Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பால் தாக்கரே காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த முறை பிரதீபா பாட்டில் ஜனாதிபதியாக முக்கியாமா உதவியது தாக்கரே தான் அதனால் தான் அந்த நன்றிமரவாமல் ஓடி ஓடி வந்து தாக்கரை பார்த்து விட்டு சென்றார் சோ ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட முக்கிய பதவிகளை தீர்மானிக்க கூடிய ஷக்தி

  • Replies 117
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

44 mla க்களும் பதினைந்து பாராளுமன்ற ஊப்பினர்களை இரு அவைகளிலும் கொண்டுள்ளது

3 அல்லது நான்கு மாகாண சபை உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்யலாம் என்றால் shivaeenaavum செய்யலாம்

பார் தாக்கரே எங்களுக்கு ஏதும் செய்யவில்லை. ஆனால் தன் இனத்துக்கு நன்றே செய்தார். அதைப் பாராட்டும் பக்குவம் இருக்கின்றது...

அவரால் மகராஸ்டிரம் எந்த மாற்றமும் அடையவில்லை. மும்பாய் பிருத்தானியர் காலத்திலேயே சென்னை, கல்காதாவை விட மேலே போவிட்டது. இன்றும் மொத்த வளர்ச்சியில் மகாராஸ்ரா தான் அதிக புள்ளி விபரங்களை காட்டுகிறது. தக்கர் செய்தது இன்வேறியை வைத்து அரசியலில் மேலே வர முயன்றது. அது நடக்கவில்லை. இனவாதம் மாகாராஸ்டிராவில் மட்டுமல்ல இருக்கிறது. மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள். ஆனால் தக்கர் தான் இலங்கை மாதிரி இதை வைத்து அரசியல் செய்ய முயன்றவர். அவர் மகாராஸ்டிராவுக்கு இனவாதம் மட்டும்தான் ஊட்டினார். இந்திய குடும்ப அரசியலுக்கு தக்கரோ, சிவசேனையோ தவறவும் இல்லை.

சூடுகண்ட பூனை அடுபங்கரையை நாடாது. இலங்கையில் வகுப்புவாததால் நொந்து போன நாங்கள் வகுப்பு வாத ஆயுதத்தை எடுத்து தோற்று போன தக்கை பாராட்ட எதுவும் இல்லை. பாராடினால் சுட்டால் நெருப்பு என்று தெரிந்து கொள்ளும் பூனை அளவுக்கு தன்னும் நாம் இல்லை.

44 mla க்களும் பதினைந்து பாராளுமன்ற ஊப்பினர்களை இரு அவைகளிலும் கொண்டுள்ளது

3 அல்லது நான்கு மாகாண சபை உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்யலாம் என்றால் shivaeenaavum செய்யலாம்

யாரும் இரண்டில் ஒன்றும் அரசியலுக்கு உகந்த கட்சிகள் என்று சொல்லவில்லை. ஒன்றின் தலைமைகள் அடிவருடிகள், மற்றயது வெறிக்கட்சி.

முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் செய்கிறது என்று யாரும் சொல்லலாம். ஆனால் உண்மையில் அதனால் இலங்கையில் என்ன செய்ய முடிகிறது என்பது வேறு ஆராச்சி. உதாரணம் எப்போதும் ஒப்பிடப்படுவதைவிட மேலாக இருப்பது வழக்கம்.

எனவே அஸ்சிரப்பின் மு.கா கழுதை தேய்ந்து காக்கீமின் மு.கா வானது போல்த்தான் சிவசேனயும் என்றால் அது இப்போதைக்கு எமக்கு திருப்த்தியான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய கருத்தைப் பார்த்தால், மகாராஸ்ரர் கன்னடர்களை அடிப்பதால் தான் அவர்கள் தமிழரை அடிப்பது போன்றும், ம்றறும்படி கன்னடனர்கள் ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் போன்றல்லவா இருக்கின்றது. என்றைக்கு முட்டள்தனமாக மொழீவாரியாகத் தமிழகம் பிரிக்கப்பட்டதோ, அன்றிருந்து பிரச்சனை. அதைத் தெளிவான சிந்தனையோ பிரிக்க அந்தப் பகுத்தறிவாளர்களுக்குப் பகுத்தறிவு இல்லை.

உங்களுடைய அனைத்துக் கருத்துக்களும் பால் தாக்கரே மீது வஞ்சத்திலும், இயலாமை, ஆற்றாமை கொண்டே எழுதுவதாகத் தேன்றுவதால் அதில் பதிலளிக்க ஏதுவுமே இல்லை. அதனால் தான் பேடி, தக்கர் என்று வஞ்சகமான கருத்துக்களைப் பரப்புகின்றீர்கள்..

மும்பாய் வளர்ச்சியைக் கூட அதனால் தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வெள்ளையர் போய் 60 வருடங்களாகியும், அவர்கள் கழித்த சிறுநீர் தான் இப்போதும் ஈரமாக இருக்கின்றது என்பதற்கு என்ன விளக்கத்தைத் தரமுடியும்??

