Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1)

Published: Saturday, November 24, 2012, 14:39 [iST]

கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பத்மநாபா விவரித்திருக்கிறார்.

இலங்கையில் வெளியாகும் டெய்லி மிர்ரர் நாளேட்டுக்காக அதன் செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எடுத்த கேபியின் பேட்டி:

கேள்வி: பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் ஐநா உதவியுடனான யுத்த நிறுத்தத்துக்கு முயற்சியை மேற்கொண்டதாக கூறியிருந்தார். அந்த முயற்சியை புலிகளின் தலைவர் தடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான உருத்திரகுமாரனும் சொல்ஹெய்மின் கருத்தை மறுத்திருந்தார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

கேபி: எரிக் சொல்ஹெய்மின் கருத்து 100% உண்மையானது. அவர் மேற்கொண்ட முயற்சிகள் விடுதலைப் புலிகளின் தலைவரால் தடுக்கப்பட்டது. அப்படியான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல தளபதிகள் இன்று உயிரோடு இருந்திருக்க முடியும்.

கேள்வி: அப்படியெனில் ஏன் அப்படி ஒரு முயற்சியே நடைபெறவில்லை என்று ஏன் உருத்திரகுமாரன் சொல்ல வேண்டும்?

கேபி: உருத்திரகுமாரனைப் பொறுத்தவரையில் 2009- ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்ததை பற்றி பேசுகிறார். பிப்ரவரிக்கு பின்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.

கேள்வி: 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டீர்கள்.. நீங்களும் யுத்த நிறுத்தம் தொடர்பான முயற்சிகளில் பங்கெடுத்தவர்.. அப்போது என்ன நடந்தது என்பதை விவரிக்க முடியுமா?

கேபி: நிச்சயமாக... 2008-ம் ஆண்டிலேயே புலிகளின் கதை முடிவுக்கு வருகிறது என்பதை பார்வையாளர்கள் பலரும் ஊகித்திருந்தனர். புலிகளின் பதில் தாக்குலுக்கு அப்பாலும் இலங்கை ராணுவம் மெதுவாக ஆனால் முன்னேறிக் கொண்டிருந்தது. ஏ-9 நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏ-9 பாதையின் கிழக்குப் பகுதிக்கு ராணுவம் முன்னேறுவதற்கு முன்பாக ஒரு கெளரவமான யுத்த நிறுத்தத்துக்கு வாய்ப்பும் இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையும் அதன் வெளிநாட்டு அமைப்புகளும் அதைச் செய்யவிடவில்லை.

2003-ம் ஆண்டின் தொடக்கத்தில் இயக்கம் எனக்கு "ரிடையர்மெண்ட்" கொடுத்து விடுவித்துவிட்டது. நடைமுறையில் நான் விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டேன். ஆனால் தொலைவில் இருந்து கள நிலைமைகளை பார்த்து வந்தேன். 2008-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் என்னுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்க தலைமை தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. அப்போது புலிகளின் தலைவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க யுத்த நிறுத்தம் அவசியம் என்பதை நான் வலியுறுத்தினென். 2008-ம் ஆண்டு டிசம்பரில் பிரபாகரன் என்னை சர்வதேச பொறுப்பாளராக நியமிக்க ஒப்புக்கொண்டார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரவும் ஒப்புக் கொண்டார்.

2008-ம் ஆண்டு டிசம்பரில் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தாலும் யுத்த நிறுத்தத்தை நோக்கிய நகர்வுகள் புலிகள் தரப்பில் மிகவும் மெதுவாகவே இருந்தன. புத்தாண்டு பிறந்தபோது ராணுவமானது பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றை கைப்பற்றியிருந்தது.

அப்போதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கவலைகொண்டு அதன் வெளிநாட்டு பிரிவுகளை என் தலைமையின் கீழ் இயங்கவும் உத்தரவிட்டது. எனக்கு ஆதரவு தரவும் சொன்னது. ஆனால் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த காஸ்ட்ரோ, தமது பிரதிநிதி நெடியவன் மூலமாக எனது செயல்பாடுகளை சீர்குலைத்தார். போதுமான பண உதவி செய்யப்படவில்லை. இருந்தபோதும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தேன். சர்வதேச சமூகத்தின் முக்கிய நபர்களுடன் இந்த விவகாரத்துக்காக தொடர்பு கொண்டிருந்தேன்.

கேள்வி: எப்படி தொடர்பு கொண்டிருந்தீர்கள்? நேரடியாக தொடர்பு வைத்திருந்தீர்களா?

கேபி: நிறைய கடிதங்கள், ஃபேக்ஸ்கள், மின் அஞ்சல்கள் வழியாக தொடர்பு கொண்டிருந்தேன். யாரையெல்லாம் எப்படி தொடர்பு கொள்ள முடியுமோ அதை மேற்கொண்டேன். சிலரை நேரடியாகவும் தொடர்பு கொண்டேன். சில நேரங்களில் எனது பிரதிநிதிகள் சந்தித்தனர்.

கேள்வி: இதில் நார்வேயின் பங்கு என்ன?

கேபி: யுத்த நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நாடு நார்வே. நார்வே மட்டும் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள பணியை ஆற்றியிருக்காவிட்டால் போர் நீண்டு இன்னும் மிக மோசமாக இருந்திருக்கும். ஆகக் கூடுமானவரையில் உயிரிழப்புகளைத் தடுக்கவே நார்வே விரும்பியது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பினர்.

கேள்வி: அதற்காக நார்வே செய்தது என்ன?

கேபி: நார்வேயின் எரிக் சொல்ஹெய்ம் என்னுடன் தொடர்பில் இருந்தார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு சந்திப்பை நடத்த நாங்கள் முடிவு செய்தோம். 2009-ம் ஆண்டு பிப்ரவரி இறுதி வாரத்தில் இப்படியான ஒரு ரகசிய சந்திப்பு நடைபெற்றது.

கேள்வி: அந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது?

கேபி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஹில்டன் ஹோட்டைல் நடைபெற்றது. 2 நாட்கள் அந்த கூட்டம் நடந்தது.

