Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓவியா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளைநான் பார்க்கவில்லை.எனக்கு தெரியவும் தெரியாது.நிறம் அதுவும் தெரியாது.ஆனாலும் அவளுக்கு நான் வைத்த பெயர் ஓவியா.பதினாறு வருடங்கள் பின் நோக்கிபார்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------
1997.எதோ ஒரு மாதத்தின் எதோ ஒருநாள்.விடிகாலை பொழுது.காந்தன் அவளின் வருகை கருதி அழகாய் அமைத்திருந்த தன் வீட்டில் அவளின் கனவுடன்.தொலைபேசி-காதில் வைத்தான்.
அவளேதான்.அத்தான் நான் உக்ரைன் நாட்டிற்கு வந்திட்டேன்.எனக்கு பிரச்சனை இல்லை.நீங்கள்என்ன செய்கிறிங்கள்.தேன்வந்து பாய்ந்தது காந்தனின் காதிலே .காந்தனுக்கு சிறு வயதில் இருந்தே பேசிவைக்க பட்ட                             பெண் அவள்.மச்சாள்.சுவிஸ் வந்தநாள் முதல் அவளின் நினைவில் கனவுடன் காதலையும் வளர்த்து வைத்திருந்தான்.இதோ என் தேவதை என்னிடம் வரும் நாள் தூரத்தில் இல்லை.உணறும்

 பொழுதே வாழ்க்கை மலர்ந்தது.வெறும் காமம்தான் வாழ்க்கைஎன்றால் காதலே தேவையற்ற நாடுகளில் சுவிசும் ஒன்று.ஆனால் காதலின் சுகம் தராதாகாமம் கடலில் விழ்ந்த மழைத்துளி போன்றது.யாருக்கது வேண்டும் .எனக்காகவும் அவளுக்காகவும் இருவரும் வாழ்வதே வாழ்க்கை.அந்த வாழ்க்கைக்காக காத்திருந்த காந்தனின் தவம் கைகூடும் காலம் பக்கத்தில் வந்து சேர்ந்தது.
-------------------------------------------------------------------------------------------
அத்தான் சாப்பிட்டிங்களே எனக்கு இங்கு பிரச்சனை இல்லை.என்னுடன் நான்கைந்து அக்காக்களும் நிக்கினை.ஒன்றாகத்தான் அனுப்பிறம் எண்டு சொல்லுறாங்கள்.நான் வந்திடுவன் அத்தான் கவலைப்படாதேங்கோ.அவளின் குரலை உசிருக்குள் தேக்கி வைத்தான்.
----------------------------------------------------------------------------------
அத்தான் என்னுடன் நிண்ட அக்காக்களை கூட்டிக் கொண்டு போட்டிணை.நான் வேற முகவரின் ஆளாம் அதாலை என்னை அடுத்தமுறை தானாம் அனுப்புவினை .தனிய நிக்க பயமாக்கிடக்குது .அத்தான் பயப்பிடாதையுங்கோ .நான் எப்பிடியும் உங்களிடம் வருவான் தானே.
கவலைப்படாதே எல்லாம் சரிவரும் நாளை கதைக்கிறேன்.
இடையில் பலகதைகள் பேசியிருப்பார்கள் அது தேவையில்லை நமக்கு.பேசியை பேசிமுடித்து வைத்தான்.
------------------------------------------------------மறுநாள் விடிந்தது.பேசவில்லை மறுநாளும் விடிந்தது பேசவில்லை.
  என் காதல் பெண்ணே எங்கே தொலைந்தாய்.காத்திருக்கும் விழிகளிலே தீ பற்றி எரிகுதடி
-----------------------------------------------------------------------------------
தொலைந்து போனாள் என் ஓவியப்பெண் .கண்டவர்கள் உள்ளீர்களா .கண்டதை சொல்வீர்களா?
(என்ன நடந்திருக்கும் எங்கு ஒளிந்து இருப்பாள் )

அண்ணா, காந்தன் என்று குறிப்பிட்டது உங்களையா?

