Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்கள், தங்கள் வலிகளை.. வெளிப்படுத்தமாட்டார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

06-men-pain.jpg

ஆண்கள் எப்போதும், தங்கள் வலிகளை.. வெளிப்படுத்தமாட்டார்கள்.

அனைவருக்குமே பெண்களை விட ஆண்கள் சற்று வலிமையானவர்கள் என்பது தெரியும். ஏனெனில் ஆண்கள் எதையுமே தைரியமாக, மன வலிமையுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள். ஆனால் பெண்கள், தங்கள் வலிகளை கோபத்தின் வாயிலாகவோ அல்லது அழுதோ வெளிப்படுத்திவிடுவார்கள். அதுவே ஆண்கள் தனக்கு ஏற்படும் வலிகளை ஒரு போதும் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிலும் கஷ்டம் மனதில் இருந்தாலும் ஆண்கள் அழுது வெளிப்படுத்துவது மிகவும் அரிதானது.

முதலில் ஆண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்பது ஏற்கனவே ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்போது லீட்ஸ் மெட்ரோபாலிட்டன் பல்கலைகழகத்தில், பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வலியை பொறுத்துக் கொள்வார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எப்படியெனில் ஆண்களுக்கு ஈகோ மிகவும் அதிகம். அதனால் தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் வலிகளை ஏற்றக் கொள்ள முடிகிறது. இதனால் அவர்களது உணர்ச்சி கட்டுப்படுத்தப்படுவதோடு, பலமடைகிறது. ஆகவே தான் ஆண்கள் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், மன தைரியத்துடன், மனதை அந்த கஷ்டத்தினால் தளர விடாமல், போராட முடிகிறது. ஆனால் அவர்கள் வருத்தத்தில் இருக்கும் போது, அவர்களது நடவடிக்கையை வைத்து அவர்கள் மனதில் வலி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, கணவன் மனைவியை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டால், அதனால் பெண்கள் தங்கள் வலியை அழுது வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால் ஆண்கள் அந்த நேரத்தில் எதுவும் செய்யாமல், பேசாமல் அமைதியாக யாரிடமும் பேசாமல், தனிமையிலேயே இருப்பர். வேண்டுமெனில் சில சமயங்களில் தன்னுடைய நெருங்கிய நண்பரிடம் பேசி, தன் மனதை ஆற்றிக் கொள்வார்கள்.

எப்படியெல்லாம் ஆண்கள் தங்கள் வலியை மறைப்பார்கள்?

* யாரிடமும் எந்த ஒரு உரையாடலையும் மேற்கொள்ளமாட்டார்கள். அதாவது, ஆண்களிடம் அவர்களுக்கு வலியை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றி கேட்டால், அப்போது ஒரு வார்த்தையில் பதிலளிப்பர் அல்லது அந்த டாபிக்கையே மாற்றிவிடுவர். இதை வைத்து அவர்கள் மனதில் வலி இருப்பதை மறைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

* சில ஆண்கள் வலியை மறக்க, எப்போதுமே நண்பர்களுடன் இருப்பர். ஏனெனில் தனிமை அவர்களுக்கு பெரும் வலியை ஏற்படுத்தும் என்று எந்த நேரமும் நண்பர்களுடன் இருந்து, வலியை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றி நினைக்காமல் இருக்க முயற்சிப்பர்.

* ஆண்களின் ஈகோ மிகவும் வலிமையானது. அந்த ஈகோ தான் அவர்களது வலியை தாங்கிக் கொள்ள வைக்கிறது. மேலும் இந்த ஈகோ மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ள விடாமல் தடுக்கும். அதிலும் ஆண்கள் தங்கள் வலியை மற்றவர்களுக்கு காண்பித்து, அதனால் மற்றவர்கள் தங்கள் மீது கருணை கொள்வதை விரும்ப மாட்டார்கள்.

* ஆண்களுள் சிலர் தங்களுக்கு இருக்கும் ஈகோவின் அளவை அதிகரிப்பார்கள். இதனால் அவர்கள் எந்த வலியையும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியும்.

என்ன நண்பர்களே! இதை ஒப்புக் கொள்கிறீர்களா?

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் ஒரு பரிசோதனை செய்து பார்த்தார்கள். இதில் பங்கெடுத்தவர் ஒரு டாக்டர். இவருக்குப் பிரசவ வலிக்குச் சமமாக, இடைவெளி விட்டுவிட்டு, ஒரு வலியைச் செயற்கையாக உண்டாக்கினார்கள். அவரால்,பதினைந்து நிமிடங்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை!