குஜராத்தின் வளர்ச்சியையும் அப்படித் தான் பலர் சொல்வார்கள். அதுவும் வெள்ளையன் கொடுத்தது என்று.. ஏனென்றால் அங்கே நரேந்திர மோடி ஆள்கின்றார் என்ற ஆற்றாமை.

சிவசேனா முன்பை விட இப்போது தான் பலமாக இருக்கின்றது என நம்புகின்றேன். பார்தாக்ரே மீது சில தடைகள் விழுந்ததை விட இப்போது அது தெளிவாகத் தான் இருக்கின்றது. தோற்றுப் போன வரலாறு எம் தேசத்துக்கும் இருப்பதால் மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் தோற்றுப் போனால் கூடச் சந்தோசப்படும் மனநிலை இல்வை!!

பால் தக்கரே மராட்டிய மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் கேட்டு போராடியிருந்தால் அவரை ஒரு இனப்பற்று மிக்கவராக கொள்ள முடியும்.

ஆனால் அப்படியான தகவல்கள் எதுவும் அவர் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

அவர் சிங்கள பேரினவாதம் போன்ற ஒன்றைத்தான் மராட்டிய மண்ணில் செய்தார். அங்கே இருந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புக்களை வளர்த்து, அதில் குளிர் காய்ந்தார்.மராட்டிய மண்ணில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு காரணம் ஆனார்.

இவர் ஒரு பயங்கரவாதி. தண்டிக்கப்பட வேண்டியவர். அதிகாரத்தில் உள்ள நிறையப் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படாமலேயே இயற்கை எய்துவது போன்று இவரும் போய் சேர்ந்து விட்டார்.

என்னுடைய வருத்தங்களை பதிவு செய்கிறேன்.

"பதிலளிக்க ஏதுவுமே இல்லை." என்றால் இப்படியாவது எழுதி முயற்சி பண்ணத்தான் வேண்டுமென்றும் இருக்கா?

வெள்ளையர் போய் 60 வருடங்களாகியும், அவர்கள் கழித்த சிறுநீர் தான் இப்போதும் ஈரமாக இருக்கின்றது என்பதற்கு என்ன விளக்கத்தைத் தரமுடியும்??

கருத்து விளங்காவிட்டல் கேட்டிருக்கலாம். வெள்ளையர் ஆளும் போதே அவர்கள் முன்னேறிவிடார்கள். அதாவது தக்கரின் சிறுநீரில் தான் மகாராஸ்டிரா தளிர்த்தென்பதில்லை என்பது விளங்க வேண்டும். தக்கர் 1996 இல் சிறுநீர் விடப்போகாமலும் மகராஸ்டிரா வளர்ந்தது. இன்றும் வளர்கிறதென்பதுதான் நான் எழுதிருப்பது. எதோ மூத்திரக்கதையை எழுத்திவிட்டு பெரிதாக கீழித்துவிட்டத்தாக நினைப்பது உங்களுக்கும் நீங்கள் வக்காலத்து வாங்கும் வன்முறையாளர் தக்கரும் அவமானமாக படவில்லையா. இந்த அவமானகரமான காரியங்களை செய்துவிட்டு தக்கருடன் இணையும் இனதை அறிந்துகொள்ள பெரிய சங்கடமொன்றும் இல்லை. வெறியர்கள் வெறியருடந்தான் இணையமுடியும்.

நல்ல ஒரு சொல்லு கருத்துக்களத்தில் எழுத பண்பு வரவேண்டும். அதன் பின் போதிக்கலாம்.தக்கரின் வகை போதனைகளை. அது வரை"அதைப் பாராட்டும் பக்குவம் இருக்கின்றது.." என்ற பெருந்தன்மை உங்களுடன் மட்டும் வைத்துகொள்ளுங்கள்.

உங்களுடைய கருத்தைப் பார்த்தால், மகாராஸ்ரர் கன்னடர்களை அடிப்பதால் தான் அவர்கள் தமிழரை அடிப்பது போன்றும், ம்றறும்படி கன்னடனர்கள் ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் போன்றல்லவா இருக்கின்றது.
நான் நீங்கள் அனுமானிக்கும் இதை எங்கு எழுத்தியிருக்கிறேன் என்று தந்தால் நல்லது.

