Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் நேர்மையான அரசியலுக்கு சேறு பூசும் விதமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போலி பிரச்சாரங்கள்: சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sumanthiran_seithy-150.jpg

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நேர்மையான, தியாகமான அரசியலுக்கு களங்கம் கற்பிக்கும் விதத்தில் உள்நாட்டுவாதிகளும் வெளிநாட்டு விஷமிகளும் அவருக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வது அர்த்தமற்ற செயலாகும் என யாழ் மாவட்ட பா.உ. சுமந்திரன் தெரிவித்தார். இரா.சம்பந்தன் இராணுவப் பிரசன்னத்தை வடக்கு கிழக்கில் இருந்து இல்லாதொழிக்க வேண்டும், மற்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் கூறியுள்ளார், கூறிவருகின்றார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை உள்நாட்டில் உள்ளவர்களும் வெளிநாட்டில் உள்ளவர்களும் தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தனின் நேர்மையான அரசியலுக்கு சேறு பூசும் ஒரு விடயமாகும். அவரின் தியாகத்தனமான அரசியல் போக்கை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். தலைவர் சம்பந்தன் கடந்தவாரம் நாடாளுமன்றில் ஆற்றிய உரை பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. அதைப்படித்தால் உண்மைநிலை புரியும்.

  

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டி இனவிடுதலைக்காக போராடியுள்ளவர்களை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக்கொண்டு அமெரிக்கா, கனடா, இந்தியா போன்ற நாடுகள் அவ் அமைப்பின் மீது தடை விதித்தன. இதன் காரணமாக, விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பென உலகத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டது என்ற இந்த உண்மைநிலையை இரா.சம்பந்தன் எடுத்துக்கூறினாரே தவிர, விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்ற அர்த்தம்பட அவரது உரை இருக்கவில்லை.

 

எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் அவ்வாறு கூறியது கிடையாது. இதுபோலவே, இராணுவப் பிரசன்னம் வடக்கு கிழக்கில் குறைக்கப்படவேண்டும் என்று கோருகிறாரே தவிர, அது முற்றாக நீக்கப்படவேண்டும் என அவர் கோரவில்லை என்ற இன்னுமொரு குற்றச்சாட்டு இவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இக்குற்றச்சாட்டுப் பொருத்தமற்றதாகும்.

 

வடக்கில் 15 இராணுவப் படையணிகள் நிலைகொண்டுள்ளது. முழுநாட்டிலுமே 20 படையணிகள் உள்ளபோது, வடக்கில் மாத்திரமே 15 பிரிவுகள் நிலைகொண்டிருப்பது இந்நாட்டில் போர் இன்னமும் முடியவில்லை என்ற அர்த்தமா? எனவேதான் வடக்கில் மேலதிகமாக நிலைகொண்டிருக்கும் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படவேண்டும். அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்வுக்கு இப் பிரசன்னம் குந்தகமாக இருக்கின்றது என எடுத்துக்கூறி வருகின்றார். வடக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவேண்டும் எனக் கோருவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 

சர்வதேசமும் இதை நியாயமான கோரிக்கையாகக் கருதாது. அதேவேளை இலங்கை அரசாங்கமும் உடன்படப்போவதில்லை. இந்நிலையில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு சம்பந்தன் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார். இராணுவப் பிரசன்னத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரவில்லை எனக் கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும். இது அவரின் உரையை திரிவுபடுத்தும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=72519&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே சமந்தரோட உடம்பெல்லாம் சேறு பூசித்தானே இருக்கு புதுசா வேற பூசனுமா? அதுகெல்லாம் நேரம் இல்லைப்பா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சம்பந்தருக்கு புலம்பெயந்தவர்கள் ஏன் சேறு பூசவேண்டும் அவர்  தனக்குதானே பூசிக்கொண்டு இருக்கின்றார். 
 
அதுசரி சம்பந்தரின் பெயருக்கு முதலில் இழுக்கை ஏற்படுத்தியவர் சுமந்திரன் என்று அநேகர் சொல்கின்றார்கள் அது உண்மையா ?  
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன விட எங்களுக்கு நல்ல வடிவா சம்மந்தரப்பற்றி தெரியும் அவர் எம்புட்டு நல்லவர் அவரோட வாயால அதுவும் புலிகள போய் விமர்சிச்சு இருப்பாரா ச்சே இருக்காது எவ்ளவு தூய்மையான அரசியல் வாதி இந்தியாக்கு ஒரு காந்தி நா நமக்கு சம்மந்தன் இது வரைக்கும் ஜனாதிபதி மகிந்தவிடம் தனக்காக எதாவது ஒரு recommendation க்கு போய் இருப்பாரா? இல்ல இலங்கை அரசாங்கத்திட்ட இருந்து தான் ஏதாவது வாங்கி இருப்பாரா இலங்கை தமிழர்களுக்காக பாடுபடக்கூடிய அப்பழுக்கற்ற ஒரே தலைவர் அவர் தான் அவர போயி தப்ப நாங்க சொல்லுவமா