உண்மையில் ஆண்களை ஏஜென்சி மூலம் வெளிநாட்டுக்கு கூப்பிட்டாலும் பெண்களை அதே முறையில் அழைப்பது தவறு. மிக மிக நம்பிக்கையான ஏஜென்சி காரர் மூலம் அழைத்தால் சிலவேளை பிரச்சினை இல்லாமல் வந்து சேர்வார்கள். ஆனால் பிரச்சினை வராது என்று உறுதியாக நம்ப முடியாது. அவர்களாலும் பிரச்சினை வரலாம். தெரியாத ஏஜென்சி மூலம் அழைக்கும் போது பெரும்பாலும் பிரச்சினை வர சாத்தியம் உள்ளது.

இங்கு அந்த பெண் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாமல் விட்டமைக்கு பலவாறு யோசிக்கலாம்.

  • அந்த பெண்ணை ஏஜென்சி காரன் பாலியல் வன்புணர்வு செய்திருப்பின் அதை உங்களிடம் சொல்ல முடியாமல் உங்களை ஏமாற்றவும் முடியாமல் இருந்திருக்கலாம்.
  • அந்த பெண்ணின் உயிருக்கு ஏதாவது நடந்திருக்கலாம்.
  • வரும் வழியில் ஏனென்சி காரன் அந்த பெண்ணை காதலிப்பது போல் நடிக்க அதற்கு மயங்கி அவளும் ஏனென்சி காரனை காதலித்து அவனையே திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கலாம்.
  • நீங்கள் அந்த பெண்ணை விரும்பினாலும் அந்த பெண்ணுக்கு உங்களை திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் வெளிநாட்டுக்கு வருவதற்காக உங்களை திருமணம் செய்ய சம்மதித்து விட்டு இடையில் மாறி சென்று அல்லது தெரிந்த நபர்கள் யாரும் அழைத்து சென்றிருக்கலாம்
  • இடைநடுவில் உங்கள் தொலைபேசி இலக்கத்தை / தனது mobile ஐ தொலைத்தும் இருக்கலாம்.
  • அல்லது ஏஜென்சி காரன் இறுதிவரை கொண்டு வந்து சேர்க்காமல் இடையில் அந்த பெண்ணை கைவிட்டிருப்பின் அப்பெண் என்ன ஏது செய்வதென்று தெரியாமல் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் இருந்திருக்கலாம்.

 

இவற்றில் ஒன்றாக அல்லது வேறு காரணமாகவும் இருக்கலாம்.

 

இந்த விடயத்தில் காந்தன் என்பவரில் பிழை உள்ளது. (அவர் நீங்களாக இருந்தால் கூட)

அதே சமயம் அந்த பெண்ணின் பெற்றோரில் பிழை உள்ளது.

ஏஜென்சி காரனிடம் முன்கூட்டியே பணத்தை கொடுத்து விட்டீர்களா? ஆம் என்றால் அது கூட உங்கள் பக்கம் பிழை.
முன்கூட்டியே கொடுக்கவில்லை என்றால் அல்லது அரைவாசி பணத்தை கொடுத்திருந்தால் ஏனென்சி காரன் மிகுதி பணத்தை கேட்கவில்லையா? இல்லை என்றால் இவ்விடயத்தில் ஏஜென்சி காரன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம்.

 

இது உண்மை சம்பவம் போல் இருப்பதால் நீங்கள் எழுதியமைக்கு என்னால் பாராட்டி கருத்து எழுத முடியவில்லை.

 

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் காந்தன் இல்லை துளசி .ஆனால் இது உண்மையில் நடந்தொரு சம்பவம் .

நான் காந்தன் இல்லை துளசி .ஆனால் இது உண்மையில் நடந்தொரு சம்பவம் .

ஓ மன்னிக்கவும். அப்படியானால் அந்த நபரிடம் இவற்றை கேளுங்கள்.

ஏஜென்சி காரனிடம் முதலே முழு பணத்தையும் கொடுத்து விட்டாரா? இல்லை என்றால் பின்னர் அந்த ஏஜென்சி காரன் மிகுதி பணத்தை கேட்கவில்லையா?

ஏஜென்சி காரனை ஒழுங்கு படுத்தியது யார்? ஒழுங்குபடுத்தியவர் பின்னர் ஏஜென்சி காரனை தொடர்பு கொண்டு எங்கே அந்த பெண் என்று கேட்கவில்லையா? கேட்டிருந்தால் என்ன பதில் கிடைத்தது?