இதேபோல தக்கர் என்ற வெறியனின் கொலைகாரத் தத்துவங்களை தப்பாக விளங்கிக் கொண்டுவிட்டால் அதற்கு கவலை மட்டும்தான் தெரிவிக்க முடியும். மேலே எழுத எனக்கும் ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் சொல்கின்றோம். திராவிடத் தலைவர் கருணாநிதி மண்டையைப் போட முன்பே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று.. மக்களின் சொத்துக்களை சுரண்டி தன் குடும்பத்திற்கு ஒதுக்கிய திராவிட ஊழல் பேர்வழி கருணாநிதி போன்ற அயோக்கியர்களை இந்தச் சமயத்திலேயே தண்டிக்க வேண்டும். அவனையாவது தப்பிக்க விடக்கூடாது

அதனால் தான் சொல்கின்றோம். திராவிடத் தலைவர் கருணாநிதி மண்டையைப் போட முன்பே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று.. மக்களின் சொத்துக்களை சுரண்டி தன் குடும்பத்திற்கு ஒதுக்கிய திராவிட ஊழல் பேர்வழி கருணாநிதி போன்ற அயோக்கியர்களை இந்தச் சமயத்திலேயே தண்டிக்க வேண்டும். அவனையாவது தப்பிக்க விடக்கூடாது

முயற்சி எடுங்கள் யார் கூடாது என்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பால் தாக்கரோயைப் பேடி என்று எழுதுவதன் ஊடாக ஏதோ பெரிதாகக் கிழித்து விட்டதாக பூரிப்படையும் உங்களுக்கு ஏற்படும் அவமானத்தை விட சிறுநீரைப் பற்றி எழுதிச் செல்லும் அது பெரிய அவமானமாகத் தெரியவில்லை.

கன்னடர்களைப் பற்றி உங்கள் கருத்து இது தான். " மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள்."

நான் இனவாதியாகவோ, மொழிவாதியாகவோ இருக்கின்றேன் என்பதில் எனக்கு எவ்வித கூச்சமும் இல்லை. அந்த, இனம் மொழியில் கொண்டிருக்கின்ற என் அக்கறை தான் எம் சமூகம் பற்றிச் சிந்திக்க வைக்கும் விடயம் என்பதில் எனக்கு பூரண திருப்தி உண்டு. . அதில் தாக்கரேயும் விதி விலக்கல்ல.

பால் தாக்கரோயைப் பேடி என்று எழுதுவதன் ஊடாக ஏதோ பெரிதாகக் கிழித்து விட்டதாக பூரிப்படையும் உங்களுக்கு ஏற்படும் அவமானத்தை விட சிறுநீரைப் பற்றி எழுதிச் செல்லும் அது பெரிய அவமானமாகத் தெரியவில்லை.

கன்னடர்களைப் பற்றி உங்கள் கருத்து இது தான். " மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள்."

நான் இனவாதியாகவோ, மொழிவாதியாகவோ இருக்கின்றேன் என்பதில் எனக்கு எவ்வித கூச்சமும் இல்லை. அந்த, இனம் மொழியில் கொண்டிருக்கின்ற என் அக்கறை தான் எம் சமூகம் பற்றிச் சிந்திக்க வைக்கும் விடயம் என்பதில் எனக்கு பூரண திருப்தி உண்டு. . அதில் தாக்கரேயும் விதி விலக்கல்ல.

ஜனநாயகத்தில் ஊடகங்கள் பிரதான பங்கை வகிக்கின்றன. இதன் மூலம்தான் மக்களுக்கு முடிவு எடுக வேண்டிய தரவு கிடைக்கிறது. தான் தனது விவாதத்தை சோடித்து எந்த கோட்டிலும் வாழக்கை நடத்த முடியாது குறுக்கு விசாரணைக்கும் முகம் கொடுத்த்த்தானாக வேண்டும். ஊடகவியலார் ஜனநாயக அரசுகளால் பிரத்தியேக தொழிலளார்கள அங்கீகரிக்கப்படிருக்கிறார்கள். உண்மையை மக்கள் தெரிந்து கொள்வது அவர்களின் மூலம்தான். தக்கர் தான் தன் பத்திரிகையில் எழுதும் விளம்பரக்கட்டுரைகளில் இருந்து அல்ல. ஊடகங்களுக்கு முகம் கொடுக்கதாரில்லாமல் ஒழித்திருந்து தன் பத்திரிகையில் தக்கர் விளம்பரம் எழுதுவது பேடித்தனம்.

"tit for tat ஆக எழுத்திவிட்டேன் ஆனல் நான் எழுத்துவதில் கருத்திருக்கவில்லை பார்தீர்காளா?" என்பது போல நினைத்து எழுதிக் கிழிப்பது ஜனநாயக ஊடகங்களை கண்டு மிரண்டு ஓடும் பேடியை வீரனாக்காது. இதையேதான் இலங்கை ஊடகங்களை நசுக்கி மகிந்தாவின் அரசு இலங்கையிலும் செய்வது.

எத்தனை முறை தொடந்து நியாயப்படுத்தியும் வெள்ளையர் சிறுநீர்கழிப்பது பற்றி எழுத்திக்கிழிக்க முயல்வது வெறுமனே பால் தக்கரின் பாணியில் வெறிதனத்தை காட்டமட்டும்தான் உதவும். அதுதான் நாம் பேடி தக்கர் வெறியன் மட்டும்தான் என்று ஏற்கனவே எழுதினோம்.