கேள்வி: யார் யார் கலந்து கொண்டனர்? எரிக் சொல்ஹெய்ம் கலந்து கொண்டாரா?

கேபி: இல்லை... நார்வே அமைச்சராக அவர் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. நார்வேயின் முக்கிய அதிகாரி, அவரது பிரதிநிதியாக வந்தார். மேலும் இரு நார்வே அதிகாரிகள் ஆஸ்லோவில் இருந்து வந்திருந்தார். இலங்கைக்கான நார்வே தூதரும் கலந்து கொண்டார்.

கேள்வி: யார் அவர்?

கேபி: கொழும்பில் அப்போது நார்வே தூதராக இருந்த ஹட்ரெம். இப்பொழுது அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார் என நினைக்கிறேன்.

கேள்வி: விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக யார் கலந்து கொண்டது?

கேபி: நான், என்னுடைய செயலாளர் "அப்பு", ஜோய் மகேஸ்வரன், உருத்திரகுமாரன். இவர்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த சில விடுதலைப் புலி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். அவர்களது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் இருவரும் நார்வே முன்னெடுத்த முந்தைய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டவர்கள்.

கேள்வி: அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

கேபி: யுத்த நிறுத்தம் பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் தெரிவித்தேன். பொதுமக்களின் நிலைமையை கண்ணீர்மல்க எடுத்துக் கூறி அவர்களைக் காப்பாற்ற எப்படியாவது யுத்த நிறுத்தம் அவசியம் என்று நார்வேயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

கேள்வி: அதற்கு என்ன பதில் கிடைத்தது?

கேபி: அது மிகவும் எதிர்பாராதது.... நார்வே தூதர் ஹட்ரம் வெளிப்படையாக கடுமையான குரலில் ஆனால் உண்மைகளை விவரித்தார்.

கேள்வி: அவர் சொன்னது என்ன?

கேபி: யுத்த களத்தின் உண்மை நிலவரத்தை எங்களிடம் விவரித்தார். இலங்கை ராணுவத்தின் கைதான் ஓங்கி இருக்கிறது என்பதை விளக்கினார். சாளையில் 55-வது டிவிசன், விசுவமடுவில் 57 வது டிவிசன், தேவிபுரத்தில் 58-வது டிவிசன், முல்லைத்தீவு நகரில் 59-வது டிவிசன் நிலை கொண்டிருக்கிறது. சிறப்பு படை-2 உடையார்கட்டிலும் சிறப்பு படையணி 3 அம்பகாமமிலும் சிறப்பு படை 4 ஒட்டுசுட்டானிலும் நிற்கிறது என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு சிறிய நிலப்பரப்பில் அட்டை பெட்டி வடிவத்தில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறினார். புலிகளை அழிக்க சிறிது காலம்தான் ராணுவத்துக்கு தேவை. அதனால் இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்தம் என்பது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளைத் தோற்கடித்துவிடுவது உறுதி என்றார் அவர்.

மேலும் பொதுமக்களுக்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு. பொதுமக்களை மனித கேடயங்களாக கட்டாயப்படுத்தி புலிகள் வைத்திருக்கின்றனர். நீங்கள் சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் சிலவற்றைப் பெற முடியும் என்றும் கூறினார்.

கேள்வி: அது என்ன ஆயுத ஒப்படைப்பா?

கேபி: ஆம். சரியானதே.. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை சரணடைய ஒப்புக் கொண்டால் நார்வேயும் இதர நாடுகளும் யுத்த நிறுத்தம் குறித்து இலங்கையை கேட்டுக் கொள்ளும் என்றார். விடுதலைப் புலிகளுக்கு இனி வாய்ப்பு என்பதே இல்லை.. நிச்சயமாக இலங்கை ராணுவம் வெற்றி பெறத்தான் போகிறது என்றார். ஆகையால் உயிரிழப்பைக் குறைக்க விரும்பினால் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். அப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட உண்மையாக ஒப்புக் கொண்டால் அமெரிக்கா, இந்தியா, நார்வே போன்ற நாடுகள் யுத்த நிறுத்தத்துக்கு இலங்கையை வலியுறுத்தும் என்றும் கூறினார். அப்படி விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ளவில்லையெனில் யுத்தம் சிறிது காலத்தில் முடிந்துவிடும். அத்துடன் விடுதலைப் புலிகளின் கதையும் முடிந்துவிடும் என்றார்.

இதையடுத்து நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தொடர்பு கொண்டு பதில் கேட்கிறோம் என்றோம். இதுதான் அந்த சந்திப்பில் நடந்தது என்று கேபி கூறியுள்ளார்.

2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு என்ன நடந்தது? நார்வே எடுத்த முன் முயற்சி என்ன? பிரபாகரன் நிராகரிக்க காரணம் என்ன?

-அடுத்த பகுதியில்...

http://tamil.oneindi...-kp-165151.html

Edited by நிழலி
பந்திகளுக்கிடையில் இடைவெளி விடவும் bold பண்ணவும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ....கதை.....வசனம் ...எல்லாமே சுப்பர்.....சங்கரிடம் கொடுத்தால் எந்திரன் மாதிரி வரும்.....புலம் பெயர் தமிழர்கள்....உதவுங்களேன்....வாற 27 திகதிக்குள் வெளியிடலாம்...இவங்களெல்லாம் ஒரு ஒரு மனிதர் என்று கதைக்கிறாங்கள்....இதை நாம் தூக்கி திரியிறம்....

