Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடக வெற்றிக்கு ராகுலின் 'கடின உழைப்பே' காரணமாம்: மன்மோகன் சிங்ஜி சொல்கிறார்!!

Featured Replies

08-manmohan-singh-rahul3-300.jpg
டெல்லி: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியின் கடின உழைப்புதான் காரனம் என்று பாராட்டியிருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன்சிங், கர்நாடகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு கடினமாக உழைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தான் முன்னிலை வசித்தார். இந்த வெற்றிக்காக கர்நாடகாவில் சிறப்பாக பணியாற்றிய காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகத்தில் ஏற்பட்ட தோல்வி என்பது பாஜகவின் சித்தாந்தத்துக்கான தோல்வியாகும். இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே பாஜக நிராகரிப்பட்டதற்கான காரணம் தெரியும். நாட்டில் ஊழல்தான் மிகப் பெரிய பிரச்சனை. இந்த ஊழலை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்றார். நிலையான ஆட்சி தருவோம்- ப.சி.!; பாஜகவுக்கு இன்னிங்ஸ் தோல்வி- கமல்நாத்!!: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி நிலையான ஆட்சியை அளிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மற்றொரு மத்திய அமைச்சரான கமல்நாத்தோ, கர்நாடகாவில் நடைபெற்ற மேட்சில் பாஜகவுக்கு இன்னிங்ஸ் தோல்வி என்று வர்ணித்திருக்கிறார். கர்நாடக சட்டசபையில் கருத்துக் கணிப்புகளின்படியே காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங், நாட்டின் மிக பெரிய பிரச்சனையாக ஊழல் இருந்து வருகிறது. பாஜகவின் ஊழலுக்கு தேர்தல் மூலம் மக்கள் பாடம் கற்றுக் கொடுத்து விட்டனர். கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தம் தோல்வி கண்டுவிட்டது. ஊழலை ஒழிக்க அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றார்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கூறுகையில், கர்நாடக வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. யார் முதல்வர் என்பதை எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவெடுப்பர் என்றார். கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகாவில் நிலையான ஆட்சியை காங்கிரஸ் அளிக்கும் என்றார். அதே நேரத்தில் மத்திய அமைச்சர் கபில்சிபலோ, நரேந்திர மோடியை முன்வைத்து பாஜகவை விமர்சித்திருக்கிறார். "கர்நாடகத்தில் நரேந்திர மோடியின் மேஜிக் என்பது எடுபடவில்லை. தேர்தல் முடிவுகள் மோடி ஒரு ஜீரோ என்பதை நிரூபித்திருக்கின்றன என்பது கபில்சிபல் கருத்து. இதேபோல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், கர்நாடகாவில் மேட்ச் முடிந்துவிட்டது. பாஜகவுக்கு இன்னிங்ஸ் தோல்வி ஏற்பட்டிருக்கிறது. இப்போது அந்த கட்சி பந்து சரியில்லை.. பேட் சரியில்லை..பிட்ச் சரியில்லை என்று குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்திருக்கிறார்.
 

 

கிழிந்தது லம்பாடி லுங்கி .

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனது அனைத்து ஆதரவுத் தளங்களையும் ஒட்டுமொத்தமாக இழந்துள்ளது.

பல ஆண்டுகளாக அந்தக் கட்சி வட கர்நாடகத்தை தனது கோட்டையாக வைத்திருந்தது. அந்தப் பகுதியின் பெருவாரியான மக்களான முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த லிங்காயத்து சமூகத்தினரின் ஆதரவும் பிராமண சமூகத்தினரின் ஆதரவும் பாஜகவுக்குக் கிடைத்து வந்தது. இதனால் ஆட்சிக்கு வராவிட்டாலும் பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் பாஜகவே பெரும்பாலான இடங்களில் வென்று வந்தது.

ஆனால், அந்தப் பகுதியில் பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் பெரும் அடி விழுந்துள்ளது.

லிங்காயத்து சமூகத்தினரின் வாக்குகளை தனிக்கட்சி தொடங்கிய எதியூரப்பா அள்ளிக் கொண்டு சென்றுவிட்டார்.

இதனால் வட கர்நாடகத்திலும் கடலோரப் பகுதிகளிலும் பாஜக இம்முறை, கடந்த முறை பெற்ற இடங்களில் 50 சதவீத இடங்களை இழந்துள்ளது.