அத்துடன் அந்த பெண்ணின் பெற்றோர் இது பற்றி என்ன தெரிவித்தார்கள்?

Edited by துளசி

காதலின் சுகம் தராதாகாமம் கடலில் விழ்ந்த மழைத்துளி போன்றது.யாருக்கது வேண்டும் . எனக்காகவும் அவளுக்காகவும் இருவரும் வாழ்வதே வாழ்க்கை.

 

இதுதான் இல்லற சூட்சுமம் . நல்ல கதைக்குப் பாராட்டுக்கள் .  கதை எழுதும் பொழுது சம்பவங்களுடன் கோர்த்து தொடர்ச்சியாக சொன்னால் நல்லது .  எழுத எழுத பழக்கத்தில் வரும் . தொடருங்கள் :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துளசி மிகுதி கதைக்கு வருகிறேன் .அனைத்தையும் சொல்லுகிறேன் கொஞ்சம் பொறுங்கள்.



கோமகன்  நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் வாழ்வின் அவலம் ஒன்றைத்தொட்டுள்ளர்கள்

தொடருங்கள்

இதுவும் பேசப்படணும்

  • கருத்துக்கள உறவுகள்

துளசி மிகுதி கதைக்கு வருகிறேன் .அனைத்தையும் சொல்லுகிறேன் கொஞ்சம் பொறுங்கள்.

கோமகன்  நன்றி.

 

தொடரும் என்றொரு சொல்லை போட்டிருந்தா இங்கை கன சந்தேகங்கள் தீர்ந்திருக்கும். :mellow:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மோசமான ஒரு சம்பவம்.கால ஓட்டத்தில் பலரும் மறந்தே போய் விட்டனர்.மறக்காத மனிதர்களின் ஞாபகங்களில் இன்னும் இருக்கும்.

அண்ணா, காந்தன் என்று குறிப்பிட்டது உங்களையா?

உண்மையில் ஆண்களை ஏஜென்சி மூலம் வெளிநாட்டுக்கு கூப்பிட்டாலும் பெண்களை அதே முறையில் அழைப்பது தவறு. மிக மிக நம்பிக்கையான ஏஜென்சி காரர் மூலம் அழைத்தால் சிலவேளை பிரச்சினை இல்லாமல் வந்து சேர்வார்கள். ஆனால் பிரச்சினை வராது என்று உறுதியாக நம்ப முடியாது. அவர்களாலும் பிரச்சினை வரலாம். தெரியாத ஏஜென்சி மூலம் அழைக்கும் போது பெரும்பாலும் பிரச்சினை வர சாத்தியம் உள்ளது.

இங்கு அந்த பெண் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாமல் விட்டமைக்கு பலவாறு யோசிக்கலாம்.

  • அந்த பெண்ணை ஏஜென்சி காரன் பாலியல் வன்புணர்வு செய்திருப்பின் அதை உங்களிடம் சொல்ல முடியாமல் உங்களை ஏமாற்றவும் முடியாமல் இருந்திருக்கலாம்.
  • அந்த பெண்ணின் உயிருக்கு ஏதாவது நடந்திருக்கலாம்.
  • வரும் வழியில் ஏனென்சி காரன் அந்த பெண்ணை காதலிப்பது போல் நடிக்க அதற்கு மயங்கி அவளும் ஏனென்சி காரனை காதலித்து அவனையே திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கலாம்.
  • நீங்கள் அந்த பெண்ணை விரும்பினாலும் அந்த பெண்ணுக்கு உங்களை திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் வெளிநாட்டுக்கு வருவதற்காக உங்களை திருமணம் செய்ய சம்மதித்து விட்டு இடையில் மாறி சென்று அல்லது தெரிந்த நபர்கள் யாரும் அழைத்து சென்றிருக்கலாம்
  • இடைநடுவில் உங்கள் தொலைபேசி இலக்கத்தை / தனது mobile ஐ தொலைத்தும் இருக்கலாம்.
  • அல்லது ஏஜென்சி காரன் இறுதிவரை கொண்டு வந்து சேர்க்காமல் இடையில் அந்த பெண்ணை கைவிட்டிருப்பின் அப்பெண் என்ன ஏது செய்வதென்று தெரியாமல் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் இருந்திருக்கலாம்.

