Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் களத்தில் ஓர் தசாப்தம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவவோ வந்து தலைப்போட.. மூக்கை நுழைக்க விடுவமாக்கும்...! :lol:

 

இப்படி வீறாப்பு பேசிய பல 'கவி'கள், சேல் அகட்டும் குளத்தில் தடுமாறிக் கவிழ்ந்ததுதான் வரலாறு..! போகப் போகத் தெரியட்டும் சுக'வாசம்'! :lol:

பல திரிகளை வாசித்துள்ளேன். வெட்டொன்று துண்டு இரண்டாக பேசினாலும், வாழ்க்கை நடைமுறைக்கு அப்படியே ஒத்துப்போக இயலுமா? கொஞ்சம் விட்டுப்பிடிக்க வேண்டும் (ஒரு எல்லைக்குளே தான் :D ).

இளவயசு...அப்படித்தான் இருக்கும்.

 

வாழ்த்துக்கள், நெடுக்ஸ்!

  • Replies 60
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வீறாப்பு பேசிய பல 'கவி'கள், சேல் அகட்டும் குளத்தில் தடுமாறிக் கவிழ்ந்ததுதான் வரலாறு..! போகப் போகத் தெரியட்டும் சுக'வாசம்'! :lol:

பல திரிகளை வாசித்துள்ளேன். வெட்டொன்று துண்டு இரண்டாக பேசினாலும், வாழ்க்கை நடைமுறைக்கு அப்படியே ஒத்துப்போக இயலுமா? கொஞ்சம் விட்டுப்பிடிக்க வேண்டும் (ஒரு எல்லைக்குளே தான் :D ).

இளவயசு...அப்படித்தான் இருக்கும்.

 

வாழ்த்துக்கள், நெடுக்ஸ்!

 

நாங்க வெறும் வீராப்புக் காட்டுறதில்ல.. ராஜவன்னியன் அண்ணா. மற்றவங்க சுதந்திர வாழ்க்கையைப் பாதிக்கச் செய்யாத.. எங்கட சுதந்திர வாழ்வு தான் எங்களுக்கு முக்கியம்..! அதில் மற்றவர்கள் தலையீடு செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாதில்ல..! நாங்கள் ஒரு போராட்ட காலம் பெற்றெடுத்து வளர்த்த புதல்வர்கள். அவ்வளவு சீக்கிரம் கண்கட்டி வித்தைகளுக்கு அடிமையாக மாட்டம்..! :)

 

நன்றி உங்கள் வாழ்த்துக்கும் கருத்திற்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மு தலில் இது ஒருகவிதை  என நினைத்து மேலோட்டமாக  வா சித்து சென்று விட்டேன் . இப்பொது தான் கவனித்தேன். யாழ் எனும் ஆல மரத்தின் முக்கி ய மான கிளை நம்ம நெடுக்ஸ்  பத்தாண்டு  கள்  அல்ல இன்னும் நீண்ட காலம் யாழ் உள்ள வரை இவரி ன் ஆக்கங்கள் வர வேண்டும். கல்வி சார் விடயங்களில் ஆழ்ந்த  அறிவுள்ள  இவர் யாழுக்கு கிடைத்த் பரிசு .

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா...! இன்னும் பல்லாண்டுகள் யாழோடு இணைந்திருங்கள். நீங்கள் யாழுக்கு கிடைத்த அறிவுக்களஞ்சியம் என்றால் அது மிகையாகாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா: நன்றி அக்கா தங்கள் கருத்திற்கு. நான் ஒன்றும் ஆழ்ந்த அறிவுள்ளவன் கிடையாது. ஏதோ சிலவற்றை அறிய விரும்பி அறிந்து கொள்கிறேன். அதனை தாய் மொழியில் பகிர்ந்து கொள்கிறேன். அதற்காக நான் புத்திசீவியோ.. அறிவுசீவோ கிடையாதுக்கா. :)

 

தமிழினி: உங்கள் கருத்திற்கும் நன்றி. அறிவுக்களஞ்சியம் பெரிய வார்த்தை..! நாங்கள் அந்தளவுக்கு பெரியாக்கள் கிடையாது. தெரிஞ்சது வெறும் மண் துணிக்கை அளவு. தெரியாதது இமயம் அளவு..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கு நன்றி நந்தன். :)

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகள் யாழோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகள் யாழோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள்.

