Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்களின் தேசிய உணவு, ( ஓடியல் (பனங்கிழங்கு) கூழ் ) .

Featured Replies

ஈழத்தமிழர்களின் தேசிய உணவு, ( ஓடியல் (பனங்கிழங்கு) கூழ் ) .

 

 

6986804081_1b3ba2cf76_z.jpg

 

உலகில் பல நாடுகள் தமது நாட்டுக்கேயுரித்தான அல்லது அந்த நாட்டு மக்களின் வரலாற்றுடன் தொடர்புள்ள உணவு வகையினை தேசிய உணவாகக் கொள்வது வழக்கம். பல நாடுகளில் அதே வகையான உணவுகள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டாலும், உள்நாட்டில் கிடைக்கப்பெறும் உணவுப் பொருட்களை பாவித்து , பாரம்பரியமாக அந்த நாட்டு மக்களால் தயாரிக்கப்படும் உணவு வகையை அந்த நாட்டின் தேசிய உணவாகக் கொள்ளலாம்.

இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாகிய ஈழத்தமிழர்களின் தேசிய உணவு எது என்ற கேள்விக்கு ஓடியல் (((((பனங்கிழங்கு) கூழ் என்பது சரியான பதிலாக இருக்க முடியும். சிங்களவர்கள் பனங்கிழங்கில் கூழ் தயாரிப்பதில்லை. இன்று யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் சிங்களவர்கள் விரும்பியுண்ணும் உணவாகவும் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் ஒடியல் கூழ் தான் என பல சிங்களவர்களே கூறுகின்றனர். அவ்வாறே, ஈழத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் சிறப்பாக நண்பர்கள் உறவினர்கள் ஒன்று கூடும் போது கூழ் தயாரித்து, கூடியிருந்து கூழை அருந்தி கலந்துரையாடுவது வழக்கம். 

தமிழீழம் முழுவதும் வடக்கிலிருந்து கிழக்கு வரை பரவி வளர்ந்து காணப்படும் பனைமரத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உணர்வு பூர்வமான தொடர்புண்டு. போரில் கூட ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல அவர்களுடன் சேர்ந்து அவர்களின் பனைமரமும் அழிந்தது. போரில் எமது மக்களுக்கு தமிழர்களின் எதிரிகளுடன் போராட மட்டுமல்ல, தமிழர்களுக்கு பதுங்கு குழிகளை அமைத்து அவர்களைப் பாதுகாக்கவும் உதவியது ஈழத்தமிழர்களின் பனைமரம் தான். அதனால் தான் சிங்களவர்களின் அகராதியில் பனங்கொட்டைகள் என்றால் அது யாழ்ப்பாணத்தமிழர்களைக் குறிக்கும்.

 

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் பலவகையான கூழ் தயாரிப்பு முறைகள் உண்டு. ஆனால் பனங்கிழங்கிலிருந்து பெறப்படும் ஒடியல் மாவில், கடலுணவையும் சேர்த்து கூழ் தயாரிக்கப்படுகிறதா என்று எனக்குத் தெரியாது. ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்தில்  ஒடியல் கூழை தயாரிப்பதை இந்தக் காணொளியில் காணலாம்

 

http://www.youtube.com/watch?v=PiokGLtwP-4

 

ஓடியல் (பனங்கிழங்கு) கூழ்

 

தேவையானவை:

 

 ஒடியல் மா (பனங்கிழங்கு)  100g
தண்ணீர்   200 ml
சம்பா அரிசி    ¼ cup
இளம் பலாக்காய் 1 , பலாக்கொட்டை 15 / 20 
யாழ்ப்பாண நீல நண்டு    2
புலி (Tiger) இறால்  10
சதையுள்ள மீன்  6
கணவாய் 3
பயற்றங்காய் 1/4  பிடி
மட்டி     300 g (விரும்பினால்)
முருங்கையிலை 1/4  கப்
உப்பு    1 தேக்கரண்டி
மிளகு  1 தேக்கரண்டி

அரைத்த மிளகாய் கூட்டு :

காய்ந்த மிளகாய்  6
தேசிக்காய் 1
 உப்பு 
1/2 தேக்கரண்டி
மிளகு 
1 தேக்கரண்டி
கரைத்த புளி :

1 சிறிய (தேசிக்காயளவு) உருண்டை
 தண்ணீர்   
1/2 கப்

பக்குவம்:
 
