Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருவி மணியன் சொல்லும் 2016 சாத்தியமா?

Featured Replies

943486_531388483587769_1963744082_n.jpg

 

http://kotticodu.blogspot.in/2013/06/2016.html

தமிழருவி மணியன் சொல்லும் 2016 சாத்தியமா?

தமிழகத்தில் கருணாநிதி போனால் ஜெயலலிதா என்றும் ஜெயலலிதா போனால் கருணாநிதி என்றும் தான் ஒவ்வெரு முறையும் முதல்வர் பதவிக்கான போட்டியும் தர்க்கங்களும் நடந்தது வந்தது. ஆனால் சமீப காலமாக அந்த தர்க்கங்களை உடைக்கும் விதமாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வரும் 2016 ஆண்டில் தமிழகத்தின் முதல்வராக வைகோ அரியணை ஏறுவார் என்று சொல்லி வருகிறார்.

தமிழருவி மணியனின் இந்த பேச்சு முகநூலில் இரண்டு மூன்று தினங்களாக மிக பெரிய தர்க்கங்களை உருவாக்கி இருக்கிறது. முகநூலில் இருக்கும் ஒரு சில திமுகவினரை உசுபேற்றி விட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

இதற்கு முன்பும் பல முறை உள்ளத்திலும் பொதுவாழ்விலும் நேர்மையாக இருக்கும் வைகோ தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர வேண்டும் என தமிழருவி மணியன் சொன்ன போது அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. ஏனெனில் மதிமுக எப்படியாவது அதிமுக கூட்டணிக்கு சென்று விடும் என்று பலர் நினைத்து வந்தனர். அப்படிஅமைந்ததால் அதிமுக அடுத்து திமுக என்ற நிலையே இருக்கும். அதிமுக மீதான கோபத்தில் நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கோட்டை கட்டி வருகிற திமுகவினருக்கு இது மிக பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும்.

வைகோவும் மதிமுகவும் பல முறை சூசகமாக அதிமுக திமுகவிற்கு மாற்றாக மதிமுக திகழும் என்று சொல்லிய பிறகும் அதிமுகவோடு இணைத்து திமுகவினர் பேசியதே அவர்களின் இருப்பை தக்க வைக்க கூடிய சூழ்ச்சி தான். இவர்களுக்கு தூண் கொடுக்க மஞ்சள் பத்திரிகை நக்கீரன் இருக்கிறது.

இரண்டு நாட்களுக்குமுன்னர் ஜெயலலிதா டில்லியில் 40 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் என்று அறிவித்த பின்னர் மதிமுக அதிமுக கூட்டணிக்கு செல்லும் என்று நாம் செய்யும் பிரச்சாரம் எடுபடாது என்பதை உணர்ந்த திமுக வைகோ தலைமையில் அமையஇருக்கும் மாற்று அணியை விமர்ச்சிக்க துவங்கி இருக்கிறது. அதன் முதல் படியாக வைகோவை விமர்சிக்க துவங்கி இருக்கிறார்கள்.

ஜெயாவை விமர்சிக்க துப்பு இல்லையா என்று கேட்கும் திமுகவினரே ஜெயாவை விமர்சிப்பதை விட்டு விட்டு வைகோவை விமர்சிக்கிறார்கள் என்னும் போது அவர்கள் ஜெயாவை விட வைகோவை கண்டு தான் அதிகம் அஞ்சுகிறார்கள் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் அவர்களின் விமர்ச்சனங்கள் இருக்கிறது.

ஏன் அவர்கள் வைகோவை விமர்ச்சிக்கிறார்கள்? 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி தலைவரின் மகன் என்ற முறையில் அடுத்த வாரிசுக்கு அனைத்து அதிகாரங்கள் கொடுத்தும் அனைத்து பயிற்சிகள் கொடுத்தும் இன்றும் தளபதியாகவே அந்த வாரிசு இருப்பதாலும், அந்த வாரிசுக்கென்று கருணாநிதியிடம் இருக்கும் எந்த திறமையும் இல்லாத காரணத்தால், மக்கள் பிரச்னைக்கு போராடும் வைகோ அந்த இடத்தை பறித்து விடுவார் என்ற பயத்தில் திமுகவினர் இருப்பது தெரிகிறது.

தமிழை சொல்லி ஆட்சியில் இருந்த திமுக, 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடந்து மத்திய அரசில் அங்கம் வகித்து அதிகாரத்தை சுவைத்த திமுக, கலைஞரின் குடும்ப வாரிசுகளின் மூலம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் வெறுமனே மிக பெரிய ஊழல்களை செய்து வந்தது. அதன் விளைவு தான் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தமிழக மக்கள் திமுகவிற்கு கொடுக்க வில்லை.