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]2009 பிப்ரவரியில் நார்வே முன்னெடுத்த அமைதி முயற்சிக்கு பிறகு என்ன நடந்தது?: கேபி பேட்டி (பகுதி 2)[/size]

24-sri-lanka-war-zone-300.jpg

[size=3][size=4]கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது நார்வே முன்னெடுத்த முயற்சிகளைப் பற்றி மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் கேபி விவரிக்கும் பேட்டியின் 2-வது பகுதி:[/size][/size]

[size=3][size=4]புலிகளை காப்பாற்றும் திட்டம் -1[/size][/size]

[size=3][size=4]கேள்வி: நார்வே அதிகாரிகளுடனான 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சந்திப்பு சாதகமாக இருக்கவில்லை. 2010-ம் ஆண்டு என்னிடம் நீங்கள் பேசும்போது, பிரபாகரனுக்கு 16 பக்க யுத்த நிறுத்த யோசனை பற்றி அனுப்பியதாகவும் அதனை 3 வார்த்தைகளில் அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறினீர்கள். 2009-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு என்ன நடந்தது?[/size][/size]

[size=3][size=4]பதில்: நார்வேயின் யோசனையை பிரபாகரன் நிராகரித்த பின்னரும்கூட என்னுடைய முயற்சிகளை நிறுத்தவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டே இருந்தது. இதனால் நார்வே தரப்புடனும் சர்வதேச தலைவர்களுடனும் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.[/size][/size]

[size=3][size=4]இது வாழ்வா? சாவா? என்ற விவகாரம்... எப்படியாவது யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும்.. இயக்கத்தை அதன் தலைமையை காப்பாற்ற வேண்டும் என்று கருதினேன். ஐ.நா.வின் உயர் அதிகாரிகள், தூதர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலதரப்போடும் போராடிப் பார்த்தேன். சிலரை நேரில் கூட சந்தித்தேன்.[/size][/size]

[size=3][size=4]மார்ச் மாத பிற்பகுதியில் சர்வதேச அனுசரனையுடன் ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்ற திட்டத்தை உருவாக்கினேன். ஆயுதங்களை "மெளனிக்க" செய்தல் அது தேவைப்பட்டால் 25 முதல் 50 புலிகளின் முக்கிய தளபதிகள் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவும், நடுத்தர போராளிகள் தடுத்து வைக்கப்பட்ட அவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்குதல், இளநிலைப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்தல் என்பதுதான் அத்திட்டம்.[/size][/size]

[size=3][size=4]விடுதலைப் புலி தலைவர்களின் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுக்க 3 நாடுகளுடன் பேசியிருந்தேன். இதில் ஆசிய நாடு ஒன்றும் அடக்கம். மற்றவை ஆப்பிரிக்க நாடுகள்.[/size][/size]

[size=3][size=4]இந்தத் திட்டம் நார்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் போர்க் கப்பலை அனுப்பவும் அமெரிக்காவும் தயாராக இருந்தது.[/size][/size]

[size=3][size=4]இந்தத் திட்டம் பற்றி தெரிவித்து இதற்கான ஒப்புதலை தெரிவிக்கக் கோரி மார்ச் மாத இறுதியில் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பினேன். அவர் செய்யலாம் என்று சொல்லியிருந்தால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக 16 பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஃபேக்ஸ் மூலம் அனுப்பியும் வைத்தேன்.[/size][/size]

[size=3][size=4]16 பக்கத்துக்கு நான் அனுப்பி இருந்ததை "இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மூன்று வார்த்தைகளில் சொல்லிவிட்டார். அதனால் இந்தத் திட்டத்தையே நான் கைவிட்டேன்.[/size][/size]

[size=3][size=4]கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவரை எப்படி தொடர்பு கொண்டீர்கள் நீங்கள்?[/size][/size]

[size=3][size=4]கேபி: சாட்டிலைட் தொலைபேசிகளை பயன்படுத்தினோம். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலு (குமாரவேல்) என்பவர் மூலமாக தொடர்பு கொண்டோம். அவர்தான் எனது தகவல்களை தலைவருக்கு தெரியப்படுத்தி அவரிடம் இருந்து பதில் பெற்றுத் தருவார்.[/size][/size]

[size=3][size=4]அதன் பின்னர் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், கடற்புலி பொறுப்பாளர் சூசை ஆகியோரும் தலைவருக்கும் எனக்குமான தொடர்பாளர்களாக இருந்தனர்.[/size][/size]

[size=3][size=4]கேள்வி: ஐ.நா.வின் தலையீடு என்பது எந்தளவு இருந்தது?[/size][/size]

[size=3][size=4]கேபி: நார்வேதான் ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட்டது.என்னைப் பொறுத்தவரை ஐ.நா. அதிகாரிகளான ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார், தம்ர சாமுவேல் ஆகியோருடன் தொடர்பில் இருந்தேன்.[/size][/size]

[size=3][size=4]பிரபாகரன் நிராகரித்தது ஏன்?[/size][/size]

[size=3][size=4]கேள்வி: உங்களது திட்டத்தை பிரபாகரன் நிராகரிக்கக் காரணம் என்ன? உண்மையான களநிலவரம் அவருக்கு தெரியவில்லையா? என்ன நினைக்கிறீர்கள்?[/size][/size]

[size=3][size=4]கேபி: அவர் கேணல் தீபன் தலைமையில் ஒரு பதிலடித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனந்தபுரம் பகுதியில் இதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரபாகரனைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய ராணுவ ரீதியான வெற்றியைப் பெற முடியும் என்று நம்பியிருந்திருக்கிறார். இதன் மூலமாக நிலைமையை தலைகீழாக்க முடியும்... ராணுவத்தை சீர்குலைய வைக்க முடியும் என்று நம்பியிருக்கிறார்.[/size][/size]

[size=3][size=4]ராணுவம் முதலில் ஆனந்தபுரத்தில் தாக்குதல் நடத்தியது. புலிகளை அட்டைப் பெட்டி வடிவில் சுற்றி வளைத்தது. இதில் தீபன் உள்ளிட்ட ஏராளமான புலிகளின் தளபதிகள் உயிரிழந்தனர். அதன் பின்னர் நிலைமை வேறானது.[/size][/size]

[size=3][size=4]புலிகளை காப்பாற்றும் திட்டம் -2[/size][/size]

[size=3][size=4]கேள்வி: பிரபாகரன் நிராகரித்த பிறகு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?[/size][/size]

