Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது..ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jajalalitha.jpg
 
 

 

அண்மைச்செய்தி:

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது: 

இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்:::

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்....

 

 

www.puthiyathalaimurai.tv

Edited by பையன்26

  • Replies 60
  • Views 3.9k
  • Created
  • Last Reply

இக்கடிதத்தை வரவேற்கிறேன் ( ஆனால் மாற்றி மாற்றி கடிதம் எழுதுவதை தவிர்த்து ஒரு மாநில அரசால் ஏதாவது பண்ண முடியுமா ? தெரிந்தவர்கள் சொல்லவும் ) . அப்படியே இங்கு வரும் இலங்கை வீரர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு பொறுப்பாகாதுன்னு ஒரு பிட்ட போடுங்க மம்மி அப்பத்தான் கொஞ்சமாவது நம்ம வழிக்கு வருவாங்க. நாளை கண்டிப்பாக தாத்தா கிட்டே இருந்து ஒரு பெரிய்ய்ய்ய அறிக்கை ஒன்றை எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

579891_433742246712362_1354993371_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் போராட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளுகின்ற அரசியல் வாதி என்றா அது ஜெ தான்......

கருணாக்கு குடும்ப பஞ்சாயத்த தீர்க்கவே நேரம் காணாது .....

அதுவும் சிதம்பரத்த பிரதமர் வேட்பாளர் ஆக அறிவித்தால் அம்மா இன்னும் இன்னும் கடுமையான மோதல் போக்கை காங்கிரஸ் அரசுடன் ஆரம்பிப்பார் இதை ஈழத்தமிழ் ஆதரவு குழுக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களை அனுமதிக்கக் கூடாது: சென்னை போலீசாரிடம் மாணவர்கள் மனு

தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை அணியை எப்போதும் சேர்க்கக் கூடாது. இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இருக்கும் இலங்கை வீரர்களை நீக்க வேண்டும். மும்பையில் குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தான் அணியை எப்படி ஐபிஎல் அணியில் இருந்து நீக்கினார்களோ, அதுபோல் இலங்கையையும் ஐபிஎல் அணியில் இருந்து நீக்க வேண்டும். இதுசம்மந்தமாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். அவரும் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை அணியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றனர்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95288

  • கருத்துக்கள உறவுகள்

இக்கடிதத்தை வரவேற்கிறேன் ( ஆனால் மாற்றி மாற்றி கடிதம் எழுதுவதை தவிர்த்து ஒரு மாநில அரசால் ஏதாவது பண்ண முடியுமா ? தெரிந்தவர்கள் சொல்லவும் ) . அப்படியே இங்கு வரும் இலங்கை வீரர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு பொறுப்பாகாதுன்னு ஒரு பிட்ட போடுங்க மம்மி அப்பத்தான் கொஞ்சமாவது நம்ம வழிக்கு வருவாங்க. நாளை கண்டிப்பாக தாத்தா கிட்டே இருந்து ஒரு பெரிய்ய்ய்ய அறிக்கை ஒன்றை எதிர்பார்க்கிறேன்.

 

கருப்புப் பூனை..

 

மம்மி பாதுகாப்புக்கு உத்தரவாதம் குடுக்க முடியாதென்று சொல்ல வாய்ப்பிருக்கு..! ஆனால் அப்படிச் சொன்னால், மத்திய பொலிஸ் படையுடன் (CRPF) அவர்கள் வந்து இறங்கினாலும் இறங்குவார்கள்..! நான்கு ஆண்டுகளுக்கு முன்னம் என்றால் அப்படித்தான் செய்திருப்பார்கள்..! ஆனால் இன்று கொஞ்சம் யோசிக்கவே செய்வார்கள் என நினைக்கிறேன்..! :unsure:

மாணவர்கள் போராட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளுகின்ற அரசியல் வாதி என்றா அது ஜெ தான்......

கருணாக்கு குடும்ப பஞ்சாயத்த தீர்க்கவே நேரம் காணாது .....

அதுவும் சிதம்பரத்த பிரதமர் வேட்பாளர் ஆக அறிவித்தால் அம்மா இன்னும் இன்னும் கடுமையான மோதல் போக்கை காங்கிரஸ் அரசுடன் ஆரம்பிப்பார் இதை ஈழத்தமிழ் ஆதரவு குழுக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.......

