Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் - அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
us%20flag_CI.jpg

 

மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமைதியான வழியில் மக்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதனை தடுக்கக் கூடாது என ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தூதரகம் சுட்டிக்காட்யுள்ளது. வெலிவேரிய சம்பவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தூதரகம் அறிவித்துள்ளது.
 
வெலிவேரிய பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் போரணியொன்று வன்முறையாக வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது.
 

அவையளுக்கு இன்னமும்தான் சரியாய் விளங்கினாப்போலை தெரியேலை. GSP+ இல் இலங்கையை ஐரோப்பா கைவிட்டு எத்தனை வருசமாச்சு. எத்தனை ஆண்டுகளாக இந்த இந்த விக்டோரியா சீக்கிரெட்டை எதிர்த்தாச்சு. சும்மா கடையல் உடைஞ்சு விழுந்ததுக்கே பங்களா தேசத்தை தண்டிக்கினம்.   :o

தமிழருக்கு குடிநீர் வினியோகத்திற்கு ஐ.நா வாக்களித்திருந்த அமைப்புக்களை மகிந்தாவும், பிளேக்-புஸ்சின் அமெரிக்காவும் கொடுக்காமல் தடுத்ததினால்த்தான் மாவில் ஆற்றில் அணை மூடப்பட்டது.  அந்த வெற்றியை கொண்டாட பிளேக் மட்டக்களப்பு போன போதுதான்,  புலிகள் அவரின் கெலி கோப்டரை இலங்கையை ஆமியினத்து என்று நினைத்து சுடப்பண்ண அரசு முயற்சிகள் எடுத்திருந்தது. விமானிக்கு திட்டம் தெரிந்திருக்காததால் அவர் உயிரை கொடுத்து பிளேக்கை காப்பாற்றியிருந்தார். 

 

நிச்சயமாக நெடும் தூரம் வந்து விட்டோம். போக இன்னமும் நிறையத் தூரமும் இருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

us%20flag_CI.jpg
--------
வெலிவேரிய பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் போரணியொன்று வன்முறையாக வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது.

 

சிங்கள மக்கள், காந்திய வழியில்... குடி தண்ணிருக்காக, அகிம்சையான... அமைதிப் போராட்டத்தைத் தான் நடத்தினார்கள்.

அதுக்கு, சிங்கள ராணுவம், அப்பாவி சிங்கள மக்கள் மீது... துப்பாக்கியை நீட்டியது பயங்கரவாதம்.

அமெரிக்காவுக்கு... சிலோனிலை, என்ன நடக்குதென்றே தெரியவில்லை.

சும்மா... தொட்டதுக்கெல்லாம், அனைத்து தரப்பினரும் வன்முறையயும் கைவிட வேண்டும் என்று சொல்வது, பழக்க தோசமாய்ப் போச்சுது. :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள், காந்திய வழியில்... குடி தண்ணிருக்காக, அகிம்சையான... அமைதிப் போராட்டத்தைத் தான் நடத்தினார்கள்.

அதுக்கு, சிங்கள ராணுவம், அப்பாவி சிங்கள மக்கள் மீது... துப்பாக்கியை நீட்டியது பயங்கரவாதம்.

அமெரிக்காவுக்கு... சிலோனிலை, என்ன நடக்குதென்றே தெரியவில்லை.

சும்மா... தொட்டதுக்கெல்லாம், அனைத்து தரப்பினரும் வன்முறையயும் கைவிட வேண்டும் என்று சொல்வது, பழக்க தோசமாய்ப் போச்சுது. :D  :lol:

இதைத்தானே முன்னரும் சொன்னார்கள். என்ன நடந்தாலும் சிறிலங்காவிற்கு என்று பொதுவான அறிக்கையாக இருக்கும் போல ....... இரண்டு விலங்குகள் சண்டை இட்டால்கூட அமெரிக்காவின் அறிக்கை இப்படித்தான் இருக்கும் . :blink::D:lol:

அமெரிக்கன் ஜனநாயகத்துக்கும் போலி ஜனநாயகத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளங்காத வரைக்கும் சதீஸ் நம்பியார் போன்ற ஈனப் பிறவிகள் கூட அமெரிக்கனை ஈசியாக ஏமாற்றிவிடுவார்கள்.