[size=3][size=4]கேபி: அந்த முயற்சிகளைத்தான் பிபிசி ஊடகத்திடம் எரிக்சொல்ஹெய்ம் விவரித்தது.... அதாவது தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிப்பது. அதன் பின்னர் ஐ.நா. அதிகாரிகள், பிரதிநிதிகள் (இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே) மற்றும் இந்திய பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் வடபகுதிக்கு கப்பலில் செல்வது.[/size][/size]

[size=3][size=4]யுத்த முனையில் இருக்கும் புலிகள் மற்றும் பொதுமக்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்வது.. அதன் பின்னர் இலங்கையின் பாதுகாப்பில் அனைவரையும் முகாம்களுக்கு அனுப்புவது என்பதுதான் எரிக்சொல்ஹெய்ம் சொல்லும் திட்டம்.[/size][/size]

[size=3][size=4]அதேபோல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மெளனிக்க செய்துவிட்டு ஐநாவிடம் அவற்றை ஒப்படைப்பது. மார்ச் மாதம் என்ன திட்டமிடப்பட்டதோ அதன்படி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து அவர்களை கண்காணிப்பது. நடுநிலையான போராளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையும், மற்றோருக்கு பொதுமன்னிப்பும் கொடுத்தல் என்பதும் அத்திட்டம்.[/size][/size]

[size=3][size=4]கேள்வி: இதில் பிரபாகரன்., பொட்டு அம்மான் சேர்க்கப்படவில்லையா?[/size][/size]

[size=3][size=4]கேபி: அவர்களும்தான் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவோர் பட்டியலில் இருந்தனர். அதை அவர்கள் ஏற்கவில்லை.[/size][/size]

[size=3][size=4]கேள்வி: எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரி சொல்கிறாரே..[/size][/size]

[size=3][size=4]கேபி: எனக்கும் தெரியும். எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரியாக சொல்கிறார் என்பது.. அந்தத் திட்டத்தின்படி பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.[/size][/size]

[size=3][size=4]கேள்வி: ஒருவேளை ராஜிவ் கொலை விவகாரத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று இந்தியா கேட்டுக் கொண்டதா?[/size][/size]

[size=3][size=4]பதில்: உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.. எனக்கே சொல்ஹெய்ம் சொல்வது புதிராக இருக்கிறது.[/size][/size]

[size=3][size=4]ஆனால் இந்தத் திட்டம் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஏனெனில் அவர் இது விஷயமாக வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.[/size][/size]

[size=3][size=4]நார்வே முன்னெடுத்த முயற்சிகளுக்கு பிரபாகரன் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் நான் வன்னிப் பகுதிக்கு நேரடியாக சென்று தலைவரை சந்தித்து பேசியிருப்பேன்.. என்றார் கேபி.[/size][/size]

[size=3][size=4]யுத்த நிறுத்த முயற்சிகளை பிரபாகரன் நிராகரித்தன் பின்னணியில் இருந்த தமிழக தலைவர்கள் யார்? பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? என்பவற்றை அடுத்த செய்திகள்ல் பார்க்கலாம்..[/size][/size]

[size=3][size=4]http://tamil.oneindi...-kp-165156.html[/size][/size]

Edited by நிழலி
பந்திகளுக்கிடையில் இடைவெளி விட

இந்தக் கேள்விகள் வரும் காலம், பேட்டிக்கான நோக்கத்தை சந்தேகிக்க வைக்கின்றது.

[size=1]

[size=4]இப்படியான எழுத்துக்கள், பேட்டிகள், சிறப்பு ஆக்கங்கள் ஏன் கொலைகள் கூட தயார் நிலையில் வைக்கப்பட்டு இந்த மாவீரர் வாரத்தை அணுகிய நாட்களில் எதிரியால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருவதை காண்கிறோம். ஆனால் இந்த முறை தாயகத்தில் கூட இந்த மறவர்களின் தியாகத்தை மக்கள் மனைகளில் மட்டுமல்லாமல் வீதிக்கும் கொண்டுவரும் அளவிற்கு துணிந்து நிற்பதை பார்க்கின்றோம். புலத்திலும் பலவேறு குழப்ப சதி முயற்சிகள் மத்தியிலும் ஒப்பீட்டளவில் ஒற்றுமையாக நிற்கிறோம். [/size][/size]

[size=1]

[size=4]அடிமையாக்கி எம்மை வெல்ல முடியாது என்பதே எதிரிக்கு அன்றும் இன்றும் நாளையும் எமது மக்கள் சொல்லும் செய்தி. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இவரது கதைப்படி

இதில் 3 பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்

அதில் தலைவரைவிட்டால் இவரும் சொல்கைமும்

இவர்கள் இருவருமே முரண்படுகின்றார்கள்

அப்படியென்றால் கதை................??? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒன்றும் புதிதாகக் கே.பி. எதுவும் சொல்லவில்லை. ஜெயசிக்குறு காலத்தில் ஒட்டிசுட்டான் வரை வந்த இராணுவத்தை விரட்டியது போன்று விரட்டமுடியும் என்று நம்பியது சறுக்கியபோது எல்லாமே கடந்துபோய் இருந்தது. எனவே அழிவைத் தவிர எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. "300 வீரர்கள்" படத்தில் வந்ததுபோல முடிந்துவிட்டது.

இதில் ஒன்றும் புதிதாகக் கே.பி. எதுவும் சொல்லவில்லை. ஜெயசிக்குறு காலத்தில் ஒட்டிசுட்டான் வரை வந்த இராணுவத்தை விரட்டியது போன்று விரட்டமுடியும் என்று நம்பியது சறுக்கியபோது எல்லாமே கடந்துபோய் இருந்தது. எனவே அழிவைத் தவிர எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. "300 வீரர்கள்" படத்தில் வந்ததுபோல முடிந்துவிட்டது.