" மகாராஸ்டிரர் கன்னடரை அடிக்கிரார்கள். கன்னடர் திரும்பிவத்து தமிழரை அடிக்கிரார்கள்." என்பதனோடு தொடர்ந்துவரும் மற்றய வசனகளையும் படித்தீர்களானல், இது மாகாணகங்களுக்கிடையான இனவன்முறைகளின் சுழற்சிமுறையை குறிக்கிறதென்பதைதான் சொல்கிறதென்பது விளங்க்கும். தெளிவாக, குறிக்கபட்ட மாநிலங்கள் சுழற்சி முறையில் வரும் மானிலங்களுக்கு உதாரணம்தான் என்பது தொடரும் வசனங்களால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வாசிக்கவும்.

இலங்கையின் அதி கூடிய இனத்துவேச கட்சி JVP யும், SLFP க்கு அதரவு கொடுத்து கொண்டு தான் அரசில் பங்கெடாதிருந்தது. இந்த அதி தீவிரவாதகட்சிகள் தாம் மேலே வரும் வரையும், ஒரு திவிரவாத கட்சியை மரமாக நினைத்து ஏற முயல்வதுண்டு. ஆனால் தீவிரவாதகட்சிகள் தாம் பதவியைப் பிடித்தவுடன் அதி தீவிரவாதகட்சிகளை கைவிட்டுவிடுவதுண்டு. இதுதான் இந்த இரண்டுகட்சிகளுக்கும் நடந்தது. பொருளாதாரம் முன்னேற முன்னேற சிவசேனையை மக்கள் மெல்ல மெல்ல கைவிடுவார்கள்.

உங்களின் பெருமைகளையும் மதவேறி தக்கரின் பெருமைகளையும் கண்டு நாம் ஏன் அசந்து போகவேண்டும்? நீங்கள் எதையும் நினைக்கலாம் ஆனால் சிவசேனயின் சரித்திரம் மலை அடிவாரத்தை நோக்கி உருளத்தொடங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா மலையில இருந்து எங்கட மல்லை அண்ணா தள்ளி விட்டு இருக்கார் அது இப்ப அடிவரத்திக்கு வருது தோடா.... ஆசை தோசை .......

மலை ஏன்டா ஒண்டில ஏறினா தொடர்ந்தும் அங்க நிக்க முடியுமா? கீழ இறங்கி தான் ஆகணும் இந்த சிம்பிள் தியரி கூட தெரியல்ல ஐயோ பாவம்..........,

அப்பிடி இறங்கினாலும் மூச்சு வாங்கிட்டு நிக்க சிவ சேனா ஒன்றும் முதியோர் கட்சி அல்ல

இளமை இளமை முற்றிலும் இளமை இளைஞர்கள் நிறைந்த கட்சி சோ don't வொர்ரி.

மற்றது அரசிய கட்சி தொடங்கினா ஆட்சிக்கு வந்து தான் அரசியல் நடத்தனும் என்ற அவசியம் இல்லை தான் சார்ந்திருக்கும் மக்களுக்கு குரல் கொடுத்தாலே போதும் உதாரணம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் சோ சின்ன பிள்ளையளுக்கு நிலா காட்டி சோறு ஊட்டுற கதை எல்லாம் நம்ம கிட்ட வேணாம்

அது சரி நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லெல்லா ஒவொரு திரியிலும் ஹகீமையும் பௌதினையும் திட்டோ திட்டு எண்டு திட்டிட்டு இருக்கிங்க அது ஏன்?

நாந்தான் பத்து திரியிலை ஒரு பெயரிலை வந்து திட்டுகிறன். நீங்கள் பத்து திரியிலை 20 பெயரிலை வந்து புகழ் பாடுகிறீர்கள் அது ஏன்?

யாழுக்கு விளம்பர வருமானம் இது வரையில் வரவில்லை. யாழ் இனி சந்தாபணம் அறவிடதொடங்கினால், உங்களை மாதிரி பல பெயர்களில் வந்து பத்து திரியில் எழுதுபவர்களிடம் இருந்து நல்ல வருமானம் வரும். யாழ் சந்தா பணதை ஆரம்பிக்க நீங்க நல்ல முதல்.

அப்போ திண்ணையும் தடைப்பாடமல் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சிங்கள பேரினவாதம் போன்ற ஒன்றைத்தான் மராட்டிய மண்ணில் செய்தார். அங்கே இருந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புக்களை வளர்த்து, அதில் குளிர் காய்ந்தார்.மராட்டிய மண்ணில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு காரணம் ஆனார்.

இவர் ஒரு பயங்கரவாதி. தண்டிக்கப்பட வேண்டியவர். அதிகாரத்தில் உள்ள நிறையப் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படாமலேயே இயற்கை எய்துவது போன்று இவரும் போய் சேர்ந்து விட்டார்.