 

சரியாகச் சொன்னீர்கள் சுண்டல்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சுண்டல், டங்கு ,இது அம்மாட அரசியல் விளையாட்டை இருந்தாலும் சரி இல்லை கொலைஞர்ருக்கு எதிரா நடந்தாலும் சரி...எப்படியாவது சிங்கள வீரரை ஜ பி எல்லில் இருந்து விரட்டி அடிக்கனும்...அதுக்கு இந்த அறிக்கை கொஞ்சம் உதவும்  :D 
 
அகூதா அண்ணா எழுதினதையும் கொஞ்சம் வாசியுங்கோ... :icon_mrgreen: 
 
 

புறக்கணிப்பு என்பது பல இடங்களில் நடந்த ஒன்று. துடுப்பெடுத்தாட்டம் என்று பார்க்கையில் தென் ஆபிரிக்கா மற்றும் சிம்பாவே கூட புறக்கணிக்கப்பட்டன. மகிந்த கூட்டம் தமது தவறுகளை மறைக்க பாவிக்கும் அணுகுமுறைகளில் ஒன்று - விளையாட்டு.


பத்து சிங்களவர்கள் ஐ.பி.எல். விளையாடுவது - சின்ன அலுவலாக இருக்கலாம். ஆனால் சிங்கள நாட்டை பொறுத்தவரையில் துடுப்ப்டுத்தாட்டம் ஒரு முக்கிய பொழுது போக்கு. ஊடகங்களில் முக்கிய செய்தி பெறும் விடயம். சிங்கள வீரர்கள் புறக்கணிக்கப்படும் பொழுது அது செய்தியாகும். சிங்கள மக்கள் கூட தமது அரசு செய்த இனவழிப்புக்களை உணர ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Indian province asks for ban on SL players in Chennai

 

The government of the Indian state of Tamil Nadu has written to the prime minister asking for Sri Lankan players and officials to be excluded from IPL matches in Chennai. The demand follows rising political tensions in the state over the treatment of Tamils in Sri Lanka.

"In such a hostile and tense environment, we apprehend that the participation of Sri Lankan players in the IPL tournament, with many games to be played in Chennai, will aggravate an already surcharged atmosphere and further offend the sentiments of the people," said the letter, written by chief minister J Jayalalitha.

Earlier this month the DMK, the main opposition party in Tamil Nadu and a key ally of the federal government, pulled out of the ruling coalition at the centre asking for sterner measures to redress alleged atrocities towards Tamils in Sri Lanka.

Reacting to news of the letter, Rajiv Shukla, the IPL chairman, insisted that all matches scheduled to be held in Chennai would be staged as planned. He said there would be an emergency meeting of the IPL's governing council and the issue was being discussed with the BCCI president but no decision had been taken. The federal information minister said the prime minister was out of the country and would take a decision on his return.

Sri Lanka Cricket (SLC) has said that it is monitoring the developments in India closely and was waiting for a travel advisory from the Sri Lankan government. "If there is a secondary threat to a player in a particular area then we will wait for the government's advice," Nishantha Ranatunga, the SLC secretary, told ESPNcricinfo. "We have written to Ministry of Foreign Affairs through our Minister of Sport to get feedback on our players' safety."

Ranatunga also said the BCCI had kept the SLC posted and assured it of player safety. "Even the BCCI has told us if the situation is going to be bad they will take a call on this. But we have not worked or spoken in detail so far."

The "ban", if implemented, will affect Chennai Super Kings, who play all their eight home matches in Chennai; however, their Sri Lankan contingent consists of only two fringe players, Nuwan Kulasekara and Akila Dananjaya. Franchises that will be significantly hit, at least for the lone game they play in Chennai in the league phase, include Mumbai Indians (Lasith Malinga), Delhi Daredevils (Mahela Jayawardene), Sunrisers Hyderabad (Kumar Sangakkara) and Pune Warriors (Angelo Mathews). Chennai also hosts some of the knockout matches, where these players would be crucial if their teams make the cut.

If Super Kings decide to withdraw their Sri Lankan players, both the players will be compensated with their contract fees for the entire season.

