Jump to content

மைத்திரேயின் சமையல் கட்டு 03 ( கோதுமை அரிசி புட்டு அல்லது ஓட்ஸ் புட்டு )


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோதுமை அரிசிப் புட்டு  அல்லது ஓட்ஸ் புட்டு .

 

34b9a09fe21b3a84a4615adc6cf7f34d_large.j

 

என்ன தேவை :

 

கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ்  2 கப் .

ரவை வறுத்தது 1 / 2 கப் .

தேங்காய் பூ 1 / 2 கப்.

உப்பு ( தேவையான அளவு ).

 

கூட்டல்:

 

ஒரு சட்டியிலை கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் உடன் உப்பு கலந்து சுடு தண்ணியை கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் மட்டத்துக்கு விடுங்கோ. பின்பு ரவையை சுடுதண்ணிக்கு மேலை தூவி ஒரு மணித்தியாலம் ஊறவிடுங்கோ. பின்பு பூட்புரோசஸசரில் போட்டு அடியுங்கோ. பின்பு ஸ் ரீமரிலை வேகவைத்து திருவிய தேங்காய் பூவை கலவுங்கோ. மாற்றர் ஓவர்.

 

பி கு :

 

கோதுமை அரிசி அரை அவியலில் புழுக்கியது (grains de blé précuit  or wheat grain parboiled) எல்லா கடைகளிலும் விக்கின்றது .கண்டுபிடிப்பது சுலபமானது .

 

எனக்கு தெரிஞ்ச புட்டு ரிப்ஸ்:

 

01 குரக்கன் புட்டுக்கு :

 

புட்டை குழைத்து அதோடை கொஞ்சம் உழுத்தம் மாவை கலந்து அவியுங்கோ அப்ப நல்ல வாசம் வரும் . புட்டை தேங்காய் பூவோடை கலக்கிற நேரம் , கொஞ்சம் பட்டர் சேர்து கலந்தால் புட்டு நல்ல மென்மையாக வரும் .

 

02 ஒடியல் புட்டுக்கு :

 

இதனுடன் வெண்டிக்காய் , கத்தரிக்காய் , வாழைக்காய் , பச்சைமிளகாய் , சின்னவெங்காயம் , கொஞ்சம் மாங்காய் எல்லாவற்றையும் சின்னதாய் வெட்டி , ஒடியல் மாவை புட்டுக்கு குழைப்பது மாதிரி குழைச்சு அவியுங்கோ . பின்பு தேங்காய் பூவைக் கலவுங்கோ .

 

மைத்திரேயி

13/03/2013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்ச புட்டு ரிப்ஸ்:

 

01 குரக்கன் புட்டுக்கு :

 

புட்டை குழைத்து அதோடை கொஞ்சம் உழுத்தம் மாவை கலந்து அவியுங்கோ அப்ப நல்ல வாசம் வரும் . புட்டை தேங்காய் பூவோடை கலக்கிற நேரம் , கொஞ்சம் பட்டர் சேர்து கலந்தால் புட்டு நல்ல மென்மையாக வரும் .

 

02 ஒடியல் புட்டுக்கு :

 

இதனுடன் வெண்டிக்காய் , கத்தரிக்காய் , வாழைக்காய் , பச்சைமிளகாய் , சின்னவெங்காயம் , கொஞ்சம் மாங்காய் எல்லாவற்றையும் சின்னதாய் வெட்டி , ஒடியல் மாவை புட்டுக்கு குழைப்பது மாதிரி குழைச்சு அவியுங்கோ . பின்பு தேங்காய் பூவைக் கலவுங்கோ .

 

 

 

மிகவும் பயன் உள்ள சமையல் குறிப்புக்கள் ...
 
பகிர்விற்கு நன்றி மைத்திரேயி  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிசிமா புட்டவிக்கவே பஞ்சியாயிருக்கு இதில வேற ஓட்ஸ் புட்டு :D

Link to comment
Share on other sites

கோதுமை மா Oat இல் இருந்தா எடுக்கின்றவர்கள்?

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88

 

http://en.wikipedia.org/wiki/Oat

 

 

i-oats-rolled.jpg



உங்களுக்கு தேங்காய் உடைக்கத் தெரியாதா சரி பாதியாக?



அத்துடன் உங்களுக்கு கை நடுக்கமிருக்கு, வைத்தியரை நாடவும் விரைவில் (கடலைக்கறி சிதறுட்டிருக்கு) :lol:

 

 

பகிர்விற்கு நன்றி மைத்திரேயி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், மைத்திரேயி!

