Jump to content

சென்னை மெட்ரோ ரயில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110/33/25kV) மனிதர்களின் கண்காணிப்பு இல்லாமல் தானியங்கி தொழில்நுட்பத்துடன் அனைத்து பாதுகாப்பு பொறிமுறைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டால், தீ பரவாமல் உடனே அணைய 'நைட்ரஜன்' மற்றும் 'கார்பன் டை ஆக்சைடு' வாயுக்கள் மூலம் தீயணைக்கும் பொறிமுறைகள் நிறுவப்பட்டுள்ளன.

 

 

1513759_937881912891667_3366743936160553

 

உயர் அழுத்த மின்நிலையம் (High Voltage Substation)

 


 

1510885_937881752891683_1718093082685800

 

'மின் மாற்றி' அறை (Gas Insulated Switch Gear - GIS Room)

 

 

 

 

1012937_937881762891682_7225428024272564

 

கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பு மின் சாதனங்கள் (Protection Panels in Control Room)

 

 

 

 

10422308_937881842891674_400768982882553

 

தானியக்கத்திற்கான பரிசோதனைகள் (Testing of Automation)

 

 

 

 

10155624_937881806225011_463855599750636

 

'மின்னழுத்த மாற்றி' (Transformers)

 

 

Source: CMRL FB

  • Like 3
Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

suvy

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

குமாரசாமி

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்குவிற்கும் உறவுகளுக்கு நன்றி.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில ஆர்ஜித வழக்குகளால் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட சென்னை கடற்கரை - செயின்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் திட்டம் (Madras Rapid Transit System - MRTS) தற்பொழுது மீள் உயிர் பெற்று திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.. அதுபற்றிய தினமலரில் வந்த செய்தி இது.

 

 

 

Update:

 

2iaq3ut.jpg

 

தினமலர் - இ பேப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Update:  Chennai Metro Rail Project work @ Anna Nagar Ramp

 

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம்-2ல், கோயம்பேடு - அண்ணாநகர் சுரங்க வாயிலின் இறுதிக் கட்டத்தின் திறப்பு, சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் வெளிப்பாட்டை காண ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

 

 

10868214_936305846382607_471165809003135

 

16024411292_0948a2e155_b.jpg

 

15839050679_5f02a077c6_b.jpg

 

10363833_936306013049257_662265822117539

 

15999325206_24dd98c942_b.jpg

 

 

 

 

 

Source:CMRL FB.

Love to know the RPM of that drill. must be made in Switzerland.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

 

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் சென்னை மெட்ரோ இரயில் சேவை, வரும் மார்ச் மாதம் துவங்குமா..? என அனைவரின் முகங்களிலும் கேள்விக்குறியாக தொங்குகிறது..! :o:huh:

 

 

சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் வரையிலான 11 கி.மீ தூரத்திற்கு அனைத்து கட்டட மற்றும் தொழில் நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டு, இறுதி பரிசோதனைகளும் முடிந்து இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறியப்படுகிறது.

ஆனால் 'மக்களின் முதல்வர்' பதவியில் இல்லாத நிலையில், திறப்பு விழாவிற்கு எந்த வித இசைவும், தேதியும் இன்னமும் தமிழக அரசு அறிவிக்கவில்லை.

 

தமிழக அரசு சேவை இயக்க தேதியை முறையாக அறிவித்தவுடன், பத்தே நாட்களில் மத்திய ரயில் பாதுகாப்பு நிறுவனம் முழுவதுமாக பரிசோதித்து சான்றிதழ் வழங்கிவிடும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. அதற்கான அனைத்து எழுத்துப்பூர்வாங்க வேலைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே வழித்தடத்தில் இன்னொரு பகுதியான "செனாய் நகர்-கோயம்பேடு" சுரங்க வழித்தடத்தின் வேலைகளும் பூர்த்தியாகி வரும் சூலை 2015 மாதத்தில் இரயில் சேவைகளை இயக்க முடியுமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பா.ம.க கட்சி தலைவர் ராமதாசும் சனியன்று பேசுகையில், 'தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாகவும், அவர்கள் முந்நாள் மதல்வரின் மீள் வருகைக்காக காத்திருக்கக் கூடாதெனவும்' குற்றம் சாட்டியுள்ளார்.