Sri Lankan players in IPL:
Nuwan Kulasekara and Akila Dananjaya (Chennai Super Kings) 
Mahela Jayawardene and Jeevan Mendis (Delhi Daredevils) 
Sachithra Senanayake (Kolkata Knight Riders) 
Lasith Malinga (Mumbai Indians) 
Ajantha Mendis and Angelo Mathews (Pune Warriors) 
Kushal Janith Perera (Rajasthan Royals) 
Muttiah Muralitharan and Tillakaratne Dilshan (Royal Challengers Bangalore) 
Kumar Sangakkara and Thisara Perera (Sunrisers Hyderabad)

 

http://www.espncricinfo.com/indian-premier-league-2013/content/story/626858.html



கிரிக் இன்போவில் இந்த செய்தி வந்துட்டு எல்லோ இனி எல்லா கிரிக்கெட் ரசிகர்களிடமும் போய் சேரும்..ஹா ஹா ஹா :D 

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வீரர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்!- தமிழகம் எங்கும் துண்டுப்பிரசுரம்

 

 

அடுத்த வாரம் ஆரம்பிக்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதித்தால் விரட்டியடிப்போம்  என்றும், ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை ஏன் அனுமதிக்க கூடாது என்ற விளக்கம் அடங்கிய துண்டு பிரசுரம் ஒன்று தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.

காலவரையற்ற உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்கள் ஒரு புறம் நடக்க, புத்த பிக்குகள் மீது தாக்குதல், இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் என தங்கள் கோபத்தை வெளிக்காட்டி வருகிறார்கள் தமிழர்கள்.

இந்த சூழலில் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையும் வலுபெற்று வருகிறது.

அடுத்த வாரம் தொடங்க இருக்கும் ஐ.பி.எல்.லில் தமிழக அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர்கள் யுவன் குலசேகரா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோரும், தமிழகத்தைச் சேர்ந்த சன் குழும‌ நிறுவனத்தின் அணியான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் குமார சங்ககாரா, திசாரா பெரேரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மகிளா ஜெயவர்த்தனா, ஜீவன் மெண்டிஸ் ஆகியோரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சசிந்திரா சேனநாயகா, மும்பை இந்தியன்ஸ் லசிந்தா மலிங்கா, புனே வாரியர்ஸ் இந்தியா அணியில் ஏஞ்சலா மேத்தியூஸ், அஜந்தா மெண்டிஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் முத்தையா, தில்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் குசால் பெரைரா ஆகியோர் விளையாடுகின்றனர்.

இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் இரா.கலையரசு, ‘இலங்கை கிரிக்கெட்டும், இனவெறி அரசியலும்’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை எழுதி அதை தமிழகம் முழுவதும் பிரசுரித்து வருகிறார்.

அந்த கடிதத்தில், “இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் சீசனில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர்கள் யுவன் குலசேகரா ரூ.50 லட்சத்துக்கும் அகிலா தனஞ்ஜெயா ரூ.10 லட்சத்துக்கும், சன் முழும நிறுவனத்தின் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரைரா ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளமும் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

தமிழர்களைக் கொள்ளையடித்து தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து கடைசியில் தமிழினத்தையே அழிக்கத் துடிக்கும் சிங்கள வெறியர்களின் கிரிக்கெட் விளையாட்டை நாம் எப்படி விசிலடித்து்க் கொண்டாடப் போகிறோமா?.

நம் ஈழத்தங்கைகளை தாய்மார்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து மார்பகங்களை அறுத்தவர்களுடன் கிரிக்கெட் விளையாட போகின்றோமா?

நம் இளைஞர்களை அம்மணமாக்கிக் கொன்று இனத்தை அழிப்பவர்களுடன் கோகோ கோலாவும் பெப்சியும் குடிக்க போகின்றோமா?

நாளை நம் ஈழ சகோதரிகளை ஐ.பி.எல்.இல் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆட ராஜபக்ச அனுப்பி வைக்கும்போது அதையும் நாம் சோனியா, ராகுல் காந்தியுடன் உட்கார்ந்து ரசிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துபோகப் போகிறோமா?

அல்லது விளையாட்டு என்று சொல்லி சிங்களவனை வைத்து பணம் ஈட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நம்மை ஏமாற்றுபவர்களை இனியும் அனுமதிக்க போகிறோமா?

