Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டக்ளஸ், அங்கஜன் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் - நிஷாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nishanthan-seithy-150.jpg

அமைச்சர் டக்ளஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ஆகிய இருவரும் எம் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் என யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ். நகரப் பகுதியில் ஜனாதிபதிக்கும், இலங்கை அரசுக்கும் ஆதரவு தெரிவித்தும், அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் உருவசிலைகளை எரித்தும், கண்டித்தும், ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தும் டக்ளஸ், அங்கஜன் போன்ற தமிழின துரோகிகளால் மக்களை ஏமாற்றி, கபடத்தனமான முறையில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து இராணுவத்தினரின் உதவியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

  

இது இவர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ மத்தியில் பெரும் வரவேற்பாக அமையும். ஆனால் உலக தமிழ் மக்கள் பார்வையில் இவர்கள் இருவரும் நிர்வாணமாக தான் பார்க்கப்படுவார்கள். எம் மக்களின் உரிமைகளுக்காகவும், விடிவிற்காகவும் 40 வருடங்களுக்கு மேலாக பல லட்சம் உயிர்களை தியாகம் செய்து பலவழிகளிலும் போராட்டங்களையும், பேச்சுக்களையும் நடத்தி கடைசியில் இப்போதுதான் குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தான் உலக நாடுகளின் பார்வை எம் மக்கள் மீது திருப்பியிருக்கின்றது. இவ்வாறான நிலையில் நாம் இங்கிருந்து அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் பிரேரணையை இன்னும் வலுவூட்டுவதற்காக துடிக்கின்றோம். ஆனால் எம்மை இந்த அரசு முடக்கி வைத்திருக்கின்றார்கள். ஆனாலும் இன்று இந்தியா உட்பட உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பல போராட்டங்களையும், தீக்குளிப்புக்களையும் நடாத்தி வரும் வேளையில் நமது பிரதேசமான குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த அரசுக்கு ஆதரவாக அமைச்சர் டக்ளஸ், அமைப்பாளர் அங்கஜன் போன்ற தமிழின துரோகிகள் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் இவ்வேளையில் இதை பொறுத்து கொள்ள முடியாமல் இவ்வாறான செயற்பாடுகளில் சில விஷமிகளின் கதையை கேட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

 

இவ் ஆர்ப்பாட்டத்தில் 200 க்கு மேற்பட்ட இராணுவத்தினர் சிவில் உடையிலும், சாவகச்சேரி, தீவகம் போன்ற பகுதிகளில் வாழும் எம் மக்களை வீட்டுதிட்டம் பதிவதற்காக என்று கூறியும் படித்த இளைஞர் சமூகத்தினரை வேலைவாய்ப்பு விடயமாக கூட்டம் என்று கூறியும் நயவஞ்சயமாக அழைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள். இதன் மூலம் அமைப்பாளர் அங்கஜன் இன்னும் பல எரிபொருள் நிலையத்துக்கான அனுமதியை பெற்றுவிடுவார். அமைச்சர் டக்ளஸ் மாநகர சபையை பயன்படுத்தி இன்னும் எங்கொல்லாம் கடை இருக்கின்றதோ அவற்றை எல்லாம் தன்னுடைய தம்பியார் தயாநந்தாவை வைத்து மிரட்டி பெற்று எடுத்துக்கொள்வார். இடையில் விபரம் தெரியாமல் சென்ற எம் மக்கள் பசியோடு வீடு திரும்பும் நிலைமை தான் இன்று நடந்து கொண்டு இருக்கின்றது. எனவே எது எப்படி இருந்தாலும் இவர்களுடைய இந்த சிறிய ஆர்ப்பாட்டத்தின் மூலம் கிடைக்கப் போகும் நல்ல காரியங்களை நிறுத்தி விட முடியாது. என்பதனை திட்டவட்டமாக கூறிக்கொள்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=78584&category=TamilNews&language=tamil

எவளவோ தாங்கிட்டம்  உந்த நிர்வாணாமாக அலைவதையா தாங்கமாட்டோம்? :D

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் எவரை எல்லாம் துரோகிகள் என்றார்களோ அவர்களை என்னஅந்த துரோக இருக்கைகளில் அமரச் செய்தது?   அது புலிகளுடன் ஏற்பட்ட சொந்தப் பகைமை அல்ல பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருந்த அந்த யோக்கியம் தான் காரணம் என்பதை இவர்களின் செயல்களே எதிர்காலத்திற்கு சாட்சியமாகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவும் தன்ர அதிகாரத்தைக் காட்டத்தானே வேணும்..

 

அன்று கொழும்பில்.. டயர் போட்டு தமிழர்களை எரித்த புத்த பிக்குகள்.. தமிழர் மீது போர் போர் என்று போரை திணித்த புத்த பிக்குகளை தாக்கினதுக்கு கொழும்பு தமிழ் வர்த்தகர்கள் சிலர்.. ஆர்ப்பாட்டமாம்...