சிலரின் சாவு, அவர்கள் எனக்கு தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பாதிப்பை ஏற்படுத்துவது. சிலரின் மரணம் சந்தோசம், சிலரின் கவலை. அண்மையில் நான் கவலைப்பட்ட மரணம் Steve Jobs இனது, சந்தோசப்பட்டது பின்லாடனினது. இப்போது சந்தோசப்படுவது இந்த பால் தக்கரேயினது சாவு. சிவ சேனை போன்ற தீவிரவாத கடும்போக்கு அமைப்புக்கள் விரைவில் ஒழிய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி என்னுடைய பெயர்கள் யாவன என்று பட்டியல் இடுங்கள் பபாம் நெஞ்சில உரம் இருந்தா நேர்மைத்திறன் இருந்தா பட்டியல் இடுங்கள் இது உங்களுக்கான பகிரங்க சவால் கோழை மாதிரி ஓடாமல் பேர்களை சொல்லிப்போட்டு போகவும்

யாழுக்கு முதலாய் இருப்பதில் என்றும் எனக்கு பெருமையே

Edited by SUNDHAL

அது நான் பலமுறை உங்களுக்கு சொல்லிவிட்டேன். இனி பயப்பட அதில் ஒன்றும் இல்லை. அது சொல்லி முடியவில்லை. இடம் கிடைக்கும் போது அதை மேலும் சொல்ல ஒருவகை தைரியமும் தேவை இல்லை. என் மேல் சென்ற பதிவை கண்டவுடன் கரை மாறி எழுதுவதுதான் பயந்தோடித்தனம். சொல்ல வந்தை எல்ல பெயரிலும் ஒரே மாதிரி சொல்லப் பயந்தவர்கள், சொல்ல முடியாதவர்கள் எதற்கு 20 பெயர் வைத்திருந்து?.

யாழ் ஒருநாளைக்கு சந்தாபணம் நல்ல வருமானம் தரும் என்றதை கண்டுதான் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மழுப்பிற வேலை எல்லாம் வேண்டாம் பேர்களை சொல்லவும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் நான் பல பெயர்களில் வருவதாக குற்றம் சாட்டும் மல்லை அண்ணாவிற்கு யாழ் கள நிர்வாகம் என்னுடைய பெயர்களை அவர் பகிரங்க படுத்த ஒரு சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை அண்ணா உங்கள் பெயர் பட்டியலுக்காக still waiting

[size=2]இத்தனை லட்சம் பேர் இந்த தாக்கரே க்கு" ஆதரவா!!!!!?[/size]

[size=2]நான் பால் தாக்கரேக்கு வீர வணக்கம் சொன்னது மிக சரியானதே, தாக்கரே வேற்று மாநிலத்தவரை எதிர்த்தார், வேறு மதப்பிரிவினரை எதிர்த்தா, உண்மைதான் அது கண்டிக்க தக்கதுதான் உங்கள் சனநாயக மரபுப்படி, அப்படியாயின், உங்கள் கரம் சந் மோகன்தாஸ் சாதிய வெறிகொண்டு ,அம்பேத்கரை எப்பாடு படுத்தினார் என்பதை நீங்கள் அறியவில்லையா? அன்னை இந்திரா சீக்கியர்[/size][size=2]

களை கொன்று குவிக்கவில்லையா?, இந்துரா கொலைக்காக , காங்கிரசார் சீக்கியர்களை கொன்று குவிக்கவில்லையா? ராசீவ் தனது சுயநலத்திற்காக அப்பாவி ஈழமக்களை கொன்று குவிக்கவில்லையா? வேற்று மதத்தை எதிர்த்த வாஜ்பாயை நீங்கள் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்க வில்லையா?, பாபர் மசூதியை இடித்த அத்வானி உங்கள் துணை பிரதமர், எதிர்கட்சி தலைவர், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த வேட்ப்பாளர் இவரை எப்படி ஏற்று கொண்டீர்கள்? நரேந்திர மோடி முஸ்லீம்களை கூண்டோடு கொளுத்தவில்லையா?செயலலிதா மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவில்லையா?, அப்பாவி ஈழமக்களை சிங்களவன் கொன்று குவிக்கும் போது போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன செயலலிதாவை முதலமைச்சர் ஆக்கவில்லையா?, ஒரு லச்சத்துக்கு மேற்ப்பட்ட அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரி சோனியா இந்தியாவை ஆளவில்லையா?, பதவி, பண ஆசைக்காக தன் இனத்தையே காட்டி கொடுத்த துரோகி கருணாநிதியை மக்கள் இன்னும் நம்பவில்லையா?,