அளவான பாத்திரத்தில் ஒடியல் மாவையும் நீரையும் கலந்து ஊறவிடவும். ஒடியல் மா கிடைக்காது விட்டால் அரைத்த மரவள்ளிகிழங்கையும் பயன்படுத்தலாம். (சுவை வேறுபடலாம்) குறைந்தது இரண்டு மணிநேரங்களாவது ஒடியல் மா நீரில் ஊற வேண்டும். செத்தல் மிளகாயை தேசிக்காய்ப்புளி, உப்பு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு, சிறியளவு நீர் விட்டு கட்டியாக கரைத்துக் கொள்ளவும்.  இன்னொரு பெரிய பாத்திரத்தில் இருமடங்கு தண்ணீரிட்டு கொதிக்க வைக்கவும். அதற்குள் முதலில் அரிசி, பலாக்கொட்டை என்பவற்றையும், அவை அவிந்ததும் கடலுணவுகளை இட்டுக் அவிய விடவும்.
 
படிமானம் :
 
ஒடியல் மாவில் மேலேயுள்ள நீரை வடித்து  விட்டு கரைசலாம் ஒடியல் மாவையும் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைக் கலந்து, சுவைக்கேற்ப உப்பைச் சேர்த்து கூழ் அவிந்ததும் சூடாக பரிமாறவும். 

முக்கிய குறிப்பு :

 

இது எனது சொந்த தயாரிப்பு இல்லை .  அத்துடன் இதில் வந்த சில கருத்துக்களில் எனக்கு நூறுவீத உடன்பாடு இல்லை .

 

*********** கள உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க லைப்பின் பெயர் மாற்றப்பட்டது.

 

http://viyaasan.blogspot.fr/2013/07/blog-post_3.html

Edited by கோமகன்

கோ, நீங்கள் உங்கள் சொந்த றெசிப்பியை அல்லவா போட வேணும். "கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்" என்று தலையங்கத்தைப் போட்டிட்டு கொப்பி பேஸ்ட் பண்ணுவது நல்லாய் இருக்குதா?

  • கருத்துக்கள உறவுகள்

கூழ் குடித்து வாழ்வோர் வாழ்வார் நெடுகாலம்

மற்றோரெல்லாம் நோய் பிடித்து வீழ்வார் சிறுகாலம் :D 

 

இணைப்பிற்கு நன்றி கோமகன்

 

  • தொடங்கியவர்

கோ, நீங்கள் உங்கள் சொந்த றெசிப்பியை அல்லவா போட வேணும். "கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்" என்று தலையங்கத்தைப் போட்டிட்டு கொப்பி பேஸ்ட் பண்ணுவது நல்லாய் இருக்குதா?

 

உங்கள் கோரிக்கையின் நியாயத்தன்மையை உணருகின்றேன் தலைப்பை மாற்றிவிடுகின்றேன.

 

  • தொடங்கியவர்

கூழ் குடித்து வாழ்வோர் வாழ்வார் நெடுகாலம்

மற்றோரெல்லாம் நோய் பிடித்து வீழ்வார் சிறுகாலம் :D 

 

இணைப்பிற்கு நன்றி கோமகன்

 

 

 

அதே.....................  :lol:  :lol: . உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் மிக்க நன்றி வாத்தியார் :) :) .

 

எனக்கு கொஞ்சம் தடிமல் ஆகையால் நாளை என் துணைவியார் ஒடியல் கூழ் செய்து தருவதாக கூறியுள்ளார் ..................இணைப்புக்கு நன்றி சகோ........

அமெரிக்கா வந்த காலத்தில் செய்வதுண்டு. குறந்தது 5 வருடங்களாவது அந்த பக்கம்(ஒடியல் கூழ் போய் இல்லை. நான் நிறைய உழுந்து மெல்லியத்தாக வறுத்து அரிசியுடன் போடுவேன். எனக்கு உழுந்தும், முருங்கை கீரையும் கட்டாயம் போட வேண்டும். பிலாக் கொட்டையிலும் பார்க்க பிலாக்காய் தான் பிடிக்கும். காய் பிலாக்காயிருக்கும் கொட்டையின் சுவைக்கும், வழமையாக பழத்திலிருந்து கிடைக்கும் கொட்டைக்கும் சுவையில் வித்தியாசம்.  போடவேண்டும்.  குடிக்கும் போது  தேய்காய் தோண்டிச் சீவி பக்கத்தில் இருக்க வேண்டும். இன்றுமே அமெரிக்காவில் முருங்கை கீரை வாங்குவது கஸ்டம். அம்மா வைத்தால் பாதி பாதியாக உடைத்துப்போட்ட செத்தல் மிளகாய்த்துண்டுகள்  கூழில் மிதக்கும்.மற்றயது கூழுக்கு எல்லா ஒடியலும் சரிவராது. தென்மராட்சி மணல் காட்டு பனைகளில் இருந்து வரும் ஒடியலில் எள்ளவும் காறல் இருக்கது. புட்டுக்கு சீனி தேங்காய்ப்பு போடுவதால் எதுவும் ஒத்து போகும். கூழுக்கு ஒடியல் தேடி வாங்க வேண்டும். தண்ணியில் கழிவினால் அது பிறகு "Decaffeinated Coffee"தான்  அது தான் அதை கைவிட்டுவிட்டேன்.   