 

இவற்றில் ஒன்றாக அல்லது வேறு காரணமாகவும் இருக்கலாம்.

 

நீங்களும் பெண்தானே.நீங்கள் எப்படி வந்தீர்கள் துளசி?

நீங்களும் பெண்தானே.நீங்கள் எப்படி வந்தீர்கள் துளசி?

 

நான் பெண்ணாக இருந்து கொண்டு பெண்களுக்கு இப்படி இப்படி நடந்திருக்கலாம் என்று சொல்ல எப்படி மனம் வருகிறது என்று யோசிக்கிறீர்களோ தெரியவில்லை. இதில் நான் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் ஏஜென்சி மூலம் வந்த பல பெண்களுக்கு நடந்தவை தான்... (எல்லோருக்கும் அல்ல...)

 

எந்த பெண்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் பெண்கள் பலர் தாம் அனுபவிக்கும் பிரச்சினைகள் பலவற்றை வெளியில் சொல்வதில்லை... அதை பார்த்து இந்த ஏஜென்சி நல்லவன் என்று நினைத்து வேறு பெண்களையும் அவன் மூலம் எடுப்போம் என்று நினைத்து எடுப்பவர்களும் உள்ளார்கள். <_<

ஆண்கள் எல்லோருக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் பற்றி ஓரளவு தெரியும் தானே. பின்னர் எதற்காக யோசிக்க மறுக்கிறார்கள்? <_<

 

நான் எப்படி வந்தேன் என்று ஏற்கனவே யாழில் எழுதியுள்ளேன். நான் எப்படி வந்தேன் என்பதை தெரிந்து கொள்வதால் உங்களுக்கு நன்மையோ தீமையோ இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் நானும் ஏஜென்சி மூலம் வந்திருந்தால் எனக்கும் சிலவேளை இப்படி நடந்திருக்கலாம் அல்லது நடக்காமல் விட்டிருக்கலாம் என்றே யோசித்து இவ்வளவையும் வாசியுங்கள்.

 

நான் ஆண் என்றல்லவா வேறொரு திரியில் குறிப்பிட்டிருந்தீர்கள்? கேள்வி கேட்கவேண்டும் என்றவுடன் நான் பெண் என்று திடீரென நினைவு வந்து விட்டதோ? :D

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடரும் போடுவதில் கஸ்ரமில்லை.ஆனால் எல்லாவற்றிற்கும் தொடரும் போடா முடியாது சாந்தி.நான் போட்டிருந்தால் உங்களின் பதிலோ துளசின் கருத்தோ இங்கு பதியப்பட்டிருக்காது.அதையும் விட இதை ஒரு கதையாக சொல்ல முடியவில்லை.ஆனாலும் நன்றி சாந்தி.



விசுகு.புலம்பெயர் வாழ்வு தந்த அவலங்களில் இது மறக்க முடியாத அல்லது மன்னிக்க முடியாத நிகழ்வு.இது ஒன்றல்ல.பலவாக இருக்கலாம்.இதற்கான பதிலை காலம் சொல்லும் என்ற காத்திருப்பில் காலங்கள் கரைந்ததுதான் மிச்சம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வண்டு இந்தத்திரி தனிமனித தாக்குதலுக்கு திறக்கப்பட்டதல்ல.சம்பவம் நடந்த காலத்தை மேலே குறிப்பிட்டு இருந்தேன்.வாசிக்கவில்லை என நினைக்கிறேன்.மற்றும் துளசி எழுப்பிய கேள்விகள் அனைத்தும் அந்தக்காலப்பகுதிக்குள் பொருந்தும்.மேலும் இது பற்றி ஏதாவது தெரிந்தால் ஆக்கபூர்வமாக எழுதுங்கள்.

இங்குள்ள துணைமுகவர் ஒருவரின் உதவியுடன் அனுப்பப்பட்ட இந்த யுவதி அம் முகவர்களினாலும் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.