 

கொஞ்சகாலமா, யாழ் களத்தில ஒரு புட்டவியலாக் கிடக்கு! :D

 

நாங்கள் விடுதியில் இருந்த காலத்தில், இதற்கு வைத்த செல்லப்பெயர் 'கொங்கிரீட்"

 

இதைச் சாம்பாரோட (அது தான் தருவாங்கள்) சாப்பிட்டிட்டு, வயித்தில தட்டிப்பாத்தா, சும்மா சுவரில தட்டிறமாதிரி இருக்கும்! :D

 

புட்டு + கப்பல் வாழைப்பழம் = சொர்க்கம்  :icon_idea:

Link to comment
Share on other sites

தேங்காய் சிரட்டையினுள்ளா புட்டு வைப்பீர்கள் :lol:  தேங்காய் திருவும் போது ஆறுதலாத் திருவுங்கோ மை அக்கா :D தேங்காய்ப் பூவைப் பார்க்கா வடிவாய் இல்லை, சாப்பாடைப் பார்க்கச் சாப்பிட வேணும் போலை இருக்கணும் :D



உங்கட சாபாடுகளும் தமிழும் வித்தியாசம் தான், நீங்கள் வித்தியாசமான ஆள் போலைத் தான் கிடக்கு.



:lol:  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், மைத்திரேயி!

 

கொஞ்சகாலமா, யாழ் களத்தில ஒரு புட்டவியலாக் கிடக்கு! :D

 

நாங்கள் விடுதியில் இருந்த காலத்தில், இதற்கு வைத்த செல்லப்பெயர் 'கொங்கிரீட்"

 

இதைச் சாம்பாரோட (அது தான் தருவாங்கள்) சாப்பிட்டிட்டு, வயித்தில தட்டிப்பாத்தா, சும்மா சுவரில தட்டிறமாதிரி இருக்கும்! :D

 

புட்டு + கப்பல் வாழைப்பழம் = சொர்க்கம்  :icon_idea:

 

சிவ பெருமானே... புட்டுப் பிரியர். கொடுத்த வேலையை.... செய்யாமல், செம்மனச் செல்வியின் புட்டுக்கு ஆசைப்ப‌ட்டு, பாண்டிய‌ ம‌ன்ன‌ரின் சேவ‌க‌ரிட‌ம் அடி வாங்கிய‌வ‌ர் எனும் போது, யாழ் க‌ள‌ம், விதி வில‌க்க‌ல்ல‌. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலம் தூயாவின் சமையல் கட்டு தான் யாழ் களத்தில். அந்த நாள் முதல் சாகாவரம் பெற்ற நாங்கள் இதுவரைக்கும். இன்று மைத்திரேயின் சமையல் கட்டு எங்களை என்ன செய்யும்? புட்டு பொறுத்து புரையேறினால் மைத்திரேயிக்கு ஏச்சுத்தான் :lol: :lol:


நன்றி உங்கள் குறிப்புக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோதுமை மா Oat இல் இருந்தா எடுக்கின்றவர்கள்?

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88

 

http://en.wikipedia.org/wiki/Oat

 

 

i-oats-rolled.jpg

உங்களுக்கு தேங்காய் உடைக்கத் தெரியாதா சரி பாதியாக?

அத்துடன் உங்களுக்கு கை நடுக்கமிருக்கு, வைத்தியரை நாடவும் விரைவில் (கடலைக்கறி சிதறுட்டிருக்கு) :lol:

 

 

பகிர்விற்கு நன்றி மைத்திரேயி 

 

நான் வீட்டிலை தேங்காய் உடைக்கிறேலை என்ரை அவர்தான் உடைக்கிறவர் . வருங்காலத்திலை அவர் பொது இடங்களிலை தேங்காய் உடைக்கவேணும் எண்டிறதால அவர் தேங்காய் உடைக்க பழகிறார் :)  :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீட்டிலை தேங்காய் உடைக்கிறேலை என்ரை அவர்தான் உடைக்கிறவர் . வருங்காலத்திலை அவர் பொது இடங்களிலை தேங்காய் உடைக்கவேணும் எண்டிறதால அவர் தேங்காய் உடைக்க பழகிறார் :)  :) .

 

Tamil-Daily-News-Paper_98651850224.jpg

 

உங்கடை... அவர்,  வீதிகளில் தேங்காய் உடைக்கப் போகிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேங்காய் சிரட்டையினுள்ளா புட்டு வைப்பீர்கள் :lol:  தேங்காய் திருவும் போது ஆறுதலாத் திருவுங்கோ மை அக்கா :D தேங்காய்ப் பூவைப் பார்க்கா வடிவாய் இல்லை, சாப்பாடைப் பார்க்கச் சாப்பிட வேணும் போலை இருக்கணும் :D

உங்கட சாபாடுகளும் தமிழும் வித்தியாசம் தான், நீங்கள் வித்தியாசமான ஆள் போலைத் தான் கிடக்கு.