[size=1]

[size=4]மாவிலாறில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்த சமர்களில் பல நாட்டு நிபுணர்கள் நேரடியாகவே பங்கு கொண்டனர். இராசாயன ஆயுங்கள் உட்பட சகல தளபாடங்களையும் வழங்கினர். [/size][/size][size=1]

[size=4] [/size][/size][size=1]

[size=4]"ஸ்டாலின்கிராட்" படம் மாதிரி நிலைமைகள் ஆனந்தபுரத்தில் மாறி இருக்கும், உண்மையில் சிங்களம் மட்டுமே யுத்தத்தில் ஈடுபட்டு இருந்திருந்தால். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒன்றும் புதிதாகக் கே.பி. எதுவும் சொல்லவில்லை. ஜெயசிக்குறு காலத்தில் ஒட்டிசுட்டான் வரை வந்த இராணுவத்தை விரட்டியது போன்று விரட்டமுடியும் என்று நம்பியது சறுக்கியபோது எல்லாமே கடந்துபோய் இருந்தது. எனவே அழிவைத் தவிர எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. "300 வீரர்கள்" படத்தில் வந்ததுபோல முடிந்துவிட்டது.

உங்களது கருத்து சரி என்று வைத்துக்கொள்வோம்

அந்தநிலையில் இவரால் இவற்றை தடுத்து நிறுத்தியிருக்கமுடியும் என்பது எவ்வளது தூரம் உண்மை??????? :(

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது கருத்து சரி என்று வைத்துக்கொள்வோம்

அந்தநிலையில் இவரால் இவற்றை தடுத்து நிறுத்தியிருக்கமுடியும் என்பது எவ்வளது தூரம் உண்மை??????? :(

அவரால் தான் நம்பிச் செயற்பட்டதைச் சொல்லியிருக்கின்றார். ஆனால் திட்டங்கள் எப்போதோ போடப்பட்டு சரியாக நிறைவேற்றப்பட்டது.

சிலவேளைகளில் பொதுமக்களினதும், போராளிகளினதும் இறப்புக்களைக் குறைத்திருக்கலாம். ஆனால் புலிகளின் அழிவை யாராலும் தடுத்திருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏற்கனவே கேட்ட சி.டி

[size=4]

இது ஏற்கனவே கேட்ட சி.டி

[/size]

[size=4]அடுத்த கார்த்திகை மாதத்தில் கொஞ்சம் மாறி மீண்டும் வரலாம் :mellow:[/size]

அவரால் தான் நம்பிச் செயற்பட்டதைச் சொல்லியிருக்கின்றார். ஆனால் திட்டங்கள் எப்போதோ போடப்பட்டு சரியாக நிறைவேற்றப்பட்டது.

சிலவேளைகளில் பொதுமக்களினதும், போராளிகளினதும் இறப்புக்களைக் குறைத்திருக்கலாம். ஆனால் புலிகளின் அழிவை யாராலும் தடுத்திருக்கமுடியாது.

[size=1]

[size=4]புலிகளின் அழிவை யார் விரும்பினார்கள்? இந்தியா??[/size][/size][size=1]

[size=4]சிங்களம் அந்த இந்திய அரசியல் முட்டாள்தனத்தை பாவித்து மக்களை அழித்தது. இதில் 'இழப்புக்களை' குறைத்திருக்கலாம் என்பது ஒரு பிழையான கணக்கு. ஆதாரம் - ஐ.நா. உள்ளக அறிக்கை.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]புலிகளின் அழிவை யார் விரும்பினார்கள்? இந்தியா??[/size][/size]

[size=1][size=4]சிங்களம் அந்த இந்திய அரசியல் முட்டாள்தனத்தை பாவித்து மக்களை அழித்தது. இதில் 'இழப்புக்களை' குறைத்திருக்கலாம் என்பது ஒரு பிழையான கணக்கு. ஆதாரம் - ஐ.நா. உள்ளக அறிக்கை.[/size][/size]

புலிகளுக்கு வன்முறைப் போராட்டத்தை விட்டு விலக சர்வதேசம் (அமெரிக்க ஒப்புதலுடன்) கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம்தான் 2002 இல் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை. வன்முறைப் பாதை தொடர்ந்ததால்தான் அழிவு வந்தது.

2009 ஏப்ரல் - மே மாதங்களில் கொல்லப்பட்டவர்கள் தொகை மிக அதிகம். அவற்றைக் குறைத்திருக்கலாம். மக்களின் அவலங்களைத் தடுத்திருக்கலாம். இப்படி பல "லாம்" களைப் போடலாம். ஆனால் பழங்கதைகளில் இருந்து படிப்பினைகளை எடுக்காமல் இப்போதும் பழைய பெருமைகளைப் பேசுவதிலேயே நேரம் வீணடிக்கப்படுகின்றது.

புலிகளுக்கு வன்முறைப் போராட்டத்தை விட்டு விலக சர்வதேசம் (அமெரிக்க ஒப்புதலுடன்) கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம்தான் 2002 இல் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை. வன்முறைப் பாதை தொடர்ந்ததால்தான் அழிவு வந்தது.

[size=4]அவர்களின் இலட்சியம் போரால் முழு சிங்களத்தையும் அழிப்பது அல்ல, ஒரு நியாயமான அரசியல் தீர்வே. அதை முதல் புரிந்து உங்கள் விவாதத்தை முன்னெடுங்கள். [/size]

2009 ஏப்ரல் - மே மாதங்களில் கொல்லப்பட்டவர்கள் தொகை மிக அதிகம். அவற்றைக் குறைத்திருக்கலாம். மக்களின் அவலங்களைத் தடுத்திருக்கலாம். இப்படி பல "லாம்" களைப் போடலாம். ஆனால் பழங்கதைகளில் இருந்து படிப்பினைகளை எடுக்காமல் இப்போதும் பழைய பெருமைகளைப் பேசுவதிலேயே நேரம் வீணடிக்கப்படுகின்றது.