 

10_02_2015_002_016_018.jpg

 

 

 

10_02_2015_002_016_010.jpg

 

 

 

10_02_2015_002_016_009.jpg

 

 

 

10_02_2015_002_016_016.jpg

 

 

 

செய்தி மூலம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை, சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே நிலத்தடி சுரங்க வழியில் அமிழும் சென்னை மெட்ரோ வழித்தடம்.

 

10615526_1044066352276982_31062449891699

\

 

 

 

16_02_2015_101_003_001.jpg

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

tmp2.jpg

 

Source: Malai murasu.

 

 

03MARSTS01_Fina_me_2329840f.jpg

 

Officials will inspect facilities for a week

 

In yet another step towards the launch of operations, Chennai Metro Rail will be finally tested by Commissionerate of Metro Rail Safety (CMRS) by the end of this month, according to its officials.

 

The certificate by CMRS is a mandatory requirement to begin the first service of the Chennai Metro Rail on the 10-km stretch from Koyambedu to Alandur.

 

“CMRS officials may come by for a visit on March 20 and inspect the facilities for a week. The certificate of approval to begin operations may come in about two weeks,” an official of Chennai Metro Rail Limited (CMRL) said.

 

It is not clear if the operations will begin in April as the State government has to give a date to inaugurate the service.

 

The Metro Rail, built at a cost of Rs. 14,000 crore, was launched in 2009. According to the original schedule, services were to begin in October 2014 between Koyambedu and Alandur, but the deadline was later extended to March 2014.

 

Meanwhile, in November last year, Metro Rail trains received clearance from the Research Design and Standards Organisation (RDSO), one of the statutory requirements to commence operations.

 

The Hindu

Link to comment
Share on other sites

  • 2 months later...

மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தால் சென்னை மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்க வாய்ப்பு

 

metro_2100659h.jpg

 

மெட்ரோ ரயில் பொது சட்டம், 2013-ல் மத்திய அரசு மேற்கொண்டுள்ள புதிய திருத்தம் காரணமாக கோயம் பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
 
டெல்லியில் உள்ள மாண்டி ஹவுஸ் - ஐடிஒ இடையே மெட்ரோ ரயில் சேவைக்காக பாதை அமைக் கப்பட்டுள்ளது. ஆனால், இது ஒரு வழிப் பாதையாக இருப்பதால் மெட்ரோ ரயில் பொதுச் சட்டம், 2013-ன் படி அவ்வழித்தடத்தில் ரயில் களை இயக்க பாதுகாப்பு ஆணை யர் அனுமதி வழங்கவில்லை.
 
இதனால் கடந்த ஜனவரியில் பணி பூர்த்தி அடைந்த பிறகும் இதுநாள் வரை அவ்வழித் தடத்தில் ரயில்களை இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ரயில்வே பாதுகாப்பு துறை ஆணை யர், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றுடன் தொடர் ஆலோசனை நடத்தினார்.
 
இதையடுத்து, ஒரு வழிப் பாதை யிலும் மெட்ரோ ரயில்களை இயக்கு வது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மெட்ரோ ரயில் பொதுச் சட்டம், 2013-ல் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், தற்போது கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் அசோக்நகர்-ஆலந்தூர் இடையே ரயில்கள் திரும்பி வருவதற்கு இருவழிப் பாதைகளையும் இணைக்க இணைப்புப் பாதை அமைக்கப்படாததால் ஒரு வழிப் பாதையில் ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையரின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
 
தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் காரணமாக, இனி அசோக்நகர்-ஆலந்தூர் இடையே ஒருவழிப் பாதையில் ரயில்களை இயக்க முடியும். இதன் காரணமாக, விரைவில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Link to comment
Share on other sites

சிங்கப்பூர், கொங்கொங்கில ஓடுகிற புகையிரதம் மாதிரி இருக்கு...