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் மாவின் காரல் தன்மை போகவே இரண்டு மூன்று தடவைகள் நீரில் ஊறவிட்டு நீரை ஊற்ற, காரல்த்தன்மை குறைந்துவிடும். மரவள்ளிக் கிழங்கும் கூழுக்குக் கூடுதல் சுவை சேர்ப்பது. நான் முழுப் பயறை வறுத்து, இறக்க ஐந்து நிமிடத்துக்கு முன் போடுவேன். கடிபட நன்றாக இருக்கும்.

 

இன்று குடித்தேன் ..............மூக்கால் வடிந்து வியர்வை சிந்தியது...................இனி சோறு கட் ...கூழ் தான் தேசிய உணவு.................. :D  :D 

  • தொடங்கியவர்

எனக்கு கொஞ்சம் தடிமல் ஆகையால் நாளை என் துணைவியார் ஒடியல் கூழ் செய்து தருவதாக கூறியுள்ளார் ..................இணைப்புக்கு நன்றி சகோ........

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி தமிழ்சூரியன் .

நல்ல பதிவு கோமகன் அண்ணா வாழ்த்துக்களும் நன்றிகளும் 

ஒடியல் மாவின் காரல் தன்மை போகவே இரண்டு மூன்று தடவைகள் நீரில் ஊறவிட்டு நீரை ஊற்ற, காரல்த்தன்மை குறைந்துவிடும். மரவள்ளிக் கிழங்கும் கூழுக்குக் கூடுதல் சுவை சேர்ப்பது. நான் முழுப் பயறை வறுத்து, இறக்க ஐந்து நிமிடத்துக்கு முன் போடுவேன். கடிபட நன்றாக இருக்கும்.

 

பயறுதான் போடுவது. பிழை பிடிச்சு போட்டியல். :D

  • கருத்துக்கள உறவுகள்

பயறுதான் போடுவது. பிழை பிடிச்சு போட்டியல். :D

நானும் ஒரு 'டிப்ஸ்' தாறன், மல்லை! அதுக்காக, வீட்டில நான் தான் சமைக்கிறது எண்டு முடிவு கட்டக் கூடாது! :o

 

கூழ் கொஞ்சம் கொதிக்க, அதுக்குள்ளே கொஞ்ச அரிசியையும் போடுங்கள்!

 

அரிசி அவிஞ்சு, சோத்துப் பதத்துக்கு வந்தவுடன், கூழ்  சரியா அவிஞ்சிருக்கு எண்டு தெரியும்! :icon_idea:

நானும் ஒரு 'டிப்ஸ்' தாறன், மல்லை! அதுக்காக, வீட்டில நான் தான் சமைக்கிறது எண்டு முடிவு கட்டக் கூடாது! :o

 

கூழ் கொஞ்சம் கொதிக்க, அதுக்குள்ளே கொஞ்ச அரிசியையும் போடுங்கள்!

 

அரிசி அவிஞ்சு, சோத்துப் பதத்துக்கு வந்தவுடன், கூழ்  சரியா அவிஞ்சிருக்கு எண்டு தெரியும்! :icon_idea:

 

டிப்சுக்கு நன்றி புங்கை. உங்களை அப்படி நான் தரக்குறைவாய் நினைக்க மாட்டன். :lol:

 

ஆனாலும் பிள்ளை பெறமாட்டாத டாக்குத்தரின் பிரவத்திலும் பார்க்க எல்லாத்திலும் ஒரு கை போடும் சுமே அக்காவின் சுடுதல்கள் டேஸ்டுத்தான். :)

 

நான் இங்கே மரவள்ளி கிழங்கு வாங்கி Ownல் போட்டு சுடுவேன், அல்லது பொரிப்பேன். ஆனால் அங்கே அம்மா அதை அதிகம் பாவிக்க மாட்டா. அதனால். எனக்கு மரவள்ளி கிழங்கின் சுவையை கூழில் ஞாபகத்தை காணவில்லை.  சின்னாக இருந்த போது குரகன் புட்டுடன் மரவள்ளி கிழங்கு கறிசாப்பிடும் ஞாபகம் இருக்கு.