விளையாட்டு என்று சொல்லி ந‌ம்மை ஏமாற்றும் எவனையும் இனி தாய்த் தமிழ்நாட்டில் அனுமதியோம். சிங்களவனை வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு இடம் இது இல்லை. இனியும் அவர்களை வைத்து விளையாடினால் தமிழ்நாட்டை விட்டே அவர்களை விரட்டுவோம்.

800 மீனவர்களை கொன்ற இலங்கையுடனான அனைத்து விளையாட்டு தொடர்புகளையும் இந்தியா உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

காமன்வெல்த் நாடுகள் இனவெறி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 1977 ல் செய்துகொண்ட கிலெனீகல் ஒப்பந்தத்தை போல், ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தி காமன்வெல்த்தில் உள்ள இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 54 நாடுகளுடனான விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இலங்கையைத் தடை செய்ய வேண்டும் என இந்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

ஆசிய தடகள விளையாட்டு போட்டியைப்போல் இலங்கை இனவெறி வீரர்கள் பங்கு பெறும் ஐபிஎல் போட்டிகளுக்கும் சென்னையில் நடைபெறுவற்கு அனுமதி வழங்க கூடாது. தமிழகம் இருளில் தவித்திருக்கும் போது ஐபிஎல் போட்டிகளுக்கு வழங்கப்படும் தடையில்லா மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக மாணவர்களே! தமிழக இளைஞர்களே! ஒன்றிணைந்து போராடுவோம். தமிழக, இந்திய அரசுகளை மக்கள் மன்றத்தில் பணியவைப்போம். 2013 ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதை நம் போராட்டங்களால் தடை செய்வோம்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

எனக்கு தெரிந்தவரையில் கிரிக்கெட்டை பற்றி (Live வாக) அதிகம் கதைப்பவர்கள் டிவிட்டர் வாசிகளே. ட்விட்டரில் தொடர்ச்சியாக இருப்பவர்கள் இதற்காக ஒரு புது Hash tagg ஐ ஆரம்பித்து அதில் கீச்சுகளை இணைத்து எதிர்ப்புக்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கலாம். முடிந்தவரையில் டிவிட்டுகள் ஆங்கிலத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் :icon_idea:

ஜெ. இன் நகர்வின் பின்னர் என்னதான் காரணமிருந்தாலும், இதற்கு நாமே அரசியல் சாயம் பூசுவது சாபக் கேடு!

அவர் முன்னரும் சில விளையாட்டுப் போட்டிகளை (சர்வதேச போட்டிகள் உட்பட) தடுத்து நிறுத்தியவர்.

எமக்கு இக்கால கட்டத்தில் இவை விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்!

  • கருத்துக்கள உறவுகள்

526656_605708196124969_1242168872_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவுக்கு ஜெ

உள்ளே எப்படியோ தெரியாது. வெளியில் இருந்து பார்க்கும் போது கருணாநிதி என்ன தோப்புக்கரணம் போட்டாலும் அடுத்த தேர்தலும் அம்மா பக்கம்தான் சாய்ந்திருக்கு. அதனால் அம்மா எதற்க்கும் பயபடாமல் முன்னால் போக வேண்டும். காங்கிரஸ் தேர்தலில் குழம்பியிருப்பதால் இலகுவில் கவுனர் ஆட்சி வர முடியாது. வந்தாலும் தி.மு.காவை பற்றி பயப்படதேவையும் இல்லை. 

ஆகையால் ஜெயலலிதா பயப்படாமல் சட்டத்தின் கீழ் உள்ளவை எல்லாவற்றையும் செய்து கொலையாட்டு வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சட்டசபை தேர்தலில் அம்மா கட்சி ஜெஜிக்கும் என்பது சந்தேகமே......

தேர்தலின் வெற்றி வாய்ப்பை தமிழக பிரச்சனைகள் தான் தீர்மானிக்கும்....

அந்த வகையில்

மின்வெட்டு

அதிகாரிகள் மட்டத்திலும் கீழ் மட்டத்திலும் அதிகரித்து வரும் லஞ்சம் வாங்குதல்

குற்ற செயல்களின் அதிகரிப்பு.....

சாதனை புரிந்து கொண்டிருக்கும் அமைச்சரவை மாற்றங்கள்

போன்றவை தேர்தலில் அம்மாவின் வெற்றியை கேள்விக்குறி ஆக்கலாம்......

