Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வணக்கம் பிள்ளைகள்,

Featured Replies

வணக்கம் பிள்ளைகள்,

வயசுபோன நேரத்திலை இந்தக் குளிருக்குள்ளை நானும் என்னத்தைத் தான் செய்யுறது. ஊரிலை மாதிரிக் காத்தாட வெளியிலை போகேலுமோ அல்லது நாலு பேர் சேந்து விடுப்புக் கதைக்கேலுமோ அல்லது பேரப் பிள்ளைகளைப் பிடிச்சு வைச்சுப் பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லிப் பேக்காட்ட ஏலுமோ. சரி உந்த ரீவீப் பெட்டியிலை எங்கடை நாடகப் பெண்டுகள் அழுதுகொண்டு இருப்பாளவை. அதைப் பாக்கலாமெண்டால் உந்தச் சின்னவன் தான் காட்டூன் பாக்கவேணும் எண்டு போட்டு தூரத்திலை இருந்து ரீவீ போடுற கட்டையைப் பறிச்சுக்கொண்டுபோய் வைச்சுக் கொண்டு இருக்கிறான்.

பின்னை இந்தக் கட்டிலிலை வந்து கூரையைப் பாத்துக் கொண்டு கிடக்கேக்கை தான் அந்தக் கால ஞாபகம் வந்துது. அதுதான் எழுதி உங்களிட்டைக் காட்டுறன். நீங்களும் வாசிச்சுப் போட்டு கடிதம் போட்டீங்களெண்டால் முகட்டைப் பாத்துக் கொண்டு கிடக்கிற நேரத்திலை நான் வாசிப்பனெல்லே.

மீள் வருமா

புல்லுத் தரையில் விளையாடிப்

புண்ணாய்ப் போன கால்களுக்குப்

புளுதி தனையே மருந்தாக்கிப்

புரண்ட மகிழ்ச்சி மீள்வருமா

காலை உணவும் இல்லாமல்

காலிற் செருப்பும் இல்லாமல்

காச்சும் வெயிலில் விளையாடிக்

களித்த நாட்கள் மீள்வருமா

தோட்டம் துரவில் அலைந்தலைந்து

தொட்டாற் சுருங்கி மரம்தேடி

தொட்டுத் தொட்டு இலைசுருட்டி

தொலைத்த நாட்கள் மீள்வருமா

முறமது குடையாய் மாறிவிட

முற்றம் நிறைந்த மழைநீரில்

காகிதக் கப்பல் விட்டேநாம்

களித்த நாட்கள் மீள்வருமா

வீட்டுப் பாடம் செய்யாமல்

விளையாடிப் பின் காலையிலே

வியாதி எனவே பலசொல்லி

வீட்டில் நின்ற நாள்வருமா

காதல் என்ற சொல்லுக்குக்

கருத்தே தெரியா வயதினிலே

கடிதம் கொடுத்துப் பதிலுக்காய்

காத்த நாட்கள் மீள்வருமா

கண்ணைக் கவரும் கவர்ச்சியுடன்

கலகல வென்று சிரிக்கின்ற

கன்னிப் பெண்கள் பின்னாலே

காவல் சென்ற நாள்வருமா

கள்ள மில்லா மனங்கொண்ட

கனிவும் பண்பும் மிகக்கொண்ட

நண்ப ரோடு சேர்ந்திருந்த

நல்ல நாட்கள் மீள்வருமா

வெள்ளிக் கிழமை வந்ததுமே

வெள்ளை வேட்டி தனையுடுத்து

ஆன்டவன் சந்நதி முன்னாலே

அமர்ந்த நாட்கள் மீள்வருமா

வெய்யில் மிகுந்த நேரத்தில்

வேப்ப மரத்து நிழல்தன்னில்

சாய்வுக் கதிரை துணையுடனே

சாய்ந்த நாட்கள் மீள்வருமா

தொல்லை இல்லா நண்பருடன்

தொடராய் ஓடும் வண்டியிலே

தொங்கிக் கொண்டே பயணித்துத்

தொலைத்த நாட்கள் மீள்வருமா

அறியாமல் நான் செய்துவிட்ட

அத்தனை தவறும் களைந்தகற்றி

அழகாய் மீள வாழ்க்கையினை

அமைத்து வாழும் நாள்வருமா

அன்புடன்

மணிவாசகன்

எண்ணற்ற என்னென்ன பொற்காலங்கள்....

