Jump to content

எல்லாளனின் வரவு


Recommended Posts

ஐரோப்பிய தடைக்கு மனுவும் கனடிய தடைக்கு கண்டனமும் இடைக்காடரின் முயற்சிக்கு வாழ்த்தும் மயிலில் போய்விட்டது.

புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றது. வேற்றின மக்களுக்குள் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கான ஆதரவை பெருக்க வேண்டும்.

வல்லினமற்ற மெல்லின மக்கள் நாம் என்று புரியவைக்க வேண்டும்.

அதுசரி ! அல்லிகா நான் இல்லாளன் இல்லத்தை ஆள்பவன் அல்ல. எல்லோரையும் எல்லை வரை ஆள்பவன் எல்லாளன்.

பெயரை மாத்தி விட்டீர்கள். பாத்து..ம்..மா... :roll: :roll:

விளக்கத்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

புயலுக்கு ஒரு வரவேற்பு

--------------------- :idea: :idea:

புயல் புலியாகி வருகின்றாதோ...

புவியாளும் நாள் தெரிகின்றதோ..

எல்லைகளின் நாயகன் எனைத் தேட...

எதிரிகளின் குலை நடுநடுங்க...

காத்திருந்தவரை காற்றாய் இருந்தோம்..

புறப்பட்டவுடன் புயலாய் எழுந்தோம்..

சுற்றும் பூமி இனி எமைச் சுற்றட்டும்..

சுதந்திர வானில் கொடி பறக்கட்டும்..

புலிக்கு ஒரு காலை புவிக்கு ஒரு நாளை

புத்தனின் பூமி அறியட்டும்..

எழுச்சியுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:!: :!: :!: அடடா......

தமிழ், வரலாறு இரண்டும் கலந்து விளையாடும்

எல்லாளர் சபைக்கு வந்துவிட்டேனா..........

நல்லது, நல்லது

ஆதிவாசியாக......

யாம் உலவ வந்ததுபோல்

எல்லாளன் வடிவேற்று வந்தவரே!

வணங்குகிறோம்........ வரவேற்கிறோம்.

இனம்காக்கும் வரலாறும்இ இலக்கியப்பணியும்

தமிழர் நலங்காக்க புறப்பட்டது புரிகிறது.

வாழ்த்துக்கள்....

:lol::lol::D:D:D:D:D:D :P :P :P அவைக்கு வந்தவர் ஆதிவாசி......

Link to comment
Share on other sites

தந்தனத் தந்தன தாளம்

தகிக்கும் நல் ஞானம்

கொண்டு வளர் பூமியில்

கொலுவிருக்கும் நம் சபையில்

அனுமனின் வடிவே..

ஆதியின் வாசியே..

இளமையின் உருவே

ஈதலின் சிறப்பே

உதவியில் உலகே

ஊடலில் மடுவே

எண்ணத்தின் நிறைவே

ஏந்தலின் அருளே

ஐயனின் கொடையே

ஒன்றின் நிறைவே

ஓர்மத்தின் சிறப்பே

ஒளடதத்தின் வலிவே

வருக வருக வென்று (வாழைப்பழம் தந்து) :roll: :roll: வரவேற்கின்றோம்.

வாழைப்பழத்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணமுறு தமிழ்மகளின்

எண்ணமுறு பெருவேந்தே!

தொண்மையுறு வரலாறும்,

திசையொளிரும் பெரும் புறமும்

திண்மையுற வாழ்ந்த கோவே!

எல்லாள வடிவெடுத்து

எழுச்சியுூட்ட வந்த வேளே!

வில்லாண்ட அர்ச்சுனனாய்

வைத்த குறி தப்பாது

சொல்லாண்டு சேதி செப்பி

சொந்தநாடு காத்திடுக!

:? :? :? :? இருகரம் கூப்பி வரவேற்கும்

வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

வளம் மிகு வல்வைப் பதியில்

வண்ணத் தமிழின் காவலராய்

யாழின் இசை மீட்ட-இப்புவியில்

யாருமிலை எனுனிலை மாற்றி

புலியின் கொடி பறக்கும் எனும்சேதி

புல்லர்க்கு பகன்ற வீரம்

தமிழணங்கின் தலைக்கவசம்

தக தகக்க வெழுந்த வீரம்

தரணி நிலை நாளும்

தளராது சேதி சொல்லும்

வல்வை சகாறாவால்

வந்ததே தமிழுக்கு சகாயம் -என்றே

வரவேற்கின்றோம் எம் சபைதனைக்கே

வல் வில் திறம் மேவிய..

வரவேற்புடன் -எல்லாள மஹாராஜா- :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பூ நீ சொன்னது சிந்தப்பூ...(பாடல்)

அன்னையைத் தமிழ் வாயால் "மம்மி" என்றழைத்தாய்

"அம்மியை" அன்னிய வாயால் என்னவென்றழைப்பாய்...

வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா? - அப்போ(து)

வீட்டிலிருப்பவன் என்ன சுப்பனா?..

தமிழா நீ பேசுவது "டமிலா" இல்லை "தமிழா"

எல்லாளன் அவர்களுக்கு, 'இது தமிழா நீ பேசுவது தமிழா!' என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்த, ரசித்த கவிஞரான காசி ஆனந்தன் எழுதிய கவிதை. தமிழ் மீது காதல் கொண்டதினால் தான் இக்கவிதையிலிருந்து சிலவரிகளினை நான் இணைத்துள்ளேன். தயவு செய்து தமிழைப் பழிக்கவேண்டாம்.

எல்லாளனின் கருத்துக்களினை நான் விருப்பிபடிக்கிறனான். அழகிய தமிழில் எழுதும் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஐயையோ... தவறாக விளங்கிக் கொண்டீர்களே...

கவிஞர் காசி அண்ணனின் கவினுறு நறுக்குகளில் காதல் கொண்டவன் நானும்.

தமிழைப் பழிக்கவில்லை. டமில் பேசும் தமிழரைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். :cry: :cry: :cry:

பனிக்கும் கண்களுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

உலகம் உருண்டை என்பார்கள்.... அது சரியாகத்தான் இருக்கின்றது. என்னால் கொஞ்ச ஆட்களைத்தான் சந்திக்க முடிந்திருக்கின்றது.

ஏனென்றால் நான் இன்னும் பாலை வனத்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒட்டகத்தில் பயணிக்கும் -எல்லாள மஹாராஜா- :shock: :shock: :shock: :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாளன் புத்தனின் சரணங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஏ லொள்ளரே" இங்கே பாலைவனம் சோலைவனம் என்று லொள்ளடிக்காமல், துட்ட கைமுனியிடம் இழந்த தமிழர் ஆளுமையை கைப்பற்றுவதில் முயற்சியெடும் வீரரே! :P

அல்லிகா

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளமகாராஐா

ஒரு கலக்குத்தான் கலக்குறீங்கள்.

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

:P :lol:

Link to comment
Share on other sites

கரி(யானை) யதனில்

கால் தடங்கி வீழ்ந்ததென்ன...?

துட்டனிடம்

துண்டாகிப் போனதென்ன..?

தமிழிற்கே

தலை குனிவை தந்ததென்ன..?

தள்ளாத வயதினில்

உனக்கு வில்லெதற்கு...?

பொல்லோடு

பொடிநடையாய் போய்விடு! :twisted:

Link to comment
Share on other sites

ஆனந்த மார்க்கத்தை அருளியவனே! நீ சரணா கதி அடைந்ததனால் தான் சிங்களவர் உனை மறந்தார்..உன் மார்க்கம் மறந்தார்... துன்மார்க்கத்தினராய் .. உன்மத்தம் கொண்டு உயிர் வாங்கி.. உதிரம் குடித்துத் திரிகின்றார்.

இன்னொரு முறை நீ பிறக்க வேண்டும். இச்சிறு மதியாளரின் பாவங்களை நீ துடைக்க வேண்டும்.

வேண்டுதலுடன் வரவேற்கும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அல்லிகா ! தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான் .. என் "தம்பி" இருக்கையில் தமிழர் ராஜ்ஜம் மீண்டும் கைவரப் பெறுவதில் ஏதும் ஐயமும் உளதோ?

நம்பிக்கையுடன் -எல்லாள மஹாராஜா- :):lol:

Link to comment
Share on other sites

சுபித்திரன்....

கலங்கின குட்டை தானே தெளியும். முடிந்தளவு கலக்கிவிடுவோம். தானே தெளிந்து விடும்.

பின்னர் தான் தெரியும். ஷேக்ஷ்பியர் சொன்னதைப்போல "ஆழ் கடலின் அடியில் தான் எத்தனை விலை மதிக்க முடியாத இரத்தினங்கள் இருக்கின்றன. பாலை வனத்தின் புழுதிக்காற்றில் தான் எத்தனை மணம் கமழும் மலர்கள் மலர்ந்து வீணே போகின்றன"

என்பதைப்போல் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும், எத்தனை அரிய இரத்தினங்கள் யாழ் களத்தில் மின்னப்போகின்றன என்று பார்ப்போமே. :?: :?:

வைரங்களை எண்ணப்போகும் ஆர்வத்துடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளன் வாருங்கள்

Link to comment
Share on other sites

தம்பி நீர் கெளரி பாலனா? இல்லை குளறு படி பாலனா?

44 வருடம் ஒப்பாரும் மிக்காரும் இன்றி சிங்களத்தையும் என் காலடியில் போட்டு ஆட்சி செய்த நான் ..தமிழருக்கு தலை குனிவா?

