Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உரிமையுள்ள ஒன்றிற்காய்
உளம் ஏங்கி உயிர் துடிக்கும்
கருணையற்ற மனிதருக்கு
காணும்வலி
கணம்கூட உணராது

நெஞ்சில் வெடித்தெழும்
நேசத்து  நிகழ்வுகளின்
சொல்லொணாத் துயர் சுமந்து
சொல்லி அழாச் சுமைகளுடன்
காத்திருக்கும் கணங்கள் கவி
சொல்லிட முடியாது

காலாண்டு கூடவில்லை
கடல்போல் அன்பு

காட்டாற்று
வெள்ளமாய்
கரையுடைக்க
காலத்தின் வரவுக்காய்
காத்திருக்க மட்டுமே
முடிகிறது முடிவின்றி 

முடிவேதுமில்லா
அண்டப் பெருவெளியில்
அரவமற்று அனாதையாய்
நிற்பதாய் உணர்கையில்
உள்ளத்தெழும் உணர்வின்
கொடுமையில் 
உறக்கம் மட்டுமா
தொலைந்து போவது???

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிவேதுமில்லா
அண்டப் பெருவெளியில்
அரவமற்று அனாதையாய்
நிற்பதாய் உணர்கையில்
உள்ளத்தெழும் உணர்வின்
கொடுமையில்
உறக்கம் மட்டுமா
தொலைந்து போவது???

 

எங்களுக்கு எல்லாம் தானே துலைஞ்சு போச்சுது.  நல்லாய் கவிதை எழுதிறிங்கள் . தொடந்தும் எழுதுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை, அழகு! நன்றி(கள்)  :o

 

என்னவோ,ஒரு இழப்பை, இயலாமையை, ஆற்றாமையை,ஆதங்கத்தைக் கவிதை வெளிப்படுத்த முயல்கின்றது!

காலாண்டு கூட ஆகவில்லை,

கடல் போல அன்பு!

நீங்கள் யாழில் இணைந்த பின்பு, உங்கள் உணர்வுகளைக் கவிதை சொல்ல வருகின்றது போல உள்ளது!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த மைத்திரேயி, புங்கை ஆகியோருக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பதற்கு இப்ப எதுமில்லை, நன்றி பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார் கருத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

"காலாண்டு கூட ஆகவில்லை கடல்போல் அன்பு'

 

இந்தக்கவிதை வரிகள் இந்த இடத்தில் எழுதியதன் நோக்கம் புரியவில்லை. மற்றப்படி தெளிவாக மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது இக்கவிதை. பாராட்டுகள் சுமேரியர்.

  • கருத்துக்கள உறவுகள்

"காலாண்டு கூட ஆகவில்லை கடல்போல் அன்பு'

 

இந்தக்கவிதை வரிகள் இந்த இடத்தில் எழுதியதன் நோக்கம் புரியவில்லை. மற்றப்படி தெளிவாக மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது இக்கவிதை. பாராட்டுகள் சுமேரியர்.

 

எனக்குகும் அது தான் புரியவில்லை

 

எதற்கும் மணி  கட்டிய மாடு கேட்கட்டும் என்றிருந்தேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குகும் அது தான் புரியவில்லை

 

எதற்கும் மணி  கட்டிய மாடு கேட்கட்டும் என்றிருந்தேன்.. :D

 

இதானே வேண்டாங்கிறது.....மணிகட்டின என்னை மாட்டிவிட்டு நீங்கள் கோயில்மாடு மாதிரி தலையாட்டிக்கொண்டு நில்லுங்கோ :lol::D

நெஞ்சில் வெடித்தெழும்

நேசத்து  நிகழ்வுகளின்

சொல்லொணாத் துயர் சுமந்து

சொல்லி அழாச் சுமைகளுடன்

காத்திருக்கும் கணங்கள் கவி

சொல்லிட முடியாது

 

 

உண்மைதான்.....  வார்த்தைகளைத் தேடும் அந்தகாரப்பெருவெளி ஒன்றே மிஞ்சியது சுமே .  வேண்டுமானால் அந்தப் பெருவெளியில் மோனத்தவம் செய்வதும் ஒருவித சுகானுபவமே . முத்துக்கவிதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தைப் பகிர்ந்த சகாறா, விசுகு அண்ணா,கோமகன் ஆகியோருக்கு நன்றி.