சிந்ததையில் நிறுத்தி, சிறந்ததொரு கவி வடித்து

யாழிலே படரவிட்ட மணிவாசகனுக்கு எனது வாழ்த்துக்கள் :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலை உணவும் இல்லாமல்

காலிற் செருப்பும் இல்லாமல்

காச்சும் வெயிலில் விளையாடிக்

களித்த நாட்கள் மீள்வருமா

பழய நினைவுகளை நினைவு படுத்தி ஓர் கவிதையை வடித்திருக்கிறிங்கள் வாழ்த்துக்கள் மணிவாசகன்

  • கருத்துக்கள உறவுகள்

மணியான கவிதை விட்ட மணிவாசகனே.

உன் மணி கவிதையில் என் மணியை செலவழித்து

வாழ்த்து கோருவதில் பெருமை அடைகிறேன்.

கவிதை நன்றாகவுள்ளது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

வீட்டுப் பாடம் செய்யாமல்

விளையாடிப் பின் காலையிலே

வியாதி எனவே பலசொல்லி

வீட்டில் நின்ற நாள்வருமா

பழைய நினைவுகளை பலர் பல கவிதை வரிகளிலும் சொன்னாலும் ஒவ்வொரு வரிகளையும் வாசிக்கும்போதும் பழைய நினைவுகளை அப்படியே நம் மனக்கண் முன் கொண்டு வருகின்றது.

அந்த வகையில் பழைய நினைவுகளை மீட்டு தந்திருக்கின்றது உங்கள் வரிகள். நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பசுமையான பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கும்போது இருக்கும் சுகமே தனி. அதுவும் கவிதை வடிவில் படிக்கையிலே இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி.

அதுசரி, மணிவாசகன் என்ற பெயரைப் பார்த்ததும் அவரை ஓர் இளைஞனாகவே நான் கற்பனை பண்ணி வைத்திருக்கிறேன். ஆனால் பேரப்பிள்ளை என்று எதியதையதைப் பார்த்ததும் தலையில் இருந்த முடியை முழுதாக எடுத்து முகத்தில் தாடி மீசையாக மட்டும் ஒட்டி வைத்துப் பார்க்கிறேன். சரியா?

தோட்டம் துரவில் அலைந்தலைந்து

தொட்டாற் சுருங்கி மரம்தேடி

தொட்டுத் தொட்டு இலைசுருட்டி

தொலைத்த நாட்கள் மீள்வருமா

ஹா ஹா....தொட்டு தொட்டா நீங்கள் இலை சுருட்டினீங்கள்?? நான மேல ஏறி நின்று மிதிச்சிருக்கிறன்:-)

நல்ல கவிதை.;

காதல் என்ற சொல்லுக்குக்

கருத்தே தெரியா வயதினிலே

கடிதம் கொடுத்துப் பதிலுக்காய்

காத்த நாட்கள் மீள்வருமா

¬¸¡.......

«ó¾ ¿¡ð¸Ç¢ø ´Õ ¸ÄìÌ

¸Ä츢¢Õ츢ȢÂû §À¡Ä þÕìÌ..

Á½¢Å¡º¸ô¦ÀÕÁ¡§É.....

«üÒ¾Á¡É ¸Å¢¨¾........

