Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சரவையில் எதிர்ப்புத் தெரிவிக்கத் திராணியற்று நழுவினார் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dauglus.jpg

13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராயும் மிக முக்கியமான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈபிடிபி பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவில்லை. 

மிகமுக்கியமான முடிவெடுக்கும் இந்தக் கூட்டத்தை டக்ளஸ் தேவானந்தா வேண்டுமென்றே புறக்கணித்தாரா அல்லது, அதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதற்காக நழுவினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அமைச்சரவைக் கூட்டத்தில் தனது கருத்து மதிக்கப்படாது என்பதாலும், தான் வெளியிடும் கருத்து சிறிலங்கா அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் என்பதாலும் டக்ளஸ் தேவானந்தா ‘நல்லபிள்ளை‘யாக ஒதுங்கி கொண்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. 

அதேவேளை, சிறிலங்கா அமைச்சரவையில், இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவும் இல்லாத நிலையிலேயே நேற்று 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், பங்கேற்று இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தவறிய டக்ளஸ் தேவானந்தா, நேற்றிரவு பிபிசிக்கு அளித்த செவ்வி ஒன்றில், இந்த நிலைமைக்கு முன்னர் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிட்ட தமிழ்த் தலைமைகளும் பொறுப்பு என்று தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் விதமாகப் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் யோசனைக்கு ரவூப் ஹக்கீமுடன், இணைந்து இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களான டியூ.குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இடதுசாரி அமைச்சர்கள் மூவரும் அமைச்சரவை மனுவொன்றை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20130614108461

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுண்ணிகள் நியாயம் பேசினால் நசித்துவிடுவார்கள் என்கிற பயம் காரணமாக இருக்கலாம்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுண்ணிகள் நியாயம் பேசினால் நசித்துவிடுவார்கள் என்கிற பயம் காரணமாக இருக்கலாம்.. :wub:

 

உங்களுக்கு பகிடிக்கும்  வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் அவர் என்ன செய்யமுடியும்

இதைத்தவிர வேறு எப்படி அவர் தனது பலத்தை காட்டணும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??? :(

எப்பொழுதாவது அவர் மறு பக்கம் பற்றி அலட்டிக்கொண்டதுண்டா??? :(

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.... இந்தக் காமடிப் பீசிடமெல்லாம் போய் அரசியலை எதிர்பார்க்கிற எங்கட சனத்திற்கும் ஊடகங்களுக்கும் செருப்பால அடிக்கனும்.

 

அவர் மணல் அள்ளுறதில கவனமா இருக்கிறதா.. சொகுசு பஸ் விடுறதில கவனமா இருக்கிறதா.. கொழும்பு - யாழ் வியாபாரத்தில் கவனமாக இருக்கிறதா.. உள்ளூரில் உழைக்கிறத.. வெளிநாடுகளில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்கிறதா.. டன் தொலைக்காட்சியில் கவனமாக இருக்கிறதா.. தினமுரசில் கவனமாக இருக்கிறதா.. ஏன்.. யாழ்ப்பாணக் குட்டி ராஜாங்கத்தை எப்படி தக்க வைக்கிறது என்றதில் கவனமாக இருக்கிறதா.. என்று திணறிக் கொண்டிருக்கிறார். அதுவும் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு வியாபாரத்தில் தனிக்காட்டு ராஜாவா இருக்கிறார். இந்த நேரத்தில்.. தமிழர்களுக்காக குரல் கொடுக்கப் போய் உள்ளதையும் இழக்க.. குத்தியர் என்ன பேயனே..! அவர் சுழியர்..! :lol::D

Edited by nedukkalapoovan

13 ஆம் திருத்த சட்டத்தில் ஒன்றுமில்லை என்றதால போகாமல் விட்டிருக்கலாம் .

வட  மாகாணம் அரை சிங்கப்பூர் ஆகிவிட்டது.

5875_140055066189355_1917664104_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

றோட்டுக்கு தாரும் போட்டு.. லைட்டும் போட்டா அது சிங்கப்பூரு...! என்ன கொடுமை சரவணா..???! இதனை விட யாழ்ப்பாணம் மிகச் சிறப்பாக இருந்ததாம்.. 1982 க்கு முன்னர்..! பின்னர் இதே சிங்களவர்களே குண்டையும் போட்டார்கள். பொருண்மியத் தடையும் போட்டார்கள். இப்ப தாங்கள் ஆக்கிரமிச்சிட்டு தங்கள் வருவாய்ப்புக்கு றோட்டு போடுகிறார்கள். லைட்டுப் போடுகிறார்கள்.