:lol:  :lol:

 

என்னட்டை திருவலை இல்லை . ஸ்கிறைப்பராலைதான் தேங்காய் திருவிறனான் . வாழை இலையிலை சாப்பிடுறிங்கள் தேங்காய் சிரட்டை எண்ட உடனை ஏன் இளக்காரப் படுகிறியள் :)  :)  ??

Tamil-Daily-News-Paper_98651850224.jpg

 

உங்கடை... அவர்,  வீதிகளில் தேங்காய் உடைக்கப் போகிறாரா?

 

இல்லை . கலியாணவீடுகளிலை தலைப்பா கட்டிக்கொண்டு உடைப்பாங்களே ?? அதுதான் இப்ப பழகிறார் :)  :) .

Link to comment
Share on other sites

என்னட்டை திருவலை இல்லை . ஸ்கிறைப்பராலைதான் தேங்காய் திருவிறனான் . வாழை இலையிலை சாப்பிடுறிங்கள் தேங்காய் சிரட்டை எண்ட உடனை ஏன் இளக்காரப் படுகிறியள் :)  :)  ??

 

மையக்கா நாங்கள் food dish இல் தான் புட்டுப் போடுறனாங்கள், நீங்கள் தேங்காய்ச் சிரட்டையில் போட்டு வைச்சிருக்கிறீர்கள் அது தான் கேட்டனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலம் தூயாவின் சமையல் கட்டு தான் யாழ் களத்தில். அந்த நாள் முதல் சாகாவரம் பெற்ற நாங்கள் இதுவரைக்கும். இன்று மைத்திரேயின் சமையல் கட்டு எங்களை என்ன செய்யும்? புட்டு பொறுத்து புரையேறினால் மைத்திரேயிக்கு ஏச்சுத்தான் :lol: :lol:

நன்றி உங்கள் குறிப்புக்கு

சாப்பாடு என்றதும்..முனிவர் தனது நீண்ட தவத்தை கலைத்து எழுந்து வந்துவிட்டார்...இதனால் சிவனாரின் சாபத்துக்கு ஆளாகிறார் மைத்திரேயி.. :D

Link to comment
Share on other sites

என்னட்டை திருவலை இல்லை . 

 

திருவலகை இல்லாமலா புட்டவிக்கிறியள் :o ஜீவாட்டைச் சொன்னால் அனுப்பீடுவாரே, :D  காசு குடுக்க மறந்திடாதையுங்கோ :lol:

Link to comment
Share on other sites

ஓட்ஸ் உடல் நலனுக்கு, குறிப்பாக இரத்த அழுத்தம், கொலஸ்திரோலை குறைப்பதில் பங்கெடுக்கிறது. குறிப்பாக ஓட்சில்  உள்ள  பீற்றா குழுக்கான் எனும் பதார்த்தமே உடல் நலனை பேணுவதில் உதவுகிறது.

 

ஓட்ஸ் . கோதுமை இராண்டும் வெவ்வேறு தாவரங்கள். .... கோதுமை அரிசி?? என்ற பெயரை எங்கு பெற்றீர்கள் 

 

 

பீற்றா - குளுக்கான்கள் (Beta - glucans): உடல் நலன் சார் பங்களிப்புகள்.

 

pristruct.jpg

Beta-glucans
எனப்படுபவை பல குளுகொஸ் (Glucose) மூலக்கூறுகளினால் ஆக்கப்பட்ட ஒரு பல்
சக்கரைட் பசை (Polysaccharide gum ) ஆகும். இயற்கையாக பல தாவரங்களிலும்,
நுண்ணங்கிகளிலும் காணப்படுகிறது. இது உடல் நலனுக்கு உகந்த ஒரு சமிபாட்டு
நார் சத்தாகும் (Dietary fibre).


NSC1000905063.jpgbeta500.jpg



தற்போதைய
நவீன உலகில் நுகர்வோர் பலரும் (அதாவது நாங்களே தான்) உடல் நலனுக்கு உகந்த
உணவை தேடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை தானே. அவ்வாறான தேடலுக்கு தீனி போடுபவை
செயற்படு உணவுகள் (Functional Foods) எனும் உணவு வகைகளாகும்.
பீற்றா குளுக்கான்ஸ் உம் செயற்படு உணவு வகையை சேர்ந்தவையாகும்.