கவிதை நல்லாயிருக்கு மணிவாசகன் அவர்களே உங்கட அனுபவத்தில பாதிதான் என்னுடையது அதிலும் பாதி ஊரை விட்டு வந்த பிறகுதான்

பேரப்பிள்ளைகள் ரீவி பாக்க விடமாட்டார்கள் எண்டா யாழிற்கு வாங்க நிறைய உறவுகள் நல்லாவே பொழுது போகும்(சண்டை கூட பிடிக்கலாம் சும்மா விளையாட்டு சண்டை தான்)

  • தொடங்கியவர்

வணக்கம் குஞ்சுகள்,

என்ரை கவிதைக்குப் பதில் எழுதிப் போட்டு, பதில் எழுதுவம் எண்டு நினைச்சு மறந்து போன, உது ஒரு கவிதை உதுக்கு ஒரு விமர்சனம் எண்டு திட்டின எல்லாருக்கும் என்ரை நன்றிகள்.

தம்பி செல்லமுத்து,

கொஞ்சக் காலம் தாடி வளத்திருந்தன். உவன் சின்னவன் வயிதிதிலை ஏறி அதைப் பிடிச்சு இழுக்கிறான். ஒரே நோவு. பின்னை அதையும் வெட்டிப் போட்டன்.

நித்திலா,

பேசாமை நாங்கள் எல்லாம் சேந்து ஒரு முதியோர் சங்கம் தொடங்குவமே. வெத்திலை போட்டுக் கொண்டு ஊர்க் கதை கதைக்கலாம். (உங்கடை முகத்திலை எள்ளும் கொள்ளும் வெடிப்பதை என் அகக் கண்ணால் காண முடிகிறது. அதுசரி பொம்பிளைப்பிள்ளைகளுக்கு வயசைக் கூட்டிச் சொன்னால் ஏன் கோவம் வாறது.) தொண்ணுhறு வருசமா யோசிக்கிறன் இன்னும் விளங்கேல்லை. ஆராவது தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ.

அன்புடன்

மணிவாசகன்

என்ன உங்கட முதியோர் சங்கத்தில சேருவதில எனக்கு எந்த சங்கடமும் கிடையாது முதியோர்சங்கத்தில வயசானவைக்கு மட்டுமா அங்கத்துவம் கொடுப்பீங்க அப்படி டிஸ்கிரிமினேட் செய்ய மாட்டிங்க தானே

அது என்ன பெண்கள் மட்டும் வயச குறைச்சு சொல்லுகினம் எண்றீங்க ஆண்கள் சொல்லுறேசல்லையா என்ன

நல்லா இருக்கு கவிதை வரிகள். பழையவற்றை பலர் மீட்டிப்பார்த்து சந்தோசப்பட வைச்சிருக்கிறீங்க. நன்றி மணிவாசகன்

தொல்லை இல்லா நண்பருடன்

தொடராய் ஓடும் வண்டியிலே

தொங்கிக் கொண்டே பயணித்துத்

தொலைத்த நாட்கள் மீள்வருமா

ஆஹா அப்ப இந்தியா படங்களில் காட்டுவினமே ...பஸ்களில் நிறைய பேர் தொங்கிக் கொண்டு போவினம் பஸ்ஸே சாய்ந்து போய்க் கொண்டிருக்கும் .... ஹும் அப்ப இலங்கையிலும் அப்படித்தானா..?

ம்ம் அனைவருக்கும் பழைய நினைவிகளை தொட்டுச் சென்ற உங்கள் கவி நன்றாக இருக்கு.... வாழ்த்துக்கள் மணிவாசகன்.....! :):lol:

  • தொடங்கியவர்

அனித்தா,

நீங்கள் அதைக் கண்டதேயில்லையா? பொம்பிளைப் பிள்ளைகள் கூட மிதிபலகையிலை நிண்டு காத்து வாங்கிக் கொண்டு போவினம்? வாழ்க்கையிலை பாதியை வீணாக்கிட்டீங்கள்

அன்புடன்

மணிவாசகன்

மணிவாசகா,

எங்களை அப்படியே ஊருக்குக் கூட்டிக் கொண்டு பொயிட்டீங்கள்.

தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.