பகைவனும் என் வீரத்தை மெச்சி 2000 வருடங்கள் என் சமாதிக்கு வீர வணக்கம் செய்தது... தமிழருக்கு தலை குனிவா?

வெல்லமுடியாத என் வீரம் கண்டு நயவஞ்சகத்துடன் தனிப்போருக்கு துட்டன் எனை அழைத்தபோது சூழ்ச்சி என்றறிந்தும்...

"தன் மகன் முதுகில் வேல் பாய்ந்து இறந்தான் என்று கேட்டு அவனுக்கு பால் கொடுத்த முலை அறுத்து எறிவேன்" என்று போர்க்களம் சென்று தன் மகன் மார்பில் வேலேந்தி வீரனாக இறந்தான் என்று அறிந்து உவகை கொண்ட வீரத் தமிழ் குடியில் பிறந்து....

தனிப்போருக்கு மறுத்தான் தமிழ் மன்னன் என்ற இழி சொல்லுக்குப் பயந்து தள்ளாத வயதிலும் வீரத்துடன் போரிட்டு உயிர் துறந்த நான்.... தமிழருக்கு தலை குனிவா?

சிங்களவரின் சீர்மையையே சொல்லப்புகுந்த என் மறைவின் பின் 2 நூற்றாண்டுகளின் பின்னே எழுதிப்போந்த பொய்யின் வடிவமாம் மஹாவம்சத்திலேயே என் கீர்த்தி மறைக்க விரும்பாது மாற்றானும் போற்றி விதந்துரைத்த புகழ் கொண்ட நான் ...தமிழருக்கு தலை குனிவா?

அன்றி அன்று விட்ட தமிழ் ராஜ்ஜத்தை இன்று வரை மீட்டெடுக்க வக்கில்லாது வெறுங்கதை பேசுவதில் வீணே காலத்தைக் கடத்தும் நீங்கள் ....தமிழருக்கு தலை குனிவா?

வெறுங்கதை பேசி...வீணே சோம்பி கிடந்து ...சோத்துக்கு அலையும் நீங்கள்...... தமிழருக்கு தலை குனிவா? இல்லை நானா?

சீரிய அறம் இழந்தான்... செவ்விரத்தம் இழந்தான்.. சிந்திக்கும் திறனும் இழந்தானோ தமிழன்....

முதுமையில் கோலூன்றுவது இழிவன்று... முழுமையின்மையால் அரற்றித் திரிவது தான் இழிவு... :evil: :evil:

ஆற்றாமையில் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

மட்டுறுத்துனர் மதன்... நீங்கள்

மற்றவருக்கு உறுத்தினரோ... இல்லை... உரித்தினரோ...

உள்ளபடியே அன்பு கொண்ட உளத்தினரோ...

யாழ் களம் சிறக்க.... யாப்பெழுதி...

யாமிருக்கப் பயமேன் -என

கை கொடுக்கும் தோழனுக்கு...

சபை நிறைந்த வரவேற்பளிக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

â¨É¸û þÉõ §À¡§Ä ÀÐí̾ø þƢšÌõ

ÒĢ¢Éõ ¿£ ±É¢ø ¦À¡Õ¾¢¼ šáö.....±É

þý¨¨È Ðð¼ý ÝúԼý «¨Æò¾§À¡Ðõ...

¾Á¢ú Áì¸Ç¢ý ±¾¢÷¸¡Äõ ¸Õ¾¢ «¾ü¸¡É ºÁÂõ ºó¾÷ôÀõ

À¡÷òÐ측ò¾¢Õ츢ȡý ჾó¾¢ÃÁ¢ì¸ ¿õ ¾¨ÄÅý

þÅý «ý¨È ±øÄ¡Çý «øÄ.......

Link to comment
Share on other sites

வரலாறு கற்றுக் கொடுத்திருக்கின்றது.

முருகா நீயே கிபீருக்குப் பயந்து தலைக்கவசத்துடன் பதுங்கித் திரியும் :):lol::lol: போது .....

மானுடர் நாம் எம்மாத்திரம்? முருகா நீ எங்கிருந்து பேசுகின்றாய்?

நீ எங்கிருக்கின்றாய் என்று தெரியாமல் எம் புலம் பெயர்ந்த மக்கள் வீதிக்கு வீதி கோவில் கட்டி "உண்டியலுக்கு" சண்டை பிடித்துத் திரிகின்றார்கள். :o:o:o:o

சண்டையைப் பார்த்து சகிக்காத -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளனின் பதில்கள் கவிதை நடையுடன் நகைச்சுவையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

எல்லாளனின் பதில்கள் கவிதை நடையுடன் நகைச்சுவையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

கவிதை நடை நொண்டாமலும் நகை சுமையாகவும் இல்லாதிருக்கும் வரை சேமமே....

நொ(நோ)ண்டப் பயத்துடன்

-எல்லாள மஹாராஜா- :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.