பீற்றா குளுக்கான்களை கொண்ட உணவுகள்

மதுவம் (Yeast)

இயற்கையான
பீற்ற குளுக்கான்கள் ஐ கொண்ட பிரதான 4 இயற்கை மூலங்களில் மதுவம்
முக்கியமானதாகும். மற்றைய இயற்கை மூலங்களில் காணப்படுவது போன்று அல்லாமல்
இதன் கரையும் தன்மை (insoluble) குறைவாகும். மதுவத்தில் காணப்படும் பீற்றா
குளுக்கான்கள் உடலின் நிர்பீடன பாதுகாப்பு (immune defences) சக்திகளை
உறுதியாக்குகிறது. இருந்த போதிலும் இதன் கரை திறன் குறைவாக இருப்பதனால்
உணவுகளுடனோ அல்லது குடி பானங்களுடனோ கலப்பது சிரமமாகும்.

காளான் (Mushroom)

பல
காளான் இனங்களில் பீற்றா குளுக்கான்கள் காணப்பட்டாலும் இது வயிற்று
குழப்பங்களை தரக்கூடியதாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இதை
தவிர்ப்பது நல்லது.

பார்லி (Barley)

பார்லியில்
மிக அதிக அளவில் பீற்றா குளுக்கான்ஸ் இருந்த போதும் இது வரை உணவு/ மருந்து
பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை அதிகம் பெறவில்லை. பார்லி பீற்றா
குளுக்காங்கள் குருதி கொலஸ்திரோல் அளவை குறைப்பதுடன், இதய நோய்கள் ஏற்படும்
ஆபத்தையும் குறைக்கிறது இதங்கரணமாக தற்போது ஐக்கிய அமெரிக்க நாடுகளின்
விவசாய துறை இதனை உணவு தயாரிப்பில் பயன்படுத்த அங்கிகரித்துள்ளது.ஆனால்
பார்லி பீற்ற குளுக்காங்கள் உணவின் விருப்பை (Platability) குறைக்க கூடியவை
ஆக இருப்பது இதன் பிரதிகூலமாகும்.

ஓட்ஸ் (Oats)

ஓட்ஸ்
பீற்ற குளுக்கான்கள் ஓரளவு நீரில் கரைய கூடியதாக இருப்பதால் சமிபாட்டு
தொகுதியில் கூழ் நிலை கரைசலை எற்படுத்துவதால் கொலஸ்திரோல் சமிபாட்டு
தொகுதியில் அகத்துறுஞ்சலை குறைகிறது. இதன் உடல் கொலஸ்திரோலை குறைக்கும்,
இதய நோய்களை குறைக்கும் இயல்பு காரணமாக ஐக்கிய இராச்சியம், சுவீடன் ஆக்கிய
நாடுகள் இதனை உணவில் சேர்க்க அங்கிகரித்துள்ளன. ஆனால் உடலுக்கு தேவையான
அளவு பீற்றா குளுக்காங்களை உள்ளெடுக்க நாளாந்தம் 250 கிராம் சமைக்கப்பட
ஓட்ஸ் ஐ உண்ண வேண்டியிருப்பது நுகர்வோரால் அதிகம் விரும்பப்படாத ஒரு
அம்சமாகும்.

பீற்றா குளுக்காங்களின் உடல் நலன்சார் பங்களிப்புகள்

பிரதானமாக
இதய நோய்களை குறைத்து இதய நலன் பேணலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பீற்றா
குளுக்கான்கள் சிறுகுடலில் (small intestine) இல் ஒரு கூழ் நிலை கரைசலை
ஏற்படுத்துவதுடன், சிறுகுடல் உட்பரப்பில் ஒரு பாதுகாப்பு கவசத்தை
உருவாக்குகிறன. இதனால் பித்த அமிலங்கள் (bile acid)மீளவும் குடலில்
அகத்துறுஞ்சப்படுவதை தடுக்கிறன. பித்த அமிலங்கள் அகத்துறுஞ்சப்படாது
மலத்துடன் வெளியேற்றப்படுகிறன.
மேலும் இந்த கூழ் நிலை கரைசல்
வெல்லங்ளின் (காபோவைதரேற்றுக்கள்- carbohydrates)அகத்துறுஞ்சலை
குறைப்பதுடன் இன்சுலின் (insulin)சுரப்பையும் கட்டுப்படுத்துகிறன. இதனால்
ஈரலில் (liver) கொலஸ்திரோல் (cholesterol)உருவாக்கத்தை குறைக்கிறன.

