Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தஹி கோஸ்ட்: மட்டன் ரெசிபி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியாவில் பிரபலமான ஒரு அசைவ உணவு தான் தஹி கோஸ்ட். இதில் தஹி என்றால் தயிர், கோஸ்ட் என்றால் மட்டன். எனவே தயிரையும் மட்டனையும் முக்கியப் பொருளாக கொண்டு, தயாரிக்கப்பட்ட ஒரு கிரேவி தான் தஹி கோஸ்ட். இது மிகவும் சுவையுடன் இருக்கும். இந்த கிரேவியை சாதம் அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

இதனை செய்துவது மிகவும் எளிது. சரி, இப்போது அந்த தஹி கோஸ்ட்டின் செய்முறைப் பார்ப்போமா!!!

 

06-dahigosht.jpg

 

 

தேவையான பொருட்கள்:

 

எலும்பில்லாத ஆட்டுக்கறி - 500 கிராம்

தயிர் - 500 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)

வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்

பிரியாணி இலை - 1

மிளகு - 1 டீஸ்பூன் (பொடி செய்தது)

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

 

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் மஞ்சள் தூள், மிளகுப் பொடி, உப்பு, தயிர், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட். பச்சைமிளகாய் போட்டு கலந்து, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை போட்டு தாளித்து, வெங்காயம் மற்றும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு தக்காளி, மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி போட்டு கிளறி, எண்ணெயும் மசாலாவும் தனியாக பிரியும் வரை வதக்கவும்.

பின் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, மட்டன் வேகும் வரை நன்கு கொதிக்க விட்டு, சற்று கெட்டியான கிரேவி போல் வந்ததும், இறக்க வேண்டும்.

இப்போது சுவையான தஹி கோஸ்ட் ரெடி!!!

 

http://tamil.boldsky.com/recipes/non-veg/dahi-gosht-mutton-recipe-002815.html

ஆசையாக வாங்கின்ற ஊராட்டு பங்கிறைச்சிக்குள் தயிரை எல்லாம் போட்டு ஆராச்சி செய்ய நான் தயாரில்லை. ஆராவது செய்து சாப்பிட்டு இரண்டு மூன்று ஏவறையும் விட்டு விட்டு எப்படி இருக்கு என்று சொல்லவும்..நல்லா இருந்தா செய்து பார்க்கின்றேன்.

ஆசையாக வாங்கின்ற ஊராட்டு பங்கிறைச்சிக்குள் தயிரை எல்லாம் போட்டு ஆராச்சி செய்ய நான் தயாரில்லை. ஆராவது செய்து சாப்பிட்டு இரண்டு மூன்று ஏவறையும் விட்டு விட்டு எப்படி இருக்கு என்று சொல்லவும்..நல்லா இருந்தா செய்து பார்க்கின்றேன்.

 

இதற்கு பங்கு ஆட்டு இறைச்சி ஒத்து வராது.

 

கிட்டத்தட்ட இதே முறையில் நிறைய இஞ்சி போட்டு எங்கட கறித்தூள் கலந்து செய்வேன். அத்துடன் சில மெல்லிய சிறிய கத்தரிப் பிஞ்சுகளையும் நீளவாக்கில் வெட்டி  oven இற்குள் வைத்து 'கிரில்' பண்ணி இடையில் போடுவேன். கேட்க ஒரு மாதிரியாயிருக்கும். சாப்பிட்டால்   சொல்லி வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நிழலி மாதிரித் தான் அருமந்த ஆட்டிறைச்சியை இப்படி வேஸ்ட் பண்ண மாட்டேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா.. எல்லாரும் ஒரே தின்னிப் பண்டாரங்களா இருக்கிறீங்கள்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா.. எல்லாரும் ஒரே தின்னிப் பண்டாரங்களா இருக்கிறீங்கள்.. :D

 

ஒரு சாண் வயிற்றுக்குத் தானே கஸ்டப்படுகிறோம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாண் வயிற்றுக்குத் தானே கஸ்டப்படுகிறோம் :lol:

 

நீங்கள் ஒருசாண் வயிற்றுக்கு கஸ்டப்படுறீங்கள்... :( நாங்கள் ஒ.. ஒ.. ஒ.. ஒரு பிடி சோற்றுக்கு அவதிப்படுறம்.. :D:lol:

 

என்னப்பா.. எல்லாரும் ஒரே தின்னிப் பண்டாரங்களா இருக்கிறீங்கள்.. :D

 

.

பண்டாரம் என்பது ஒரு சாதி, இங்கே ஒருவர் சாதியை வைத்து இழிவாக 'தின்னிப் பண்டாரம்' என்று எழுதியுள்ளார். அதை கவனிக்கவில்லையா என்ற என் கருத்தை தூக்கிவிட்டீர்கள். நல்லதான் போகின்றது. தொடர்க உங்கள் பணி. கருத்தோட்டதிற்கும் நகைச்சுவையாக சாதிகளை கதைக்கலாம், தப்பேயில்லை?

 

 

 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81)

 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)

  • கருத்துக்கள உறவுகள்

.

பண்டாரம் என்பது ஒரு சாதி, இங்கே ஒருவர் சாதியை வைத்து இழிவாக 'தின்னிப் பண்டாரம்' என்று எழுதியுள்ளார். அதை கவனிக்கவில்லையா என்ற என் கருத்தை தூக்கிவிட்டீர்கள். நல்லதான் போகின்றது. தொடர்க உங்கள் பணி. கருத்தோட்டதிற்கும் நகைச்சுவையாக சாதிகளை கதைக்கலாம், தப்பேயில்லை?

