Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரியக் கூடாது: கேமரூன்

Featured Replies

பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூன், ஸ்காட்லாந்தை வலியுறுத்தி உள்ளார்.

 

பிரிட்டனில் ஸ்காட்லாந்தின் பங்கு குறித்த ஆய்வறிக்கையை பிரிட்டன் அரசு திங்கள்கிழமை வெளியிட உள்ளது. இந்நிலையில், கேமரூன் கூறுகையில், ""300 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்திருந்த நாம் பிரிந்தால் சர்வதேச அரங்கில் பிரிட்டனின் பலம் குறைந்து விடும். பிரிட்டன் இப்போது நன்றாக செயல்படுகிறது. இதை ஏன் உடைக்க வேண்டும்?'' என்றார்.


பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல ஸ்காட்லாந்து திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த ஆண்டு மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

 

அதே நேரம், கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 23 சதவீத ஸ்காட்லாந்து மக்கள் மட்டுமே பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். 61 சதவீதம் பேர் பிரிட்டனுடன் இணைந்திருக்க விரும்புவதாக தெரியவந்துள்ளது.

 

http://dinamani.com/world/article1458124.ece

ஸ்கொட்லாந்து மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை  தெரிவு செய்யும் உரிமை. வாழ்த்துக்கள். தெரிவு அவர்கள் கையில்.
 

ஏக போக ஆதிக்கம் செலுத்தும் இந்தியப் பணநாயகம் இதனை காஸ்மீரில் அனுமதிக்காது.  
 

தப்பி வந்து கீழே பார்த்தால் , ஈழத்தில் 40 இயக்கங்கள் உருவாகி அதில் 120 பிரிவுகள் ஆரம்பிக்கும். புலத்தில் சொல்லி வேலையில்லை.

  • தொடங்கியவர்

பிரிட்டனில் ஸ்காட்லாந்தின் பங்கு குறித்த ஆய்வறிக்கையை பிரிட்டன் அரசு திங்கள்கிழமை வெளியிட உள்ளது. இந்நிலையில், கேமரூன் கூறுகையில், ""300 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்திருந்த நாம் பிரிந்தால் சர்வதேச அரங்கில் பிரிட்டனின் பலம் குறைந்து விடும். பிரிட்டன் இப்போது நன்றாக செயல்படுகிறது. இதை ஏன் உடைக்க வேண்டும்?'' என்றார்.

 

 

இந்த முன்னூறு ஆண்டுகளில் பிரித்தானியர்கள் செய்த அநியாயங்கள் காரணமாக இருக்கலாம்  :icon_idea:

 

எந்த இனமும் தந்து மொழி கலாச்சார தனித்துவங்களை பாதுகாக்கவே விரும்பும்.

அதற்கு ஸ்கொட்லாந்து மக்களும் விதி விலக்கு அல்ல.

பிரித்தானியர்கள் எங்கு அநியாயம் செய்யவில்லை. உலகைச் சுற்றிச் செய்த பாவங்கள், வேறு வடிவில் இன்று காலடி தேடி வந்திருக்கிறது.

 

ஸ்கொட்லாந்து மக்கள் போல வேல்ஸ் மக்களும் சுயமாக வாழும் காலம் வர  வேண்டும்.
 

எங்கு அடக்குமுறை இருந்தாலும், அது தகர்க்கப்படும். இது இயற்கை விதியியல்.  

  • கருத்துக்கள உறவுகள்

// 23 சதவீத ஸ்காட்லாந்து மக்கள் மட்டுமே பிரிந்து செல்ல விருப்பம்//  

 

மிகுதிப்பேருக்கு  அரசாங்க சலுகையை விட விருப்பம் இல்லைப்போல 

  • கருத்துக்கள உறவுகள்

வேல்ஸ் மக்களுக்கும் நிறைய வருத்தங்கள் உள்ளன என நினைக்கிறேன். அங்கே போனபோது முழுமையான சுதந்திரத்தைப்பற்றி ஒரு நகரசபைக் கல்வெட்டில் எழுதி வைத்திருந்தார்கள்..

  • தொடங்கியவர்

எல்லா உரிமையும் வளமும் கொண்டுள்ள ஸ்கொட்லாந்து மக்களுக்கு பிரிந்து போக உரிமை உண்டு.

 

மாநில ஆட்சியை கொண்ட இந்திய மாநிலங்களுக்கு ஓரளவு ய்ஜன்னாட்சி உரிமை உண்டு, ஆனால் பிரிந்து போக முடியாது.


ஒரு காலத்தில் தனி ஆட்சியை கொண்டிருந்த ஈழத்தமிழர்களுக்கு  :(

  • கருத்துக்கள உறவுகள்

130130124508_uk_scotland_304x171_reuters

ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஸ்காட்லாந்து அடுத்த ஆண்டு நடத்துகிறது.

 

ஐக்கிய இராச்சியத்திலிருந்து தனிநாடாக பிரிந்துசெல்ல நினைக்கும் ஸ்காட்லாந்தின் சுதந்திரக் கோரிக்கையை எதிர்க்கும் முகமாக தான் தயாரிக்கும் ஆவணங்களின் முதல் தொகுதியை பிரிட்டிஷ் அரசாங்கம் இன்று வெளியிடுகிறது.

 

இது தொடர்பில் சர்வதேச சட்ட நிபுணர்களான இரண்டு பேராசிரியர்கள் தமது சட்ட ஆலோசனைகளை வரைந்துள்ளனர்.