சென்னையின் மேம் பாலங்கள் மெட்ரோ ரயில்,பெருந்தெருக்கள் ,மற்றும் நிலக்கீழ் தொடர்ந்து சேவைகள் யாவுமே யேர்மனிய நிறுவனத்தினால் தான் மேற் கொள்ளப்படுகின்றன.பல மேம்பாலங்கள் பெருந்தெருக்கள் வேலைகள் யாவும் முடிவுற்றுள்ள நிலையில் அம்மா வந்து திறந்து வைக்க வேண்டுமென்பதற்காக சிறிய அளவு வேலைகளுடன் ஆமை வேகத்தில் நகர்த்துவதாவது மக்களைச் சிரமப்படுத்துவதாகும்.இதே போல மீனம் பாக்கத்திலிருந்து மண்ணடி நோக்கிய பாதையில் மிகவும் சுவார்ஸ்யமான சம்பவமும் உண்டு.ஹோட்டல்களில் பங்குகளை அள்ளி குவித்து வரும் கலைஞர் குடும்பத்திற்கு பங்கு கொடுக்க மறுத்த ஹில்டன் நிறுவனத்தை பழி வாங்கும் நோக்கோடு ஹோட்டலை மறைத்து பறக்கும் ரயில் நிலையத்தையும் அமைத்துள்ளார்கள்.ஆனால் விமான நிலையத்திலிருந்து மிகவும் சுலபமாக ஒரு சில நிமிடத்தில் ஹோட்டலை அடைந்து விடலாம்

 

hi_kingguestroom01_2_675x359_FitToBoxSma  hi_est02_3_675x359_FitToBoxSmallDimensio   partly_cloudy.png100°F  /84°F

 

 

 

 

Link to comment
Share on other sites

ஜெயலலிதா விடுதலையை தொடர்ந்து ஓடப்போகிறது சென்னை மெட்ரோ ரயில்!

 

 

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் 2008ம் ஆண்டு ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்போது இந்தத் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு வழித்தடங்கள்1/5 இரு வழித்தடங்கள் மெட்ரோ ரயில் திட்டம் மூலம் சென்னையில் 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2வது வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. Show Thumbnail

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-metro-train-first-service-may-commence-from-june-first-weak-227485.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

1.png

 

சென்னையில் 29–ந்தேதி மெட்ரோ ரெயிலை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

 

சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.

முதல்கட்டமாக, சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரைக்கான மெட்ரோ ரெயில் பாதை போட்டு முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன.

உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து போக்குவரத்து தொடங்கலாம் என்று சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரெயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது.

"கோயம்பேடு – ஆலந்தூர்" இடையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்து வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடு மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

 

மாலை மலர்

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நாளை(29-06-2015) சென்னை மெட்ரோ இரயில் சேவை துவக்க விழா..

அது பற்றிய செய்தி முன்னோட்டம் தமிழ் இந்து தினசரியில் வெளிவந்த காணொளி..!

சிங்காரச் சென்னைக்கு மற்றொரு மகுடம்..:lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாய் இருக்கு , வெத்தலை போட்டுத் துப்புவதற்கு ஒரு சொம்பும் இருந்தால் அழுக்காகாமலும் இருக்கும்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மெட்ரோ இரயில் சேவை துவக்கவிழா அழைப்பிதழ்..

11709732_1052770448069479_21884021312342

 

Source: Chennai Metro Rail FB

 

 

Link to comment
Share on other sites

வாழ்த்த்துக்கள் சென்னை உறவுகளே,

ராசவன்னியன் அண்ணா ......

இனிமேல் துபை மெற்றோ வைப்பார்த்து ''அட.... நம்ம ஊர்ல பாக்காததா?'' என காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம் :lol: 

அப்பாவி கோயிந்தன் கணக்கா ஒரு கேள்வி .....

அதென்ன சென்னை மெற்றோவின்   வெளித்தோற்றம், உள்கட்டமைப்பு எல்லாமே துபை மேற்ரோவை பிரதி எடுத்தது போலவே இருக்கு??????  இல்லைன்னா உலகம் முழுக்க மெற்றோன்னா இப்படித்தான் இருக்குமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்த்துக்கள் சென்னை உறவுகளே,

ராசவன்னியன் அண்ணா ......