அதே போல பெல்லாரி உள்ளிட்ட ஆந்திராவை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த முறை ரெட்டி சகோதரர்களின் ஆதரவால் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால், இந்த முறை ரெட்டி சகோதரர்களின் ஆதரவாளரான ஸ்ரீராமுலு தனிக் கட்சி தொடங்கி போட்டியிட்டதால் அந்தப் பகுதியிலும் பாஜகவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரெட்டி சகோதரர்களில் முக்கியமானவரான மாஜி அமைச்சர் ஜனார்தன ரெட்டி இப்போது சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி ஹைதராபாத் சிறையில் இருக்கிறார்.

மேலும் பெங்களூரில் மொத்தமுள்ள 27 தொகுதிகளில் கடந்த முறை பெருவாரியான இடங்களில் வென்றது பாஜக. ஆனால், இந்தமுறை பாதிக்கும் இடங்களை இழந்துவிட்டது.

மொத்தத்தில் கடந்த தேர்தலில் 110 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 70 இடங்களை இழந்து வெறும் 40 இடங்களில் வென்றுள்ளதன் மூலம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

 

www.thatstamil.com

 

சட்டசபையில் கைத்தொலைபேசியில் நீலத்திரைப்படம் பார்த்தால் யார் வோட்டுப் போடுவார்கள் ?  அதுவும் கல்வியறிவில் முன்னேறிய கர்நாடக மானிலத்தில்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக ஆட்சி மீதான வெறுப்பே காரணம். இதில் ராகுலின்.. பங்கு.. காகம் இருக்க.. பனம்பழம் விழுந்த கதை தான்..! மன்மோகன் சிங் இதையும் சொல்லேல்லைன்னா.. கதிரையில சும்மா இருக்கீங்கன்னு திட்டுவாங்கல்ல..!  :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில், மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வர் போட்டியில் இருந்தவருமான பரமேஸ்வர், குரட்டகரே தொகுதியில், 17 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-101800653.html

 

 

நாடு முழுவதும் ஊழல் நிறைந்திருக்கு என்பது உண்மை. ஆனால் மன்மோகன் சிங்கும் யாழ் மற்றுக் கருத்து பாணியில் நாட்டில் பெரிய பிரச்சனை ஊழல் என்றும் அதனால் மானிலத்தில் பா.ஜ.க தோற்றது என்றும் கூறியிருக்கிறார். ஊழலிற்கு ஆட்சியில் இருக்கும் கட்சி பதவி இழக்குமாயின் காங்கிரஸ் மத்தியிலிருந்து போகும் என்று ஆரூடம் சொல்கிறார். இப்படியேதான் நமது மாற்றுக்கருத்துக்களும் வழமையில் சொல்லும் ஆருடங்களும் இருப்பது. :D

 

கர்நாடகத்தின் பல பிரச்சனைகள் பற்றி அண்மையில் எழுதப்பட்டிருந்தது. முதலீடுகள் தேக்கநிலை அடைவது அரசு கட்டுமானங்களை விரிவாக்குவதில் காட்டிய அசிரத்தை என்றும் கூறப்பட்டது. காவிரி நீரில் கிருஸ்ணா காட்டிய அக்கறையை மானில அரசு காட்டவில்லை என்று மக்கள் கொதிக்கிறார்களாக இருக்கலாம். தமிழகம் கண்ட வெற்றி ஜெயலலிதாவின் வெற்றியாக மட்டும் இல்லாமல் காங்கிரசின் கரநாடக பா.ஜ.க மீதான கழுத்தறுப்பாகவும் இருக்கலாம்.  MLA களின் நடத்தை சரியாக இருக்கவில்லை. தேர்தல் நேரம் ஒரு MLA ஒரு பெண்ணுடன் இருந்த படங்கள் வெளி வந்திருந்தது. புதுக்கட்சிகள் ஆரம்பித்தது வாக்குகளை பிரித்தும் இருக்கிறது. ஆனால் மாநில அரசியல் கட்சிகள் வலுப்பெறுவதால் கர்நாடகத்திலும் காங்கிரஸ் கனகாலம் இனி நிண்டு பிடிக்க முடியாமல் போகும்.

Edited by மல்லையூரான்

பிரதமராக ராகுலை நிறுத்தி பார்த்தீர்கள் என்றால் அவருடைய செல்வாக்கு புரியும் அதை விட்டுவிட்டு எதற்கு வீண் பேச்சு

 

நீங்க சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வைச்சு பக்கத்துலே ஒக்காருங்க மன்மோகன் வரும் சந்ததியினர் பாத்து படிச்சு தெரிஞ்சிகட்டும் :-)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.