Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னைப் பாட விடு

Featured Replies

என்னைப் பாட விடு

-----------------

வானம் பாடியைப் போல்

என்னைப் பாட விடு

மண்ணையும் மக்களையும்

முல்லையையும் முகில்களையும்

என்னைப் பாட விடு

இதயக் கோப்பை

நிரம்பித் தழும்புகின்றது

பச்சை போர்த்திய வயல்களையும்

அதைத் தழுவி

இச்சை தீர்க்கும் தென்றலையும்

என்னைப் பாட விடு

அந்திக் கருக்கலின் செம்மைச் சிவப்பை

அழகுப் பெண்ணின் கன்னக் கதுப்பை

என்னைப் பாட விடு

பரந்து விரியும் கடலை

பதுங்கிப் பாயும் நதியை

என்னைப் பாட விடு

கண்களில் நிரம்பி

வழிகின்றது கருணை

என்.....

பாதையை மறிக்காதே

வாழ்வினை பறிக்காதே

என்னைப் பாட விடு

சர சரக்கும் சப்பாத்துக்கும்

சட சடக்கும் துப்பாக்கிக்கும்

என்ன வேலை இங்கு

என் எல்லைகளுக் கப்பால்

உன் கோபத்தைக் கொண்டுபோ

வானம் பாடியைப் போல்

என்னைப் பாட விடு

என் இதயக் கோப்பை

நிரம்பித் தழும்புகின்றது

-எல்லாள மஹாராஜா-

பாடுங்கள் மகாராஜா பாடுங்கள்...உங்கள் பாடலைக் கேட்கத்தான் இத்தனை உறவுகள் காத்துக் கிடக்கிறோமே....பாடுங்கள்...

சர சரக்கும் சப்பாத்தும்..சட சடக்கும் துப்பாக்கியும் ஓய்ந்து போகும் காலம் நெருங்கிவிட்டது நீங்கள் பாடுங்கள்..... :arrow: :wink:

அட மகாராஜா பாடுங்கோ எதுக்கும் பாட முதல் சொல்லுங்கோ நான் எங்க வீட்டு கதவை இழுத்து மூடணும்.

அப்புறம் கவி அருமை. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானம் பாடியைப் போல்

என்னைப் பாட விடு

பாடுவது என்ன நீங்கள் தாராளமாக பாடி ஆடலாம். கவிக்குப் பாராட்டுக்கள். :lol:

  • தொடங்கியவர்

பாடுவது என்ன நீங்கள் தாராளமாக பாடி ஆடலாம். கவிக்குப் பாராட்டுக்கள். :lol:

என்ன தனியாக ஆட வெட்கமாக இருக்கின்றது.... :lol::lol: அதுதான் பார்க்கின்றேன்.....

ஆட ஆயத்தமான :lol::D

-எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் நான் உங்களோடு சேர்ந்து ஆட தயார்.....

மகாராஜாவும் துறவியும் ஆடினால் எப்படி இருக்கும்.......

நல்ல கவிவரிகள் வாழ்த்துக்கள் :lol:

பாடுங்கள் மாகராஐா பாடுங்கள். உங்கள் பாடலை கேட்க காத்திருக்கின்றோம்.

  • தொடங்கியவர்

எல்லாளன் நான் உங்களோடு சேர்ந்து ஆட தயார்.....

மகாராஜாவும் துறவியும் ஆடினால் எப்படி இருக்கும்.......

ஆ......... சிங்கமாய் இருக்கும்

சிங்களம் இருக்கும் சிர(ரி)ப்போடு...

புத்தனுக்கு வந்த சோதனை..

மன்னன் எனக்குமா....?

ஹா.....ஹா..... இதுதான் துன்பம் வரும்போது சிரித்தல்.....

:wink: :wink: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

து. சிரிப்புடன் -எ.மஹாராஜா-

  • தொடங்கியவர்

நல்ல கவிவரிகள் வாழ்த்துக்கள் :D

இலக்கியன் சொல்லிவிட்டு சிரிப்பு வேறு...

இதுதான் வஞ்சகப் புகழ்ச்சி.....