[size=4]இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி[/size]

[size=1]http://www.youtube.com/watch?v=uxYuDRLpOhE[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அவர்களின் இலட்சியம் போரால் முழு சிங்களத்தையும் அழிப்பது அல்ல, ஒரு நியாயமான அரசியல் தீர்வே. அதை முதல் புரிந்து உங்கள் விவாதத்தை முன்னெடுங்கள். [/size]

இது தெரியாமலா இவ்வளவு காலமும் அரசியல் கதைக்கின்றேன் :lol:

ஒரு நியாயமான அரசியல் தீர்வை அடைவதற்கு முயன்றதை விட சிங்களவர்கள் ஒரு தீர்வையும் தரமாட்டார்கள் என்று உலகுக்குக் காட்ட முயன்றதில்தான் சக்தி விரயமாக்கப்பட்டது. அதன் மூலம் தமிழீழம் மட்டுமே தீர்வு என்பதை உலகுக்குப் புரிய முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் பலம் பொருந்திய சர்வதேச நாடுகள் post-2001 க்குப் பின்னர் வன்முறைப் போராட்டத்தை அதிகம் விரும்பவில்லை.

தற்போது தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் வன்முறையற்ற அரசியல்தான் செய்யப்படுகின்றது. இதையெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே வலுவாகச் செய்திருந்தால் நிறையத்தூரம் முன்னேறியிருக்கலாம். எனினும் பலத்த பின்னடைவின் பின்னர்தான் சுடலை ஞானம் உதித்ததால் இப்போது தொடங்கியிருக்கின்றோம். ஆனாலும் அதனை வெகுமக்களுக்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாததால்தான் தற்போதும் தமிழீழப் போராட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

[size=4][size=3][size=4]கேள்வி: இதில் பிரபாகரன்., பொட்டு அம்மான் சேர்க்கப்படவில்லையா?[/size][/size][/size]

[size=4][size=3][size=4]கேபி: அவர்களும்தான் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவோர் பட்டியலில் இருந்தனர். அதை அவர்கள் ஏற்கவில்லை.[/size][/size][/size]

[size=4][size=3][size=4]கேள்வி: எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரி சொல்கிறாரே..[/size][/size][/size]

[size=4][size=3][size=4]கேபி: எனக்கும் தெரியும். எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரியாக சொல்கிறார் என்பது.. அந்தத் திட்டத்தின்படி பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.[/size][/size][/size]

[size=4][size=3][size=4]கேள்வி: ஒருவேளை ராஜிவ் கொலை விவகாரத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று இந்தியா கேட்டுக் கொண்டதா?[/size][/size][/size]

[size=4][size=3][size=4]பதில்: உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.. எனக்கே சொல்ஹெய்ம் சொல்வது புதிராக இருக்கிற[/size][/size][/size]

இந்த டைம் நல்ல மது போதையில் இருந்ததால் எனக்கு நடந்தவை மறந்து போச்சு என்று சொல்லி இருக்கலாம்

[size=4]2003-ம் ஆண்டின் தொடக்கத்தில் இயக்கம் எனக்கு "ரிடையர்மெண்ட்" கொடுத்து விடுவித்துவிட்டது. நடைமுறையில் நான் விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டேன். ஆனால் தொலைவில் இருந்து கள நிலைமைகளை பார்த்து வந்தேன். 2008-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் என்னுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்க தலைமை தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. அப்போது புலிகளின் தலைவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க யுத்த நிறுத்தம் அவசியம் என்பதை நான் வலியுறுத்தினென். 2008-ம் ஆண்டு டிசம்பரில் பிரபாகரன் என்னை சர்வதேச பொறுப்பாளராக நியமிக்க ஒப்புக்கொண்டார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரவும் ஒப்புக் கொண்டார்.[/size]

தன்னை இடை நிறுத்திய உண்மைய ஒத்துக் கொண்டதற்கு நன்றி

இது தெரியாமலா இவ்வளவு காலமும் அரசியல் கதைக்கின்றேன் :lol:

[size=4]ஆம் என்று தான் எழுத்துக்கள் மூலம் உணரக்கூடியதாக உள்ளது. [/size]

தற்போது தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் வன்முறையற்ற அரசியல்தான் செய்யப்படுகின்றது. இதையெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே வலுவாகச் செய்திருந்தால் நிறையத்தூரம் முன்னேறியிருக்கலாம். எனினும் பலத்த பின்னடைவின் பின்னர்தான் சுடலை ஞானம் உதித்ததால் இப்போது தொடங்கியிருக்கின்றோம். ஆனாலும் அதனை வெகுமக்களுக்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாததால்தான் தற்போதும் தமிழீழப் போராட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

[size=4]உங்களுக்கு பிடித்த சரித்திரத்தை வைத்து தந்தை செல்வா உட்பட்ட அகிம்சை போராட்டத்தை மறக்கும் இல்லை மறைக்கும் கருத்து. [/size]

வெளிநாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட முக்கிய புலி பிரமுகர் அடிக்கடி ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்குமளவுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளதை வைத்து , சிறிலங்கா அரசைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவரை தேடி பிரணாப் முகர்ஜி போனாதாக 2007 இல் ஒரு செய்தி வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆம் என்று தான் எழுத்துக்கள் மூலம் உணரக்கூடியதாக உள்ளது. [/size]

அது உங்கள் கொள்ளளவுப் பிரச்சினை :wub:

[size=4]உங்களுக்கு பிடித்த சரித்திரத்தை வைத்து தந்தை செல்வா உட்பட்ட அகிம்சை போராட்டத்தை மறக்கும் இல்லை மறைக்கும் கருத்து. [/size]

எனக்குப் பிடித்த சரித்திரம் என்னை உங்களுக்கு தெரிவது விந்தைதான்.

தமிழர்களுக்கு நீதியான தீர்வு வேண்டும் என்று அகிம்சையில் ஆரம்பித்து அது சரிவராது என்று வன்முறையில் இறங்கி, அதிகமான விலைகளைக் கொடுத்து மீண்டும் அகிம்சைப் பாதைக்கு ஒரு வட்டம் அடித்துத் திரும்பியுள்ளோம். இதையெல்லாம் மறைக்கவேண்டியதில்லை. இவற்றில் இருந்து பாடங்களைக் கற்று தெளிவான பாதையில் சரியாக முன்னேறவேண்டும்.

