Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினப் படுகொலையாளர் ராஜபக்சவிற்கு அன்று பொன்னாடை இன்று எதிர்ப்பாம் - கலைஞரின் சந்தர்ப்பவாதம் மீண்டும் அம்பலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து  8-ந்தேதி சென்னையில் போராட்டம்: கலைஞர் அறிவிப்பு

 

Mahinda_Indian_MP13909_1.jpg

 

தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று
சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலைஞர் தலைமை தாங்கினார்.

 

இந்த அமைப்பினர் உறுப்பினர்களாக இருக்கும் மு.க. ஸ்டா லின், அன்பழகன்,
கி.வீரமணி, சுப வீரபாண் டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திருமாவளவன்
ஆகியோர் கலந்து கொண்டனர்
.

 

tamilmakkalkural_blogspot_kanimozhi_raja

 

கலந்துரையாடலுக்குப் பிறகு கலைஞர், ‘’ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து 8-ந்தேதி எனது
தலைமையில் சென் னையில் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் டெசோ
அமைப்பினர் கருப்பு உடை அணிந்து கலந்து கொள்வார்கள். இலங்கை வீரர்களுக்கு
தமிழகத்தை தவிர இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் பயிற்சி என்பதை ஏற்க
முடியாது.

 

eelam-21.jpg?w=510&h=306

 

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை கண்டி த்து ராமேஸ்வரத்தில் 18-ந்தேதியும்,
நாகையில் 19-ந்தேதியும் போராட்டம் நடைபெறும். இலங்கை தமிழர்கள் குறித்து
மார்ச் மாதம் டெல்லியில் கருத்தரங்கம் நடைபெறும்’’ என்று கூறினார்.

 

செய்தி நன்றி நக்கீரன்: http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=91551

 

படம்: இணையம்

கண்டிக்கப்பட வேண்டிய ஒரு தலைப்பு.

மகிந்தா வரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து  மத்தியில் உள்ள கூட்டணியில் இருந்து விலகவேண்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிக்கப்பட வேணடியதல்ல.. மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்பது அவர்களுக்கும் தெரிய வேண்டும்..

ஏற்கனவே பொன்னாடை போர்த்தியதால் இம்முறையும் மகிந்த வரும்போது அவருக்கு திமுகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

நல்ல தலைப்பு!

தமிழினப் படுகொலைக்கு உடந்தையாக இருந்து விட்டு,
வெறும் அறிக்கை விட்டு தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கும் கயவர்களுக்கு -
தமிழ் மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள் என்பது புரிய வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்ல.. தம் நேர்மையற்ற முந்தைய செயல்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருத்தம் அல்லது விளக்கம் சொல்லாமல் இவ்வாறு அறிவிப்பது மக்களின் அறிவுத் திறத்தைச் சோதிப்பதாகும்.. :rolleyes:

Fool me once, shame on you.

Fool me twice, shame on me. :D

புலிகளின் பாஸ் நடைமுறை அலுவலகங்களை ஏமாற்றி வெளிநாட்டுக்கு ஓடி வந்து, புலிகளாலும் பிரச்சனை என்று தஞ்சக் கோரிக்கையில் சொல்லி, பின்பு புலிக்கொடி பிடித்துக் கொண்டு நிற்கின்ற புலம்பெயர் தமிழர்கள் நிறைய பேரைப் பார்த்ததனால் எனக்கு கலைஞரின் செய்கை வெகு சாதரணமாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பாஸ் நடைமுறை அலுவலகங்களை ஏமாற்றி வெளிநாட்டுக்கு ஓடி வந்து, புலிகளாலும் பிரச்சனை என்று தஞ்சக் கோரிக்கையில் சொல்லி, பின்பு புலிக்கொடி பிடித்துக் கொண்டு நிற்கின்ற புலம்பெயர் தமிழர்கள் நிறைய பேரைப் பார்த்ததனால் எனக்கு கலைஞரின் செய்கை வெகு சாதரணமாக தெரிகிறது.