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு ஆதரவாக இப்போ

சுமந்திரன்  பேசுவதால்தான் இன்னும் அதிகம் அசிங்கமாகப்போகிறது. :(

  • கருத்துக்கள உறவுகள்

சேறு பூசுவது ஒரு சிகிச்சை முறைதானே.. வெள்ளைகள் அதுக்கு ஓடித்திரியினம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களுக்கு முன்பு இணையத்தளங்களில் படித்தேன் சம்பந்தன் சிறிலங்கா சிங்கள அரசிடம் சில பல பெட்டிகள் வாங்கி இருந்ததாக ......  :rolleyes: சுண்டல் அவருக்கு நற்சன்றிதல் வழங்குகின்றார் அந்த பெட்டிகளில் ஏதாவது அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பபட்டதா நினைக்க தோன்றுகின்றது  :D



சேறு பூசுவது ஒரு சிகிச்சை முறைதானே.. வெள்ளைகள் அதுக்கு ஓடித்திரியினம்.. :D

 

அதுக்குள்ளே கொஞ்ச அட்டைகள், புழுக்கள், நத்தைகள் எல்லாம் சேர்த்து பூசினால்தான் பூரண பலன் கிடைக்கும். :D  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 சுமத்திரன் கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேற்டஸ்ராகத்தான் வருவார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 சுமத்திரன் கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேற்டஸ்ராகத்தான் வருவார். 

 

அவரின் அரசியல் பிரவேசமே ..... வித்தியாசமதுதானே  :D

  • கருத்துக்கள உறவுகள்

இயலாமையில் உள்ளவர்களால் சேறு பூசுவதையும், மண்ணள்ளித் திட்டிச் சாபம் போடுவதையும் தவிர வேறு என்னதான் செய்யமுடியும்?

 

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு கட்சிகள் எதனையும் (ஈபிடிபி, கருணா/பிள்ளையான் குழுக்கள் உட்பட) தமிழ் மக்கள் தேர்தல்களில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்து அவதூறு அரசியலை விட்டுவிட்டு சம்பந்தரோடு ஒரு உடன்பாட்டுக்குப் போவதுதான் நல்லது! பிறகு தலைமையை உள்ளுக்குள் இருந்து கைப்பற்றுவதற்கு குழி பறிப்புக்களைத் தொடங்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சுமத்திரன்..மற்றும் சம்பந்தன் அவர்களே... நீங்கள் ஜனநாயகத்தை நம்புறவர் எனின்.. தமிழ் மக்களுக்காக.. உண்மையில் உழைப்பவர் எனின்.. இதற்குப் பதில் சொல்லுங்கள்....

 

அவருக்கு இவர் விளக்க உரை கொடுக்கிறார். விடுதலைப்புலிகள் எந்தவொரு தாக்குதல் இலக்கையும் தன்னிச்சையாக தீர்மானிக்கவில்லை. தமிழ் மக்களின் கோவில்கள்.. தேவாலயங்கள்.. பள்ளிக்கூடங்கள்.. சந்தைகள்.. வதிவிடங்கள்..ஊடக நிலையங்கள்.. மக்கள் பயணித்த ஊர்திகள்.. அகதிகளாக அடைக்கலம் தேடிய இடங்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்லங்கள்.. இவை சிங்களப் படைகளால் திட்டமிட்டு தாக்கப்பட்டதன் பின்னணியில் தான் புலிகளால் பழிவாங்கல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

இவை குறித்து புலிகள் பலமுறை விளக்கிவிட்ட பின்னரும்.. சிங்கள அரசின் தாக்குதல்களை பயங்கரவாதமாக உச்சரிக்கத் தவறிய சர்வதேசமும் சம்பந்தனும்.. அதற்குப் பதிலடியாக அமைந்த தாக்குதல்களை பயங்கரவாதம் என்று எப்படி வரையறுக்க முடிகிறது என்பதை சுமந்திரன் விளக்க வேண்டும்.

 

அமெரிக்க சார்பு மேற்குலக சர்வதேசம் எடுக்கும் எல்லா நிலைப்பாடுகளும் நியாயமானவை என்பதும் தவறு. அவர்களும் பல தவறான முடிவுகளை எடுத்துள்ளனர். விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடயத்திலும் அவர்கள் மோசமான தவறுகளைச் செய்துள்ளனர். அவற்றைச் சுட்டிக்காட்டாமல்.. புலிகளே தவறு செய்தனர் என்பது போலச் சொல்லி சிங்களம் செய்த பயங்கரவாதத்தையும்.. பயங்கரவாதத்தை தூண்டும் செயல்களையும் சுமந்திரனும்.. சம்பந்தனும் ஏன் மறைக்கிறார்கள்..???!

 

சர்வதேசத்தை திருப்திப்படுத்த..சிங்களம் எம்மீது வலிந்து திணித்த அழிவுகளையும் எங்கள் பக்கமுள்ள நியாயங்களையும் குழிதோண்டிப் புதைப்பது.. மோசமான செயல்..! சர்வதேசத்திற்கு எமது நியாயத்தை எடுத்துச் சொல்வதை விடுத்து சர்வதேசம் திருப்திப்படும் அளவிற்கு எம்மில் நாமே எல்லாப் பழிகளையும் போட்டுக் கொள்வது அரச பயங்கரவாதங்களும் அவற்றை ஊக்குவித்தவர்களும் மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்யவும்.. தப்பிப் பிழைக்கவுமே வழி செய்யும்.

 

காத்தான்குடி படுகொலை கல்முனை தமிழ் கிராமங்கள் மீதான முஸ்லீம் காடையர்களின் மிக மோசமான படுகொலையின் எதிரொலி. இது உலகிற்குத் தெரியும். தெரியாத மாதிரி நடிக்கிறது. அதேபோல் தலதாமாளிகை தாக்குதல் பற்றி தெரியும். மாவீரர் துயிலும் இல்லங்கள் இடித்தழிக்கப்பட்டதற்கான பதிலடி. இவை சிங்கள அரசுக்கும் மற்றவர்களுக்கும் நல்லாத் தெரியும்.