இப்போது சொல்லுங்கள். யார் அதிகம் வலியைத் தாங்கக் கூடியவர்கள் என்று?

ஆம் உண்மை திருமணத்திற்கு முன் ஆண்கள் வலிமை படைத்தவர்கள் ............ஆனால் ............... :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் உண்மை திருமணத்திற்கு முன் ஆண்கள் வலிமை படைத்தவர்கள் ............ஆனால் ............... :D:icon_idea:

ஆ.. மிச்சம்??? :D

ஆ.. மிச்சம்??? :D

அது அவரவர் நிலையை பொறுத்து ...இசை //[ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த / கெடுத்த ......வரம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுசில் ஒரு பரிசோதனை செய்து பார்த்தார்கள். இதில் பங்கெடுத்தவர் ஒரு டாக்டர். இவருக்குப் பிரசவ வலிக்குச் சமமாக, இடைவெளி விட்டுவிட்டு, ஒரு வலியைச் செயற்கையாக உண்டாக்கினார்கள். அவரால்,பதினைந்து நிமிடங்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை!

இப்போது சொல்லுங்கள். யார் அதிகம் வலியைத் தாங்கக் கூடியவர்கள் என்று?

உந்த வலியள் தெரியோணுமெண்டுதானே......பிள்ளை பெத்தெடுக்கிற நேரத்திலை சிம்மாசன சிங்கத்தையும் முன்னுக்குவந்து பாக்கச்சொல்லி நேர்ஸ்மார் கட்டாயப்படுத்தினம்......எண்டாலும் கொஞ்சநாள் போக அவளவைக்கும் சூடுசுரணை வலி ஒண்டுமில்லை.....பழையபடி சொறிய வேண்டியதுதான்...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வலியள் தெரியோணுமெண்டுதானே......பிள்ளை பெத்தெடுக்கிற நேரத்திலை சிம்மாசன சிங்கத்தையும் முன்னுக்குவந்து பாக்கச்சொல்லி நேர்ஸ்மார் கட்டாயப்படுத்தினம்......எண்டாலும் கொஞ்சநாள் போக அவளவைக்கும் சூடுசுரணை வலி ஒண்டுமில்லை.....பழையபடி சொறிய வேண்டியதுதான்...... :lol:

அண்ணனாண, உங்களைக் கெஞ்சிக் கேட்கிறன்! அதை மட்டும் நினைவு படுத்தாதீங்க!

அண்டைக்கு ஆசுப்பதிரியால, முழுப்படியா வெளியால வந்ததே, ஆண்டவன் புண்ணியத்தால தான்! :D

உந்த வலியள் தெரியோணுமெண்டுதானே......பிள்ளை பெத்தெடுக்கிற நேரத்திலை சிம்மாசன சிங்கத்தையும் முன்னுக்குவந்து பாக்கச்சொல்லி நேர்ஸ்மார் கட்டாயப்படுத்தினம்......எண்டாலும் கொஞ்சநாள் போக அவளவைக்கும் சூடுசுரணை வலி ஒண்டுமில்லை.....பழையபடி சொறிய வேண்டியதுதான்...... :lol:

[size=4]Push, Push [/size]என்டு நேர்ஸோட சேர்ந்து மூச்செடுத்து, முக்கி எல்லாம் காட்ட எனக்கு தலை சுத்த வெளிக்கிட்டிடுது. என்னை மனுசி கதிரையில இருத்தி காத்து விசுக்காத குறை.

.

Edited by esan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் ஒரு பரிசோதனை செய்து பார்த்தார்கள். இதில் பங்கெடுத்தவர் ஒரு டாக்டர். இவருக்குப் பிரசவ வலிக்குச் சமமாக, இடைவெளி விட்டுவிட்டு, ஒரு வலியைச் செயற்கையாக உண்டாக்கினார்கள். அவரால்,பதினைந்து நிமிடங்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை!

இப்போது சொல்லுங்கள். யார் அதிகம் வலியைத் தாங்கக் கூடியவர்கள் என்று?

உந்த வலியள் தெரியோணுமெண்டுதானே......பிள்ளை பெத்தெடுக்கிற நேரத்திலை சிம்மாசன சிங்கத்தையும் முன்னுக்குவந்து பாக்கச்சொல்லி நேர்ஸ்மார் கட்டாயப்படுத்தினம்......எண்டாலும் கொஞ்சநாள் போக அவளவைக்கும் சூடுசுரணை வலி ஒண்டுமில்லை.....பழையபடி சொறிய வேண்டியதுதான்...... :lol:

இதை வாசிக்கும்... போது எனக்கு ஒரு குற்ற உணர்வு ஏற்படுகின்றது.

