Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மனைவியாகிய மாணவி சாட்சியாளருடன் மாயம் "

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

love-run60DM60.jpg

காதலனுடன் பதிவு திருமணம் செய்துக்கொண்ட ஒன்றை மணி நேரத்திற்குள் மணப்பெண்( காதலி) சாட்சியாளருடன் ஓடிப்போன சம்பவமொன்று கம்பளை மாவத்துற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது விசேட சித்திகளை (ஏ) பெற்ற மாணவியே இவ்வாறு ஓடிவிட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கண்டியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் பயின்று வந்த இந்த மாணவி கண்டியிலுள்ள மற்றுமொரு பிரபல பாடசாலையில் உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியை காதலித்துவந்துள்ளார்.

இருவரும் இரவொன்றை தனியாக கழிக்கவிரும்பினர் இந்நிலையில்  காதலியின்  நண்பி ஒருவரின் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர்.

வீட்டிலிருந்தவர்கள் இவர்கள் இருவரையும் தனியாக தங்கவைப்பதற்கு அனுமதிக்க மறுத்துள்ளதுடன் அதன் தார்ப்பரியங்களை விளக்கி கூறியுறியுள்ளனர்.

அத்துடன், இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைப்பதற்காக உலப்பனையிலுள்ள திருமண பதிவாளர் அலுவலகத்திற்கு பிற்பகல் 4.30 மணியளவில் அழைத்து சென்றனர்.

பதிவு திருமணம் முடித்துக்கொண்ட இருவரும் நண்பியின் வீட்டுக்கு மாலை 5.30 மணியளவில் வருகைதந்தனர்.
சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டிருந்த மணக்கோலத்திலிருந்த பெண் பதிவு திருமணத்திற்கு சாட்சி கையெழுத்திட்டவருடன் வீட்டைவிட்டு ஓடியுள்ளார்.

தனது முன்னாள் காதலனான ஒருபிள்ளையின் தந்தையுடனேயே குறித்த பெண் ஓடிவிட்டார்.
கைகளை கோர்த்தவாறு இருவரும் ஓடுவதை கண்ட கிராமவாசிகள் அவர்களை பிடிப்பதற்காக துரத்தியபோதும் கிராமத்தவர்களால் அவ்விருவரையும் பிடிக்கவில்லை.

அவ்விருவரும் அவ்வழியாக வந்த பஸ்ஸில் ஏறி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் சகலரும் கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.

காதலுடன் பதிவு திருமணமாகிவிட்டபோதும் தன்னால் பழைய காதலனை மறக்க முடியவில்லை என்பதனால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரோடு ஓடிபோக தீர்மானித்ததாக அந்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சகலரையும் கடுமையாக எச்சரித்த பொலிஸார் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67014-2013-05-13-10-48-15.html

 

 

கண்டியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் பயின்று வந்த இந்த மாணவி கண்டியிலுள்ள மற்றுமொரு பிரபல பாடசாலையில் உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியை காதலித்துவந்துள்ளார்.

 

:wub:  

நிருபர் செய்தியை அவசரமாக எழுதியுள்ளார்.  :D

 

தமிழரசு, on 13 May 2013 - 12:03 PM, said:snapback.png

 

:wub:

நிருபர் செய்தியை அவசரமாக எழுதியுள்ளார்.  :D

 

 

வெளிநாட்டில நடக்கிற மாதிரி பெண் பெண்ணை திருமணம் செய்திருப்பினமோ .... :D

 

கைகளை கோர்த்தவாறு இருவரும் ஓடுவதை கண்ட கிராமவாசிகள் அவர்களை பிடிப்பதற்காக துரத்தியபோதும் கிராமத்தவர்களால் அவ்விருவரையும் பிடிக்கவில்லை.

 

 

 

 

உண்மையான ஓடிப்போதல் என்பது இது தான். மற்றப்படி ஓடிப்போகும் காதல் சோடிகள் உண்மையில் நடந்துதான் போவார்கள்.  :wub:
  • கருத்துக்கள உறவுகள்

:wub:

நிருபர் செய்தியை அவசரமாக எழுதியுள்ளார்.  :D

இது மாணவியின் மூன்றாவது காதல் கதை..........

நீங்கள்தான் அவசரமாக வாசித்துள்ளீர்கள்.
 
இப்போ முன்னாள் காதலனுடன் ஓடி கொண்டு இருக்கிறார். 
இதுதான் இப்போதைய பிந்திய செய்தி .
 
 போய் சேரும்  இடத்தில் .............. மற்ற மாணவி காத்துகொண்டு இருக்கலாம்.
நாளைய செய்தி இதுவாக இருக்கலாம்.
 
என்ன இது அஞ்சல் ஓட்ட போட்டியா? அப்படின்னு எல்லாம் கேட்க கூடாது. 
  • கருத்துக்கள உறவுகள்

love-run60DM60.jpg

கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது விசேட சித்திகளை (ஏ) பெற்ற மாணவியே இவ்வாறு ஓடிவிட்டார்.

--------

 

9 A பெற்று... சிறப்புச் சித்தியடைந்த மாணவிக்கு, இந்த நரிக்குணம் ஏன் வந்தது. :o 

நல்ல காலம்... தலைக்கு வந்தது, தலைப் பாகையோடை போட்டுது. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

9 A பெற்று... சிறப்புச் சித்தியடைந்த மாணவிக்கு, இந்த நரிக்குணம் ஏன் வந்தது. :o 

நல்ல காலம்... தலைக்கு வந்தது, தலைப் பாகையோடை போட்டுது. :D  :lol:

 

இதைத்தான் சொல்வது சிறி

அறப்படிச்ச   கேசுகள் என்று................

கண்ணில  பட்டால் நானே ............(சுயதணிக்கை) :(

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் கையொப்பம்  இட்டவனுடன்  மெய் யொப்பிச்  சென்று  விட்டாள் !

பரீட்சையிலும்   சித்தியானாள் , பையன்களுக்கும் சித்தியானாள் !

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் கையொப்பம்  இட்டவனுடன்  மெய் யொப்பிச்  சென்று  விட்டாள் !

பரீட்சையிலும்   சித்தியானாள் , பையன்களுக்கும் சித்தியானாள் !

 

 

ஆனால் 

அவளுக்கும்  பெற்றோருக்கும் நாட்டுக்கும் சுமையானாள்.......

அது தான் கவலையண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.