Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவரைப் புகழ்ந்த சிங்களப் படைச் சிப்பாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் சிறிலங்காவிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் அலைவரிசை மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார்.

 

இச் சம்பவமானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூரியன் எவ்.எம் அலைவரிசையில் தைப்பொங்கல் தினமாகிய திங்கட்கிழமை நிகழ்ச்சியொன்று ஒலிபரப்பாகியது. “தமிழ் மக்களின் கலாசாரம் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றதா” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வாசகர்கள் தொலைபேசியூடாக கருத்துக்களைக் கூற அந்தக் கருத்துக்கள் நேரடியாகவே ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன.

thalaivar20146.jpg

இந்த நிலையில் வவுனியாவிலிருந்து தொடர்புகொண்ட பெண்ணொருவர் தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடுகள் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்படுகிறது என்று கூறினார். தமிழ் மக்களில் அக்கறையுடைய நிர்வாகம் ஒன்று இல்லாமையாலேயே கலாசார சீரழிவுகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் கூறினார்.

 

பின்னர் வன்னியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டினார். பாடசாலை செல்லும் வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவன் மாமரம் ஒன்றுக்கு அருகில் ஒழிந்து நின்று சிகரெட் புகைத்த போது அவ்வழியால் சென்ற சிறிலங்கா இராணுவத்தினன் ஒருவன் அங்கே வந்து அந்த இளைஞனை அடித்துள்ளார். அடிக்கும்போது “இந்த வயதில் சிகரெட் புகைக்கிறாயோ? பிரபாகரன் இல்லாத குணத்தைக் காட்டுகிறாயா? பிரபாகரன் இருந்தால் இன்று இப்பிடிச் செய்வாயா?” என்று கேட்டு அடித்துள்ளார்.

 

அதாவது பிரபாகரன் இருந்தால் வன்னி உட்பட தமிழர் தாயகத்திலுள்ள யாருமே சீரழிவுக்கு உள்ளாகமாட்டான் என்பதை ஒரு சிங்கள இராணுவ வீரனே அறிந்து வைத்திருக்கின்றார். அந்தளவுக்கு தலைவரின் ஆட்சியில் கலாசார சீரழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இன்று அவை கட்டுக்கடங்காமல் செல்கின்றன என்றும் அந்தப் பெண் வானொலி அலைவரிசையில் கருத்து தெரிவித்தார்.

 

இதைக் கேட்ட வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் செய்வதறியாது திகைத்து வாயடைத்து நின்றனர். குறித்த பெண்ணின் உரையாடலை வானொலிகளில் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் அவரின் வீரத்தை மனதுக்குள் மெச்சினர்.
 

  • கருத்துக்கள உறவுகள்

வானோலிக்காரரர் ஏனாம் திகைச்சு நின்டவை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
வானோலிக்காரரர் ஏனாம் திகைச்சு நின்டவை :rolleyes:

 

அவைக்கு கோத்தவாயவின் ஞாபகம் வந்து போயிருக்கும்..........

  • கருத்துக்கள உறவுகள்

தனது கருத்தை நேரடியாக வானொலியில் தெரிவித்த

அந்த முகமறியாத பெண்ணுக்கு வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இளைஞனை திருத்த முயன்ற அந்த முகமறியா படை வீரனுக்கும் நன்றிகள்

ஒரு இளைஞனை திருத்த முயன்ற அந்த முகமறியா படை வீரனுக்கும் நன்றிகள்

 

சுண்டல் கவனமப்பா துரோகியெண்டு முத்திரை குத்திப்போடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு இளைஞனை திருத்த முயன்ற அந்த முகமறியா படை வீரனுக்கும் நன்றிகள்

 

உண்மைதான் சுண்டல் ஒரு நல்ல சிங்களவன் போல் இருக்கின்றது :)

  • கருத்துக்கள உறவுகள்
வானோலிக்காரரர் ஏனாம் திகைச்சு நின்டவை :rolleyes:

 

 

TV எண்டால் திகைகிறது வடிவாய் தெரியும்.
 
அனால் இங்க ரேடியோவில திகைச்சு நிண்டதை கேட்டவயலோ? பார்தவயலோ?
 
தமிழ் சிறி பாசையில சொல்லுறது எண்டா: ஒரு கோதாரியும் விளங்குதில்லை!! 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியில் உண்மைபொய் தெரியாவிட்டாலும்......... விடுதலைப்புலிகளின் காலத்தில் ஒரு கட்டுக்கோப்பு இருந்தது என்பதை அனைவரும் ஏற்க தலைப்பட்டுவிட்டார்கள்.அண்மைய தினங்களில் யாழில் இருந்துவரும்  புதினங்களை பார்க்கவே உண்மை நிலை தெரிகின்றது.வெளிவராத விடயங்கள் ஆயிரமாயிரம்..........

இந்த விடயத்தில் இப்படி அலட்ட தேவையில்லை , நம்ம தலைவரை பற்றி இப்ப இவர்கள் சொலலிதான் நாம் பெருமை பட தேவையில்லை . இதனை நாம் கண்டு அனுபவித்தவர்கள் . கடவுள் இருப்பது உண்மையோ இல்லையோ தெரியவில்லை .

தமிழர்களின் காத்தல்  கடவுள் எங்கட தேசியதலைவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்த விடயத்தில் இப்படி அலட்ட தேவையில்லை , நம்ம தலைவரை பற்றி இப்ப இவர்கள் சொலலிதான் நாம் பெருமை பட தேவையில்லை . இதனை நாம் கண்டு அனுபவித்தவர்கள் . கடவுள் இருப்பது உண்மையோ இல்லையோ தெரியவில்லை .

தமிழர்களின் காத்தல்  கடவுள் எங்கட தேசியதலைவர்

உண்மைதான் துன்னையூரான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.