குருதியில்
அதிகரித்த குறைந்த அடர்த்தி உடைய லிப்போபுரத கொலஸ்திரோல்
(LDL-cholesterol)இதய நோய்களுக்கு காரணமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
எனவே கொலஸ்திரோல் அகத்துறுஞ்சலை சிறுகுடல் பகுதியில் குறைப்பதால் இதய
நோய்கள் குறைவடைவதற்கு காரண்மாக இருக்க முடியும்.

இதய நலனுகு அடுத்த
முக்கிய ஒரு உடல் நலன் சார் பங்களிப்பாக உடலின் நிர்பீடன தொகுதியை (immune
system) தூண்டுவதை குறிப்பிடலாம். உடலின் நிர்பீடன தொழிலை செய்யும்
கலங்கள் (cells) பீற்றா குளுக்கான்களை உணரும் வாங்கிகளை
(recepters)கொண்டிருக்கிறன. பீற்றா குளுக்கான்களை இக்கலங்கள் காணும் போது
ஒரு பூட்டு-திறப்பு வகை பொறிமுறையால் இணைத்து கொள்கிறன. இந்த கலங்கள் பீற்ற
குளுக்கான்களை உடலில் ஊடுருவல் செய்யும் பிற பொருட்களாக உணர்ந்து உடலின்
நிர்பீடன செயற்பாட்டை/ நோய் எதிர்ப்பு செயற்பாட்டை தூண்டுகிறன. இதன்
காரணமாக உடலின் நிர்பீடன செயற்பாட்டு சங்கிலி தொடர் தூண்டப்படுகிறது.

இவ்வாறான
நிர்பீடன செயன் முறையின் தூண்டல் புற்று நோயை(Cancer) எதிர்ப்பதில்
உதவுவதுடன் எயிட்ஸ் நோயின் அறிகுறிகளை குறைப்பதிலும் உதவுதாக
சொல்லப்படுகிறது. ஆயினும் இவை தொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் தேவையாக
இருக்கிறன.


ஓட்ஸ் (Oats) இன் உடல் நலன் சார் சாதகமான இயல்புகள்.

குருதியின் வெல்ல அளவை குறைத்தல் (Reducing blood sugar levels)

மாப்பொருள்/
வெல்ல உணவு உட்கொண்ட பின் உடலில் ஏற்படும் கிளைக்காமிக் விளைவை (Glycaemic
response)பீற்றா குளுக்கான்கள் குறைக்கிறன. உதாரணமாக 1 கிராம் பீற்றா
குளுக்கான்கள் ஒவ்வொரு 50 கிராம் மாப்பொருள்/ வெல்ல உணவுடன்
உள்ளெடுக்கப்படும் போது கிளைக்காமிக் சுட்டி (Glycamic index) 4
புள்ளிகளால் குறைவடைகிறது. எனவே சலரோகம்/ சர்க்கரை வகை 2 வியாதி
உள்ளவர்களுக்கு இது சிறப்பான ஒரு தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.

உடல் நிறையை கட்டுப்படுத்தல்

ஓட்ஸ்
கொண்ட உணவை காலையில் உட் கொள்ளும் போது நீண்ட நேரம் சக்தியை கொடுப்பதுடன்,
விரைவில் பசி ஏற்படுவதை குறைக்கிறது. இதனால் தேவைக்கு அதிக உணவு
உட்கொள்வது குறைகிறது.

 

http://jeyachchandran.blogspot.ca/2007/04/blog-post.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓட்ஸ் உடல் நலனுக்கு, குறிப்பாக இரத்த அழுத்தம், கொலஸ்திரோலை குறைப்பதில் பங்கெடுக்கிறது. குறிப்பாக ஓட்சில்  உள்ள  பீற்றா குழுக்கான் எனும் பதார்த்தமே உடல் நலனை பேணுவதில் உதவுகிறது.

 

ஓட்ஸ் . கோதுமை இராண்டும் வெவ்வேறு தாவரங்கள். .... கோதுமை அரிசி?? என்ற பெயரை எங்கு பெற்றீர்கள் 

 

 

பீற்றா - குளுக்கான்கள் (Beta - glucans): உடல் நலன் சார் பங்களிப்புகள்.

 

pristruct.jpg

Beta-glucans

எனப்படுபவை பல குளுகொஸ் (Glucose) மூலக்கூறுகளினால் ஆக்கப்பட்ட ஒரு பல்

சக்கரைட் பசை (Polysaccharide gum ) ஆகும். இயற்கையாக பல தாவரங்களிலும்,

நுண்ணங்கிகளிலும் காணப்படுகிறது. இது உடல் நலனுக்கு உகந்த ஒரு சமிபாட்டு

நார் சத்தாகும் (Dietary fibre).