 

அதுமட்டுமன்றி நாகர்கோவில் தமிழ் பள்ளிக்கூடப் படுகொலைக்குப் பின்னர் சந்திரிக்கா அம்மையார் கொழும்பிலும் பிற தென்பகுதியில் சில இடங்களிலும் பள்ளிகளை மூடுவதும் திறப்பதுமாக இருந்தார். காரணம் பள்ளிக்கூடங்களை தாங்கள் தாக்கியது போல புலிகளும் பழிவாங்கத் தாக்குவார்கள் என்று. ஆனால் புலிகள் அப்படிச் செய்யவில்லை. மாறாக செஞ்சோலை தாக்கி அழிக்கப்பட்டு 60 க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிச் சிறார்கள் மீண்டும் கொல்லப்பட்டார்கள்.

 

எனவே இன அழிப்புக்கு எதிரான பழிவாங்கல் தாக்குதல்களின் பின்னால் உள்ள யதார்த்ததை உணர்த்தாமல்..  நாமே அவற்றிற்கு பயங்கரவாத முத்திரை குத்தி எம்மை பயங்கரவாதிகள் என்று ஆக்கிக்கொண்டு.. சிங்கள அரச பயங்கரவாதத்தை காப்பது மிக மோசமான செயல்.

 

இன்று சிரியாவில் கிளர்ச்சிக்காரர்கள் அரசுக்கு எதிராக மேற்குலக ஆதரவோடு எத்தனை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அவற்றில் எத்தனை பொதுமக்கள் பலியாகியுள்ளனர். அவை அனைத்தும் அரசுக்கு எதிராக கிளர்ச்சி என்று தானே சொல்லப்படுகின்றன. தற்கொலைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. அவற்றை அமெரிக்காவோ.. ஐநாவோ.. ஐரோப்பிய ஒன்றியமோ கண்டித்து.. அந்தக் குழுக்களை ஏன் இன்னும் பயங்கரவாதப் பட்டியலில் போடல்ல. லிபியாவில் அரசுக்கு எதிராக போராடின குழுக்கள் செய்த மனித உரிமை மீறல்களும் கொலைகளும் எங்கே போயின..??! ஏன் அவர்கள் பயங்கரவாதிகளாக இனங்காட்டப்படல்ல..??!

 

துருக்கியில் 5 பேரை சிரியாவின் எறிகணைகள் கொன்றுவிட்டன என்பதற்காக நேட்டோ ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறைகள் அங்கு நகர்த்தப்பட்டுள்ளதோடு.. துருக்கி தன் பாதுகாப்பிற்கு சிரியாவை தாக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 1986 முதல் தமிழ் மக்கள் மீது சிங்கள அரச படைகளும் இந்தியப் படைகளும் ஏவிய எறிகணைகள் பலியிட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை என்ன..??! அதற்கு யார் பதில் தாக்குதல் நடத்தினார்கள்.. அவற்றை தடுத்து நிறுத்தினார்கள். மாறாக நியாயம் கற்பித்தார்கள்.. எங்க இருந்து செல் வருகுது என்று தெரியவில்லையாம்..??! மடுமாதா ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் ICRC ஒன்றைச் சொல்ல.. சிங்கள அரசாங்கம் ஒன்றைச் சொல்ல.. UNHCR இன்னொன்றைச் சொன்னது. ஆனால் துருக்கி எல்லையில் மட்டும்.. எல்லாமே வெளிச்சமா தெரிஞ்சது. ஏன் அந்த எறிகணைகளை துருக்கியே.. கிளர்ச்சிக்காரர்களைக் கொண்டு.. ஏவி.. சர்ச்சையில் தன் தலையீட்டை கொண்டு வந்திருக்க முடியாது..??! ஏன் யாரும் அந்த எறிகணைகளை யார் வீசியது என்று தெரியாது.. என்று சொல்லி வாழாதிருக்கவில்லை..???!

 

ஆனால்.. எங்கள் விடயத்தில்.. சர்வதேசம் செய்யுதோ இல்லையோ.. நாங்களே எங்களைத் திருத்திக் கொள்ளுறம் என்ற போர்வையில்.. காட்டிக்கொடுப்புக்கள் தான் நிகழ்கின்றன. சிங்கள அரசின் அரச பயங்கரவாதம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. அதற்கு உதவிய சர்வதேச அரச பயங்கரவாத ஊக்குவிப்புக்களும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

 

சர்வதேசமும் அதையே விரும்புகிறது. அதில் இருந்து மீள முடியாமல்.. நாமே நம்மை குற்றவாளி ஆக்கி மகிழ்ந்து கொண்டிருப்பதுவே இன்று எம்மத்தியில் நிகழ்கிறது. அதற்காக அது உண்மையோ.. நியாயமோ அல்ல. அது நாமே எம்மை பயங்கரவாதிகள் என்பதற்குச் சமன்.

 

ஆனால் புலிகளைப் பொறுத்தவரை அவர்களின் ஒவ்வொரு நகர்வையும் எதிரியே தீர்மானித்தான். இதுதான் தர்மத்தின் முன்னால் உள்ள உண்மை.

