Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே ஒருமுறை சிந்திப்போம் ஓரணியில் சந்திப்போம்.

Featured Replies

ஒரே ஒருமுறை சிந்திப்போம் ஓரணியில் சந்திப்போம்.

 
march4o.jpg
 
பேதங்கள் தொலைப்போம் -

எங்களுக்காக தம்மை தந்தவர்கள்

பாதங்கள் தொழுது வேண்டுகிறோம்

எங்களுக்குள் இருக்கும்

பேதங்கள் தொலைப்போம்.

தாயகம் மலரவும் தமிழ்க்கொடி பறக்கவும்

தம்மையே தந்து தரணிக்கு எம்மை இனம் காட்டிய

தவப் புதல்வர்களின் இலட்சியம் நிறைவேற

பேதங்கள் தொலைப்போம்.

ஒன்று பட்ட ஓர் இனமாய்

ஒருங்கிணைந்து செயற்படுவோம்

உத்தமர் தம் உயிராலே நெய் ஊற்றி

ஒளி ஏத்தி வைத்த தீபமதை

சத்தியம் செய்து காத்து வைப்போம்.

அண்ணன் அடிக்கடி சொல்லிடுவான்

அடுத்த சந்ததிக்கு வேண்டாம் நாம் பட்ட துன்பம் என்று

அவன் வழித்தடத்தில் தடம் பதித்து வரும் நாம்

அடுத்த சந்ததிக்காய் எதை விட்டுச் செல்லப் போகிறோம்

அடிமை வாழ்வையும் பிரிவினையையுமா

ஒரே ஒருமுறை சிந்திப்போம்

ஓரணியில் சந்திப்போம்.   

                                                                                            

                                                                                                        - இணுவையூர் மயூரன்

 

http://inuvaijurmayuran.blogspot.ch/2012/03/blog-post.html

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலிருந்து செல்லும் புகையிரதத்துக்கு ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

எல்லோரும் வரணும்.

நானும் அங்கே சமூகம் அளிப்பேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் சந்திக்கலாமே அங்கு

உலகே உனக்கு கண்ணில்லையா எம் தமிழீழ மண் என்ன மண்ணில்லையா உலகமக்கள்தான் மக்களா .........தமிழீழ மக்கள் என்ன கற்களா.............

காலத்தின் தேவைகருதி மிகமுக்கியமான பணி. ஐரோப்பாவிலுள்ள நமது
சகோதரர்கள் பெருமளவில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கவேண்டும். தமது
கருத்துகளை அர்த்தமுள்ள அழகான கவிதையாக வடித்த மயூரனுக்கு எனது
வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

உலகே உனக்கு கண்ணில்லையா எம் தமிழீழ மண் என்ன மண்ணில்லையா உலகமக்கள்தான் மக்களா .........தமிழீழ மக்கள் என்ன கற்களா.............

 

தமிழ் சூரியன் அண்ணா,

உலகம் கண் திறந்துதான் இப்போ பார்க்கிறது. நாம்தான் எம் மக்களின் நிலையை மறந்து இரண்டு முன்று பட்டுப்போய் நிற்கின்றோம். நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் உலகம் உற்று நோக்கும். 

 

முடிந்தால் நாம் ஒவ்வொருவரும் இம்முறை எங்களோடு நெருங்கிப்பழகும் நாம் வாழும் நாடுகளைச் சேர்ந்த ஒவ்வொருவரை அழைத்துச் சென்றால் பயனளிக்கும்.

மயூரன் ஒன்றுபட வேணும் என்ற உங்கள் கருத்துக்கு தலை வணங்குகின்றேன்...... அந்த எண்ணத்தில், சிந்தனையில் சிந்தித்து செயற்பட்ட அந்த சிகரத்தின் அடியில் வளர்ந்தவன் .........எந்த மாற்றிக்கருத்துக்கும் இடம் கொடுக்காதவன்...........தமிழீழ தெசம் ஒன்றே எமது முடிவென திடம் கொன்டவன் .............அன்று தொட்டு இன்று வரை அதற்காக எதோ செய்பவன் ..................காத்திருக்கிறேன் ,எதிர்பார்த்திருக்கிறேன் ..........ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ............

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும், மீண்டும், முருக்க மரமேறும்,

விக்கிரமாதித்தன்களாய்,

ஆண்டாண்டு காலமாய் அணிந்திட்ட,

அடிமைத் தளை உடைத்து,

ஆண்டு மடிந்தவன் தமிழன் எனும்,

அவப்பயர் தனைத் துடைக்க, 

மாண்டழிந்த சொந்தங்களின் பெயரால், 

முளை விட்டுக் கிளர்ந்தெழுவோம்!

 

கவிதைக்கு நன்றிகள், மயூரன்!

 

  • தொடங்கியவர்

கவிதைக்கு வாழ்த்துச் சொல்லி ஊக்கப்ப்டுத்திய மகம், புங்கையூரானுகும் கருத்தெழுதிய உறவுகளுக்கும் நன்றி.

கவிதைக்கு பாராட்டுகள் மயூரன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்தே!! எங்கள் ஒருமித்த கருத்து!

 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

அண்ணன் அடிக்கடி சொல்லிடுவான்

அடுத்த சந்ததிக்கு வேண்டாம் நாம் பட்ட துன்பம் என்று

அவன் வழித்தடத்தில் தடம் பதித்து வரும் நாம்

அடுத்த சந்ததிக்காய் எதை விட்டுச் செல்லப் போகிறோம்

அடிமை வாழ்வையும் பிரிவினையையுமா

ஒரே ஒருமுறை சிந்திப்போம்

ஓரணியில் சந்திப்போம்.   

                                                                                            

                                                                                                        - இணுவையூர் மயூரன்

 

 

காலத்தின் தேவை இது கலங்கிக்கிடக்கும் தமிழர் அல்ல நாம், கைகோர்த்து நீதிகேட்போம் அனைவரும் வாரீர்.

  • 2 months later...
  • தொடங்கியவர்

 கோமகன் Thamilthangai சுந்தரம் ஆகியோருக்கு கருத்தோடு இணைந்து ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.