தேசிய ஒற்றுமைன்னு சொல்வாங்களே. அதுக்குள்ளும் வரல. இன ஒற்றுமைன்னு சொல்வாங்க. அதற்குள்ளும் இல்ல. மதப்பற்றுன்னு சொல்றதுக்குள்ளாகவும் இல்ல. மனம்போன போக்கில் சுற்றியலைந்த ஒரு பக்கா ரவுடியை மாதிரிதான் இவர்களும் நடந்தது கொண்டார்கள். அனால் இவர்களை விட கொஞ்சூண்டு ரவுடியாகத்தான் இவர் இருந்தார், அப்படியாயின் அந்த ரவுடிகளுக்கேல்லாம் தேசபிதா, தேசியக்கொடி என போற்றப்படும் போது இந்த ரவுடிக்கும் போற்றி பாராட்டினால் என்ன?, இன்று தமிழ்நாடு திராவிடத்தை ஏற்று கொண்டாதால் என் இனம் மாற்றானுக்கு விக்கப்பட்டு நான் அடிமையாக நிக்குறேன், தமிழ்நாட்டை ஆண்டவன் எல்லாம், பார்ப்பனன், மலையாளி, தெலுங்கன், கன்னடன் தான் , உண்மையான இனப்பற்றுள்ள தமிழன் ஆண்டிருந்தால் நான் என் தாய்நாட்டுக்காக போராடிக்கொண்டு இருக்கமாட்டேன், இந்திய சுதந்திரத்துக்கு பின்னரான பத்தாண்டுகளில் அதாவது 1960 களில் தன் இனத்தை முன்னுறுத்தி போராட தொடங்கிய மராட்டிய மாநிலம் தானே இன்றளவும் இந்தியாவின் வியாபார மாநிலம்!, அப்படியான மாநிலத்தில் தானே உலக பணக்காரர்கள் எல்லாம் இருக்குறார்கள்!, இந்திய சினீமா துறையில் ஆதிக்கம் செலுத்தும் இசுலாமியர்கள் இப்பவரை இங்குதானே இருக்குறார்கள்?, இவர்கள் எல்லாம் கொலைசெயயப்படவோ ? , இல்லை துரத்தப்படவோ இல்லையே இன்னும்! அப்படியாயின் இந்த ரவுடி நல்லவரா கெட்டவரா? , பிரித்தானியா உலகம் முழுதும் செய்ததைத்தான் கிட்லரும் செய்தான், பிரித்தானியாவின் தலைக்கு ஆப்பு வரும் போதுதான் கிட்லர் உலகிற்கு பயன்கரவாதியானான், ஆனால் அந்த மாவீரன் இறுதிவரை தான் கொண்ட கொள்கையில் விளகாதிருந்த்து வீர மரணம் அடைந்தான். நான் நினைப்பது போல என் தேசம், என் தாய்நாடு, என் இன மக்கள், நாமே நம்மை ஆளவேணும் என்று நினைப்பது போல அந்த ரவுடி தாக்கரே நினைத்ததில் எந்த தவறும் இல்லை. என் விடுதலை போராட்ட அமைப்பையும், என் இனவிடுதலையும் ஏற்றுகொண்ட ஒரே ஒரு காரணத்துக்காகவது என்றாலும் நான் இந்த ரவுடிக்கு வீரவணக்கம் சொல்ல கடமைப்பட்டிருக்குறேன். அவர் ரவுடியாக இருந்ததினால் தானோ என்னமோ இதனைலச்சம் பேர் இவரி ஆதரவாளர்களாக இருக்குறார்கள். ஒரு மாநிலத்தின் எந்த அரசியல் அதிகாரமும், எந்த அரசியல் வாதியின் ஆதரவும் இலாத ஒரு ரவுடிக்கு இந்திய அரசும், உலக பணக்காரர்களும் உலக புகழ் விளையாட்டு வீரர்களும்,சினீமா நட்ச்சத்திரங்கள் , இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் , ஏன் அரச மரியாதையும் வழங்குவது, பயத்தின் காரனாமாகவா? இல்லை வேறு எதற்க்காக?.

என் தமிழின விடுதலயா ஆதரிப்பது பேயாக இருப்பினும் நான் அதனுடன் கூட்டு வைக்க தயார்.

[/size]

Edited by யாழ்அன்பு

பால் தாக்கரே முதன்முதலில் எனக்கு அறிமுகமானது கையில் நுரை ததும்பும் பீர் கோப்பையுடன் குளிர் கண்ணாடி அணிந்த ஒரு புகைப்படத்தில். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில், மேடையில் அனாயசமாக பைப்பில் புகைபிடிப்பார். இந்தியாவின் நவீனக் கலாசார நுழைவாயிலான மும்பையில் இருப்பவர்களை பால் தாக்கரேவின் இந்தத் தோற்றம் ஈர்த்தது இயல்பானது.

Thackeray%20samas.jpg

தாக்கரேவின் ஆரம்ப கால நண்பர்கள் இளவயதில் இருந்தே அவர் நவீன அடையாளத்துடன் இருந்ததாகச் சொல்கிறார்கள்.ஆனால், மெட்ரோபாலிடன் கலாசாரத்துக்கு முன்மாதிரியாகச் சொல்லப்படும் மும்பை,வேற்று மாநிலத்தவர்களை ஓட ஓடத் துரத்தும் கலாசாரத்துக்கும் முன்மாதிரியானது தாக்கரேவால்தான்.