 

இதை யார் சர்வதேசத்திற்கு சொல்லி அவர்கள் அதனை ஏற்கச் செய்யப் போகினம்..???! சம்பந்தனோ.. சுமந்திரனோ.. நாங்கள் இங்கே சொன்னதை மறுக்க முடியுமா..????! ஏன் சர்வதேசம் தான் மறுக்க முடியுமா..???!  :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே விடுதலைப்புலிகளை தூற்றி பகிரங்கமாக, தேர்தலில் நின்று சம்மந்தனும் அவருடைய குழுவும் தேர்தலில் வென்று காட்டட்டும் பாப்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் நினைத்திருந்தால் பல குண்டுகளை சிங்களக் கிராமங்கள் மீது போட்டிருக்கலாம். அப்பாவி மக்களோடு அவர்கள் போர் தொடுக்கவில்லை மாறாக அரச அடக்குமுறைக்கு எதிராகவே போர் புரிந்தனர். சில சம்பவங்களில் தவறுதலாக நடந்த சம்பவங்களுக்காக அவர்கள் மன்னிப்பும் கோரியிருந்தனர். ஆனால் இன்று நாடாளுமன்றில் தலைவர் சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரை தமிழ் மக்கள் அனைவருக்கும் இழுக்காக்கியதுடன் பலரது பார்வையில் அவரது பேச்சு சிங்களவர்களிடம் தன்னை ஒரு நல்ல மனிதராகக் காட்டுவதற்காகவே தவிர வேறொன்றுமில்லை. தமிழீழம் காண்போம் என எம் இளைஞர்களை தூண்டியதுடன் அவர்களை வன்முறையாளர்களாக மாற்றியதும் இக் கூட்டணியினரே.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பாராளுமன்றத்தில் அன்றும்.. வடக்குக் கிழக்கில் அரச பயங்கரவாதம் செய்த அட்டூழியங்களை உரத்துச் சொன்னது.. ஜோசப் பரராஜசிங்கம் போன்ற தலைவர்களே. சம்பந்தன்.. தங்கத்துரை போன்றவர்கள் அன்றும் இதே நிலைப்பாடுதான். மெளனமும்.. தங்கள் பிள்ளைகுட்டிகளின் எதிர்காலத்தை தக்க வைப்பதும்... சிங்களவனைக் குளிர்ச்சிப்படுத்துவதன் மூலம்.. தங்களை தலைவர்களாக இனங்காட்டக் கூடிய தீர்வை பெறுவதுமே இவர்களின் நோக்கம்.  அன்றி மக்களின் விருப்பை நிறைவு செய்வதல்ல..!

 

தங்கத்துரையர் போன கையோடு... அந்த நிலைப்பாட்டில் இருந்து சம்பந்தன் கொஞ்சக் காலம் மாறி நடிச்சிருந்தாலும் இப்போ பழைய கிழவி கதவத் திறவடி என்ற கணக்காய். இப்ப தெரியுது ஏன் புலிகள் மறுத்த சுமந்திரனை த.தே.கூ க்குள் சம்பந்தன் கொண்டு வந்திருக்கிறார் என்று. இதற்காக ஒட்டுமொத்த த.தே.கூட்டமைப்பினரையும் குறை சொல்ல முடியாது. ஏலவே சம்பந்தனின் கூற்றை த.தே.கூ கட்சியின் கூற்றல்ல என்று மறுத்து விட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இப்போ சுமந்திரன்.. தன்ர எஜமானருக்காக குரைக்கிறார். சமாளிப்புக்கேசன்களை தாமதமாக அள்ளி வீசுகிறார். அதிலும் தடம்புரளல்கள் தான் மிச்சம்.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தனுக்கு வேலையே அது தானே கண்டபடி உளறி தள்ளுறது பிறகு தன்னோட அடிப்பொடியல விட்டு அறிக்கை வெளியிடப்பண்ணி தமிழ் மக்களை சமாதானம் பண்ணுறது

  • கருத்துக்கள உறவுகள்

"புனிதர் சம்பந்தனின்" அரசியல் நகர்வுகள் யாருக்கானவை?

 
 

mahinda_sampantham-100x73.jpg

 

 

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற தமிழரசுக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் கடந்தவாரத்தில் நிகழ்தியிருந்த இருவேறு அரசியல் நகர்வுகள் தமிழ் மக்களை குமுறவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. அந்த நகர்வுகள் தொடர்பிலான தெளிவுறுத்தலை மேற்கொள்வதற்கு தமிழ்லீடர் முற்படுகின்றது. பாராளுமன்றில் உரையாற்றிய போது தமிழீழ விடுதலைப்புலிகளை தீண்டத்தகாதவர்கள் என்ற பாணியில் சம்பந்தன் உரையாற்றியமை மற்றும் மஹிந்த விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக பேச்சுக்களில் கலந்து கொள்ளாமை ஆகிய இரண்டு விடயங்களும் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தன. சம்பந்தனின் உரை தொடர்பில் கடும் அதிர்ப்தி அடைந்திருந்த மக்கள் மஹிந்தவின் அழைப்பினை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் உதாசீனம் செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கருதியிருக்கலாம். ஆனாலும் இரண்டாவது விடயத்திலும் சம்பந்தன் அரச விசுவாசத்தினையே கைக்கொண்டிருந்தார் என்ற வெளித்தெரியாத உண்மையினை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம்.