 

IMG_8058-main-600-1.jpg

 

மகிந்தவின் கொதிப்பை.. கட்டுப்படுத்தி.. தனது முதலமைச்சர் வேட்பாளர் கனவை நனவாக்க.. துரோகி டக்கிளஸ்.. தனது வழமையான சித்து விளையாட்டை இம்முறையும் ஒரு சிறிய கூட்டம் மக்களை ஏமாற்றி அழைத்து.. இராணுவத்தை வைச்சுக் கொண்டு.. யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றி இருக்கிறார்...

 

DSCF9828.jpg

 

படங்கள்: டெயிலிமிரர் மற்றும் ஈழநாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் சிங்கள அரசின்.. அதன் அடிவருடி.. ஒட்டுக்குழுக்களின் உண்மையான அராஜக அரசியலோ.. இப்படி போய்க்கிட்டு இருக்குது. தங்கட ஆத்திரத்தை தீர்க்க மக்களை ஏமாற்றி.. பலிக்கடாவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்...

 

486410_588182941193681_1421009800_n.jpg

 

நன்றி முகநூல்.

Edited by nedukkalapoovan

ஏன் எல்லாத்தையும் குறையாகவே பார்க்கவேண்டும்?
புத்த பிக்குவிக்கு அடித்த கோபத்தில் இலங்கையிலும் தமிழர்கள் மேல் சிங்கள காடையர்கள் தாக்கினால் என்ன செய்வது என்று ஒரு கண் துடைப்பிற்காகவும் செய்திருக்கலாம் தானே ?
தலைவர் இருந்தா குண்டு வெடிக்கும் என்ற பயமாவது சிங்களவனுக்கு இருக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லாத்தையும் குறையாகவே பார்க்கவேண்டும்?

புத்த பிக்குவிக்கு அடித்த கோபத்தில் இலங்கையிலும் தமிழர்கள் மேல் சிங்கள காடையர்கள் தாக்கினால் என்ன செய்வது என்று ஒரு கண் துடைப்பிற்காகவும் செய்திருக்கலாம் தானே ?

தலைவர் இருந்தா குண்டு வெடிக்கும் என்ற பயமாவது சிங்களவனுக்கு இருக்கும் :)

 

இப்படி ஊர்வலம் போனாப் போல அடிக்க நினைக்கிற சிங்களக் காடையர்கள் அடிக்கமாட்டினம் என்றதுக்கு என்ன உத்தரவாதம்.

 

அடிக்கிற சிங்களவன் அடிச்சுத்தான் தீருவான். அதுதான் வரலாறு. அவனிடம் அதற்கான அதிகாரமும் இருக்குது அடிக்கிறதை மறைக்கிற திறமையும் இருக்குது. இதனை அவன் 1952 இல் இருந்து 2009 வரையும் செய்து வந்த அனுபவமும் அவனிட்ட இருக்குது.

 

பிரச்சனை என்னவென்றால் இப்படியே சிங்களவனிட்ட அடிவாங்கிக் கொண்டு அவனுக்கு.. அடிபணிந்து போய் மீண்டும் மீண்டும் அடிவாங்கிக் கொண்டிருப்பதிலும் அவனின் உண்மை முகத்தை வெளி உலகிற்கு காட்டி அந்த உலகிடம் இருந்து ஒரு பாதுகாப்பை பெற்றுக் கொள்வது என்பது தான் தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பாக அமையுமே தவிர சிங்களவனை தாஜா பண்ணி தமிழர்கள் பாதுகாப்புப் பெறுவதென்பது பகற்கனவாக மட்டுமே இருக்க முடியும். சும்மா ஒரு வெறும் வாதத்திற்கு அதனைக் கூறிக் கொண்டிருக்கலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸாலும் மற்றும் மகிந்தவின் கைக்கூலிகளினாலும்

இதைவிட வேறொன்றையும் பெரிதாகச்செய்து விடமுடியாது .

 

பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதும் 

இவர்களின் செயல்களும் ஒன்றே .

இப்ப எதோ உடுப்போட அலையிறமாதிரி..............................சும்மா ஜோக்கு விடக்கூடாதுங்கோ........ :D

 அமைச்சர் டக்ளஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ஆகிய இருவரும் எம் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் என யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

 

 

நீங்கள் உங்கள் உயிருக்கும் பயப்படாமல் உண்மையை கூறியுள்ளீர்கள்.

 

நன்றிகள்.

 

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்காவில் சிங்கள அரசின்.. அதன் அடிவருடி.. ஒட்டுக்குழுக்களின் உண்மையான அராஜக அரசியலோ.. இப்படி போய்க்கிட்டு இருக்குது. தங்கட ஆத்திரத்தை தீர்க்க மக்களை ஏமாற்றி.. பலிக்கடாவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்...

 

486410_588182941193681_1421009800_n.jpg

 

நன்றி முகநூல்.

 

உண்மைச் செய்திகளை அப்படியே சொல்லிற்றாலும். வியாபாரத்திற்காய் விபச்சாரம் செய்யும் ஊடங்கள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.