Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெக்ரர் எண்டா திசையும் பருமனும் இருக்கும்

Featured Replies

ம் ...

 

எனது குரு வெக்டர் பற்றிய பதிவினை கண்டவுடன் ஏனோ மனம் கவலை கொள்கிறது. என் மனதில் என்றும் வீற்றிருக்கும் ஆசான். நான் அவரிடம் மட்டுமே கணிதம் படித்தேன்.

 

எமது வகுப்பு 91ம் ஆண்டு தொடங்கும் போது 60பேர் இருந்தார்கள். இறுதியில் நானும் இன்னொரு நண்பனும் மட்டுமே இறுதிவரை அவரின் வகுப்பில் படித்தோம். இடையில் பல பறவைகள் வரும் போகும்.

 

அவர் மறைந்தாலும் என்னுள் அவரின் குரல் ஒலிக்கிறது. நான் பேராதனைக்கு வரும்போது என்னுடைய கணிதக் குறிப்பு புத்தகங்களை தன்னுடனே வைத்துக் கொண்டார்.

 

என வாழ்நாளில் மறக்க முடியாத கணிதப் பேராசான் அவர்.

 

அவரின் நினைவாக எனது M.Phil Thesis ஐ அவருக்காக அர்ப்பணித்திருந்தேன்.

 

கண்கள் பனிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ம் ...

 

எனது குரு வெக்டர் பற்றிய பதிவினை கண்டவுடன் ஏனோ மனம் கவலை கொள்கிறது. என் மனதில் என்றும் வீற்றிருக்கும் ஆசான். நான் அவரிடம் மட்டுமே கணிதம் படித்தேன்.

 

எமது வகுப்பு 91ம் ஆண்டு தொடங்கும் போது 60பேர் இருந்தார்கள். இறுதியில் நானும் இன்னொரு நண்பனும் மட்டுமே இறுதிவரை அவரின் வகுப்பில் படித்தோம். இடையில் பல பறவைகள் வரும் போகும்.

 

அவர் மறைந்தாலும் என்னுள் அவரின் குரல் ஒலிக்கிறது. நான் பேராதனைக்கு வரும்போது என்னுடைய கணிதக் குறிப்பு புத்தகங்களை தன்னுடனே வைத்துக் கொண்டார்.

 

என வாழ்நாளில் மறக்க முடியாத கணிதப் பேராசான் அவர்.

 

அவரின் நினைவாக எனது M.Phil Thesis ஐ அவருக்காக அர்ப்பணித்திருந்தேன்.

 

கண்கள் பனிக்கின்றன.

 

இந்தப் கதையை முதலில் பார்த்தபோது ஈழத்திருமகன் வெக்ரர் வேலாயுதத்திடம் படித்திருக்கவேண்டும் என்று ஏனோ மனம் நினைத்திருந்தது. உங்கள் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியமைக்கு நன்றிகள்.

 

சாதாரண தரம் படிக்கும்போது வெக்ரரைப் பற்றி உயர்தர நண்பர்கள் அடிக்கடி கதைப்பார்கள். Matrix ஐப் பாவித்து பல சிக்கலான கேள்விகளை இலகுவாகச் செய்வார் என்று சொல்வார்கள். ஊரில் உயர்தரம் படித்திருந்தால் அவரிடம் கட்டாயம் படித்திருப்பேன். 

Edited by கிருபன்

வதிரியில் படிக்கும் போது நல்லையா சேர், மகாதேவா சேர், சிவகுமார் சேர், கொழும்பில் படிக்கும் போது வர்ணம் சேர், Thillainathan sir, Sooriyanaathan sir எல்லாரிடமும் படித்திருக்கிறன் , என்ன தான் அங்க இவ்வளவும் படிச்சும் இங்க வந்து வேலைக்கு ஏற்ற துறையில் படிக்க வேண்டியதாப்போயிற்றுது. பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்த இந்த பதிவுக்கு நன்றி

வெக்ரர் எண்டா திசையும் பருமனும் இருக்கும். அருமையாய் கதை சொல்லப்பட்டுள்ளது. புகைபிடித்தல், மதுபானம் இவை இரண்டையும் பயன்படுத்தினால் வாழ்க்கையின் திசை எப்படிப்போகும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. நல்ல அர்த்தம் உள்ள கதை.

 

நான் ஒரு தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமும் ஏதாவது க.பொ.உ பாடத்தை முழுமையாக கற்கவில்லை. ஆயினும், நான் சென்ற வகுப்புக்களின் ஆசிரியர்கள்: குகாதரன், நாகநாதன், வர்ணம், தில்லைநாதன், சோதிலிங்கம், பாலா, ஏனையோரின் பெயர்கள் மறந்துவிட்டன. தெல்லிப்பளையில் துர்க்கை அம்மன் கோயிலிற்கு சற்று அண்மையாக ஓர் கல்வி நிறுவனத்திலும் (பாலாவின்), பின்னர் யாழ் நகரில் செயற்பட்ட நியூ மாஸ்டரிற்கும் சென்று வந்தேன். பல்வேறு தடங்கல்கல்கள் காரணமாக தனியார் கல்விநிறுவன வகுப்புக்களிற்கு என்னால் கிரமாக செல்லமுடியவில்லை.உண்மையில் நான் சுயமாகவே பெருன்பான்மையானவற்றை கற்றுக்கொண்டேன்.

 

மேலே கதை சொல்லப்பட்டவிதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கதையை இணைத்த நுணாவிலானுக்கு நன்றி.

Edited by கரும்பு

மகாதேவா யாழ் இந்துவில் எங்கள் இரசாயன ஆசிரியர். மாணவர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மனிதர்.
 
கன்டீன் நடாவின் போண்டாப் பிரியர்.
 
திலீபனின் உடல் யாழ் இந்துவின் முன்னால் கொண்டுவரப்பட்ட போது விக்கிவிக்கி அழுதார்.

மகாதேவா யாழ் இந்துவில் எங்கள் இரசாயன ஆசிரியர். மாணவர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மனிதர்.
 
கன்டீன் நடாவின் போண்டாப் பிரியர்.
 
திலீபனின் உடல் யாழ் இந்துவின் முன்னால் கொண்டுவரப்பட்ட போது விக்கிவிக்கி அழுதார்.

 

 

அவரிடம் படித்தால்தான் இரசாயனவியல் சித்தியடைந்தேன். நல்ல ஆசிரியர்

வணக்கம் நுணாவிலான்!

 

நீங்கள் சொல்லியிருக்கிற கன பேரை எனக்கும் தெரியும்.

 

மகாதேவா சேரிட்டை கெமிஸ்ரி படிச்சனான். சோதிலிங்கம் சேரிட்டை பிசிக்ஸ் படிச்சனான். வெக்ரர் வேலாயுதம் செரின்ரை மாணவன் பிறேம்நாத் சேரிட்டை மற்ஸ் படிச்சனான். மணி வேலாயுதம் சேரிட்டை பள்ளிக்கூடத்திலை படிச்சனான். 

 

ஆனால் எல்லாம் ஒரு அறு மாசம் தான். அதுக்குள்ளை அந்தப் பாழ்படுவான் வரதராசப் பெருமாளின்ரை கூட்டத்தைின்ரை பிள்ளைபிடிக்கிள்ளை ஆப்பிட்டு படிப்பைத் துலைச்சது சாகும் மட்டும் மாறாத சோகம்.

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவங்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.