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் தனது பெயரும் தனது சகாக்களின் பெயரும் இருந்தாகவும், லக்ஸ்மன் கதிர்காமர் தனது அருமை நண்பர் என்றும் தம்மை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்திக் கதைக்கவேண்டாம் என்றும் உணர்ச்சிவசப்பட்டு பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார். அவருடைய அல்லது அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாக தாம் கறைபடியாத கரங்களை உடையவர்கள் எனவே தம்மை எந்த ஆயுதக் குழுக்களோடும் தொடர்புபடுத்திக்கொள்ளவேண்டாம், தமிழீழ விடுதலைப்புலிகளாக இருக்கலாம் அல்லது ரெலோ அல்லது ஈபிஆர்எல்எப் ஆக இருக்கலாம் அனைத்துக் கட்சிகளும் ஆயுதக்கலாசாரத்தில் இருந்து வந்தவை. எனவே அந்த அமைப்புக்கள் சார்ந்தோ அல்லது அந்த அமைப்புக்களின் நிலைப்பாடுகளுடனோ தாம் சேர்ந்து போகப்போவதும் இல்லை சேர்ந்து போகவேண்டிய தேவையும் இல்லை என்பதே சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு. கட்சியின் நிலைப்பாட்டினையே சம்பந்தன் பாராளுமன்றில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இதேவேளை கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற கூட்டுக்கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதால் கால ஓட்டத்தில் கூட்டமைப்பு சிதைவடைகின்ற ஆபத்தான சூழ்நிலைகூட எழுவதற்கான சாத்தியப்பாடுகள் உணரப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான சரியான தீர்வு ஒன்றை எட்டும் வரையில் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தங்கள் கட்சிகளை வளர்ப்பதைத் தவிர்த்து கூட்டமைப்பு என்ற ஒரே சக்தியாக பயணிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டுக்கட்சியை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் இந்த விடயத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஏனைய கட்சியினரிடம் சம்பந்தன் பகிரங்கமாகவே தெரிவித்திருப்பதுடன், தமிழரசுக்கட்சியினை வளர்ப்பதற்காக தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாட்டினைக் கூட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர்களுக்கு தமிழரசுக்கட்சியில் வேலையற்ற பதவிகளுக்கு பொறுப்புக்களை வழங்கியிருந்தமையும் நினைவிருக்கலாம்.

இலட்சக்கணக்கான உயிர்விலைகளின் பின்னான சூனியமான அரசியல் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்று தீர்வினைப் பெறுவதற்கான முனைப்பினை கைவிட்டுவிட்டு கட்சி அரசியல் செய்வதற்கு ஒரு நல்ல தலைவன் முற்பட வாய்ப்பில்லை என்பது சாதாரண மக்களுக்கு கூட புரியக்கூடிய விடயமாகும்.  தற்போதைய நிலைப்பாட்டின் படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர் எதிர்க்கட்சிகளில் உறுப்புரிமை பெற்றவர்கள் போல ஒருவரை ஒருவர் தூற்றுவதும் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் ஆட்களைத் திரட்டுவதுமென மிக இழிவான நிலைப்பாடு கூட்டமைப்பிற்குள் இருந்து வருகின்றது. இந்தப் பிரச்சினைக்கான தீர்வினைக்கூட எட்டமுடியாத ஒரு தலைவர் நினைத்துப் பார்க்கமுடியாத தியாகங்களும் ஈகங்களும் நிறைந்த தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்துவதையோ அதனை ஒரு அருவருக்கத் தக்க விடயமாக கருதி கருத்துவெளிப்படுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் அவரது நடவடிக்கை மிகுந்த கண்டனத்துக்குரியதாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கதைக்கவேண்டாம் என்று தெரிவித்து வருகின்ற 'புனிதர் சம்பந்தன்' தமிழீழ விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமை 22ஆக இருந்ததையும் அதன் பின்னான அடுத்த தேர்தலில் அந்த எண்ணிக்கை 13ஆக குறைந்ததையும் எந்த அடிப்படையில் நோக்க முற்படுகின்றார். தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திற்காகவே தமிழ் மக்கள் வாக்களிப்பதாகவும் ஒரு நிலைப்பாடு அவரிடமும் அவர் சார்ந்தவர்களிடமும் இருப்பதாகவே அறியமுடிகின்றது. புலிகள் அன்றுவைத்த கோரிக்கையினை இன்றுவரை தாரகமந்திரமாகக் கொண்டே தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்துவருகின்றார்கள் என்பதை சம்பந்தன் உணர்ந்திருக்கிறார் என்பதற்கு அவர் கூட்டமைப்பில் தங்கியிருந்து கொண்டு அரசியல் செய்ய முற்படுவவதை ஆதாரமாகக் கூறலாம். அவர் தன்னை புலிகளின் அடையாளமாகக் கருதவேண்டாம் எனக் கூறுவது உண்மையென்றால் கூட்டமைப்பில் எவ்வாறு ஒட்டிக்கொண்டிருக்க முடியும்? கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் எச்சமாகவே அரசும் கருதுகிறது தமிழ் மக்களும் கருதுகிறார்கள் என்பது சம்பந்தருக்கு கசப்பாக இருந்தாலும் அது உண்மையான விடயமாகும். தமிழ் மக்கள் மத்தியில் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலேயே 'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை" என்ற பாணியில் கூட்டமைப்பினைப் பதிவு செய்யவும் முடியாது. கூட்டமைப்பினைக் கைவிடவும் முடியாது என்ற நிலைப்பாட்டினை நடைமுறைப்படுத்தி வருகின்றார். இல்லையேல் அவராலோ அல்லது அவர் சார்ந்த புனிதர்களாக தம்மைக் கருதிக்கொள்கின்ற தமிழரசுக்கட்சியினராலோ கூட்டமைப்பு என்கின்ற அடையாளத்தினை கைவிட்டு ஒரு ஆசனத்தையேனும் பெறமுடியுமா? இதற்கான பதில் சம்பந்தனிடமோ அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய சம்பந்தனால் தேசியப்பட்டியலூடாக நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொண்ட சுமந்திரனிடமோ இருக்குமா?