நீங்கள் குறிப்பிடுபவர்கள் சிறுபான்மையினராக இருக்கக்கூடும். மற்றவர்கள்தான் சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கப்பா அரசியலில் இதல்லாம் சாதரணமப்பா!"புலிகள் பலமாக இருக்கும் பொழுது புலிக்கு ஆதரவாக அரசியல் ஆய்வுக் கட்டுரை எழுதுவதும் புலிகள் தோற்றவுடன் தீவிர புலி எதிர்ப்பாளரர்களாக மாறி புலிகள் தவறிழத்த விட்டார்கள் என்று வசைபாடுவதும் கருணாநிதிபாணி அரசியல்தான்!இனம் இனத்தோடுதான் சேரும்.

புலிகளின் பாஸ் நடைமுறை அலுவலகங்களை ஏமாற்றி வெளிநாட்டுக்கு ஓடி வந்து, புலிகளாலும் பிரச்சனை என்று தஞ்சக் கோரிக்கையில் சொல்லி, பின்பு புலிக்கொடி பிடித்துக் கொண்டு நிற்கின்ற புலம்பெயர் தமிழர்கள் நிறைய பேரைப் பார்த்ததனால் எனக்கு கலைஞரின் செய்கை வெகு சாதரணமாக தெரிகிறது.

 

புலிகளாலும் பிரச்சனை என்று தஞ்சக் கோரிக்கையில் சொல்லி ,-  அவர்களின் பெயர்களை வெளிவிடுவது தங்களின் பொறுப்பு. கருணநிதி மேடைக்கு மேடை மாற்றிக்கதைப்பதை புட்டு வைக்க வேண்டியது தமிழரின் கடமை.

 

தமிழருக்குள் ஒரு துரோகி, ஒரு காட்டிக்கொடுப்பவன் இருப்பதால் எல்லோரையும் நீங்கள் துரோகி என்று அழைப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் இருப்பத்தால் துரோகிகளை துரோகங்களைச் செய்து மேலே போவதை அனுமதிக்க வேண்டும் எங்கிறீர்களா?.

 

எது உங்கள் பக்கம்?

சில  திருடர்களை பிடிக்க முடியாவிட்டால் திருட்டு இனிமேல் குற்றமாகாதா.

ஏற்கனவே பொன்னாடை போர்த்தியதால் இம்முறையும் மகிந்த வரும்போது அவருக்கு திமுகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

 

நேர்மையாக நடந்து காட்ட அது மட்டும்தான் ஒரே வழி என்பது வழமையான விதண்ட வாதம்.

மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா?: திமுகவுக்கு வைகோ கேள்வி

 

ராஜபட்ச வருகையை தடுக்க முடியாவி்ட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா? என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தான் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. எனவே, மற்ற கட்சிகளைப் போல ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும் அறிக்கை வெளியிடுவதை ஏற்க முடியாது. மத்திய அரசு வற்புறுத்தி ராஜபட்ச வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்கு அக்கட்சி தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

 

http://dinamani.com/latest_news/article1449675.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சோந்தியுடன் கூட இவர்களை ஒப்பிட்டு கூற நான் விரும்பவில்லை...

இவர்களுக்கு, அந்த மிருகங்கள் எவ்வளவோ மேல்!!!

  • கருத்துக்கள உறவுகள்
கலைஞர் பொன்மொழி : 
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்ப ..... நேற்று பொன்னாடை இன்று எதிர்ப்பு நாளை திரும்பவும் நட்பு 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டிக்கப்பட வேண்டிய ஒரு தலைப்பு.

நானும் வன்மையாக கண்டிக்கிறேன் உங்கள் கருத்தை :rolleyes:

395760_10151293748413354_1647851700_n.jp

 

- மூலம்: முகநூல் -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.