அப்படியா.... :lol::lol::lol::lol::D:D

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

பாடுங்கள் மாகராஐா பாடுங்கள். உங்கள் பாடலை கேட்க காத்திருக்கின்றோம்.

ரமா உங்கள் பதிலைப் பார்க்க.....

தி.மோகனாம்பாள் தான் ஞாபகம் வருகின்றது.....

" ஆடு சாந்தா ஆடு

உன் ஆட்டத்தைக் காண

ஓடோடி வந்த என்ன ஏமாத்தாதே " என்ற ரேஞ்சில இருக்கு......

இதோ நானும் பாடுகின்றேன் .....

ரமா...... நலம் தானா..... :lol::lol:

பாட்டு வாத்யார் -எல்லாள மஹாராஜா-

உடலும் உள்ளமும் நலந்தானா?

மகாராஜா தங்கள் கவி வல்லமையைக் கண்டு களிப்புற்றோம்.

தாங்கள் ஆதிவாசியுடன் சேர்ந்து செய்யும் திருவிளயாடல்களைப் பார்த்தால், கை தேர்ந்த யாழ்ப்பழங்குடி இனத்தவர் போல் தெரிகிறது.

நீங்கள் முற்பிறவியில் இங்கு என்னவாக அவதரித்திருந்தீர்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடலும் உள்ளமும் நலந்தானா?

மகாராஜா தங்கள் கவி வல்லமையைக் கண்டு களிப்புற்றோம்.

தாங்கள் ஆதிவாசியுடன் சேர்ந்து செய்யும் திருவிளயாடல்களைப் பார்த்தால், கை தேர்ந்த யாழ்ப்பழங்குடி இனத்தவர் போல் தெரிகிறது.

நீங்கள் முற்பிறவியில் இங்கு என்னவாக அவதரித்திருந்தீர்கள் ?

:lol::lol::lol:

ஏன் பாட்டை நிறுத்தி விட்ட்டிர்கள் ராஜா உங்கள் இசை எனும் தேன் வெள்ளத்தில் இன்றாவது குளிக்க வந்த என்னை எமாற்றலமா? :P :P

  • தொடங்கியவர்

:lol::lol::lol:

அதே எல்லாள மஹாராஜா தான்.... மற்றவைக்கு உச்சியில மச்சமெண்டால் நாரத முனிக்கு நடுவில மச்சம்....

யாழ்ப்பழங்குடியோ

யாழ்ப்பாணக் குடியோ

ஏதோ ஒரு குடி... :lol::D

இதென்ன

ஜிஞ்சாவை விட்டிட்டு

ஜிகினாவோட வெளிக்கிட்டாச்சு..

:D:D

இப்பிடிப் போனால்,

தாலிபான் என்று தனியறையில பூட்டிடுவாங்கள்- பிறகு

நாரணனும் காப்பாத்தான் நஞ்சுண்டவனும் காப்பாத்தான்..

குவாண்டநாமோ பீச்சில கரும்பு

சாகுபடிதான் செய்ய வேணும்.

நாரதர் கலகம் நன்மையில முடியாமல்

நடுக்கடலில முடியப் போகுது....

:P :P :P :P

கவலையுடன் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ஏன் பாட்டை நிறுத்தி விட்ட்டிர்கள் ராஜா உங்கள் இசை எனும் தேன் வெள்ளத்தில் இன்றாவது குளிக்க வந்த என்னை எமாற்றலமா? :P :P

லைப்போய் சோப்புக்கு லைப் (தீர்ந்து போய் விட்டது) போய்விட்டது. அதனால் தான் .... :lol::lol:

புதிதாக ஸ்டாக் வந்தால் சொல்லி அனுப்புகின்றேன் ...

ஊத்தையாயிருந்தால் வந்து விடுங்கள்..... :lol::lol::D

ஸ்டாக் தீர்ந்த கவலையுடன்

-எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடவிட்டுவிட்டோம் மகாராஜா! பாட்டுக்கு நன்றி.

எழுதப்படும் பாடலைப்பற்றிக் கருத்தெழுதுபவர்களைவிட கருத்தெழுபவர்களைப் பற்றிக் கருத்தெழுதுபவர்களே அதிகமாக இருக்கின்றது. ம்.....! எல்லாம் இணையம் செயல்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.