 

 

இந்த இணைப்பிலுள்ள திரியில் இறுதிப்பந்தியில் இவ்வரிகள் உள்ளது. வாசியுங்கள். இதுகூட ஒரு உதாரணம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116152

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவாக வாருங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே தொலைந்தாயடி.ஆயிரம் உறவுகள் சூழ இருந்தும் அனைத்தையும் தொலைத்துத் தனித்துப்போனேனடி.
சில பகல்களும் சில இரவுகளும் தாண்டியது.எதுவும் புரியவில்லை.மனிதர்கள் வருவதும் போவதுமாக இருந்தனரே தவிர எதுவும் வரவில்லை.பிணத்தின் புன்னகை போல உதட்டில் பூசிய சிரிப்புடன் இறந்து கொண்டிருந்தான்.
-----------------------------------------------
மறுமுனையில் உண்மையான நண்பர்களின் தீவிரமான தேடுதலில் கிடைத்த முதல் தகவல் அவளின் தனிமைத்துயர் தாளாமல் தூக்கு மாட்டி இறந்து போனாளாம் .
அவனால் நம்ப முடியவில்லை.அவளின் தொடர்பு துண்டாடப்படும் நாளுக்கு முதல் நாள் மாலையில் பேசும் போது எந்தத் துயரமும் அவளிடம் இல்லை.ஆனால் தனித்திருக்கும் அச்சம் மட்டும் இருந்தது.
நண்பர்களின் பல முனைத்தேடல்களின் கிடைத்த இறுதித்தகவல்---அந்தச் சிறுபெண் முகவர்கள் என்ற பெயரில் இருந்த கயவர்களால் திட்ட மிட்ட ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டாள்.படு மோசமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள்.

செம்பாட்டு மண்ணுக்குள் முளைத்த ஒரு சின்னஞ்சிறுசெடி புலம் பெயர் தேசமொன்றில் அந்த மண்ணின் வாசம் கூட மாறாத ஒரு குறுகிய கால இடைவெளியில் தனக்கு நடந்த கொடுமையின் கொடூரம் தாளாமல் தன்னைத்தானே கருக்கிக்கொண்டது.இதுதான் நண்பர்களால் அவனுக்குத்தரப்பட்ட இருதித்தரவு.அதுதான் உறுதியானதும்.
---------------------------------------------------------------------

இங்கே கதையில் வரும் பெண்ணை நான் முதலே சொன்னது போல எனக்குத்தெரியாது.ஆணைநான் கண்டிருக்கிறேன்.கதைத்தது கூட கிடையாது.
நடந்தவை தெரியும் தேடிய நண்பர்கள் சிலரைத்தெரியும்.
இங்கே மிகப்பெரும் கொடுமை என்ன என்றால் அப் பெண்ணின் சாவுக்கு காரணமான யாருக்கும் உரிய தண்டனை கிடைக்கவில்ல.
அந்த ஆண் மகன் குறுகியகால இடைவெளியில் தன்னுடைய தனிமைச்சிறை மீண்டார்.நான் தவறு சொல்லவில்லை.ஆனால் நம்பி வந்த ஒரு அப்பாவிப்பெண்ணின் கனவைக்கலைத்து அவளின் இறப்புக்கு காரணமாக இருந்தவர்களை என்ன செய்தீர்கள்.


அவர்கள் நிட்சயமாக புலம் பெயர் தமிழ் சமூகத்துக்குள் தம்மை இணைத்துக்கொண்டு இருப்பார்கள்.இங்கு பெரிய மனிதர்களாகவோ சாதரணமான எம்மைப்போலவோ சமூகத்துள் வாழ்ந்து கொண்டிருப்பார்.யாருக்குத்தெரியும் அதில் ஒருவரோ அல்லது அனைவருமோ என்னுடைய நண்பர்களாக கூட இருக்கலாம்.தோளிலே கைபோட்டு தோழன் என கூப்பிடுபனமாகவும் இருக்கலாம்.
சிலவேளைகளில் யாழ் கல உறுப்பினராகவோ 'வாசகராகவோ இருக்கலாம்.அதையும் தாண்டி மிகவும் உத்தமராகவும் இருக்கலாம்.
நடந்து பதினாறு வருடங்களாச்சு.இன்னும் நடக்கவில்லை வேள்வி.
தயது செய்து அவர்களை அம்பலப்படுத்துங்கள்.புலம் பெயர் தேசத்தில் அவர்களை அம்மனமாக்குங்கள்.சில வேளைகளில் அவர்களுக்கு வளர்ந்த பெண் பிள்ளைகள் கூட இருக்கலாம்.என்ன இது என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கும் சூழலை உருவாக்குங்கள்.செய்வீர்களா?