NSC1000905063.jpgbeta500.jpg

தற்போதைய

நவீன உலகில் நுகர்வோர் பலரும் (அதாவது நாங்களே தான்) உடல் நலனுக்கு உகந்த

உணவை தேடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை தானே. அவ்வாறான தேடலுக்கு தீனி போடுபவை

செயற்படு உணவுகள் (Functional Foods) எனும் உணவு வகைகளாகும்.

பீற்றா குளுக்கான்ஸ் உம் செயற்படு உணவு வகையை சேர்ந்தவையாகும்.

பீற்றா குளுக்கான்களை கொண்ட உணவுகள்

மதுவம் (Yeast)

இயற்கையான

பீற்ற குளுக்கான்கள் ஐ கொண்ட பிரதான 4 இயற்கை மூலங்களில் மதுவம்

முக்கியமானதாகும். மற்றைய இயற்கை மூலங்களில் காணப்படுவது போன்று அல்லாமல்

இதன் கரையும் தன்மை (insoluble) குறைவாகும். மதுவத்தில் காணப்படும் பீற்றா

குளுக்கான்கள் உடலின் நிர்பீடன பாதுகாப்பு (immune defences) சக்திகளை

உறுதியாக்குகிறது. இருந்த போதிலும் இதன் கரை திறன் குறைவாக இருப்பதனால்

உணவுகளுடனோ அல்லது குடி பானங்களுடனோ கலப்பது சிரமமாகும்.

காளான் (Mushroom)

பல

காளான் இனங்களில் பீற்றா குளுக்கான்கள் காணப்பட்டாலும் இது வயிற்று

குழப்பங்களை தரக்கூடியதாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இதை

தவிர்ப்பது நல்லது.

பார்லி (Barley)

பார்லியில்

மிக அதிக அளவில் பீற்றா குளுக்கான்ஸ் இருந்த போதும் இது வரை உணவு/ மருந்து

பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை அதிகம் பெறவில்லை. பார்லி பீற்றா

குளுக்காங்கள் குருதி கொலஸ்திரோல் அளவை குறைப்பதுடன், இதய நோய்கள் ஏற்படும்

ஆபத்தையும் குறைக்கிறது இதங்கரணமாக தற்போது ஐக்கிய அமெரிக்க நாடுகளின்

விவசாய துறை இதனை உணவு தயாரிப்பில் பயன்படுத்த அங்கிகரித்துள்ளது.ஆனால்

பார்லி பீற்ற குளுக்காங்கள் உணவின் விருப்பை (Platability) குறைக்க கூடியவை

ஆக இருப்பது இதன் பிரதிகூலமாகும்.

ஓட்ஸ் (Oats)

ஓட்ஸ்

பீற்ற குளுக்கான்கள் ஓரளவு நீரில் கரைய கூடியதாக இருப்பதால் சமிபாட்டு

தொகுதியில் கூழ் நிலை கரைசலை எற்படுத்துவதால் கொலஸ்திரோல் சமிபாட்டு

தொகுதியில் அகத்துறுஞ்சலை குறைகிறது. இதன் உடல் கொலஸ்திரோலை குறைக்கும்,

இதய நோய்களை குறைக்கும் இயல்பு காரணமாக ஐக்கிய இராச்சியம், சுவீடன் ஆக்கிய

நாடுகள் இதனை உணவில் சேர்க்க அங்கிகரித்துள்ளன. ஆனால் உடலுக்கு தேவையான

அளவு பீற்றா குளுக்காங்களை உள்ளெடுக்க நாளாந்தம் 250 கிராம் சமைக்கப்பட

ஓட்ஸ் ஐ உண்ண வேண்டியிருப்பது நுகர்வோரால் அதிகம் விரும்பப்படாத ஒரு

அம்சமாகும்.

பீற்றா குளுக்காங்களின் உடல் நலன்சார் பங்களிப்புகள்

பிரதானமாக

இதய நோய்களை குறைத்து இதய நலன் பேணலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பீற்றா

குளுக்கான்கள் சிறுகுடலில் (small intestine) இல் ஒரு கூழ் நிலை கரைசலை

ஏற்படுத்துவதுடன், சிறுகுடல் உட்பரப்பில் ஒரு பாதுகாப்பு கவசத்தை

உருவாக்குகிறன. இதனால் பித்த அமிலங்கள் (bile acid)மீளவும் குடலில்

அகத்துறுஞ்சப்படுவதை தடுக்கிறன. பித்த அமிலங்கள் அகத்துறுஞ்சப்படாது

மலத்துடன் வெளியேற்றப்படுகிறன.