 

ஆனால் உள்ள எல்லாம் கோறையா இருக்குது..! சனம் வெளிநாட்டுக் காசை வாய் பார்த்திட்டு இருக்குது.. ஒருவேளை சாப்பிட. தொழில் இல்லை. தொழில்துறை வளர்ச்சி இல்ல. விவசாயம் இராணுவ மயம். மீன்பிடி கடற்படை மயம்..! வெளியார் முதலீடு இல்லை. எங்கும்.. எல்லாம்.. டக்கிளசின்.. ஹத்துருசிங்கவின் முதலீடுகளாகத் தான் இருக்குது..! இதெல்லாம் சிலருக்கு அரைச் சிங்கப்பூராத் தெரியுது. ஏன்.. 1982 இல் உருப்படியா இருந்த சிறீதர் தியேட்டர் இன்னும் டக்கிளசின் கெட் குவாட்டஸ்..! அதுவும் அரைச் சிங்கப்பூரின் ஒரு அம்சம் போல..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அரை சிங்கப்பூரில் கழிவுத்தண்ணீர் கிணற்று நீருடன் கலக்குமா? :rolleyes: அண்மையில் சென்றுவந்த நண்பர் அபிவிருத்தியால் ஏற்படும் இந்த விபரீதத்தை விளக்கினார்..

முன்பெல்லாம் பக்கத்துவீட்டுக் கிணற்றுக்கு அருகில் கழிவுத் தொட்டியைக் கட்டமாட்டார்கள்.. இப்போது யார் யாரோ எல்லாம் கட்டுவதால் குடிநீர் மாசுபடுதலை தடுக்க முடியாமல் உள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்ததாகக் கூறினார்..

  • கருத்துக்கள உறவுகள்

3.10.12 அன்று வெளிவந்த  "ஜூனியர் விகடனில்", டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றி வழக்கறிஞர் புகழேந்தி குறிப்பிட்டதை...  அப்படியே தருகின்றேன்.

 

"1986 ம் ஆண்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த சில இளைஞர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் பெண்களை கேலி செய்வது, கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்வது என்று, தொடர்ந்து ரகளை செய்து வந்தனர். நவம்பர் 1-ம் திகதி, அந்த இளைஞர்களில் சிலர் அருகில் இருந்த கடையில் வாழைப்பழம் வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் சென்றதுடன், கடைக்காரரையும் கடுமையாகத் தாக்கினர். அந்த இடத்தில் இருந்த சிலர் இதை தட்டிக்கேட்கவும், வர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் தங்கள் அறைக்குச் சென்று ரிவால்வர், ஏ.கே.47 ரக துப்பாக்கி ஆகிவற்றை எடுத்து வந்து பொதுமக்களை மிரட்டினர். அவர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். ஏ.கே. 47 துப்பாகி வைத்திருந்த டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்களில் ஒருவராக நின்றிருந்த திருநாவுக்கரசு என்பவரை சுட்டுவிட்டார். திருநாவுக்கரசு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.  இது தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேர் சூளைமேடு பொலிசாரால் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டனர். ஜாமீனில் வந்த டக்ளஸ், வழக்கில் ஆஜராகாமல் இலங்கைக்கு தப்பிச் சென்றுவிட்டார்." 
 

என்று... வ‌ழ‌க்க‌றிஞ‌ர் புக‌ழேந்தி, குறிப்பிடுகின்றார்.

 

நானும் இதுவரை, ட‌க்ள‌ஸ் ஏதோ... இய‌க்க‌ப் பிர‌ச்சினையில் கொலை ப‌ண்ணி விட்டார் என‌ நினைத்திருந்தேன்.
ஆக....... வாழைப்பழத்துக்காக,  தமிழனை கொலை செய்தவர் தான் டக்ளஸ் தேவானந்தா.

Edited by தமிழ் சிறி

வன்மையாய் கண்டிக்கிறேன் ..................தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ,கொடைவள்ளல் ,செம்மணச்செல்வன் .,அரிச்சந்திரன் ,வீரபாண்டியகட்டப்போம்மனின் வாரிசைப்போய்  ஒரு சாதாரண வாழைப்பழதிற்கு கொலை செய்தவர் என்பதை எழுதியதை வன்மையாய் கண்டிக்கிறேன் .......................... :lol:  :D  :rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையாய் கண்டிக்கிறேன் ..................தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ,கொடைவள்ளல் ,செம்மணச்செல்வன் .,அரிச்சந்திரன் ,வீரபாண்டியகட்டப்போம்மனின் வாரிசைப்போய்  ஒரு சாதாரண வாழைப்பழதிற்கு கொலை செய்தவர் என்பதை எழுதியதை வன்மையாய் கண்டிக்கிறேன் .......................... :lol:  :D  :rolleyes: 

 

 

அமூம்

இந்த மாதிரி  சாதாரண  வாழைப்பழம் என்று எழுதுவதை  நானும் வன்மையாகக்கண்டிக்கின்றேன்.