இனிமேல் துபை மெற்றோ வைப்பார்த்து ''அட.... நம்ம ஊர்ல பாக்காததா?'' என காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம் :lol: 

அப்பாவி கோயிந்தன் கணக்கா ஒரு கேள்வி .....

அதென்ன சென்னை மெற்றோவின்   வெளித்தோற்றம், உள்கட்டமைப்பு எல்லாமே துபை மேற்ரோவை பிரதி எடுத்தது போலவே இருக்கு??????  இல்லைன்னா உலகம் முழுக்க மெற்றோன்னா இப்படித்தான் இருக்குமா????

கருத்திற்கு நன்றி ஈழநேசன்.

பெரும்பாலும் மெட்ரோ ரயில்களின் அடிப்படை தொழிற்நுட்ப கட்டமைப்பிற்கான வடிவமைப்பு அம்சங்கள் (Design Specifications) உலகளவில் பொதுவானவைதான்.. அப்படியிருந்தால்தான் இதற்கான உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தொழிற்நுட்ப பொருட்களை ஒரே வடிவமைப்புக் கோட்டில் (Common Specification standard)  தயாரிக்கவும், பின்னாளில் அவற்றை ஆராய்ச்சி மூலம் மேம்படுத்தவும் இயலும்.

துபை அரசாங்கத்திடம் பணம் அதிகம் கைவசம் உள்ளதால் அதன் மெட்ரோ ரயில்களின் வசதிகள் இன்னும் அதிக கவர்ச்சியானவை..
துபை மெட்ரோவில் ஓட்டுநர்கள் கிடையாது. மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனைத்து ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை இந்த சென்னை மெட்ரோ ரயில்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் தானே!! ஆகையால், சென்னை மெட்ரோவை பாராட்டி, வளர வாழ்த்துவோம்.

 

மிகவும் அழகாய் இருக்கு , வெத்தலை போட்டுத் துப்புவதற்கு ஒரு சொம்பும் இருந்தால் அழுக்காகாமலும் இருக்கும்...!  :)

சரக்குகள் வைத்துக்கொள்ள வாசலின் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.. ஆனால் இந்த மெட்ரோ ரயில்கள் கோயம்பேடு மத்திய மார்கட்டில் நின்று செல்வதால் அனைத்து வகை காய்கறி, பழ துர்நாற்றத்தை கூடிய விரைவில் சென்னைவாசிகள் இந்த மெட்ரோ ரயிலிலும் ஏற்றிவிடுவார்களென்பது திண்ணம்.

கருத்திற்கு நன்றி சுவி..! (சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பித்தால், ஜோடியாக அதில் பயணம் செய்யப்போவதாக சொன்ன ஞாபகம், நீங்கள் தயார்தானே? :lol: )

Link to comment
Share on other sites

ஆலந்தூர் - கோயம்பேடு இடையே தொடங்கியது சென்னை மெட்ரோ ரயில் சேவை

அலங்கரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள். | படம்: சுனிதா சேகர்
அலங்கரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள். | படம்: சுனிதா சேகர்

ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் இன்று (திங்கள்கிழமை) பகல் 12.10 மணியளவில் தொடங்கிவைத்தார்.

முதல்வர் கொடியசைத்து வைக்க ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

மேலும், கோயம்பேடு, புறநகர் பேருந்து நிலையம் (சிஎம்பிடி), அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களையும் கோயம் பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிமனையையும் முதல்வர் திறந்துவைத்தார்.

தொடக்க விழாவையொட்டி மெட்ரோ ரயில் நிலையங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் முதல் பயணத்தை காண ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்தினர்.

mnf_2455718a.jpg

மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/ஆலந்தூர்-கோயம்பேடு-இடையே-தொடங்கியது-சென்னை-மெட்ரோ-ரயில்-சேவை/article7366725.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

மெட்ரோ ரயில்: சிறப்பு அம்சங்கள் என்ன?