எனது மகன் பிறக்கும் நாளை முன்பே... மகப்பேற்று வைத்தியர் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட நாள், சாத்திரப்படி கூடாத நாள்.

அதே... மாதிரி அன்றைய நாளும் வந்தது. அன்று எனக்குப் பின்னேர வேலை(14 மணி) என்ற படியால்... காலையில், மனைவி சாதாரணமாக இருக்க.. இன்று குழந்தை பிறக்காது என்று நினைத்து... நானும், வேலைக்குக் கிளம்பி விட்டேன் (30கி.மீ). மாலை ஒன்பது மணி போல்.. மனைவி தொலைபேசியில்... எனக்கு, வயித்துக்குத்து... நான் ரக்சியில்... ஆஸ்பதிரிக்குப் போகின்றேன்... நீங்கள் நேரே ஆஸ்பத்திரிக்கு வரும்படி கூறி விட்டு, தொலைபேசியை.. வைத்துவிட்டா.

உடனே.. நான் வேலையிடத்திலிருந்து... ஆஸ்பத்திரிக்கு வந்து சேர பத்து மணியாகிவிட்டது.

அங்கு... என்னை அறிமுகப்படுத்தி, பிரசவப் பகுதிக்கு... போவதற்குரிய உடைகளைப் போட்டுக் கொண்டு உள்ளே நுளைய... பிரசவவேதனையில் கத்திக்கொண்டிருக்கும் பல ஜேர்மன் குரல்களின் நடுவே... தமிழ்க்குரலும்... அந்தப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால்... தாதிமார் காட்ட முதலே... மனைவியின் அறையை கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது.

பார்த்தால்... எனக்கே... ஒரு மாதிரிப்போய்விட்டது. நான் கலங்கினால்... அவ‌ இன்னும், பயப்படுவா என்று விட்டு, வேதனை தெரியாமல் இருக்க... முயற்சித்து வேறு கதைகளைக் கதைத்து... நேரத்தை கடத்திக் கொண்டிருந்தேன். நேரமோ... நள்ளிரவு 23:45 ஆகி விட்டது.

மனைவியும்... ஏலாமல் இருக்கப்பா... என்று சொல்லிக் கொண்டிருக்க... குழந்தையை.. வெளியே எடுக்க... தாதிமார்களும் அந்த இடத்துக்கு வர... நான், ம‌னைவியுட‌ன் சொன்னேன்... பொறுத்த‌னீர், இன்னும் 15 நிமிசம் பொறும். 15 நிமிச‌த்தில்.. அடுத்த‌ நாள் பிற‌ந்து விடும், ந‌ல்ல‌ நாள‌ப்பா என்று சொல்லி, தாதிமாரையும் தாம‌திக்க‌ச் சொன்னேன். ஜேர்ம‌னில், ஏப்பிர‌ல் முத‌லாம் திக‌தி குழ‌ந்தை பிற‌ந்தால்... ந‌ல்ல‌து இல்லை என்று.. அவ‌ர்க‌ளும்... சொல்லிக் கொண்டிருக்க‌, நேர‌ம் 00:04 நிமிட‌மாகி... நான் நினைத்த‌ நாளில் ம‌க‌ன் சுக‌மாக‌ப் பிற‌ந்தான்.

இதில்... நான் ந‌ட‌ந்து கொண்ட‌ முறை, என‌க்குப் பிழையாக‌த் தெரிந்தாலும், முத‌ல் நாள் குழ‌ந்தை பிற‌‌ந்திருந்தால்... அவ‌னின் வாழ்க்கை ப‌ழுதாகி இருக்குமே... என்ற‌, த‌க‌ப்ப‌னின் அக்க‌றையும் இருந்த‌தால்... ஏற்றுக் கொள்ள‌‌லாம் தானே...

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சிறீ இவ்வளவு பழைமை வாதியாக இருப்பார் என்பதி நம்ப முடியவில்லை.

தமிச் சூரியன் நீங்களாவது திருமணத்தின் பின்னும் வலிமையோடு இருந்துகாட்டலாமே கடவுளிலை பழியைப் போடாமல். :D

ஆண்களின் வலிமை எல்லாம் பெண்களாலும் பெண்களுக்கு முன்னாலும்தான். ஈகோ தான் முழுக்க முழுக்க. பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத விடயமே இந்த ஈகோதான்.அதனாலேயே பல குடும்பங்களின் விவாகரத்துவரை போகிறது. ஆண்களே உங்கள் ஈகோவை விடுங்கள் உங்கள் வலிமை அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள், தங்கள் வலிகளை.. வெளிப்படுத்தமாட்டார்கள்.

