Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் KP பத்மநாபனை விசாரிக்க மனு

Featured Replies

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக குமரன் பத்மநாபனிடம் விசாரித்தால் பல தகவல்கள் வெளியாகும் என சென்னையை சேர்ந்த ஜெபமனி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் எதுவும் வரவில்லை என்று ஜெபமனி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

 http://dinaithal.com/tamilnadu/16706-kp-padmanabha-inquire-at-the-rajiv-gandhi-assassination-case-the-petition.html

  • கருத்துக்கள உறவுகள்

கேபியை முதலில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துவிட்டு இப்ப ஏன் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கினம் எண்டும் மனுப்போட்டுக் கேட்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் படுகொலையில் கே பி யை விசாரிக்கிறது இருக்கட்டும். சூளை மேட்டில இறந்தவரும் ராஜீவைப் போல ஒரு மனிதன் தானே. அங்கு தேடப்படும் குற்றவாளியா அறிவிச்சவருக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்தவையை என்ன செய்யுறது. அவையை யார் விசாரிக்கிறது..??! :icon_idea::rolleyes:

KP.jpg

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=20079

  • கருத்துக்கள உறவுகள்

கே.பியிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 12:11 GMT ] [ அ.எழிலரசன் ]


ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தொடர்பாக சிறிலங்காவில் உள்ள குமரன் பத்மநாதனை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஜெபமணி என்பவர் இந்த மனுவைச் சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில்,

ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் குழுவின் இறுதி அறிக்கையில், சந்திரசாமி, கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட பலருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தது.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த குமரன் பத்மநாதனை 2009-ம் ஆண்டு சிறிலங்கா அரசு கைது செய்தது.

பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் சிறிலங்கா அரசு விலக்கிக் கொண்டது. தற்போது அவர் சிறிலங்காவில் உள்ளார்.

ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு குமரன் பத்மநாதனே அனுப்பி வைத்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால் அவரைக் கைது செய்ய மத்திய புலனாய்வுப் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து இந்திய மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே குமரன் பத்மநாதனை சிறிலங்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரிடம் விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர், மனு குறித்து வரும் ஓகஸ்ட் 5-ம் நாளுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறைச் செயலர், நிதித்துறைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


http://www.puthinappalakai.com/view.php?20130702108592

ஜெபமணி யார் என்பதில் இந்த வழக்கு தங்கியுள்ளது. இவர் ஒரு ஓடுகாலி என்றால் ஒன்றும் நடக்காது, இவர் தனாகத்தான் இந்த வழக்கை கொண்டுவந்தார்.  அன்னையம்மாள் வாழ்த்துப் பெற்றவரானால், ஞானதேசிகன், தங்கபாலு யாருடையதும் உறவினரானால் எல்லாம் முன்னல் போகும். அங்கே வேறு அரத்தம் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பியை மாறி மாறி வடக்கு இந்தியாவில் இருந்து வந்து துளைத்து எடுத்து ஒன்றையும் பெற முடியவில்லை. கொலை நடந்த போது தான் பம்பாயில் இருந்தாக மட்டும்  கூறி இருந்தார். இப்ப ஏன் சட்டியை கழுவி திரும்ப கறி வைக்க வெளிக்கிடீனம் என விளங்கவில்லை. :lol:

கே.பியை மாறி மாறி வடக்கு இந்தியாவில் இருந்து வந்து துளைத்து எடுத்து ஒன்றையும் பெற முடியவில்லை. கொலை நடந்த போது தான் பம்பாயில் இருந்தாக மட்டும்  கூறி இருந்தார். இப்ப ஏன் சட்டியை கழுவி திரும்ப கறி வைக்க வெளிக்கிடீனம் என விளங்கவில்லை. :lol:

அடுத்த மத்திய தேர்தலுக்கு பிறகாயின் கறி நாறிப்போகும் என்று நினைக்கிறார்கள் போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மத்திய தேர்தலுக்கு பிறகாயின் கறி நாறிப்போகும் என்று நினைக்கிறார்கள் போலிருக்கு.

ராஜீவின் கொலை வழக்கைக் கொஞ்ச நாளைக்காவது, ஆறப்போட வேண்டிய தேவை, சோனியா குடும்பத்துக்கு எப்பவும் உள்ளது!

 

அதற்கான ஒரு வழிமுறை தான் இதுவும் என நினைக்கின்றேன்! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.