மேலும் இந்த கூழ் நிலை கரைசல்

வெல்லங்ளின் (காபோவைதரேற்றுக்கள்- carbohydrates)அகத்துறுஞ்சலை

குறைப்பதுடன் இன்சுலின் (insulin)சுரப்பையும் கட்டுப்படுத்துகிறன. இதனால்

ஈரலில் (liver) கொலஸ்திரோல் (cholesterol)உருவாக்கத்தை குறைக்கிறன.

குருதியில்

அதிகரித்த குறைந்த அடர்த்தி உடைய லிப்போபுரத கொலஸ்திரோல்

(LDL-cholesterol)இதய நோய்களுக்கு காரணமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

எனவே கொலஸ்திரோல் அகத்துறுஞ்சலை சிறுகுடல் பகுதியில் குறைப்பதால் இதய

நோய்கள் குறைவடைவதற்கு காரண்மாக இருக்க முடியும்.

இதய நலனுகு அடுத்த

முக்கிய ஒரு உடல் நலன் சார் பங்களிப்பாக உடலின் நிர்பீடன தொகுதியை (immune

system) தூண்டுவதை குறிப்பிடலாம். உடலின் நிர்பீடன தொழிலை செய்யும்

கலங்கள் (cells) பீற்றா குளுக்கான்களை உணரும் வாங்கிகளை

(recepters)கொண்டிருக்கிறன. பீற்றா குளுக்கான்களை இக்கலங்கள் காணும் போது

ஒரு பூட்டு-திறப்பு வகை பொறிமுறையால் இணைத்து கொள்கிறன. இந்த கலங்கள் பீற்ற

குளுக்கான்களை உடலில் ஊடுருவல் செய்யும் பிற பொருட்களாக உணர்ந்து உடலின்

நிர்பீடன செயற்பாட்டை/ நோய் எதிர்ப்பு செயற்பாட்டை தூண்டுகிறன. இதன்

காரணமாக உடலின் நிர்பீடன செயற்பாட்டு சங்கிலி தொடர் தூண்டப்படுகிறது.

இவ்வாறான

நிர்பீடன செயன் முறையின் தூண்டல் புற்று நோயை(Cancer) எதிர்ப்பதில்

உதவுவதுடன் எயிட்ஸ் நோயின் அறிகுறிகளை குறைப்பதிலும் உதவுதாக

சொல்லப்படுகிறது. ஆயினும் இவை தொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் தேவையாக

இருக்கிறன.

ஓட்ஸ் (Oats) இன் உடல் நலன் சார் சாதகமான இயல்புகள்.

குருதியின் வெல்ல அளவை குறைத்தல் (Reducing blood sugar levels)

மாப்பொருள்/

வெல்ல உணவு உட்கொண்ட பின் உடலில் ஏற்படும் கிளைக்காமிக் விளைவை (Glycaemic

response)பீற்றா குளுக்கான்கள் குறைக்கிறன. உதாரணமாக 1 கிராம் பீற்றா

குளுக்கான்கள் ஒவ்வொரு 50 கிராம் மாப்பொருள்/ வெல்ல உணவுடன்

உள்ளெடுக்கப்படும் போது கிளைக்காமிக் சுட்டி (Glycamic index) 4

புள்ளிகளால் குறைவடைகிறது. எனவே சலரோகம்/ சர்க்கரை வகை 2 வியாதி

உள்ளவர்களுக்கு இது சிறப்பான ஒரு தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.

உடல் நிறையை கட்டுப்படுத்தல்

ஓட்ஸ்

கொண்ட உணவை காலையில் உட் கொள்ளும் போது நீண்ட நேரம் சக்தியை கொடுப்பதுடன்,

விரைவில் பசி ஏற்படுவதை குறைக்கிறது. இதனால் தேவைக்கு அதிக உணவு

உட்கொள்வது குறைகிறது.

 

http://jeyachchandran.blogspot.ca/2007/04/blog-post.html

 

உங்கடை பிரையோசமான தரவுகளுக்கு நன்றி சொல்லுறன் . என்னிலைதான் பிழை .ஒரே மாதிரியான செய்முறையை சொல்ல போய் , எனது தமிழ் உங்களை குளப்பி என்னையும் குளப்பி விட்டது . என்ரை அவருக்கு ஓட்ஸ்சிலை சாப்பாடு கொடுக்க சொல்லி டொக்ரர் சொன்னவர் .ஆனால் அவருக்கு ஓட்ஸ் விருப்பமில்லை . பிறகு நான் கோதுமை அரிசி கடையிலை வாங்கி அவிச்சன் . ரெண்டு புட்டும் ஒரே மாதிரிதான் அவிக்கிறது . நான் செய்முறையிலை மாத்தி விடுறன் .