ஆண்கள் உடல் வலிகளை தாங்கிக்கொள்ளமாட்டார்கள். சின்னதென்றாலும் அதை வெளிப்படுத்தி விடுவார்கள்.

ஆனால் மன வலிகளைத்தான் வெளிப்படுத்தமாட்டார்கள். தேவதாஸ் ரேஞ்சுக்கு தாடியுடன் திரிவார்கள் என்னைப்போல.

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்கும்... போது எனக்கு ஒரு குற்ற உணர்வு ஏற்படுகின்றது.

எனது மகன் பிறக்கும் நாளை முன்பே... மகப்பேற்று வைத்தியர் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட நாள், சாத்திரப்படி கூடாத நாள்.

அதே... மாதிரி அன்றைய நாளும் வந்தது. அன்று எனக்குப் பின்னேர வேலை(14 மணி) என்ற படியால்... காலையில், மனைவி சாதாரணமாக இருக்க.. இன்று குழந்தை பிறக்காது என்று நினைத்து... நானும், வேலைக்குக் கிளம்பி விட்டேன் (30கி.மீ). மாலை ஒன்பது மணி போல்.. மனைவி தொலைபேசியில்... எனக்கு, வயித்துக்குத்து... நான் ரக்சியில்... ஆஸ்பதிரிக்குப் போகின்றேன்... நீங்கள் நேரே ஆஸ்பத்திரிக்கு வரும்படி கூறி விட்டு, தொலைபேசியை.. வைத்துவிட்டா.

உடனே.. நான் வேலையிடத்திலிருந்து... ஆஸ்பத்திரிக்கு வந்து சேர பத்து மணியாகிவிட்டது.

அங்கு... என்னை அறிமுகப்படுத்தி, பிரசவப் பகுதிக்கு... போவதற்குரிய உடைகளைப் போட்டுக் கொண்டு உள்ளே நுளைய... பிரசவவேதனையில் கத்திக்கொண்டிருக்கும் பல ஜேர்மன் குரல்களின் நடுவே... தமிழ்க்குரலும்... அந்தப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால்... தாதிமார் காட்ட முதலே... மனைவியின் அறையை கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது.

பார்த்தால்... எனக்கே... ஒரு மாதிரிப்போய்விட்டது. நான் கலங்கினால்... அவ‌ இன்னும், பயப்படுவா என்று விட்டு, வேதனை தெரியாமல் இருக்க... முயற்சித்து வேறு கதைகளைக் கதைத்து... நேரத்தை கடத்திக் கொண்டிருந்தேன். நேரமோ... நள்ளிரவு 23:45 ஆகி விட்டது.

மனைவியும்... ஏலாமல் இருக்கப்பா... என்று சொல்லிக் கொண்டிருக்க... குழந்தையை.. வெளியே எடுக்க... தாதிமார்களும் அந்த இடத்துக்கு வர... நான், ம‌னைவியுட‌ன் சொன்னேன்... பொறுத்த‌னீர், இன்னும் 15 நிமிசம் பொறும். 15 நிமிச‌த்தில்.. அடுத்த‌ நாள் பிற‌ந்து விடும், ந‌ல்ல‌ நாள‌ப்பா என்று சொல்லி, தாதிமாரையும் தாம‌திக்க‌ச் சொன்னேன். ஜேர்ம‌னில், ஏப்பிர‌ல் முத‌லாம் திக‌தி குழ‌ந்தை பிற‌ந்தால்... ந‌ல்ல‌து இல்லை என்று.. அவ‌ர்க‌ளும்... சொல்லிக் கொண்டிருக்க‌, நேர‌ம் 00:04 நிமிட‌மாகி... நான் நினைத்த‌ நாளில் ம‌க‌ன் சுக‌மாக‌ப் பிற‌ந்தான்.

இதில்... நான் ந‌ட‌ந்து கொண்ட‌ முறை, என‌க்குப் பிழையாக‌த் தெரிந்தாலும், முத‌ல் நாள் குழ‌ந்தை பிற‌‌ந்திருந்தால்... அவ‌னின் வாழ்க்கை ப‌ழுதாகி இருக்குமே... என்ற‌, த‌க‌ப்ப‌னின் அக்க‌றையும் இருந்த‌தால்... ஏற்றுக் கொள்ள‌‌லாம் தானே...