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக .... அ தி மு க வின் ஆதரவு பத்திரிக்கை என்று சொல்லப்படுகின்ற தினமலரின் செய்தியை வாசகர்களுக்கு தருகின்றோம்.....

தமிழகத்திலேயே மின்வெட்டால், அதிகபட்ச பாதிப்புக்குள்ளாகியிருப்பது கோவை மாவட்டம்தான். சென்னைக்கு அடுத்ததாக, அதிக தொழில் வளர்ச்சி பெற்ற இந்த மாவட்டத்தில் மின் வெட்டால் ஏற்படும் பாதிப்பையும், இழப்பையும் கணக்கிடவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. சென்னையில் 2 மணி நேரம் மட்டுமே மின் வெட்டை அமல் படுத்துவதைப்போல, கோவைக்கும் விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை, அரசின் காதுகளை எட்டவேயில்லை; இதனால், மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை, முதல்வரிடம் உளவுத்துறை உட்பட யாரும் எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை. இந்த கோபம் ஒரு புறம் புகைந்து கொண்டிருக்க, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த இரு ஆண்டுகளில், கோவையில் நடந்த வளர்ச்சிப் பணிகள் என்ன என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழத் துவங்கியுள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், அவிநாசி சாலை விரிவாக்கம் துவங்கி, திருச்சி, மேட்டுப்பாளையம் சாலைகள் விரிவாக்கம், பாலங்கள் திறப்பு, டைடல் பார்க், புதிய குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட், புதிய பூங்காக்கள், நடைபாதைகள் என ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்தன. இவற்றைத் தவிர்த்து, காந்திபுரத்தில் பல அடுக்கு மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலைத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதற்கான அரசாணை மற்றும் அடுத்த கட்டப் பணிகள் தாமதமடைந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முந்தைய தேர்தல்களிலும், இந்த தேர்தலிலும் அ.தி.மு.க.,வை தொடர்ச்சியாக வெற்றி பெற வைத்ததற்காக, கோவைக்கென்று சில சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெ., நிறைவேற்றுவார் என்று கோவை மக்கள் எதிர்பார்த்தனர்; அதற்கேற்ப, காந்திபுரம் பாலத்துக்கு கூடுதல் நிதி, மேற்கு புறவழிச்சாலை, உக்கடம்-ஆத்துப்பாலம் என பல திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார். அவர், இந்த திட்டங்களை அறிவித்து இரு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இந்த திட்டங்களிலும் எதுவுமே இன்னும் துவக்கப்படவே இல்லை; திட்ட அறிக்கை, மதிப்பீடு என்று நெடுஞ்சாலைத்துறையினர், பல காரணங்களை அடுக்கி வருகின்றனர்; ஆனால், எந்தப் பணியும் இப்போதைக்கு துவங்குவதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை. அதேபோல, ரயில்வே மேம்பாலங்கள், போத்தனூர்-கிணத்துக்கடவு அகல ரயில் பாதை, விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியும், கடந்த இரு ஆண்டுகளாக ஆமை வேகத்தில்தான் நடந்து வருகிறது. இதனால், இரு ஆண்டுகளில் எந்த வளர்ச்சித் திட்டங்களுமே முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில், மாநகராட்சியில் அதிகரித்துள்ள லஞ்சமும், குடிநீர் வினியோகம், தூய்மைப் பணி போன்றவற்றில் காட்டப்படும் பாரபட்சமும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மாநகராட்சியில், கடந்த 2012-13 பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களே நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் அதே திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, அதிருப்தியை கோபமாக்கியது. உச்சக்கட்டமாக, தமிழக அரசின் பட்ஜெட், இந்த கோபத்தை கொந்தளிப்பாக மாற்றியுள்ளது. சென்னைக்கு 4 பாலங்களுக்கு 272 கோடியும், மதுரையில் இரு பாலங்களுக்கு 130 கோடி ரூபாயும் அறிவித்து விட்டு, கோவைக்கென்று எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் விட்டதே இதற்குக் காரணம். இங்குள்ள அமைச்சர் உட்பட ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதிகள் யாருமே, கோவையின் தேவையை முதல்வரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. எந்த நேரத்திலும், மத்தியில் ஆட்சி கவிழும்; தேர்தல் வருமென்ற நிலையில், கோவையில் தற்போதுள்ள சூழல், ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதோடு, வரும் தேர்தல் பெரும் சவாலாக இருக்குமென்பதும் உறுதி.

