Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 10 பேர் பலி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணியளவில் தில்சுக் நகர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகர் பகுதியில் இன்று இரவு 7 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் 5 இடங்களில் குண்டுகள் வெடி்தததாக முதலில் தகவல்கள் வெளியாகின. தற்போது 3 இடமாக அது குறுகியுள்ளது. ஆனந்த் டிபன் சென்டர், கொனார்க் மற்றும் வெங்கடாத்ரி தியேட்டர்களுக்கு அருகே குண்டுகள் வெடித்தன என்று தகவல்கள் கூறுகின்றன. குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோரில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Thatstamil

ஐதாராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஐதராபாத்தின் தில்சுக் நகர் பகுதியில் பரபரப்பாக செயல்பட்டு வரும் வர்த்தக பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் வரை பலியாயினர். 20 பேர் வரை காயம் அ‌டைந்துள்ளனர். குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் விரைந்துள்ளனர்.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையை  கண்டிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை யார் செய்து இருப்பினம்... :o

Edited by பையன்26

அண்மையில் இந்துக்களுக்கு எதிரான உணர்வலைகளை எழுப்பிய முஸ்லிம் மதகுரு ஒருவரை நீதிமன்றம் கைது செய்து இருந்தது. அண்மையில்தான் அவர் மீண்டும் பெயிலில் (Bail) வெளியில் வந்து இருக்கின்றார். அதுக்கும் இதுக்கும் தொடர்புகள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

: அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோருக்கான தூக்கு நிறைவேற்றப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கைதான் ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்களாக இருக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவிக்கையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். அஜ்மல் கசாப், அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனைக்கு பழிவாங்குவோம் என்று தீவிரவாதிகள் அறிவித்திருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகையால் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்தும் இதில் ஈடுபட்டோருக்கு எதிராகவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இந்துக்களுக்கு எதிரான உணர்வலைகளை எழுப்பிய முஸ்லிம் மதகுரு ஒருவரை நீதிமன்றம் கைது செய்து இருந்தது. அண்மையில்தான் அவர் மீண்டும் பெயிலில் (Bail) வெளியில் வந்து இருக்கின்றார். அதுக்கும் இதுக்கும் தொடர்புகள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.

 

நீங்கள் சொன்னது போல தான் எனது தமில் நாட்டு நண்பனும் சொல்லி இருக்கிறான்

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு - 22 பேர் பலி

 

பிப் 21, 2013
ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணியளவில் தில்சுக் நகர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பை உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.

21-bomb-blast-pics1-600.jpg

3 இடங்களில் குண்டுவெடிப்பு

ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகர் பகுதியில் இன்று இரவு 7 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் 5 இடங்களில் குண்டுகள் வெடிதததாக முதலில் தகவல்கள் வெளியாகின. தற்போது 3 இடமாக அது குறுகியுள்ளது. ஆனந்த் டிபன் சென்டர், கொனார்க் மற்றும் வெங்கடாத்ரி தியேட்டர்களுக்கு அருகே குண்டுகள் வெடித்தன என்று தகவல்கள் கூறுகின்றன.

22 பேர் பலி

குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவித்தன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இருப்பினும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உறுதிப்படுத்தியுள்ளார். காயமடைந்தோரில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

முதல் குண்டு 7.01க்கு வெடித்தது

முதல் குண்டு 7.01 மணிக்கு வெடித்தது. அடுத்து 15 நிமிடம் கழித்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன.

என்ஐஏ குழு விரைந்தது

குண்டுவெடிப்பு நடந்த இடத்தை தற்போது போலீஸார் சீல் வைத்துள்ளனர். அப்பகுதியில் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிக்காத குண்டு சிக்கியது

குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து வெடிக்காத நிலையில் ஒரு குண்டை போலீஸார் கண்டு்பிடித்து மீட்டுள்ளனர். இதே போல அப்பகுதியில் மேலும் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஹைதராபாத் முழுவதும் உஷார் நிலை

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஹைதராபாத் நகர் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செல்போன்கள் செயலிழந்தன

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஹைதராபாத் முழுவதும் செல்போன் சேவைகள் செயிலிழந்தன.

முதல்வர் கிரண்குமார் ரெட்டி அவசர ஆலோசனை

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை செயலர் ஆர்.கே.சிங், ஹைதராபாத் சம்பவ இடத்துக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விரைந்துள்ளது. இதுவரை 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விசாரணைகளை தொடங்கியுள்ளோம். உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார். மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அவசர உதவிக்கு

ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தில்சுக் நகர் ஆம்புலன்ஸ் சேவைக்கு - +91 9391351543, 9963857749, 9440379926 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.sankathi24.com/news/27267/64/22/d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் 'குண்டு வெடிப்பின்' விளைவுகள் முழுவதும், பிரணாப் முகர்ஜிக்குச் சமர்ப்பணமாகட்டும்! :o  

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கானா  வச்சிருக்குமோ 

தெலுங்கானா  வச்சிருக்குமோ 

 

இப்ப அப்படித்தான் சந்தேகின்றார்கள்.

மைக்ரோசொப்ட் மற்றும் கூகிள் கூட இங்கு தமது நிறுவனங்களை கொண்டன. அவைகள் வேறு இடத்தை நாடலாம்,.

 

தமிழகம் நிலைமையை தனக்கு சாதகமாக்கி கொள்ளல் வேண்டும்.