Princess Beatrice பிறக்கவேண்டிய நாள் 01/08/88. ஆனால், 08/08/88 பிறக்க வேணுமெண்டு, ஏழு நாட்கள் தாமதிக்கப் பண்ணின கொடுமையிலும் பார்க்க, நீங்கள் செய்தது பரவாயில்லை. பிள்ளை பிறக்கேக்க, தோலெல்லாம் உரிஞ்ச படி தான் பிறந்ததாம்! :o

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவி மனுசா !!!!!!

அவ்வளவு துன்பத்திலும் சாத்திரமா!!!!

என்றாலும் மனிதர் துணிஞ்சகாய்தான், அத அந்த நேரம் மனுஷிஇடம் சொல்லிஇருக்கிறிங்கள்,

உதைக்காமல் விட்டாரே, உம்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தவார ராசிபலன் இணைக்கேக்குள்ளையே சுதாரிச்சிருக்க வேணும் நாங்கள்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சிறீ இவ்வளவு பழைமை வாதியாக இருப்பார் என்பதி நம்ப முடியவில்லை.

தமிச் சூரியன் நீங்களாவது திருமணத்தின் பின்னும் வலிமையோடு இருந்துகாட்டலாமே கடவுளிலை பழியைப் போடாமல். :D

ஆண்களின் வலிமை எல்லாம் பெண்களாலும் பெண்களுக்கு முன்னாலும்தான். ஈகோ தான் முழுக்க முழுக்க. பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத விடயமே இந்த ஈகோதான்.அதனாலேயே பல குடும்பங்களின் விவாகரத்துவரை போகிறது. ஆண்களே உங்கள் ஈகோவை விடுங்கள் உங்கள் வலிமை அதிகரிக்கும்.

என்ன செய்வது சுமோ... வைத்தியர் முன்பே குறிப்பிட்ட நாளில்,

கிரகசாத்திரமும், எண் சாத்திரமும்... படு மோசமக இருந்ததால்.. அப்படியான முடிவு எடுக்கவேண்டி வந்திட்டுது :)

Princess Beatrice பிறக்கவேண்டிய நாள் 01/08/88. ஆனால், 08/08/88 பிறக்க வேணுமெண்டு, ஏழு நாட்கள் தாமதிக்கப் பண்ணின கொடுமையிலும் பார்க்க, நீங்கள் செய்தது பரவாயில்லை. பிள்ளை பிறக்கேக்க, தோலெல்லாம் உரிஞ்ச படி தான் பிறந்ததாம்! :o

நீங்க‌ளாவ‌து புரிந்து கொண்டீர்க‌ளே... புங்கையூரான். :rolleyes:

Princess Beatrice எந்த‌ நாட்டு இள‌வ‌ர‌சி.

அட பாவி மனுசா !!!!!!

அவ்வளவு துன்பத்திலும் சாத்திரமா!!!!

என்றாலும் மனிதர் துணிஞ்சகாய்தான், அத அந்த நேரம் மனுஷிஇடம் சொல்லிஇருக்கிறிங்கள்,

உதைக்காமல் விட்டாரே, உம்மை.

அந்த‌ நேர‌ம் ம‌னிசி உதைக்கும் நிலையில்... இல்லை, என்ற‌ துணிவில் தான்... அப்ப‌டிச் செய்தேன் :D

இந்தவார ராசிபலன் இணைக்கேக்குள்ளையே சுதாரிச்சிருக்க வேணும் நாங்கள்..! :D

இடைவேளை விட்ட‌ "இந்த‌வார‌ ராசிப‌ல‌னை" திரும்ப‌ ஆர‌ம்பிக்க‌ப் போற‌ன் இசை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க‌ளாவ‌து புரிந்து கொண்டீர்க‌ளே... புங்கையூரான். :rolleyes:

Princess Beatrice எந்த‌ நாட்டு இள‌வ‌ர‌சி.

அட நம்மிட Fergie இருக்கிறா எல்லோ!

அது தான் பிரின்ஸ் அன்றுவின்ர முன்னாள் மனுசி!

அவவின்ர மூத்த மகள்! :D

அட நம்மிட Fergie இருக்கிறா எல்லோ!

அது தான் பிரின்ஸ் அன்றுவின்ர முன்னாள் மனுசி!

அவவின்ர மூத்த மகள்! :D

அதென்ன நீங்கதான் கால் பெருவிரல் கழுவி விட்ட ஆள் மாதிரி நம்மட 'Fergie' :D

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன நீங்கதான் கால் பெருவிரல் கழுவி விட்ட ஆள் மாதிரி நம்மட 'Fergie' :D

Fergie தமிழ் சிறிக்கு, தூரத்துச் சொந்தம்! அது தான்,,,, :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.