சாதாரணமாக எனக்கு கவிதை எழுதுவதெனில் அரை மணி
நேரமாவது எடுக்கும். அன்று நான் மனக்குழப்பத்தில் இருந்தேன். மனச் சோர்வோடு
படுப்போம் என்று படிகளில் எறும் போது இக்கவிதை என் மனதில் உதித்தது.
கட்டிலில் அமர்ந்தவுடன் பக்கத்திருந்த தாளையும் பேனாவையும் எடுத்து ஐந்து
நிமிடத்தில் எழுதிமுடித்த கவிதை.

பார்த்தபோது எனக்கே நன்றாக இருந்ததால் பதிவாக இருக்குமென்று யாழில் போட்டேன்.
வேறொன்றுமில்லை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

உங்கள் உயிரின் துடிப்பில் மலர்ந்த கவிதை அழகானது சுமேரியர் . பாராட்டுக்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கல்கி கருத்துப் பகிர்ந்தமைக்கு.

கோமகனுக்கு நன்றி.

சாதாரணமாக எனக்கு கவிதை எழுதுவதெனில் அரை மணி

நேரமாவது எடுக்கும். அன்று நான் மனக்குழப்பத்தில் இருந்தேன். மனச் சோர்வோடு

படுப்போம் என்று படிகளில் எறும் போது இக்கவிதை என் மனதில் உதித்தது.

கட்டிலில் அமர்ந்தவுடன் பக்கத்திருந்த தாளையும் பேனாவையும் எடுத்து ஐந்து

நிமிடத்தில் எழுதிமுடித்த கவிதை.

பார்த்தபோது எனக்கே நன்றாக இருந்ததால் பதிவாக இருக்குமென்று யாழில் போட்டேன்.

வேறொன்றுமில்லை.

 

மனம் என்கின்ற சிப்பியினுள் தூசிகள் என்கின்ற பாதிப்புகள் நுளைந்தாலே அவை நெருடி விலைமதிக்கமுடியாத முத்து என்கின்ற உயிரோட்டமான படைப்பை வெளிக்கொண்டுவருகின்றன . எனவே சிப்பிக்கு எப்படி தூசி அத்தியாவசியமோ , அதேபோல மனதிற்கும் பாதிப்பு என்கின்ற நெருடல் அத்தியாவசிமாகின்றது . அதுவும் ஒருவகையிலான பிரசவ வலியின் பின்னர் வருகின்ற மகிழ்ச்சிக்கு ஒப்பானதே . தொடருங்கள் சுமே  :)  :)  .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொன்னால் எனக்கு கவிதைகள் எழுதிப் போடுவதோடு மறந்துவிடும். நினைவில் நிற்பதில்லை. அப்படிப் பல கவிதைகள் மனம் ஒருநிலைப் படாதபோது மனதில் வரும். காலையில் மறந்தும்விடும். என்ன செய்வது வயதும் போகிறது :)

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் துயர் சுமந்து நிற்கிறது... உணர்வுகளின் பிரசவிப்பே கவிதை... ஐந்து நிமிடத்தில் செய்த அவசரச் சமையலே இத்தனை சுவை என்றால்...ஆஹா.....அந்த அரை மணித்தியாலக் கவிதைகளையும் கொண்டு வாருங்கள்..... சுவைக்க ஆவலாக உள்ளேன்...

 

மறந்து போக முதல் எழுதி பதிவு செய்ததற்கு என் நன்றிகள்... தொடர்ந்து எழுதுங்க.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பூங்கோதை எழுதினேன். அரைமணித்தியாலம் எழுதினாலும் இப்படி வராது.
எப்பவாவது அருமை பெருமையாக இப்படி வரும். கவிதையில் குளிக்கும் நீங்கள் நன்றாக உள்ளது என்பது மகிழ்வாக இருக்கு.நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.