"இது சுதந்திர நாடு; நான் சுதந்திரமானவன்; யாருக்கு நான் பயப்பட வேண்டும்?"என்று கேட்பவர் தாக்கரே.பேச்சு - பாவனையில் மட்டும் அல்ல; அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் சுதந்திரத்தின் உச்சத்தை அவர் அனுபவித்தார்.அதேசமயம், அவருடைய சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான மக்களின் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது.

தென்னிந்தியாவில் இருந்து செல்லும் ரயில்களைச் "சுருக்கெழுத்தாளர்களின் ரயில்கள்" என்று அழைத்ததில் தொடங்கி, கடைசிக் காலத்தில் "ஒரு பீகாரி நூறு நோய்களுக்குச் சமம்" என்பது வரை அவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளும் உயிர்களை விலையாகக் கேட்டன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, "கரசேவையில் பங்கேற்றதற்காக கர்வம் கொள்கிறேன்" என்றார். மும்பையில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களின்போது அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன.எதையும் பெற மறுத்த போலீஸார் ஊடகங்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, வெறும் ஏழு புகார்களை மட்டும் பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தார்கள்.

பின்னாளில் பா.ஜ.க.- சிவசேனா ஆட்சிக்கு வந்தபோது அவையும் காணாமல் அடிக்கப்பட்டன.மும்பை கலவரங்களில் சிவசேனையின் கொலைக்கரங்களை ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அம்பலப்படுத்தியது. ஆனால், தாக்கரேவுக்கு எதிராக அரசால் கண்ணை அசைக்கக்கூட முடியவில்லை.

பல முறை அவருடைய சர்ச்சைக்குரிய எழுத்துகள்,பேச்சுகள் சார்ந்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனைகூட விதித்தது.ஆனால், மேல் முறையீடுகள்,அரசியல் தலையீடுகள் காரணமாக அனைத்திலிருந்தும் அவர் தப்பினார்.

பால் தாக்கரே மாதிரி வேறு யாராவது நடந்துகொண்டிருந்தால்,அவர் தன் வாழ்வின் பெரும் பகுதியைச் சிறையில் செலவிட வேண்டி இருந்திருக்கும்.ஆனால், சட்டத்தால் அவரை நெருங்கவே முடியவில்லை.1950-களில் அவருடைய அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்த ‘ஒன்றுபட்ட மகாராஷ்டிரம் இயக்கம்’ உச்சத்துக்குப் போனபோது, 105 பேர் உயிரிழந்தனர்.

அரசாங்கம் தாக்கரேவைக் கைது செய்து புனே எரவாடா சிறையில் அடைத்தபோது,மும்பை வீதிகள் தீப்பற்றி எரிந்தன.ஒருகட்டத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தாக்கரே கோரிக்கை விடும்படி அரசாங்கம் சிறையில் இருந்த தாக்கரேவிடம் கெஞ்சியது.அரசாங்கத்திடம் அன்றைக்கு ஏற்படுத்திய பயத்தை,தான் சாகும் வரை அப்படியே இருக்குமாறு பார்த்துக்கொண்டார் தாக்கரே.

அடிப்படையில் பால் தாக்கரே ஒரு தீவிரமான தேசியவாதி.ஆரம்ப நாட்களில் அவர் எந்த அளவுக்கு தேசியவாதியாக இருந்தாரோ,பின்னாளில் அதே அளவுக்கு இனவாதியாகவும் மாறினார்.ஒரு தேசியவாதியை இனவெறியை நோக்கித் தள்ளியது எது? இந்தக் கேள்விக்கான பதில்தான் பால் தாக்கரேவிடம் இருந்து இந்திய ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை.

பால் தாக்கரேவுக்கு ஹிட்லரை ரொம்பப் பிடிக்கும்."ஹிட்லரின் எல்லா நடவடிக்கைகளையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அவர் ஓர் அற்புதமான ஆளுமை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயுமே ஒரு ஹிட்லர் இருக்கிறார்.எனக்கும் ஹிட்லருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்" என்று சொல்வார் தாக்கரே.

உண்மைதான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஹிட்லர் மட்டும் இல்லை.இங்கே தாக்கரேவும்கூட இருக்கிறார்.தெலங்கானா,ஹரித்பிரதேசம்,பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், மிதிலாஞ்சல், போடோலாந்து, கூர்காலாந்து, கட்ச், விதர்பா என்று இன்றைக்கு இந்தியாவில் தனி மாநிலக் கோரிக்கைகளோடு நிற்கும் ஒவ்வொருவரின் அரசியலிலும் தாக்கரேவின் அரசியல் இருக்கிறது.

தமிழ்நாடு வரை ஊடுருவிவிட்ட மண்ணின் மைந்தன் அரசியலில் தாக்கரே இருக்கிறார்.அவர் வெற்றி பெற்று காட்டிய இனவாத அரசியல் சம கால இந்திய அரசியல் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உருவெடுத்து நிற்கிறது.மறுக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளில் இருந்தும் உணர்வுகளில் இருந்தும் தாக்கரேக்கள் உத்வேகம் பெறுகிறார்கள்.