 


--------------------------------------------
ஓவியப் பெண்ணே
உலைகள் கொதிக்கும்
மனதை எமக்கு தந்து
உறங்கப் போய்விட்டாய்.
உனக்கான நீதி இன்னும்
கிடைக்கவில்லை.உன்
முகம் தெரியாவிட்டால் கூட -நீ
எடுத்த முடிவின்
வலி புரிகிறது.
மறந்து போகாதவர்களின்
ஞாபகங்களில் நீ இருக்கிறாய்.
வாளின் கூர் முனைகள்
துருப்பிடித்து மட்டும்
தானுள்ளது.தீட்டப்படும்
நேரம் வரும் பொழுது
மின்னலின் பிரகாசம் தெரியும்
சில வேளைகளில் -அதில்
உன் முகமும் தெரியும்
அன்ரறிவோம் தங்கையே -உன்
கனவின் முகவரியை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா, காந்தன் என்று குறிப்பிட்டது உங்களையா?

உண்மையில் ஆண்களை ஏஜென்சி மூலம் வெளிநாட்டுக்கு கூப்பிட்டாலும் பெண்களை அதே முறையில் அழைப்பது தவறு. மிக மிக நம்பிக்கையான ஏஜென்சி காரர் மூலம் அழைத்தால் சிலவேளை பிரச்சினை இல்லாமல் வந்து சேர்வார்கள். ஆனால் பிரச்சினை வராது என்று உறுதியாக நம்ப முடியாது. அவர்களாலும் பிரச்சினை வரலாம். தெரியாத ஏஜென்சி மூலம் அழைக்கும் போது பெரும்பாலும் பிரச்சினை வர சாத்தியம் உள்ளது.

இங்கு அந்த பெண் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாமல் விட்டமைக்கு பலவாறு யோசிக்கலாம்.

  • அந்த பெண்ணை ஏஜென்சி காரன் பாலியல் வன்புணர்வு செய்திருப்பின் அதை உங்களிடம் சொல்ல முடியாமல் உங்களை ஏமாற்றவும் முடியாமல் இருந்திருக்கலாம்.
  • அந்த பெண்ணின் உயிருக்கு ஏதாவது நடந்திருக்கலாம்.
  • வரும் வழியில் ஏனென்சி காரன் அந்த பெண்ணை காதலிப்பது போல் நடிக்க அதற்கு மயங்கி அவளும் ஏனென்சி காரனை காதலித்து அவனையே திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கலாம்.
  • நீங்கள் அந்த பெண்ணை விரும்பினாலும் அந்த பெண்ணுக்கு உங்களை திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் வெளிநாட்டுக்கு வருவதற்காக உங்களை திருமணம் செய்ய சம்மதித்து விட்டு இடையில் மாறி சென்று அல்லது தெரிந்த நபர்கள் யாரும் அழைத்து சென்றிருக்கலாம்
  • இடைநடுவில் உங்கள் தொலைபேசி இலக்கத்தை / தனது mobile ஐ தொலைத்தும் இருக்கலாம்.
  • அல்லது ஏஜென்சி காரன் இறுதிவரை கொண்டு வந்து சேர்க்காமல் இடையில் அந்த பெண்ணை கைவிட்டிருப்பின் அப்பெண் என்ன ஏது செய்வதென்று தெரியாமல் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் இருந்திருக்கலாம்.

 

இவற்றில் ஒன்றாக அல்லது வேறு காரணமாகவும் இருக்கலாம்.

 

இந்த விடயத்தில் காந்தன் என்பவரில் பிழை உள்ளது. (அவர் நீங்களாக இருந்தால் கூட)

அதே சமயம் அந்த பெண்ணின் பெற்றோரில் பிழை உள்ளது.

ஏஜென்சி காரனிடம் முன்கூட்டியே பணத்தை கொடுத்து விட்டீர்களா? ஆம் என்றால் அது கூட உங்கள் பக்கம் பிழை.