திமுக நடத்திய காட்டு மிராண்டி தனமாக ஆட்சியாலும், கிளை செயலாளர் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏழை எளிய மக்கள் நிலங்களை அபகரித்து, மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகமே அவர்கள் குடும்ப சொத்தாக மாறி விடும் என்ற அச்சத்தில் மக்கள் திமுகவுக்கு எதிராக அதிமுகவுக்கு வாக்களித்தார்கள்.

அதிமுக வெற்றி பெற வேண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆக வேண்டும் என்று ஒரு மனதாக மக்கள் வாக்களிக்க வில்லை. கருணாநிதியை வீழ்த்த ஜெயாவை ஒரு ஆயுதமாக மக்கள் பயன் படுத்தினாலும், இவர்கள் இருவருக்கு மாற்றாக ஒருவர் வர வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலானோர் மத்தியில் இருந்து வந்தது.

அந்த மாற்று தலைமை யார்? அதை தான் தமிழருவி மணியன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டுகிறார். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், மக்களின் இன்ப துன்பங்களில் மக்களுக்காக அயராது உழைக்கும் தலைவன் யார் என்ற தேடலில் வைகோவே அங்கு தெரிகிறார்.

தமிழருவி மணியன் வைகோவை அடையாளம் காட்டும் காரணங்களை ஆரோக்கிய நேர்மையான அரசியலை விரும்பும் நடுநிலையாளர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள் என்பதால் தான் வைகோ மீது கொள்கை ரீதியாக விமர்ச்சனம் வைக்காமல் தரம் தாழ்ந்து திமுகவினர் விமர்ச்சிக்கிறார்கள். திமுகவினர் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து செல்லும் காரணம் ஒன்றே தமிழருவி மணியன் சொல்லும் 2016 சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது.

-
http://kotticodu.blogspot.in/2013/06/2016.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

ஆனால்  ................???

  • கருத்துக்கள உறவுகள்

2016 க்குமுன் திமுக தலைமையில் மாற்றம் வரலாம். :rolleyes: அப்போது நாம் தமிழர், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஓரணியில் நின்றால் ஒரு தொங்கு சட்டசபை வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்குப் பின்னர் தி மு க வின் நிலை எப்படி இருக்கும் என்பது பலராலும்

இன்றே எதிர்பார்க்கப்படுகின்ற விடயம்.

 

அந்த நேரத்தில் தி மு க உடைவதும்

அம்மாவின் ஆட்சி தமிழக மக்களுக்கு ஏற்படுத்தும் அதிருப்தியும்

வை கோ, சீமான் மற்றும் தமிழின உணர்வாளர்களின் ஒற்றுமையும் 

ஒரு புதிய மாற்றத்தைத் தமிழகத்தில் கொண்டு வரும் 

 

அது 2016 ஆக இருக்க வேண்டும் என்பதில்லை  அதன் பின்னராகவும் இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

2016 ற்கு பின்னர் சாத்தியமானது. வை.கோ முதலில் பெரிய கட்சிகளுடன் சேராமல் தனித்து போட்டி இடும் போது தான் இவரின் செல்வாக்கு அதிகரிக்கும்.தி.மு.க விரைவில் உடையும்.காங்கிரஸ் விரைவில் ஓடி விடும்.அதிமுக வுக்கு போட்டியாக தற்போது தேமுக தான் உள்ளது.

ஜெயலலிதாவின் ஆட்சி தமிழ் நாட்டில் மிக சிறப்பாகத்தான் இருக்கின்றது .எங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ என்பது வேறுவிடயம் .

ஜெயலலிதாவிற்கு ஏதும் நடந்தால் ஒழிய அவர் ஆட்சி இப்போதைக்கு மாறாது .

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் தமிழுணர்வை மட்டுமே வைத்து தமிழக மக்கள் தங்கள் முதல்வரை தேர்வு செய்வதில்லை. வாக்களிக்கச் செல்லும் இலவசங்களுக்கு மயங்கும் அன்றாடங்காட்சிகளுக்கு தங்கள் ஒருவேளை  சோற்றுக்காவது எந்த அரசியல் கட்சி வழி செய்தாலும் அதை ஏற்க தயாராக உள்ளனர். மெத்தப்படித்த மேதாவிகள் விமர்சனங்களை வைத்துவிட்டு வாக்குச் சாவடிபக்கம் செல்வதே இல்லை. ஆக இடைப்பட்ட இந்த விசிலடிச்சான் குஞ்சு விடலைகளும், சினிமா மோக பழசுகளும் தான் ஆட்சியை தெரிவு செய்கின்றனர். கவர்ச்சி அரசியலே இங்கு எடுபடும் முதலீடு.

 

அப்படி பார்க்கையில், பெரும்பாலும் அரசியல் நேர்மை, தமிழுணர்வு மட்டுமே முதலீடாகக் கொண்டுள்ள வை.கோ 2016ல் முதல்வராக வாய்ப்புகள் குறைவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.