ஆர் வைச்சாலும் காங்கிரஸ்த்தான் பொறுப்பு.  தெலுங்கனா விடையத்திலும், கசாப், அப்சல் குரு விடையத்திலும் அரசியல் ரீதியாக குழப்பம் விட்டது காங்கிரஸ். எனவே இந்த துந்பியல் நிகழ்வுக்கு காங்கிரசை பொறுப்பெடுக்க வைத்து ஆந்திரர், காங்கிரசுக்கு எதிராக வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.  

 

கஸ்டப்பட்டுபோய்விட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

மகிந்த என்ற கயவனின் கால் பட விட்டதால்தான் இப்படி இனியாவது அவனை இந்தியாவிற்குள் நுழையவிடாது தடுக்கவும். 

 

ஆழ்ந்த இரங்கல்கள்.
 

மகிந்த என்ற கயவனின் கால் பட விட்டதால்தான் இப்படி இனியாவது அவனை இந்தியாவிற்குள் நுழையவிடாது தடுக்கவும். 

 

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

மிகச் சரியான அனுமானம். தெருவில் போன பசாசை திருப்பதி கோமாளிகள் வீட்டுக்குள் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடர்களாகிய கன்னடனும், மலையாளத்தவனும் தமிழனுடன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கும் போது... ஆந்திர மாநிலத்தவர்கள் தமிழனுடன் ஒரு சிநேக மனப்பான்மை கொண்டவர்கள். ஈழப் போராட்டத்துக்கும்... இயலுமான ஆதரவைக் கொடுத்தவர்கள். அவர்கள் மண்ணில்... ஏற்பட்ட குண்டுவெடிப்புக்களை யார் செய்திருந்தாலும், கண்டிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன்: இந்தியாவின் ஹைதராபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

 

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலன்ட் கூறுகையில், ஹைதராபாத்தில் நடந்துள்ள கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்.

 

தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். இதில் தேவைப்படுமானால் அனைத்து உதவிகளை இந்தியாவுக்கும் அளிக்க அமெரிக்கா தயாராகவுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை சந்திக்க இருக்கிறார். அப்போது தமது ஆழ்ந்த இரங்கலை கெர்ரி, ரஞ்சன் மாத்தாயிடம் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

 

இதேபோல் ஹைதராபாத் சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பொது மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான இத்தாக்குதல் கண்டனத்துக்குரியது. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

http://tamil.oneindia.in/news/2013/02/22/world-us-condemns-hyderabad-blast-offers-assistance-170260.html

சாய்பாபா கோயிலை குறி வைத்த பயங்கரவாதிகள் ?

 

ஆந்திராவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் கடைசி நேரத்தில் இலக்கு மாற்றப்பட்டது என தகவல் வெளியாகியிருக்கிறது. இங்குள்ள தில்சுக் நகர் பகுதியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி பக்தர்கள் உயிரை காவு வாங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்நாளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு காரணமாக பயங்கரவாதிகள் இந்த கோயிலை நெருங்க முடியாமல் போனது என்றும் இதனால் கடைசி நேரத்தில் சாய்பாபா கோயில் அருகே இந்த குண்டுகள் வெடிக்கப்பட்டது இதனால் சாய் பக்தர்கள் உயிர் தப்பினர்.கடந்த வியாழனன்று இரவில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

 

ஹிட் லிஸ்ட்டில் சாய்பாபா கோயில்; இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் யார் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. இந்த நிலையில் இந்த சதி திட்டம் சாய்பாபா கோயிலை மையமாக வைத்தே நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுருந்தனராம். வியாழனன்று பக்தர்கள் சிறப்பு பஜனைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

 

இந்நேரத்தில் பக்தர்கள் பலர் கூடுவதால் இங்கு குண்டு வைக்கலாம் என சதி தீட்டியுள்ளனர். குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்னதாக ( 40 நிமிடத்திற்கு முன்பு ) ஐதரபாத் சிட்டி கமிஷனர் அனுராக் சர்மா இந்த கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சில யோசனைகளை வழங்கி பார்வையிட்டு சென்றார். கமிஷனர் இருந்ததால் பயங்கரவாதிகள் யாரும் கோயில் அருகே செல்ல முடியவில்லை. இருப்பினும் வந்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் கோயிலில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள கோனார்க் தியேட்டர் அருகே குண்டு வைக்கப்பட்டது. சாய்பாபா கோயில் பயங்கரவாதிகள் ஹிட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. கடந்த 2002 ல் இங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவையில் கூடுதல் பாதுகாப்பு : ஐதராபாத் குண்டு வெடிப்பை அடுத்து கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கும் பயங்கரவாத செயல் நடக்கும் என உளவுத்துறை எச்சரிக்கை இருப்பதை யொட்டி இங்கு வாகன சோதனை, விமானநிலையங்களில் கண்காணிப்பு , பொதுமக்கள் கூடும் பகுதிகளில் போலீசார் மாற்று உடையில் கண்காணித்து வருவதாக சிட்டி கமிஷனர் விஸ்வநாதன் கூறினார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B1-071300748.html

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே ஆந்திராவுக்கு போனதும் அங்கை குண்டுவெடிச்சு பத்துபேர் சாவுராங்க..கொலைகாறன்..இவன் எங்க போனாலும் அங்க சனம் சாவுது..

இதுவரை கொல்லப்பட்ட 20 பேர் சார்பாக எந்த பெரிய தடயமும் இல்லை, விசாரணையில் பெரிய முன்னேற்றம் இல்லை.

இது இந்தியாவின் பலவீனத்தை காட்டுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.