 

 

சப்பாட்டில் பதம் அதிகம் சிங்களவருக்கு தெரியாது. இந்த தமிழ் ஊடகங்கள் Recipe யை முழுவதாக போடாமல் எப்போதும் ஜனரஞ்சகமாக  ஒரு படம் போட்டு தங்களை எழுப்ப முயல்கிறார்கள். படத்தை பார்க்க கூழ் மாதிரியே தெரியவில்லை.

 

 

கூழுக்கு யாரின் Recipe பழையதோ அதுதான் டேஸ்டாக இருக்கும். பழைய Recipe கள் தெரிந்தவர்கள்தான்  இது பற்றி எழுத வேண்டும்.

Edited by மல்லையூரான்

%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AEஒடியல் கூழுக்கு இவரும் ஒரு முக்கிய அம்சம். :D

 

 

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

பதிவிற்கு நன்றி அண்ணா.

கனடா ஈழ உணவகங்கள் சனி, ஞாயிறில் விசேடமாக கூழ் விற்பார்கள்.

பல இனத்தவரும் விரும்பி வாங்குவார்கள்.

 

உங்கு பூங்காக்களிலும் என்று எம்மவர்கள் சமைத்து சாப்பிடுவதை படங்களில் பார்த்தேன்  . இதை கவுன்சில் அனுமதிக்குதா ?? சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லையா ?? வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விவசாயி .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஆத்தங்கரையோரக் காடுகள் இருக்கின்றன . அங்கு நாங்கள் கிரில் போடுறது , கூழ் எல்லாம் காச்சிறதுன்டு. முக்கியமாய் பெரிய மீன் தலைகள் , நண்டு ,மரவள்ளிக் கிழங்கு எல்லாம் போட்டு பெரிய  சருவத்தில் காச்சுவோம். 

  • தொடங்கியவர்

அமெரிக்கா வந்த காலத்தில் செய்வதுண்டு. குறந்தது 5 வருடங்களாவது அந்த பக்கம்(ஒடியல் கூழ் போய் இல்லை. நான் நிறைய உழுந்து மெல்லியத்தாக வறுத்து அரிசியுடன் போடுவேன். எனக்கு உழுந்தும், முருங்கை கீரையும் கட்டாயம் போட வேண்டும். பிலாக் கொட்டையிலும் பார்க்க பிலாக்காய் தான் பிடிக்கும். காய் பிலாக்காயிருக்கும் கொட்டையின் சுவைக்கும், வழமையாக பழத்திலிருந்து கிடைக்கும் கொட்டைக்கும் சுவையில் வித்தியாசம்.  போடவேண்டும்.  குடிக்கும் போது  தேய்காய் தோண்டிச் சீவி பக்கத்தில் இருக்க வேண்டும். இன்றுமே அமெரிக்காவில் முருங்கை கீரை வாங்குவது கஸ்டம். அம்மா வைத்தால் பாதி பாதியாக உடைத்துப்போட்ட செத்தல் மிளகாய்த்துண்டுகள்  கூழில் மிதக்கும்.மற்றயது கூழுக்கு எல்லா ஒடியலும் சரிவராது. தென்மராட்சி மணல் காட்டு பனைகளில் இருந்து வரும் ஒடியலில் எள்ளவும் காறல் இருக்கது. புட்டுக்கு சீனி தேங்காய்ப்பு போடுவதால் எதுவும் ஒத்து போகும். கூழுக்கு ஒடியல் தேடி வாங்க வேண்டும். தண்ணியில் கழிவினால் அது பிறகு "Decaffeinated Coffee"தான்  அது தான் அதை கைவிட்டுவிட்டேன்.   

 

பிரக்கிராசிக்கு கூழ்அனுபவம் இப்பிடி இருக்குமெண்டு எனக்குத்தெரியாது  :lol:  :lol: .  எனக்கும் முருங்கையிலை தேங்காய் சொட்டுத்தான் வேணும் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மல்லை :) :) .

  • தொடங்கியவர்

ஒடியல் மாவின் காரல் தன்மை போகவே இரண்டு மூன்று தடவைகள் நீரில் ஊறவிட்டு நீரை ஊற்ற, காரல்த்தன்மை குறைந்துவிடும். மரவள்ளிக் கிழங்கும் கூழுக்குக் கூடுதல் சுவை சேர்ப்பது. நான் முழுப் பயறை வறுத்து, இறக்க ஐந்து நிமிடத்துக்கு முன் போடுவேன். கடிபட நன்றாக இருக்கும்.

 

மல்லையற்றை அறிவிப்பை பாத்தனியள்தானே  :lol:  :lol: ??  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி சுமே  :)  :)  .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.