Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சுப்பிரமணிய சுவாமி மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

subramanian-swamy-seithy-150.jpg

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று தமிழ்நாடு, கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறான கோரிக்கையை அவர் முன்வைத்தார். உலக பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக இந்த விருதை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை படைவீரருக்கு இந்தியாவில் வைத்து பயிற்சி வழங்கப்படுவதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைதி திரும்பியுள்ள இலங்கையில் இந்திய மாணவர்கள் சென்று கல்விகற்க நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=72750&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா ஐயா,

 

கையோட சாமியாருக்கு ஒரு 'தேசாபிமான'.... ஒண்டு...ஆர்டர்

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும், சாமிக்குக் கொழுப்பு அதிகம் தான்!

 

 

dn15058-1_500.jpg

 

 

 

இருந்தாலும், சாமிக்குக் கொழுப்பு அதிகம் தான்!

 

 

dn15058-1_500.jpg

 

இது என்ன காங்கிரஸ் கூட்டம் மகிந்தவிற்கு........ பேன் பொறுக்குகின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த திறமையும் பதவியும் இன்றி பிரபலாமாக இருப்பது எப்படி?

சுவாமி மிக தெளிவாக சிந்தித்து செயல் படுகிறார். 
தமிழ் நாட்டை விட்டால் வேறு எங்கும் இப்படி பிழைக்க முடியாது. தமிழன் ஒருவன்தான் முது எலும்பு இல்லாதான் என்பது நன்கு  அறிந்து விளம்பரம் செய்கிறார்,
  • கருத்துக்கள உறவுகள்
இது என்ன காங்கிரஸ் கூட்டம் மகிந்தவிற்கு........ பேன் பொறுக்குகின்றார்களா?

 

இல்லை, வந்தி!

 

காங்கிரஸ் கூட்டத்திற்கு, மகிந்தவுக்குக் கிட்டப் போகப் பயம்! 

 

இந்தப் படத்தில் 'பேன்' பொறுக்குபவர்கள், சாமியும், சோவன்னாவும்! :D  

ஆ- சாமி இருக்கும் மூளையை பாவித்து பலரை  சீண்ட முயல்கிறார். ஆனால் என்ன தேர்தலில் ஒரு சீட் எடுக்க கஸ்டம்.

 

மகிந்தாக்கு பாரளுமன்றத்தில் 2/3 இருக்கு.

 

மகிந்தா, இந்த இலகுவில் விலையாகும் சாமியை மட்டுமல்ல அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரையே எளிதில் வாங்கிவிட்டார்.  அந்த நிலையில் இலங்கை வந்து போன சாமி எப்படி எல்லாம் விழுந்து கும்பிடும்?

இராஜீவ் காந்தி கொலையில் இவரை விட்டுவைப்பவர்கள் ஊடாக தனக்கு எதுவும் நடக்காது என்ற அபாரமான துணிவு...

சாமி பாரதரத்தினா கொடுக்கச் சொன்னால் ஈழத்தமிழரில் அக்கறை கொண்டோர் வழங்கக் கூடாது என்று சத்தப்போடுவார்கள். அவர்களுக்குத் தேவை ஈழம் கொடு தீர்வு கொடு போர்க்குற்றம் போன்றவற்றைப் பற்றி கதைக்காமல் இப்படி ஏதாவது கதைத்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதே. இன்றைக்கு முப்பதாண்டுகளுக்கு மேலாக இப்படி எத்தனை விதத்தில் தமிழர்களின் அரசியல் சிந்தனையை ஆழ்கின்றார்கள். இவற்றைக் கடந்து செல்லுமளவுக்கு தமிழர்களுக்கு ஆண்டவன் புத்தியை கொடுக்கவில்லை என்பது துரதிஸ்டமே.

இப்பிடியுமா புழைப்பு  நடத்துவாங்க?

சாமி பாரதரத்தினா கொடுக்கச் சொன்னால் ஈழத்தமிழரில் அக்கறை கொண்டோர் வழங்கக் கூடாது என்று சத்தப்போடுவார்கள். அவர்களுக்குத் தேவை ஈழம் கொடு தீர்வு கொடு போர்க்குற்றம் போன்றவற்றைப் பற்றி கதைக்காமல் இப்படி ஏதாவது கதைத்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதே. இன்றைக்கு முப்பதாண்டுகளுக்கு மேலாக இப்படி எத்தனை விதத்தில் தமிழர்களின் அரசியல் சிந்தனையை ஆழ்கின்றார்கள். இவற்றைக் கடந்து செல்லுமளவுக்கு தமிழர்களுக்கு ஆண்டவன் புத்தியை கொடுக்கவில்லை என்பது துரதிஸ்டமே.

 

சாமி பாரதரத்தினா கொடு என்றால் அதானல் புகழடையப்போகும் ராஜபக்சாக்கள், தீர்வு கொடுப்பார்கள், போற்க்குற்ற விசாரணையை ஆரம்பிப்பார்கள். ஆனால் தமிழர்கள் சத்தம் போட்டு சாமி கேட்கும் பாரத ரத்தினாவை கெடுத்து தமிழருக்கு வரவிருக்கும் தீர்வை கெடுக்கிறார்கள் என்பது இவர்களின் வாதம். ஆதாவது கிந்திய மேட்டுக்குடியின் பிரதிநிதியான சாமி பரிந்துரைக்கும் பாரத ரத்தினா என்ற காமுக, கொலைவெறி பட்டம் பௌத்த மேட்டுக்குடிகளுக்கும் பௌத்த சாதி வெறியருக்கும்தான் பொருத்தம் என்பது இவர்கள் உள்ளே ஒழித்து மறைத்து வைத்து நடத்தும் விவாதம்.

Edited by மல்லையூரான்

பிரேமதாசாவின் நல்லாசியுடன் தான் சாமி ரஜீவை போடுவிச்சவர்;இப்போ சோனியா அம்மாவிடம் ஏதோ கசப்பு போல

மன்மோகன் சிலவேளை தலையை ஆட்டினாலும் ஆட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
மன்மோகன் சிலவேளை தலையை ஆட்டினாலும் ஆட்டும்.

 

மன்மோகன் கட்டாயம் தலையை ஆட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.