பழக்கதோஷத்தின் காரணமாக, ‘இவருடைய மரணம் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது’ என்று பால் தாக்கரேவுக்கும் பலர் இரங்கல் உரை எழுதலாம். ஆனால், ஒரு பால் தாக்கரே ஓராயிரம் பால் தாக்கரேக்களை உருவாக்கிவிட்டுப் போய் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இந்தியாவின் பிரச்னையும் அதுதான்!

http://news.vikatan.com/?nid=11285#cmt241

மல்லை அண்ணா உங்கள் பெயர் பட்டியலுக்காக still waiting

[size=4]ஒவொரு திரியிலும் ஹகீமையும் பௌதினையும் திட்டோ திட்டு எண்டு திட்டிட்டு இருக்கிங்க அது ஏன்?[/size]

இதுக்கு என்னிடம் மன்னிப்பு கேடகவேண்டும்.

இந்த கதைகளை வர வர எல்லாம் வரும். களதிலை என்னுடைய திட்டுகிற உரிமை மட்டுப்படுத்த நினைக்கிறவர்களுக்கு கிடைக்கிற இடமெல்லாம கொடுக்கப்படும். 20 பேரிலை திறந்து நாங்கள் எழுத்துகிறவைகளை சேட்டை காட்ட முடியாது.

யாழை சந்த பணத்தை நோக்கி தொடந்து இனி தள்ளத்தான் இருக்கு.

தென்னிந்தியாவில் இருந்து செல்லும் ரயில்களைச் "சுருக்கெழுத்தாளர்களின் ரயில்கள்" என்று அழைத்ததில் தொடங்கி,

என்னோடு 2 வருடங்களுக்கு முன்னர் ஒரு மகாராஸ்டிர குஜராத்தியர் தொழில் செய்தார். அவர் இதை தமிழர்களுக்காகத்தான் அப்படி அழைப்பது என்று சொன்னார்(அதாவது சென்னையிலிருந்து வரும் ரயில்களைத்தான் தாம் அப்படி அழைப்பது என்று சொன்னர்). MMTCI இல் வேலை செய்வது எல்லாம் தமிழர்களும், மலையாளிகளும் என்றும் அதை மகாராஸ்டிராவில் தாம், மலையாளி, மதராசி ரேடிங்க் காப்பிரேசன் என்றும் அழைப்போம் என்று நகைசுவையாக சொன்னார்.

அதற்க்காக தாக்ரே பீகாருக்கு போய் தாக்குதல் செய்யவில்லை. குயராத் போய் தாக்குதல் செய்யவில்லை. தங்கள் மாநிலத்தை சுரண்டுபவர்களையே தாக்கினார். தேசிய தலைவருக்கும் கிட்லரை ரொம்ப பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். கிட்லரும் இஸ்ரேல் சென்று யூதரை அழிக்கவில்லை. ஐரோப்பாவின் அனைத்து இனங்களும் அனைத்து நாடுகளும் பிரித்தானியா,போர்த்துக்கல்,ஹோலந்த்,பிரான்ஸ்,இத்தாலி,இஸ்பானியா போன்ற முக்கிய நாடுகள் உலகம் பூராவும் ஆபிரிக்கா,ஆசியா, வட,தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி அங்குள்ள பூர்வீகக் குடிகளை அழித்து அவர்கள் ஆட்சிய ஆட்சி செய்தவர்களை அழித்து மதமாற்றம் இனமாற்றம் மொழிமாற்றம் செய்தது பெரும் கொள்ளைகளை அடித்தவர்கள். ஆனால் யேர்மனியர் மட்டுமே இந்த கீள்த்த்ரமான வேலைய செய்யவில்லை. கிட்லர் கூட தன் நாட்டை சுரண்டியவர்களையும் தன் நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தியவர்களையுமே அழித்து ஆதிக்கம் செலுத்தினார். கிட்லர் இல்லை என்றால் இப்போதைய ஜேர்மன் பக்கத்து நாட்டவரால் விழுங்கப் பட்டிருக்கும் மொழி அழிந்திருக்கும். அது போல பால்தாக்கரே இல்லை எண்டால் கிந்திய குயராத்திய பீகாரியரால் அந்த மாநிலம் அழிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இனத்தவனும் தங்கள் தங்கள் மொழி வாரி மாநிலத்தில் இருக்க வேண்டியதுதானே. தமிழ் நாட்டில தெலுங்கன் மலையாளி ஆதிக்கம் ஏன்? வந்தேருகளுக்கு என்ன வேலை அங்கு?

  • கருத்துக்கள உறவுகள்

சிவ சேனாவ மலையில இருந்து தள்ளியாச்சு இப்ப யாழ சந்தாவ நோக்கி தள்ள போறிங்க போங்க மல்லை அண்ணா கிச்சு கிச்சு மூட்டாதிங்க. ......

By the way பெயர்பட்டியல் plz

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.