடனுமோ பாவிக்கலாம் ஊரில் இருக்குபோது அருமை புரியவில்லை. இங்கு தெய்வம்போல போற்றுகிறார்கள் .ஒரு ( செடி )கன்று பன்னிரண்டு டொலருக்கு வாங்கி சட்டிகளில் வளர்கிறார்கள். குளிர் பானமாக ( ஜூஸ் )தயார் பண்ணி விற்கிறார்கள். சலக்கடுப்புக்கு உகந்ததாம். [/size]

கற்றாழையின் உள் பகுதியை நோவுகளிற்கு புக்கை கட்டவும் பயன்படுத்துவார்கள் அதுபற்றி உங்களிற்கு ஏதாவது தெரியுமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.