ஆறுதல் பரிசு: ஈழத்தமிழர், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்வது போன்ற பிரச்னைகளில் அரசின் நிலைப்பாடு, விவசாயிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் ஆறுதல் பரிசாகத் தெரிந்தாலும், இது பெரும்பான்மையினரின் உணர்வாக தேர்தலில் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே. இதெல்லாம் போதாதென்று, பருவமழை பொய்த்து, அணைகள் எல்லாம் வறண்டு, தண்ணீர்ப் பிரச்னை இப்போதே தலை விரித்தாடத் துவங்கியிருப்பதால், எதிர்வரும் கோடையைச் சமாளிப்பதே, அரசுக்கு இன்னொரு சவாலாக இருக்கலாம்; இந்த ஆண்டிலும் மழை பொய்த்தால்...ஆளும்கட்சி பாடு பெரும் திண்டாட்டம்தான்.

சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட தடை!

ஜெயலலிதா எதிர்ப்பு காரணமாக சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரித்து வரும்

நிலையில், இலங்கை வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் சென்னையில் விளையாட தமிழக

முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு உள்ள எதிர்ப்பு தொடர்பாகவும், முதல்வர்

ஜெயலலிதாவின் கோரிக்கை தொடர்பாகவும் இன்று ஐ.பி.எல். நிர்வாக குழு

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, பாதுகாப்பு பிரச்சினை உள்ளதால்,

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட

அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.@Vikatan EMagazine

ஒரு ஈழத்தமிழனான தொலைக்காட்சி விளையாடடுச் செய்தித் தொகுப்பாளரின் முகப்புத்தக அறிக்கை.

 

தமிழ் நாட்டு மக்களே, இனி இலங்கையில் ,
குறிப்பாக தமிழ் நிகழ்ச்சிகளில் இந்திய சினிமா காரர்களை பார்ப்பது கஷ்டம்
என்ற நிலையை உருவாக்கி உள்ளீர்கள். ஏன் ??? இதில் உங்களுக்கு என்ன கிடைகைப்
போகிறது? முடிந்தால் உங்கள் நாட்டில் படங்களை பார்ப்பதை, வெளியிடுவதை
தவிர்த்து உங்கள் ஆதரவை காட்டலாமே? விளையாட்டிலும் உங்கள் முட்டாள் தனமான
அரசிலையலை புகுத்தி ஏன் இன்னும் இன்னும் இலங்கை தமிழரை
கஷ்டப்படுத்துகின்றீர்கள்?

நிறையப் பேர் எனக்கு எதிர் கருத்துகளை சொல்வீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். எப்பவும் நான்
சொல்வது செய்வதை சரியாக, தெளிவாக செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும்
பிழைகளை செய்து கொண்டே இருக்கின்றோம்....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் ஆட அனுமதி மறுப்பு, வட இந்திய ஊடகங்களிலும் வட இந்தியர்களின் பேஸ்புக் டிவிட்டர் பக்கங்களில் விமர்சனத்துக்குள்ளாகிய தமிழர்கள்.

சென்னை கிங்ஸ் அணி இலங்கை வீரர்களை வைத்து ஆடப்போவதில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.

தமிழர்களின் இந்த எதிர்ப்பை பொலிட்டிக்கல் ரேசிசம் என்றும் ரீஜினல் சாவனிசம் என்றும் விமர்சிக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமாம், விளையாட்டில் அரசியலை கலக்க கூடாதாம் என்றெல்லாம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கி வேதம் ஓதும் இவர்கள் தான் பாக்கிஸ்தான் வீரர்களை ஐபிஎல் லில் சேர்க்காமலும் பாக்கிஸ்தானோடு பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமலும் தேசபக்தியை காண்பிப்பவர்கள்.

#உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் ஆட அனுமதி மறுப்பு, வட இந்திய ஊடகங்களிலும் வட இந்தியர்களின் பேஸ்புக் டிவிட்டர் பக்கங்களில் விமர்சனத்துக்குள்ளாகிய தமிழர்கள்.

சென்னை கிங்ஸ் அணி இலங்கை வீரர்களை வைத்து ஆடப்போவதில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.