ஆனால் தாங்கள் சாதாரண மக்கள் எதை அறியவேண்டும், எதை அறியக்கூடாது என்று மக்களின் சிந்தனைவெளிகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மிகவும் பொறுமையாகச் செயற்படுகின்றீர்கள். ஆனால் நானோ எல்லோரும் எல்லாவற்றையும் அறியவேண்டும் என்று விரும்புபவன். எனவே உங்கள் பாதையில் குறுக்கிடும்போது பொறுமையை இழக்காதீர்கள் :icon_mrgreen:

எனக்குப் பிடித்த சரித்திரம் என்னை உங்களுக்கு தெரிவது விந்தைதான்.

தமிழர்களுக்கு நீதியான தீர்வு வேண்டும் என்று அகிம்சையில் ஆரம்பித்து அது சரிவராது என்று வன்முறையில் இறங்கி, அதிகமான விலைகளைக் கொடுத்து மீண்டும் அகிம்சைப் பாதைக்கு ஒரு வட்டம் அடித்துத் திரும்பியுள்ளோம். இதையெல்லாம் மறைக்கவேண்டியதில்லை. இவற்றில் இருந்து பாடங்களைக் கற்று தெளிவான பாதையில் சரியாக முன்னேறவேண்டும்.

[size=4]மீண்டும் பூச்சியத்தில் இருந்து தான் ஆரம்பிக்கவேண்டும் வேண்டும் என கூறுகிறீர்கள். [/size][size=1]

[size=4]ஒரு நடைமுறை சாத்தியமில்லாத அறிவாளிகள் போன்ற நுக்மானை மேற்கோள் காட்டி எழுதும் கருத்துக்கள். [/size][/size]

ஆனால் தாங்கள் சாதாரண மக்கள் எதை அறியவேண்டும், எதை அறியக்கூடாது என்று மக்களின் சிந்தனைவெளிகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மிகவும் பொறுமையாகச் செயற்படுகின்றீர்கள். ஆனால் நானோ எல்லோரும் எல்லாவற்றையும் அறியவேண்டும் என்று விரும்புபவன். எனவே உங்கள் பாதையில் குறுக்கிடும்போது பொறுமையை இழக்காதீர்கள் :icon_mrgreen:

[size=4]நாங்கள் என்ன அசாதாரண மக்களுக்காகவா எழுதுகின்றோம்? :icon_idea:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மீண்டும் பூச்சியத்தில் இருந்து தான் ஆரம்பிக்கவேண்டும் வேண்டும் என கூறுகிறீர்கள். [/size]

[size=1][size=4]ஒரு நடைமுறை சாத்தியமில்லாத அறிவாளிகள் போன்ற நுக்மானை மேற்கோள் காட்டி எழுதும் கருத்துக்கள். [/size][/size]

தமிழர்களின் அரசியலில் மிகவும் பலவீனமாக இருக்கும்போது, எதுவித தூர நோக்கமும் இல்லாத அரசியல் ஒரு பலனையும் தராது.

தற்போது வந்துள்ள ஐ.நா. அறிக்கைகூட சிங்கள அரசின் செயற்பாடுகளையும், புலிகளின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளது. இப்படியான புறவயமான நிகழ்வுகளில்தான் தமிழர்களின் reactive ஆன அரசியல் செயற்பாடுகளும், பிரச்சாரங்களும் அதிகம் தங்கியுள்ளது அரசியல் வங்குரோத்தைதான் வெளிச்சம்போட்டுக் காண்பிக்கின்றது.

எனவே எதுவித திட்டமிடலும், தூரநோக்கும் இல்லாமல் நடக்கும் அரசியல் செயற்பாடுகளில் எப்போதும் விமர்சனம் இருக்கும்.

தமிழர்களின் அரசியலில் மிகவும் பலவீனமாக இருக்கும்போது, எதுவித தூர நோக்கமும் இல்லாத அரசியல் ஒரு பலனையும் தராது.

தற்போது வந்துள்ள ஐ.நா. அறிக்கைகூட சிங்கள அரசின் செயற்பாடுகளையும், புலிகளின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளது. இப்படியான புறவயமான நிகழ்வுகளில்தான் தமிழர்களின் reactive ஆன அரசியல் செயற்பாடுகளும், பிரச்சாரங்களும் அதிகம் தங்கியுள்ளது அரசியல் வங்குரோத்தைதான் வெளிச்சம்போட்டுக் காண்பிக்கின்றது.

எனவே எதுவித திட்டமிடலும், தூரநோக்கும் இல்லாமல் நடக்கும் அரசியல் செயற்பாடுகளில் எப்போதும் விமர்சனம் இருக்கும்.

[size=1]

[size=4]#1 புலிகளை அவர்கள் விமர்சிப்பது தமது அறிக்கை சமநிலை இருக்கவேண்டும் என்பதற்காக. [/size][/size][size=1]

[size=4]#2 தூர நோக்கு இல்லை கிட்ட நோக்கு என்று ஒன்றே ஒன்றுதான் உள்ளது - நியாயமான அரசியல் தீர்வு. [/size][/size][size=1]

[size=4]#3 பலவேறு திட்டங்களை தாயக மக்கள் முன்னெடுக்க முடியாத நிலையில் புலம்பெயர் மக்கள் முன்னெடுப்பதில் நீங்கள் எந்த கருத்தையும் இல்லை சரிபிழைகளும் கூறியதில்லை. கண்டும் காணாத மாதிரி உள்ளீர்கள். [/size][size=4]ஆனால் அடிக்கடி தூரநோக்கு பார்வை இல்லை என்கிறீர்கள் [/size] :([size=4] [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]#1 புலிகளை அவர்கள் விமர்சிப்பது தமது அறிக்கை சமநிலை இருக்கவேண்டும் என்பதற்காக. [/size][/size]

[size=1][size=4]#2 தூர நோக்கு இல்லை கிட்ட நோக்கு என்று ஒன்றே ஒன்றுதான் உள்ளது - நியாயமான அரசியல் தீர்வு. [/size][/size]

[size=1][size=4]#3 பலவேறு திட்டங்களை தாயக மக்கள் முன்னெடுக்க முடியாத நிலையில் புலம்பெயர் மக்கள் முன்னெடுப்பதில் நீங்கள் எந்த கருத்தையும் இல்லை சரிபிழைகளும் கூறியதில்லை. கண்டும் காணாத மாதிரி உள்ளீர்கள். [/size][size=4]ஆனால் அடிக்கடி தூரநோக்கு பார்வை இல்லை என்கிறீர்கள் [/size] :([size=4] [/size][/size]

#1. ஐ.நா. அறிக்கை நியாயமானது என்று சொல்லும்போது, அந்த அறிக்கையிலுள்ள புலிகளைப் பற்றிய விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அதை இருட்டடிப்புச் செய்வதுதான் தேசியச் செயற்பாடு!