 

அதனால்தானோ என்னவோ

அதை :icon_mrgreen: 

அவர் பின்னர் பயன்படுத்தவே இல்லை....... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமூம்

இந்த மாதிரி  சாதாரண  வாழைப்பழம் என்று எழுதுவதை  நானும் வன்மையாகக்கண்டிக்கின்றேன்.

 

அதனால்தானோ என்னவோ

அதை :icon_mrgreen: 

அவர் பின்னர் பயன்படுத்தவே இல்லை....... :lol:

 

டக்கெண்டு... உங்களால், இப்படியெல்லாம் எப்படிச் சிந்திக்க முடிகின்றது விசுகு. :D

  • கருத்துக்கள உறவுகள்

டக்கெண்டு... உங்களால், இப்படியெல்லாம் எப்படிச் சிந்திக்க முடிகின்றது விசுகு. :D

 

நன்றி  சிறி

நகைச்சுவை என்னோடு கூடப்பிறந்தது

எங்கிருந்தாலும் சிரித்துக்கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும்

ஆனால் எல்லாவிடயத்திலும் அல்ல.... :icon_idea:

(30 வருட அரசியல் வாழ்வில் எல்லோரது நடைமுறைகளும் தெரியும் :D )

தெரிந்தோ தெரியாமலோ குத்தி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்.  1948ம் ஆண்டின் சோல்பரி அரசியல் அமைப்பு செல்லுபடியானது அதில் இரண்டு தமிழ் அமைச்சர்கள், சுந்தரலிங்கமும், (நடேசன் என்று நினைக்கிறேன்) இன்னுமொருவரும் மந்திரிப்பதவிகளுக்காக அதை எற்றுக்கொண்டு கையேழுத்துப் போட்டதாலேயே.  குத்தி அரச கூட்டத்தை முகம் பார்க்க முடியாமல் வழுக்கினார் என்பதுதான் கூடிய அளவு உண்மையாக இருக்க கூடிய விளக்கம். ஆனால் இதை கூட்டமைப்பு, இந்தியா செல்லும் போது அங்கு எடுத்துச், செல்ல வேண்டும். சுதர்சன நாச்சியப்பனிடம் அவரின் ஈழத்து M.G.R இப்போது நாச்சியப்பனின் கன்னையில் இல்லை என்று கூறிவிட வேண்டும்.  அதாவது 13ம் திருத்தம் என்று இந்தியா இனி  தூங்குவதில் பொருள் இல்லை என்றும் அதை இலங்கையில் எந்த தமிழராலும் காப்பாற்ற முடியாது என்றும் விளங்கப்படுத்த வேண்டும்.

Edited by மல்லையூரான்

ஜூனியர் விகடன் ,நக்கீரன் வாசிக்கின்ற  ஆட்களா ?

அதைத்தான் ஒபாமும் கமரூனும் இப்ப வாசிப்பதாக கேள்வி :icon_mrgreen:

Edited by arjun

ஜூனியர் விகடன் ,நக்கீரன் வாசிக்கின்ற  ஆட்களா ?

அதைத்தான் ஒபாமும் கமரூனும் இப்ப வாசிப்பதாக கேள்வி :icon_mrgreen:

அண்ணா நீங்க சொன்ன விஸ்கியை இன்னும் நான் வாசிக்கல .......எங்கே விற்குது ........... :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆம் திருத்த சட்டத்தில் ஒன்றுமில்லை என்றதால போகாமல் விட்டிருக்கலாம் .

வட  மாகாணம் அரை சிங்கப்பூர் ஆகிவிட்டது.

5875_140055066189355_1917664104_n.jpg

 

நேரே பி.பி.சிக்கு சொல்ல தெரியாதோ பம்மாத்து அமைச்சருக்கு?? போன கிழமை ஏதோ பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்க வேண்டும் என்றாரே இந்த பம்மாத்து. இவர் கழுவிய மீனுக்குள் நழுவிய மீன் எனலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழம் என்றால் முன்பு கவுண்டமணியும் செந்திலிலும் தான் நினைவில்

வந்து போவார்கள் .

 

இனி எங்கள் டக்ளஸ் அவர்கள் தான் வந்து போவார்.

அவர் உரிஞ்சும் உரியாமல் திரிகின்றார்.

 

பாரளுமன்றத்தில் கேள்வி கேட்க வெளிக்கிட்டிருந்தால்

ஒன்றுமே இல்லாமல்தான் வெளியே வந்திருப்பார். தப்பிவிட்டார். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.