முன்கூட்டியே கொடுக்கவில்லை என்றால் அல்லது அரைவாசி பணத்தை கொடுத்திருந்தால் ஏனென்சி காரன் மிகுதி பணத்தை கேட்கவில்லையா? இல்லை என்றால் இவ்விடயத்தில் ஏஜென்சி காரன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம்.

 

இது உண்மை சம்பவம் போல் இருப்பதால் நீங்கள் எழுதியமைக்கு என்னால் பாராட்டி கருத்து எழுத முடியவில்லை.

 

 

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எத்தனையோ ஆயிரம் புண்பட்ட சம்பவங்கள் சொல்லி மாளாது.......அவர்கள் ஆபிரிக்காவிலும் பட்ட அவலகங்களும் கொஞ்சநஞ்சமல்ல......நிலமை இப்படியிருக்க .....
ஜெகோவாகாரர் மாதிரி அரைச்சல்,அறுவை விளக்ககெண்ணை விளக்கங்களுக்கும் பஞ்சமில்லை..
  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை...ஏதோ ஒரு வகையில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும்...எழுத்துருவில் அறியத் தந்த அன்னிலிங்கத்திற்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரண்ணை ஒவ்வொருவருக்கும் கருத்துகள் சொல்ல உரிமை உள்ளதுதானே.யாழ் களம் நமக்கானது என்ற உரிமையில் தானே நாம் பதிவிடுகிறோம்.புதைந்து போன புலம் பெயர் வாழ்வின் கொடுமைகளை இரைமீட்ட அல்ல இதனை நான் இங்கு இணைத்தது.நிட்சயமாக யாராவது ஒரு யாழ் கள உறுப்பினர் அல்லது வாசகர் இதனை அறிந்திருப்பார்.அதனால்தான்
அம்பலப்படுத்துங்கள்.என்ற கோசத்தை இங்கு வைத்தேன்.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எத்தனையோ ஆயிரம் புண்பட்ட சம்பவங்கள் சொல்லி மாளாது.......அவர்கள் ஆபிரிக்காவிலும் பட்ட அவலகங்களும் கொஞ்சநஞ்சமல்ல......நிலமை இப்படியிருக்க .....
ஜெகோவாகாரர் மாதிரி அரைச்சல்,அறுவை விளக்ககெண்ணை விளக்கங்களுக்கும் பஞ்சமில்லை..

 

ஜகோவா காரார் மாதிரி நான் ஜேசுவை பற்றி கதைக்கவுமில்லை. கிறிஸ்தவராக மாறும்படியும் கேட்கவில்லை.

நீங்கள் சொல்வது போல் புலம்பெயர் தமிழர்கள் பலவித துன்பங்களை அனுபவித்துள்ளார்கள். ஆனால் ஏஜென்சி மூலம் வரும் பெண்கள் பலவாறாக பாதிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்களோ இல்லையோ பிரான்சில் இருக்கும் நான் பிரான்சுக்கு வந்த பெண்கள் பலரின் துன்பங்களை அறிந்திருக்கிறேன். அதே போல் வரும் வழியில் அவர்களாக பிழை விட்டு பேசி வந்த மாப்பிளையை விட்டிட்டு ஏஜென்சி காரனை திருமணம் செய்தவர்களையும் எனக்கு தெரியும்.

எவ்வளவு தான் பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் திருமணத்திற்காக அழைக்கப்படும் பெண்களை ஏஜென்சி மூலம் கூப்பிடும் வழிமுறையை தமிழர்கள் இன்னும் கைவிடவில்லை. கடைசி இந்தியாவுக்கு வரவழைத்து திருமணம் செய்து விட்டாவது குறித்த பெண்ணை இந்த நாடுகளுக்கு அழைக்க முடியாதா? எனவே இந்த பிரச்சினைகள் சொல்லப்பட வேண்டும். நீங்கள் திருமணமானவர். இனிமேல் திருமணம் செய்பவர்கள் இதை பற்றி யோசித்து நடக்கலாம் என்ற ரீதியில் தான் நான் கருத்துகளை முன்வைத்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி எதோ வகையில் தண்டனைகிடைக்கும் என்றால் எந்தவகையில் ?அதெல்லாம் இவர்களுக்கு கிடைக்காது.இன்னும் காலம் போகவில்லை.
ஒரே வழி---அவர்களை பகிரங்கப்படுத்துதல்தான்.
அவர்களை எனக்கு தெரியாது.அதனால் என்னால் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி எதோ வகையில் தண்டனைகிடைக்கும் என்றால் எந்தவகையில் ?அதெல்லாம் இவர்களுக்கு கிடைக்காது.இன்னும் காலம் போகவில்லை.