#2. நியாயமான அரசியல் தீர்வு வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் மக்கள் பலவீனமான அரசியல் தலைமைகளைக் கொண்ட தமித் தேசியக் கூட்டமைப்பை கடந்த தேர்தல்களில் ஆதரித்தார்கள். தொடர்ந்தும் ஆதரிக்கின்றார்கள். ஆனால் இந்த நியாயமான அரசியல் தீர்வு என்னவாக இருக்கவேண்டும் என்பது குழப்பமான ஒன்றாக இருப்பதால்தான் உங்களால் திட்டவட்டமாக அதை வரையறுக்கமுடியவில்லை. இதைத்தான் நான் தூரநோக்கற்ற அரசியல் செயற்பாடு என்று சொல்கின்றேன்.

தமிழீழம்தான் ஒரே தீர்வு என்று புலிகள் இறுதிவரை போராடினார்கள். இடையில் வந்த சமாதானப் பேச்சுக்கள் எல்லாம் தமிழீழத்தைத் தவிர வேறேதும் தமிழர்களுக்கு தீர்வாக அமையாது என்பதை நிறுவவே பயன்பட்டது.

ஆனால் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்திய தற்போதைய காலகட்டத்தில் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்லுபவர்களுடன் மேற்குநாட்டு இராஜதந்திரிகள் பேசுவதில்லை. அவர்கள் பேசுவதெல்லாம் தனிநாட்டை விடுத்து அரசியல் தீர்வு ஒன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மிதவாதிகளுடன்தான். எனவே ஏதோ ஒரு அரூபமான அரசியல் தீர்வு என்பதை விடுத்து அது என்னவென்று முன்வைக்கவேண்டும். குறைந்தபட்சம் அது தமிழீழமாக இருக்காது என்று சொல்லும் நேர்மை இருக்கவேண்டும். ஆனால் இது முடியாது. அதி தீவிர தேசியவாதிகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டும் என்பதால் நழுவல் கதைகளில் காலம் கழிகின்றது.

#3. புலம்பெயர் நாடுகளில் உள்ள அரசியல் அமைப்புக்கள் எதிலும் நம்பிக்கை வைக்குமளவிற்கு அவர்களின் செயற்பாடுகள் இல்லை. எனவே அதிகம் கணக்கில் எடுப்பதில்லை என்பது உண்மைதான். அத்தோடு தோல்வியடைந்த அரசியல் வழிமுறைகளிலேயே தொங்கி நிற்பவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றாமல் இருக்கும்வரை முன்னேற்றம் கிட்டாது என்பதுதான் எனது கருத்து.

#1. ஐ.நா. அறிக்கை நியாயமானது என்று சொல்லும்போது, அந்த அறிக்கையிலுள்ள புலிகளைப் பற்றிய விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அதை இருட்டடிப்புச் செய்வதுதான் தேசியச் செயற்பாடு!

[size=4]இந்த தூரநோக்குத்தான் அடிக்கடி வருகின்றது. இலக்கே அதுதானா? [/size]

[size=4]#2. நியாயமான அரசியல் தீர்வு வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் மக்கள் பலவீனமான அரசியல் தலைமைகளைக் கொண்ட தமித் தேசியக் கூட்டமைப்பை கடந்த தேர்தல்களில் ஆதரித்தார்கள். தொடர்ந்தும் ஆதரிக்கின்றார்கள். ஆனால் இந்த நியாயமான அரசியல் தீர்வு என்னவாக இருக்கவேண்டும் என்பது குழப்பமான ஒன்றாக இருப்பதால்தான் உங்களால் திட்டவட்டமாக அதை வரையறுக்கமுடியவில்லை. இதைத்தான் நான் தூரநோக்கற்ற அரசியல் செயற்பாடு என்று சொல்கின்றேன்.
[/size]

[size=4]1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? [/size]

[size=4]தமிழீழம்தான் ஒரே தீர்வு என்று புலிகள் இறுதிவரை போராடினார்கள். இடையில் வந்த சமாதானப் பேச்சுக்கள் எல்லாம் தமிழீழத்தைத் தவிர வேறேதும் தமிழர்களுக்கு தீர்வாக அமையாது என்பதை நிறுவவே பயன்பட்டது.[/size]

[size=4]

[/size]

[size=4]2002ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் இடைக்கால நிர்வாக சபையை சர்வதேசத்தின் முன்வைத்ததாவது தெரியுமா? [/size]

[size=4]#3. புலம்பெயர் நாடுகளில் உள்ள அரசியல் அமைப்புக்கள் எதிலும் நம்பிக்கை வைக்குமளவிற்கு அவர்களின் செயற்பாடுகள் இல்லை. எனவே அதிகம் கணக்கில் எடுப்பதில்லை என்பது உண்மைதான். அத்தோடு தோல்வியடைந்த அரசியல் வழிமுறைகளிலேயே தொங்கி நிற்பவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றாமல் இருக்கும்வரை முன்னேற்றம் கிட்டாது என்பதுதான் எனது கருத்து.
[/size]

[size=4] இதுதான் எனக்கு உங்களில் பிடித்தது :D [/size]

[size=4]அமைப்புகள் சாரமாலேயே இந்த களத்தின் தனி முயற்சிகள் எத்தனையோ முன்வைக்கபடுகின்றன. நீங்கள் எதையும் ஆதரித்து இல்லை கருத்தை முன் வைத்த து இல்லை. எல்லாம் ஒரு நொண்டிச்சாட்டகவே தெரிகின்றது. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.