 

அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் ஸ்காட்லாந்து பிரிந்துசெல்வதற்கான ஆணையைப் பெற்றால், தனிநாடாகும் ஸ்காட்லாந்து சர்வதேச நிறுவனங்களில் உறுப்புரிமை பெறுவதற்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டியேற்படும் என்று அந்த ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

 

ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை இதுபோன்ற சர்வதேச அமைப்புகளில் புதிய நாடொன்று உறுப்புரிமை பெறுவதுபோல ஸ்காட்லாந்து விண்ணப்பிக்க வேண்டிவரும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆவணங்கள் வலியுறுத்துகின்றன.

 

இங்கிலாந்தும் வட அயர்லாந்தும் வேல்ஸும் தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியமாக இருக்கும் என்றும் அதனால் ஏற்கனவே தாம் அனுபவிக்கும் அந்தஸ்துகளும் உரிமைகளும் கடப்பாடுகளும் தொடர்ந்தும் தமக்கு இருக்கும் என்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பில் சட்ட நிபுணர்கள் தயாரித்துள்ள ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/02/130211_britishscotaland.shtml

பிரித்தானியாவின் நயவஞ்சகத்துக்குள்ளாலும் தப்பித்து சுதந்திர காற்றை சுவாசிப்பார்களா ஸ்காட்லாந்து  மக்கள் ? அது சாத்தியப்படும் பட்சத்தில் ஈழத்துக்கான சாத்தியமும் ஏற்படவாய்ப்பு உண்டு என்று என்னலாம்.

பழைய கோபங்களை வைத்து இன்று ஸ்கொட்லாந் பிரிவது கடினம். சாதாரண நிலைமைகளில் பிரிவதற்கு அடக்குமுறை இருக்க வேண்டும் அடுக்குமுறை இருக்க காரணம் இருக்க வேண்டும். வெறுமனே மதம், இனம், மொழி காணாது. இதுதான் குபெக்கிலும். அங்கு பழைய கோபமும் மொழியும், மதமும்,  வேலை செய்யத் தவறி விட்டது.

  • தொடங்கியவர்

அரசியல், கலாச்சார  ரீதியாகத்தான் மேற்குலகத்தில் பிரிவுகள் வரும்.

பொருளாதார ரீதியாக, இராணுவரீதியாக இணைந்தே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
இப்படிப்பட்ட கமறுன்/ பிரிட்டன் எப்படி எங்கட‌ போராட்டத்தை ஆதரிப்பார்/ ஆதரிக்கும் :(

வேல்ஸ் மக்களுக்கும் நிறைய வருத்தங்கள் உள்ளன என நினைக்கிறேன். அங்கே போனபோது முழுமையான சுதந்திரத்தைப்பற்றி ஒரு நகரசபைக் கல்வெட்டில் எழுதி வைத்திருந்தார்கள்..

 

வேல்ஸ் மக்களுக்கு ஆங்கிலேயர்களுடன் பெரிதும் ஒத்து வராது. அவர்களுக்கு என்று மொழியும் உண்டு. சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களும் பிரிந்து போவார்கள்.

இப்படிப்பட்ட கமறுன்/ பிரிட்டன் எப்படி எங்கட‌ போராட்டத்தை ஆதரிப்பார்/ ஆதரிக்கும் :(

 

'ஸ்கொட்லன்ட்' மக்களுக்கு, பிரிந்து போவதற்கான தெரிவு வாக்கெடுப்பு மூலம்  கொடுக்கப்பட்டுள்ளது. பிரிந்து போவதற்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தடுக்கும் முகமாக, பிரித்தானியா நிறைய சலுகைகளை 'ஸ்கொட்லன்ட்' இற்கு வழங்கலாம். பிரிவது ஆரோக்கியமல்ல என்ற பிரச்சாரத்தை பிரித்தானியா 'ஸ்கொட்லன்ட்' மக்களிடம் ஆரம்பிக்கும். அதன் முதற் கட்டம்தான் இது.

 

இப்படியாக எந்தத் தெரிவும் எங்களுக்கு இல்லையே.  சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கும் தெரிவை எங்களுக்கு  சிறிலங்கா வழங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது ஸ்கொட்லாண்டில் ஆட்சி புரியும் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிக்கு கணிசமான ஆதரவு உண்டு. அத்தோடு ஸ்கொட்லாண்ட்காரர்கள் தங்களை ஸ்கொட் என்று சொல்லிப் பெருமைப்படுபவர்கள். எனவே பிரிந்துபோக வாக்களிக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

வேல்ஸ் மக்களுக்கு ஆங்கிலேயர்களுடன் பெரிதும் ஒத்து வராது. அவர்களுக்கு என்று மொழியும் உண்டு. சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களும் பிரிந்து போவார்கள்.

 

'ஸ்கொட்லன்ட்' மக்களுக்கு, பிரிந்து போவதற்கான தெரிவு வாக்கெடுப்பு மூலம்  கொடுக்கப்பட்டுள்ளது. பிரிந்து போவதற்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தடுக்கும் முகமாக, பிரித்தானியா நிறைய சலுகைகளை 'ஸ்கொட்லன்ட்' இற்கு வழங்கலாம். பிரிவது ஆரோக்கியமல்ல என்ற பிரச்சாரத்தை பிரித்தானியா 'ஸ்கொட்லன்ட்' மக்களிடம் ஆரம்பிக்கும். அதன் முதற் கட்டம்தான் இது.

 

இப்படியாக எந்தத் தெரிவும் எங்களுக்கு இல்லையே.  சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கும் தெரிவை எங்களுக்கு  சிறிலங்கா வழங்கவில்லை.

 

 

இலங்கையரசு நேரடியாக தர மாட்டோம் என முகத்திற்கு நேரே சொல்லும்.
பிரித்தானியா அரசு தருவோம் சொல்லிப் போட்டு எப்படி அதை கொடுக்காமல் விடுவது என்று யோசிக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.