ஒரே வழி---அவர்களை பகிரங்கப்படுத்துதல்தான்.

அவர்களை எனக்கு தெரியாது.அதனால் என்னால் முடியவில்லை.

 

அவர்களை உங்களுக்குத் தெரியாது என்டால் எப்படி இந்த விசயம் உங்களுக்கு தெரிய வந்தது?

-----------------------------------------------

மறுமுனையில் உண்மையான நண்பர்களின் தீவிரமான தேடுதலில் கிடைத்த முதல் தகவல் அவளின் தனிமைத்துயர் தாளாமல் தூக்கு மாட்டி இறந்து போனாளாம் .

அவனால் நம்ப முடியவில்லை.அவளின் தொடர்பு துண்டாடப்படும் நாளுக்கு முதல் நாள் மாலையில் பேசும் போது எந்தத் துயரமும் அவளிடம் இல்லை.ஆனால் தனித்திருக்கும் அச்சம் மட்டும் இருந்தது.

நண்பர்களின் பல முனைத்தேடல்களின் கிடைத்த இறுதித்தகவல்---அந்தச் சிறுபெண் முகவர்கள் என்ற பெயரில் இருந்த கயவர்களால் திட்ட மிட்ட ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டாள்.படு மோசமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள்.

செம்பாட்டு மண்ணுக்குள் முளைத்த ஒரு சின்னஞ்சிறுசெடி புலம் பெயர் தேசமொன்றில் அந்த மண்ணின் வாசம் கூட மாறாத ஒரு குறுகிய கால இடைவெளியில் தனக்கு நடந்த கொடுமையின் கொடூரம் தாளாமல் தன்னைத்தானே கருக்கிக்கொண்டது.இதுதான் நண்பர்களால் அவனுக்குத்தரப்பட்ட இருதித்தரவு.அதுதான் உறுதியானதும்.

 

அண்ணா, மிகவும் கவலையான செய்தி. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..

இப்படி பல சம்பவங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் தான் நான் பல விளக்கங்கள் எழுதினேன். அதில் முதலிரண்டும் உங்கள் கதையுடன் ஒத்துப்போகிறது.

ஆனால் ஏனையவை எவையும் நான் கற்பனையின் அடிப்படையில் எழுதவில்லை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி நடந்தது என்ன எனத் தேடிய நண்பர்களை எனக்குத்தெரியும்.அவர்கள் மூலம் நான் நடந்ததை அறிந்தேன். ஆனால் செய்தவர்களைத்தான் அறியவில்லை என்றேன்.
பொய் எழுத வேண்டிய தேவையும் அதை எழுத நேரமும் இல்லை அக்கா?அல்லது தங்கை?



துளசி நீங்கள் எழுதிய எதையும் நான் மறுதலிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நடந்தது என்ன எனத் தேடிய நண்பர்களை எனக்குத்தெரியும்.அவர்கள் மூலம் நான் நடந்ததை அறிந்தேன். ஆனால் செய்தவர்களைத்தான் அறியவில்லை என்றேன்.

பொய் எழுத வேண்டிய தேவையும் அதை எழுத நேரமும் இல்லை அக்கா?அல்லது தங்கை?

துளசி நீங்கள் எழுதிய எதையும் நான் மறுதலிக்கவில்லை.

 

நான் நீங்கள் பொய் எழுதிறீங்கள் என சொல்லவில்லை...ஓவியாவைத் தேடியவர்களுக்கு யார் ஆட்கள் எனத் தெரிந்திருக்க கூடும் தானே! அவர்கள் மூலம் தேடிப் பிடிக்க முடியாதா என்ட ஆதங்கத்தில் கேட்டேன்...நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.