ஒவ்வொரு கட்டத்திலும் "பிரிக்கமுடியாத ஐக்கிய இலங்கைக்குள் தான் தீர்வு வேண்டும்"|, "நாங்கள் ஒரு போதும் வடக்கு - கிழக்கை எமக்குச் சொந்தமானது என்று கேட்கவில்லை" , "வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவத்தினை வெளியேறுமாறு நாங்கள் ஒருபோதும் கோரவில்லை" உட்பட்ட அரச நிலைப்பாடுகளைப் பிரதிபலிப்பதாக சம்பந்தன் கருத்துக்களை வெளிப்படுத்திவருகின்றார். உலக ஒழுங்கு என்ன நிலைப்பாட்டில் செல்கின்றது என்பதை அவர் புரிந்துகொள்வதாக இல்லையா? அல்லது அரச விசுவாசத்தைப் பிரதிபலிப்பதாகச் செயற்படுகின்றாரா? என்பது தான் புரியாததாக இருக்கின்றது. இந்த இடத்தில் சம்பந்தனுக்கும் அவரை ஆத்மார்த்த தலைவராக ஏற்றுக்கொள்கின்ற சிலருக்கு வெளிவராத ஒரு விடயத்தினை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அண்மையில் கொழும்பில் மேற்குலகின் இராஜதந்திரிகள் குழு ஒன்றுடன் தமிழ்த் தேசியத்திற்காகக் குரல்கொடுத்துவருகின்ற ஒரு குழுவினர் சந்திப்பு நடத்தியிருக்கின்றனர். குறித்த சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை தொடர்பில் குறித்த தரப்பு விளக்கியிருக்கின்றது. அதனைச் செவிமடுத்த மேற்குலக இராஜதந்திரிகள் இந்த விடயம் நடைமுறைக்குவராதென்று கூறிவிடமுடியாது. ஆனால் காலம் எடுக்கலாம் என்று நம்பிக்கை தரும் வகையில் பதிலளித்ததாக தெரியவந்திருக்கின்றது. சர்வதேச ஒழுங்கு எமக்கான ஒரு வலுவான தீர்வினை நோக்கியே செல்கின்றது என்பதை கடும்போக்கான நிலைப்பாட்டில் இருந்த குறித்த இராஜதந்திரிகள் குழுவினரின் கருத்து தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்ற நிலையில், காலத்திற்கு பொருத்தமற்ற விடயங்களைக் கையிலெடுத்து எமது போராட்டத்தினை கொச்சைப்படுத்துவதன் மூலம் மூத்த(!) அரசியல்வாதியான சம்பந்தன் எதனைச் சாதிக்க முற்படுகின்றார்? அவரது பாணியில் விடுதலைப்புலிகளைப் பழிவாங்குவதாக எண்ணிச் செயற்படுகின்றாரா? அல்லது சிங்களவர்களுக்கு அடிபணிந்து பழகிப்போனதன் வெளிப்பாடாக அவர் செயற்படுகின்றாரா? என்பதும் கேள்விக்குரிய விடயமாக மாறியிருக்கின்றது.

திரு சம்பந்தன், சிங்கள தேசிய இனத்தின் பிரிக்கமுடியாத ஒரு நபராகவே வாழ்ந்து வருகின்றார் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களைப் பட்டியலிட முடியும். யாழ்ப்பாணத்தில் மே நாள் நிகழ்வின் போது நிற்பதற்கே வேறு நபர்களின் உதவியினை நாடியிருந்த போதிலும் மேடையில், பாய்ந்துவிழுந்து சிங்கக் கொடியினை கையிலேந்தி தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தார். அதன் போது எழுந்த எதிர்ப்பலைகளைச் சமாளிப்பதற்கு தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா குறித்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரியதும் குறித்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரவேண்டிய தேவை தமக்கு இல்லை என்று சம்பந்தன் மீண்டும் தனது செயற்பாட்டி நியாயப்படுத்தியதும் நினைவிருக்கலாம். அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்ற ஒவ்வொரு பிரதான நிகழ்வுகளின் போதும் சிங்கள தேசியக் கீதமோ அல்லது அதன் இசையோ கட்டாயம் இசைக்கப்படவேண்டும் என்பதே சம்பந்தனின் நிலைப்பாடாக அமைந்துவருகின்றது.