தமிழர்களின் இந்த எதிர்ப்பை பொலிட்டிக்கல் ரேசிசம் என்றும் ரீஜினல் சாவனிசம் என்றும் விமர்சிக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமாம், விளையாட்டில் அரசியலை கலக்க கூடாதாம் என்றெல்லாம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கி வேதம் ஓதும் இவர்கள் தான் பாக்கிஸ்தான் வீரர்களை ஐபிஎல் லில் சேர்க்காமலும் பாக்கிஸ்தானோடு பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமலும் தேசபக்தியை காண்பிப்பவர்கள்.

#உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

Fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஈழத்தமிழனான தொலைக்காட்சி விளையாடடுச் செய்தித் தொகுப்பாளரின் முகப்புத்தக அறிக்கை.

 

தமிழ் நாட்டு மக்களே, இனி இலங்கையில் ,

குறிப்பாக தமிழ் நிகழ்ச்சிகளில் இந்திய சினிமா காரர்களை பார்ப்பது கஷ்டம்

என்ற நிலையை உருவாக்கி உள்ளீர்கள். ஏன் ??? இதில் உங்களுக்கு என்ன கிடைகைப்

போகிறது? முடிந்தால் உங்கள் நாட்டில் படங்களை பார்ப்பதை, வெளியிடுவதை

தவிர்த்து உங்கள் ஆதரவை காட்டலாமே? விளையாட்டிலும் உங்கள் முட்டாள் தனமான

அரசிலையலை புகுத்தி ஏன் இன்னும் இன்னும் இலங்கை தமிழரை

கஷ்டப்படுத்துகின்றீர்கள்?

நிறையப் பேர் எனக்கு எதிர் கருத்துகளை சொல்வீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். எப்பவும் நான்

சொல்வது செய்வதை சரியாக, தெளிவாக செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும்

பிழைகளை செய்து கொண்டே இருக்கின்றோம்....

அண்ணா அவர கொஞ்சம் அறிமுகம் செய்து வைக்க முடியுமா... :D

அம்மான்னா அம்மாதான் .................. :D  :D  :D

 

உண்மை அது அரசியல் கத்தலாய் இருந்தாலும் ...............இன்றைய சூழ்நிலையில் எம் .மாணவச்செல்வங்களுக்கு மேலும் உந்து சக்தியாய் அமைய சந்தர்ப்பம் உள்ளது ............பயன்படுத்துவோம் .

உலகின் வல்லரசுகளான அமெரிக்க உருசியாவில் நடந்த ஒலிம்பிக்கையும் ...

சோஷலிச நாடுகள் அமெரிக்காவில் நடந்த ஒலிம்பிக்கையும் புறக்கணித்தன.

 

சென்னையில் சிங்கள வீரர்களை புறக்கணிப்பதால் அவர்களின் அரசியல் தலமைகளே இலக்கு வைக்கப்படுகின்றன. ஒரு நியாயமான அரசியல் தீர்விற்கும் சர்வதேச விசாரணைக்கும் உடன்பட்டால்  இவ்வாறன போராட்டங்கள் இல்லாமல் போகலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
mudthaiya.jpg
 
 

 

"ஒரு தமிழனாக இருபது வருடங்கள் நான் சிறிலங்காவிற்கு விளையாடினேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. இப்பொழுது அங்கே போர் முடிந்துவிட்டது..மக்கள் மிகவும் நிம்மதியுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர்."-முத்தையா முரளீதரன்.

இது இன்று NDTV இல் இலங்கை விளையாட்டு வீரர்களை, தமிழ் நாட்டிற்கு எந்த எதிர்ப்பையும் காட்டாமல், BCCI தடை விதித்தது குறித்து ஒரு பேட்டியின்பொழுது முரளீதரன் கூறியதன் தமிழாக்கம். இவர் கூறுவதன் அர்த்தம் யாதெனில் சிங்களவர்கள் நல்லவர்கள் என்பதுபோலவும் சிங்களம் நம் மேல் தொடுத்த போர் நியாயபூர்வமானதென்றும் புலிகளால்தான் அங்கே மக்களுக்குப் பிரச்சனை இருந்ததுபோலவும், இப்போ புலிகள் அழிக்கப்பட்டுள்ளநிலையில் (அப்படித்தான் சிங்களம் சொல்கிறது) எல்லோரும் நிம்மதியாக இருக்கிறோமாம். இவனை இனிமேல் யாராவது தமிழன் என்று சொன்னால்....இருக்கு..