Link to comment
Share on other sites

உங்கடை பிரையோசமான தரவுகளுக்கு நன்றி சொல்லுறன் . என்னிலைதான் பிழை .ஒரே மாதிரியான செய்முறையை சொல்ல போய் , எனது தமிழ் உங்களை குளப்பி என்னையும் குளப்பி விட்டது . என்ரை அவருக்கு ஓட்ஸ்சிலை சாப்பாடு கொடுக்க சொல்லி டொக்ரர் சொன்னவர் .ஆனால் அவருக்கு ஓட்ஸ் விருப்பமில்லை . பிறகு நான் கோதுமை அரிசி கடையிலை வாங்கி அவிச்சன் . ரெண்டு புட்டும் ஒரே மாதிரிதான் அவிக்கிறது . நான் செய்முறையிலை மாத்தி விடுறன் .

 

நீங்கள் முன்னர் எழுதியதை பார்த்து ஓட்ஸை கோதுமை அரிசி என்கிறீர்கள் என விளங்கி விட்டேன்.

 

 

உங்கள் வைத்தியர் கொல்ஸ்திரோலை குறைப்பதற்கு, அல்லது இரத்த அழுத்த பிரச்சனைகளை குறைக்க ஓட்ஸ் சாப்பிட சொல்லி இருந்தால் கோதுமை அரிசியை பாவிப்பது பலன் தரும் என நினைக்கவில்லை. ஏன்  எனில் கோதுமையில் பீற்றா குளுக்கான் இல்லை.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் முன்னர் எழுதியதை பார்த்து ஓட்ஸை கோதுமை அரிசி என்கிறீர்கள் என விளங்கி விட்டேன்.

 

 

உங்கள் வைத்தியர் கொல்ஸ்திரோலை குறைப்பதற்கு, அல்லது இரத்த அழுத்த பிரச்சனைகளை குறைக்க ஓட்ஸ் சாப்பிட சொல்லி இருந்தால் கோதுமை அரிசியை பாவிப்பது பலன் தரும் என நினைக்கவில்லை. ஏன்  எனில் கோதுமையில் பீற்றா குளுக்கான் இல்லை.

 

இப்ப ஒரு மாதிரி ஓட்ஸ் சாப்பிடுறார் .

Link to comment
Share on other sites

குரக்கன் மாவை வெண்ணைக் கட்டி / தேங்காய்ப் பூ போடாமல் குழைத்து பின் 'ஓட்ஸ்' ஐ கலந்து அரிந்த வெங்காயம் / பச்சை கொச்சிக்காய் சேர்த்து அவிக்க நன்றாக இருந்தது. குரக்கன் புட்டு மாதிரியே தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலம் தூயாவின் சமையல் கட்டு தான் யாழ் களத்தில். அந்த நாள் முதல் சாகாவரம் பெற்ற நாங்கள் இதுவரைக்கும். இன்று மைத்திரேயின் சமையல் கட்டு எங்களை என்ன செய்யும்? புட்டு பொறுத்து புரையேறினால் மைத்திரேயிக்கு ஏச்சுத்தான் :lol: :lol:

நன்றி உங்கள் குறிப்புக்கு

 

புட்டு செய்து பாத்திங்களோ ?? புட்டு பிரக்கடிச்சதோ முனிவர் ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனால் தற்போது வட்சப்பில் வந்த பேட்டியில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சொல்கிறார் சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை கொடுப்பதற்காக என்று சொல்கிறார்  காணொளியில் 2:30  
    • வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது,  ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
    • உலக இஸ்லாமிய கொள்கை வகுப்பாளர்கள் ,தங்களது கொள்கைகளை பரப்ப தமிழக/கேரளா இஸ்லாமிய சகோதரர்கள் சிறிலங்கா இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து தங்களது செயல்களை வடக்கு கிழக்கில் செய்கின்றனர்...அது ஒரு தனி டரக் போகின்றது ...
    • வீரகேசரி தான் இலங்கையில் வாக்களிக்கும் முறையை ஒரு படம் மூலம் விளக்கமாக தெரிவித்துள்ளது. பலர் காணொளிகள் குழப்பமாகவே முன்பு தெரிவித்தன. இலங்கையில் உள்ள தமிழர்கள் பெறுமதியான தங்களது வாக்கை வீணாக்காமல் வாக்களிக்கலாம். (தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதும் வாக்கை வீணாக்கும் செயல் தான் )
    • சிந்திக்க வேண்டிய விடயம். சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம்.   நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி       
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.