பாராளுமன்றில் அவர் பகிரங்கமாக உரையாற்றிய போதே அவரது உள்மன வெளிப்பாடு வெளிப்பட்டிருந்த போதிலும் கடந்தகாலங்களில் இந்தியா உட்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள் ஒவ்வொன்றின் போதும் சம்பந்தன் இந்த விடயத்தினையே மீளவும் மீளவும் தெரிவிப்பார் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு சந்திப்புக்களிலும் புலிகளின் கொலைப்பட்டியிலில் தனது பெயர் தான் முதலாவதாக இருந்ததாகத் தெரிவித்துவருகின்றமையும் வெளிவந்திருக்கின்றது. இதனை விடவும் மிக முக்கியமாக சிறைச்சாலைகளில் இருக்கின்ற அரசியல் கைதிகள் தொடர்பிலும் அக்கறையற்றவராக அவர்கள் வெளிவரவேண்டும் என்பதில் துளியளவேனும் இரக்கமற்றவராகவே அவர் இருந்துவருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றதன் பின்னர் இன்றுவரையில் தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்காக எந்த ஒரு சிறைச்சாலைக்குச் சென்றதாகவோ அல்லது அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களில் பங்குகொண்டதாகவோ இல்லை. மாமனிதர் ரவிராஜ் அவர்களும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தென்னிலங்கையில் உள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற போது குறித்த குழுவுடன் தான் வரப்போவதில்லை என்றும் தன்னை சிறையில் உள்ள அரசியல் கைதிகள் கொலை செய்துவிடுவார்கள் என்றும் சம்பந்தன் தெரிவித்திருந்ததாக ரவிராஜ் அவர்களே ஒரு இடத்தில் தெரிவித்திருக்கின்றார். ஆக, விடுதலைப்புலிகளுடனான சந்திப்புக்களின் போதுகூட அவர் திறந்த மனதுடன் செயற்பட்டிருப்பார் என்பதை எந்த வகையில் நம்பமுடியும். அதேபோல தற்போதும் கூட ஜனாதிபதியுடனோ அல்லது வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனோ இடம்பெறும் சந்திப்புக்களின் போது கூட தனிப்பட்ட ரீதியில் கலந்து கொள்ளும் சம்பந்தன் எமது இன விடுதலைக்கான தூய்மையான குரலாக எவ்வாறு ஒலிப்பார் என்று எண்ணமுடியும்.

ஒட்டுமொத்த தமிழினமும் இன்று சர்வதேச ரீதியாக திரும்பிப்பார்க்கும் நிலையினை ஏற்படுத்தியவர்கள் தமிழீழவிடுதலைப்புலிகள் என்பதை எவரும் நிராகரிக்கமுடியாது. இன்று கூட ஒவ்வொரு விடயங்களில் இருந்தும் தப்பித்துக்கொள்வதற்காக ஒவ்வொரு சம்பவங்களுடனும் விடுதலைப்புலிகளைத் தொடர்புபடுத்தியே இலங்கை அரசு கருத்துவெளியிட்டுவருகின்றது. வெள்ளைக்கொடி காட்டிக்கொண்டோ, கறுப்புத்துணியால் வாய்களைக் கட்டிக்கொண்டோ எதனையும் சாதித்துவிடமுடியாது என்று தான் அகிம்சை வழியிலான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இளைஞர்களை ஆயுதவழியிலான போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தூண்டியவர்கள் அதற்கான உந்துதலைக்கொடுத்தவர்கள் அகிம்சாவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் சம்பந்தன் உட்பட்டவர்கள் என்பது வரலாற்றுச் சான்று. இந்நிலையில் நினைத்துப் பார்க்கமுடியாது தியாகங்களால் எழுதப்பட்ட விடுதலைப்போராட்டத்தில் குளிர்காய்ந்து கொண்டு விடுதலைப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதையும் போராட்ட அமைப்பை தீண்டத்தகாத ஒரு அமைப்பாக கருத்துவெளியிடுவதையும் சம்பந்தன் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதே தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் தீவிரமான நிலைப்பாடாகும்.

இது இவ்வாறு இருக்க, சம்பந்தனுக்காக காலை உணவு தயார் செய்து காத்திருந்ததாகவும், புலம்பெயர் மக்களுக்கு அஞ்சியா சம்பந்தன் தனது சந்திப்பைத் தவிர்த்தார் என்றும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச கேள்வி எழுப்பிய விவகாரம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம். இந்த விடயத்தின் பின்னால் நடந்த சில சம்பவங்களையும் பகிரங்கப்படுத்தவேண்டிய தேவை உணரப்பட்டிருக்கின்றது.

இறுதியாக நடைபெற்ற கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது அரசாங்கத்துடனான பேச்சுத் தொடர்பில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக தென்னாபிரிக்காவில் அரசுடனான சந்திப்பு ஒன்றை தென்னாபிரிக்காவின் முன்னிலையில் முன்னெடுப்பது என்றும் அரசுடனான பேச்சுவார்த்தைக்கான ஒரு பேச்சுவார்த்தையாக அது அமையும் என்றும் இதற்கான அழைப்பினை தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதர் விடுத்ததாகவும், ஒவ்வொரு தரப்பில் இருந்தும் தலா இருவர் பங்கேற்பது என்றும் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றது என்று சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். அதேபோல அரசாங்கம் அழைப்புவிடுத்தால் பேச்சுக்களில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் சம்பந்தனும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். இதன் போது கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சிப் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, மற்றும் ஈபிஆர்எல்எப் பொதுச் செயலாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் அண்மையில் ஜேர்மனியில் நடைபெற்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். சர்வதேச ரீதியாக சில மாதங்களில் ஏற்படவுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் கூட்டமைப்பைப் பயன்படுத்த முற்படலாம் அதற்கு உடன்படக்கூடாது என்று தமிழ் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தியதாகத் தெரிவித்து குறித்த சந்திப்பினைத் தவிர்க்கவேண்டும் என்றும் கேட்டிருக்கின்றார்கள். இருப்பினும் அதன் போது கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன் அரசாங்கம் ஏமாற்றக்கூடும் ஆனாலும் மஹிந்தவுடனான சந்திப்பினைத் தவிர்க்கமுடியாது என்று கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் தான் அவசரமாக சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச அழைப்பு விடுத்திருக்கின்றார். அந்த அழைப்பிற்கு அமைய குறித்த சந்திப்பில்  கலந்துகொள்வதென்று சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் முடிவு செய்ததாகவும் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டமையால் தனியாக சந்திப்புக்களில் பங்கெடுப்பது எதிர்காலத்தில் வீண் விமர்சனங்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாகவே சந்திப்பினைத் தவிர்த்துக்கொண்டதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவந்திருக்கின்றது.