 

fb



முத்தையா தம்பி நீங்க உங்க மாமியார் வீடு சென்னைக்கு வரணுமா ??? வேண்டாமா ??? :D 



fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ipls.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா டுடேயில் வந்த இது தொடர்பான செய்தியும் சில வாசகர்களின் கருத்தும் கீழே தரப்பட்டிருக்கின்றன. இரு தமிழர்களின் கருத்துக்களிடையே இருக்கும் ஒற்றுமையையும், வட இந்தியரின் மனோபாவத்தையும் பாருங்கள்.

 

உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள். இந்தியர்களின் கண்களைத் திறக்க அவை உதவும்.

 

 

IPL governing body gives in to Jaya's demand, decides to keep Sri Lankan players out of Chennai matches
collage_350_032613065654.jpg
red-sarrow.gif
The dropped Sri Lankan players would be duly compensated for these games.
 

 

 
 
 
The Indian Premier League ( IPL) bowed to Tamil Nadu Chief Minister J. Jayalalithaa's threat and decided not to field Sri Lankan players in the matches to be hosted in Chennai.

According to IPL officials, all the franchisees have agreed to drop their Sri Lankan players for their respective games in Chennai. The Sri Lankan players would be compensated for these games, sources said.

Earlier, just days before the beginning of the sixth season of IPL, the participation of Sri Lankan players in the popular Twenty-20 league was thrown into jeopardy after Jayalalithaa refused to host them owing to the prevailing anti-Sri Lanka sentiments in the state.

Jayalalithaa wrote a letter to Prime Minister Manmohan Singh making it clear that IPL matches would be permitted in the state only if there were no Sri Lankan players, umpires, officials or support staff in these matches.

That forced top BCCI and IPL officials to discuss the issue to find a solution. They had hinted that the IPL franchises would be advised to drop their Sri Lankan players for the matches in Chennai.

IPL chairman Rajeev Shukla said: "We are reviewing the situation after the latest development and we will take a call. But we will go ahead with the tournament and Chennai will continue to be a venue... We have to take two things into account. We have to take the local sentiments into account and at same time the safety and security of the Sri Lankan players are paramount.â

Altogether 13 Sri Lankan players, two of whom are captains of their respective teams, are taking part in the coming season of IPL that starts on April 3. Chennai, the home for Chennai Super Kings, would hold 10 matches, including two eliminators. With inputs from PTI
 
Read Surfers' Comments
Posted by: Tamilan
chennai | March 27, 2013
Why Tamil Nadu demanded ban of Sri Lankan Players playing from IPL in Chennai??? "It is exactly as Pakistan Players being banned from playing IPL" ** Sri Lankan govt killed more than 600 Indian fishermen. ** Sri Lankan govt slaughtered thousands and thousands for innocent Tamils (Women, Children) mercilessly in the Island. When Pakistan attacks Indians, Indian govt is ready to brake any relationship with Pakistan. How can the Indian Govt say "Sri Lankas is our friendly nation" when this small island can kill number of Indian fishermen and they go unnoticed?? Tamils are also Indians. I support students revolution in tamil nadu. If tamil nadu is part of india, india should treat sri lanka as it treats pakistan. Indian govt should insist international human rights enquiry in the island and bring a referendum for tamil eelzam. Post Your Comment
Posted by: Anton Devaranjith Devasagayam
Sydney, Australia | March 27, 2013
There is nothing wrong in keeping Srilankan Players out of Chennai matches. In fact, they should not allowed to play in any Indian IPL teams.Think few years back. Wht did we do to Pakistan Cricket team and their players? How long we kept them outside India? What happened to the South African cricket team during the Apartheid period? Why all cricket plaing nations ignored them ? Srilankan cricket and their players representing a Nation which has carried out war crimes and genocide against its own people. Tamils in Tamilnadu are protesting against the ethnic cleansing of their brotherns in Srilanka. Post Your Comment
Posted by: Prof. Ramesh Sinha
Gurgaon | March 26, 2013
IPL management should have shifted the venue to enable the enthusiastic Sri Lankan players. This would be the real gesture to focus on sportsmanship values of the management.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.