 

 

 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81)

 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)

 

பண்டாரம் என்பது ஒரு சாதியைக் குறிக்கிறது என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன். இது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் முதற்கண் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

தின்பண்டம் என்பதிலிருந்து வந்ததாகவே இதுவரையில் நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அதுவே உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது இத்தகைய சொல்லாடலுக்கு..

 

எது எவ்வாறெனினும், பல சாதிப்பெயர்களை அறியாத எனக்கு இக்களத்தின் சில உறுப்பினர்கள் அறிவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. :D

பண்டாரம் என்பது ஒரு சாதியைக் குறிக்கிறது என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன். இது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் முதற்கண் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

தின்பண்டம் என்பதிலிருந்து வந்ததாகவே இதுவரையில் நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அதுவே உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது இத்தகைய சொல்லாடலுக்கு..

 

எது எவ்வாறெனினும், பல சாதிப்பெயர்களை அறியாத எனக்கு இக்களத்தின் சில உறுப்பினர்கள் அறிவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. :D

 

இந்த பெயரை 'புட்டு' திரியில்  பயன்படுத்தியிருந்தேன். இது சாதியைக் குறிக்கும் என்று தெரியாது. எவரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

பண்டாரம் என்றால் கோயிலில் பிச்சை எடுப்பவர்களைத்தான் குறிப்பது என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன். அதே போல் நிறைய சாப்பிடுகின்றவர்களையும் 'தீனிப்பண்டாரம்' என்று எக்கச்சக்கமாக சாப்பிடுகின்றவர்களைத்தான் பொதுவாக ஊரில் குறிப்பர். என்னையே என் மனிசி அடிக்கடி தீனிப் பண்டாரம் என்று சொல்வதை நான் ரசிப்பதுண்டு. இதனால் தான் நேற்று இச் சொல் உண்மையில் சாதியைக் குறிக்கின்றதா என சரியாக தெரியாமல் மறைத்து இருந்தேன். இன்று தான் வந்தி அதற்கான சான்றுகளை விக்கி பீடியாவில் இருந்து இணைத்து இருந்தார்.

 

ஆயினும் கூட 'தீனிப் பண்டாரம்' என்று இசை குறித்து இருந்ததும் தப்பிலி இன்னொரு திரியில் குறித்து இருந்ததும் சாதியை குறித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல என்று வாசிக்கும் /வாசித்த எவரும் புரிந்து கொண்டு இருப்பர். வந்திக்கும் இது புரிந்து இருக்கும். இதனை எமக்கு முறைப்படி முறையிட்டு இருக்க வேண்டும் என்றால் அதனை ரிப்போர் பட்டன் மூலம் அறிவித்து இருக்க வேண்டும்.

 

தீனிப் பண்டாரம் என்பதை Google செய்தேன்:

 

 

Edited by நிழலி
கூகிள் தேடலை இணைக்க

.

பண்டாரம் என்பது ஒரு சாதி, இங்கே ஒருவர் சாதியை வைத்து இழிவாக 'தின்னிப் பண்டாரம்' என்று எழுதியுள்ளார். அதை கவனிக்கவில்லையா என்ற என் கருத்தை தூக்கிவிட்டீர்கள். நல்லதான் போகின்றது. தொடர்க உங்கள் பணி. கருத்தோட்டதிற்கும் நகைச்சுவையாக சாதிகளை கதைக்கலாம், தப்பேயில்லை?

 

 

 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81)

 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)

 

இதைதான் எங்கட ஊரில சொல்லுரவ  முட்டையில ............புடுங்கிறது எண்டு :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரம் என்று சொல்லப்படுபவர்கள் கோயிலுக்கு பூக்கள் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கோவிலில் கொடுப்பதை உண்பவர்கள் என்று சொல்ல கேள்விப் பட்டிருக்கின்றேன் நிழலி குறிப்பிட்டதுபோல் பிச்சைகாரர் என்பது அறியவில்லை 

கோயிலில் கிடைப்பதை சாப்பிட்டு சங்கு ஊதுவதும் & கடவுளிற்கு மலர்கள் பறித்து மாலைகள் செய்து கொடுப்பதும்தான் அவர்களின் அதிக வேலை.  அவர்களில் பலர் என் நண்பர்களும் கூட.

 

இப்படி அவர்கள் கோயிலில் கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு இருப்பதை; ஊரில் வேலையில்லாமல் சாப்பிட்டு திரிபவனையும் அடிக்கடி ஏதாவதை கொறிப்பவனையும் இப்படி கூப்பிடுபவர்கள். பலர் இக்களத்திற்கும் வருவார்கள், அவர்களிற்கு இது மன சங்கடமா இருக்காதா?

 

இதை தெரியாது என்று சொல்லும் இசையின் கருத்து நகைப்பிற்கிடமாக இருக்கு. உங்கள் நக்கல் நளினங்களை இந்த விசயத்தில் தயவு செய்து காட்டாதீர்கள்.

 

நிழலி & நிர்வாகம் - தயவுசெய்து இம்முறை மன்னித்துவிடுங்கள், அடுத்தமுறை நேரடியாக உங்களிற்கு அறியத்தருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை தெரியாது என்று சொல்லும் இசையின் கருத்து நகைப்பிற்கிடமாக இருக்கு. உங்கள் நக்கல் நளினங்களை இந்த விசயத்தில் தயவு செய்து காட்டாதீர்கள்.

 

தெரியாது என்றால் தெரியாதுதான்.. உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் ஒரு நிலை என்று ஒன்றில்லை.. மற்றவரைப் பற்றித் தெரியாமல் பேசுவதுதான் அபத்தம். அந்த அபத்தமான வேலையைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்..! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்கறி கடைசியில் ஆறுமுகநாவலர் அல்லது ஐயரை கூட்டித்து வரும் போல கிடக்கு :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.