இருப்பினும் தென்னாபிரிக்காவில் சந்திப்பு என்ற விடயத்தில் பொதிந்திருக்கின்ற அதிர்ச்சி தருகின்ற விடயம் தொடர்பில் பாராளுமன்றக்குழு சந்திப்பின்போது சம்பந்தனாலோ, சுமந்திரனாலோ உண்மையான விடயம் வெளிப்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்திருக்கின்றது. உண்மையில் தென்னாபிரிக்காவில் சந்திப்பு என்ற விடயத்தின் பிரதான சூத்திரதாரியாக தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதர் இருந்திக்கின்றார் என்பதும் தென்னாபிரிக்காவில் கூட்டமைப்பு சந்திப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதற்கும் பின்னால் பாரிய சூழ்ச்சி இருப்பதும் தற்போது தெரியவந்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில், நடைபெற்ற போர் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக்கோருவதென்றும் அதன் மூலம் தப்பித்துக்கொள்வதென்றும் இலங்கை அரசு திட்டமிட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான தென்னாபிரிக்காவிற்கான தூதுவர் கூட்டமைப்புடனும் கலந்தாலோசிப்பதுடன் மட்டுமன்றி கூட்டமைப்பையும் இணைத்து சர்வதேசத்தின் மத்தியில் மன்னிப்புக்கேட்பதற்கான சதியாகக் கூட அந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடு அமைந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்தச் சந்திப்பினை வலுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தரப்பில் இருந்தும் தலா இருவர் பங்குகொள்வது என்ற விடயம் அமைந்திருக்கின்றது. இருவர் தான் சந்திப்பில் கலந்து கொள்வதாக இருந்தால் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தனும் அவருடைய செயலாளரும் பேச்சுவார்த்தைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவருமான சுமந்திரனும் மட்டுமே பங்கெடுப்பர் என்பது அடுத்த விடயமாகும். இந்த விடயங்களை சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட சம்பந்தன், சுமந்திரன் தரப்பு முன்வைக்கவில்லை என்பது அவர்களின் போக்குத் தொடர்பிலான சந்கேத்தினை இன்னமும் வலுப்படுத்துவதாகவே அமைகின்றது.

 

ஆக, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் போதான கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடக்கம் இன்றுவரையில் சம்பந்தனின் போக்கு தமிழ்மக்களை தொடர் கவலைக்கும் வேதனைக்கும் உட்படுத்தியே வருகின்றது. இனி வருங்காலங்களிலாவது தமிழ் மக்களுக்காக சிந்தித்து அவர் செயலாற்ற முன்வரவேண்டும் என்பதுவே வரலாற்றுக்கு அவர் விட்டுச்செல்லும் நற்பெயராகும் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்ட மாணவர் பிண்ணணி தொடர்பாக ஒரு வெத்து வெட்டு லோயர் என அறிந்த பின்பும் தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன..? அட்லீஸ்ட் உங்கட குருநாதர் கூட ஏதும் அவரினட திருவாயை செப்பவில்லை,,  பல் துலக்கி ரொம்பநாள் ஆகி கிடக்கும் போல கிடக்கு ... கூத்தமைப்புக்குள் மற்றவர் போராடும் போது  அது என்ன தமிழரசு கட்சி.. டோங்கி ரொலாங்கு  கட்சி

டிஸ்கி:

பிளீஸ் .. கீப் சைலைண்ட்ஸ்  அதான் ராஜதந்திரம்...  சிங்களவனின்ட கொடி(கோவண)யை  பிடித்து ஆட்டினாலும் அதான் ராஜ தந்திரம் ... டியூசன்(தனி வகுப்பு) சொல்லி தராங்க  .. நீங்களும் போய் சேர்ந்தீர்கள் என்றால்  அந்த "ரோஜதந்திர பயிற்சி" இலவசமாக சொல்லிதருவார்கள் கூடவே வெளியால வரும் போது குச்சி மிட்டாய் தருவார்கள் வாங்கி சப்பிட்டு வரவேண்டியதுதான்....

தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றும் சிங்கள - இந்தியக் காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும் சம்பந்தனுக்கு  அந்தாளின் எடுபிடி சுமந்திரன் சேற்றுக்குள் நின்றுகொண்டே வக்காலத்து வாங்குது.

சம்பந்தனோ, பிள்ளையானோ.. நாம் பொருட்படுத்ததேவையில்லை.

புலம்பெயர் அமைப்புகளில் எது இந்தியாவின் நாடகம், எது உண்மையானது, எதன் செயற்பாடளர்கள் அடக்கப்படுகிறார்கள் என ஆராயுங்கள்.. பிரியோசனமா போகும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.