 

யாழில்.. எங்களோடு நீண்ட காலம் பயணிக்கும் உறவுகளில் நீங்களும் ஒருவர். உங்களுக்கும் அதே வாழ்த்துக்கள் கறுப்பி.. மற்றும் நன்றி. :)

ஒட்டி விட்ட ஊரை விட்டு

ஓடி வர மனசின்றி..

ஒட்டிய விசா ஸ்ராம்

உந்தித் தள்ள

பள்ளிப் படிப்பு இழுத்து வர

ஓடி வந்த இடத்தில்

ஒதுங்க ஓர் இடம்..!

 

மோகன் - யாழ் என்ற

உறவுகளின் சிந்தனையில்

உதித்த ஓர் தளம்.

 

ஆங்கில மேடையில்

விதம் விதமாய்

அலங்கரிக்க

அங்கீகாரம் இருந்தும்

அங்கும் எழுந்தது

தாய்த் தமிழ் தாகம்..!

 

நட்புக்கள் தம் உறவாடலில்

யாழெனும் இணையத் தொடர்பும்

பிணைந்து கொள்ள

"வைரஸாய் "

முதல் நாமம் இட்டு

தொற்றிக் கொண்டது

இன்னும்

பசுமையான நினைவுகளாய்.

 

கேடு இன்றி

விளையாட்டா "ஹாக் "செய்து

யாழின் "கோட்" எடுத்து

தமிழ்

போறம் செய்து

நண்பர்கள் விளையாட..

கூடியிருந்து களித்தமை

இன்றும் நினைவதில்

ஊஞ்சலாடுது..!

 

யாழின் நெருக்கம்

எம் எஸ் என் வழி கை நீட்ட

அங்கும் தொடர்ந்தது உறவுகள்.

ரி ரி என்னிற்கு

வில்லுப்பாட்டு எழுதி

அசைன்மென்ரைக் கோட்டை விட்டதும்

நினைவின் ஓர் மூலையில்..!

 

அன்று கூடிய

தொலைதூர நட்புகள்

இன்றும்... இணைப்பில்

உள்ளூர மகிழ்ச்சி.

சண்டை சச்சரவுகள்

இடையில் சில

அவையும் கலைந்து

கசப்புகள் நீங்கி

நீளுது தமிழ் உறவு..!

 

கால ஓட்டத்தில்

கூடியிருந்த நண்பர் நாம்

பல திக்கும் பிரிந்து விட்டோம்

ஓரிருவர் தான் கூட இன்று.

யாழெனும்

நட்பு மட்டும்

தசாப்தம் கடந்தும்

எம்மோடு..!

 

சமூகத் தளத்தில்

குழந்தைகளாய் தவிழ்ந்த எம்மை

தத்தெடுத்து

இணையத் தமிழூட்டி

பாடங்கள் பலவும்

கற்றுத் தந்த

அன்னைக்கு நிகர்த்தவளே

யாழே ..

நீ என்றும்

வாழிய..!

 

நேரடிப்பழக்கத்தில் உள்ள நட்புகளைப் பேணுவதிலேயே பல குழப்பங்கள் . திரைக்குப்பின்னால் நட்பு பேணுவது என்பது கத்தியின்மேல் நடப்பது போலவாகும் . உங்கள் கவிதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . மேலும் இந்த அருமையான கவிதை திரி , உங்கள் பாராட்டுப்பதிவாக மாறியதில் எனக்கு உடன்பாடில்லை . அதை வாழியவாழியவே பகுதியில் திறந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்தாகும் .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன்.

 

வெளியில் இருந்து.. மேலோட்டமாக நோக்கினால் எல்லாமே கடினமாகத்தான் இருக்கும். உள்ள இறங்கி செயலோட்டமா பார்த்தால் தான் எது இலகு கடினம் என்பதே புரியும்.

 

நன்றிகளோடு.. வாழ்த்துக்களையும் சேர்ந்து பதிஞ்சிட்டாங்க. நம்ம உறவுகள் தானே..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.