மெட்ரோ ரயில் உள்புறத் தோற்றம்
மெட்ரோ ரயில் உள்புறத் தோற்றம்

சென்னை ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

* மெட்ரோ ரயில் உயர்நிலைப் பாதை மற்றும் சுரங்கம் வாயிலாகச் செல்வதால் ரயில் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

* தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதால், நடைமேடையை அடைந்தபின் ரயில் முழுவதும் நின்ற பிறகே கதவு திறக்கும், மூடும். எனவே, ரயில்களில் படியில் நின்று பயணம் செய்வது முற்றிலும் தடுக்கப்படும்.

* பயணத்தின்போது ஏதேனும் சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால், ரயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

* பொருட்களை வைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பெங்களூர் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில்களில் இல்லை.

* ஒவ்வொரு பெட்டியிலும் தலா 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* அவசர காலத்தின்போது ஓட்டுநர்களுக்கு தகவல் தர சிறப்பு பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவிகள், தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ரயிலின் செயல்பாட்டை தமது அறையில் இருந்தபடியே ஓட்டுநர் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

* ரயில்கள் தடம் புரளாமல் இருக்க ரயில் பாதைகளில் தரமான சிறிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 90 சதவீதம் மெட்ரோ ரயில்கள் தடம்புரள வாய்ப்புகளே இல்லை.

பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதி

* மெட்ரோ ரயில் பெட்டிகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பயணிகளுக்கும் அதிநவீன பாதுகாப்பு மற்றும் வசதிகள் அளிக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களின் வரைபடம் அனைத்து பெட்டியிலும் இருக்கும்.

* ஒரு மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 350 பேர் வீதம் ஒரு ரயிலில் 1,400 பேர் பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக சராசரியாக 35 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்படும்.

* கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பயணம் நேரம் 19 நிமிடங்களாக இருக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பின்னர், மக்கள் தேவைக்கு ஏற்றவாறு 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

* அதிகபட்சமாக 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க முடியும்.

கட்டண விவரம்:

மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும்.

*ஆலந்தூர் - ஈக்காட்டுதாங்கல்: ரூ10

*ஆலந்தூர் - அசோக்நகர்: ரூ.20

*ஆலந்தூர் - வடபழநி: ரூ.30

*ஆலந்தூர் - அரும்பாக்கம்: ரூ.40

*ஆலந்தூர் - சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம்: ரூ.40

*ஆலந்தூர் - கோயம்பேடு: ரூ.40

ரயில் பயண கால அட்டவணை:

*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்படும்.

*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.40 மணிக்கு இயக்கப்படும்.

*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6.03 மணிக்கு புறப்படும்.

*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.03 மணிக்கு இயக்கப்படும்.

எத்தனை ரயில்கள்?

*தினசரி கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 95 ரயில்கள் இயக்கப்படும்.

*அதேபோல் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 97 ரயில்கள் இயக்கப்படும்.

*நாளொன்றுக்கு மொத்தம் 192 ரயில்கள் இயக்கப்படும்.

*ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும்.

*அதிகபட்சமாக மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இருமார்க்கத்திலும் இலக்கை 19 நிமிடங்களில் சென்றடையும்.

*ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 விநாடிகள் ரயில் நின்று செல்லும்.

இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 

 

 

http://tamil.thehindu.com/tamilnadu/மெட்ரோ-ரயில்-சிறப்பு-அம்சங்கள்-என்ன/article7366245.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கருணாநிதிக்கு, தன்னால் ஆரம்பித்து வைக்க முடியவில்லையே... என்று ஒரே புழுக்கமாக, இருக்கப் போகுது.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Edited by தமிழ் சிறி
http://www.youtube.com/watch?v=KwLoOhiJydU
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=KwLoOhiJydU

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் ஓரிரு தடவை இறக்கி ஏற்ற வந்திருக்கிறேன். உள்ள முழு ரேமினல்களுக்கும் ஓரேஒரு பாதையை வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைய ரொம்ப நேரமெடுத்தது.அரைவாசி போனால் பிரச்சனை இல்லை. சாப்பாடு முக்கியம் தலைவரே. சாப்பாடு எப்படி இருந்தது? யோவ் என்ன மப்பா? பயணக்கதை எழுதுறது ரசோதரன்.
    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். நிலாமதி அக்கா
    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.