வெலிவேரிய தாக்குதல்: உள்ளக விசாரணைக்கு இராணுவம் நடவடிக்கை
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஆகஸ்ட், 2013 - 16:28 ஜிஎம்டி
மீடியா பிளேய
130802150004_lanka_violence_304x171_bbc_

சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்த விவகாரம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான இந்த விசாரணைக் குழுவை இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க நியமித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெலிவேரிய நகரில் பொதுமக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்துள்ளனர்.

சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களை பல தரப்பினரும் கண்டித்துள்ளனர்.

மக்கள் அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு உள்ள ஜனநாயக உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வெலிவேரிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்த போராட்டத்தை பொலிசாரும் இராணுவத்தினரும் அடக்க முற்பட்டபோது, போராட்டம் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையிலான மோதலாக மாறியுள்ளது.

'கத்தோலிக்கத் திருச்சபைக்குள் தாக்குதல்'
130802120300_weliweriya_church_304x171_b

'கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நுழைந்த படையினர் தாக்குதல் நடத்தினர்'

பிரதேசத்தில் கழிவுநீரைக் கொட்டுகின்ற தொழிற்சாலை ஒன்றை மூடிவிடுமாறு கொழும்பு கண்டி வீதியில் பெலும்மஹர என்ற இடத்தில் கடந்த ஒரு வாரமாகவே போராட்டம் நடந்துவந்துள்ளது.

அந்தப் போராட்டம் பொலிசாரால் அடக்கப்பட்ட நிலையிலேயே, அது வேலிவேரிய பகுதியில் பெரும் கலவரமாக மாறிப்போனது.

வெலிவேரிய பகுதிக்குச் சென்று பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர், இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

வெலிவேரியவில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை ஒன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர், அங்கு தஞ்சம் புகுந்திருந்தவர்களையும் தாக்கியதாக நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

இதேவேளை, வெலிவேரிய சம்பவத்தின் பின்னணியில் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் கும்பலே இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

'அரசியல் வெற்றி ஏதும் இல்லாமல் காத்திருக்கின்ற எதிர்க்கட்சியினர் இப்படியான சம்பவங்களைத் தூண்டிவிட்டு அரசியல் லாபம் தேட முயன்றுவருகிறார்கள்' என்று கூறினார் இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும.

இதேவேளை, பெற்றோல் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீதே தாம் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/08/130802_weliveriyaattack.shtml

முள்ளிவாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த மக்களை சுட்ட ஞாபகத்தில் வெலிவேரியாவிலும் மக்களை சுட்டுவிட்டனர் -
02 ஆகஸ்ட் 2013

 

 

UNP_CI.jpg

 

 

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஞாபகத்தில் இராணுவத்தினர் வெலிவேரியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ருவான் விஜயரட்ன ஆகியோர் இன்று முற்பகல் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினர். காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பொதுமக்களையும் பார்வையிட்டனர்.

 

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் வீட்டுக்கும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் சென்று ஆறுதல் கூறினர். அங்கு நின்ற  மக்களை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க குழவினர் வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் செயற்பட்ட முறையை நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காண முடிந்தது என்று கூறினர். இராணுவத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் வலியுறுத்தினார் என குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94770/language/ta-IN/article.aspx

வெடி கொளுத்திய சிங்களவங்களுக்கு இப்ப வெடி கிடைக்குது!!

வெடி கொளுத்திய சிங்களவங்களுக்கு இப்ப வெடி கிடைக்குது!!

 

நல்ல கமெண்ட்!

 

அணில் மாத்தையா இன்னொருதடவை பாங்கி மீனிடம் ஓடிச்சென்று சுட்டவர்களை காப்பாற்றலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொல்லும் போது வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டம் செய்து சிங்கள இனவெறி இராணுவத்திற்கு வெறியாக ஊட்டியவர்கள்.. அதன் போது கொழும்பில் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தோர்.. சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தை பயங்கரவாத அழிப்பு என்ற போர்வையால் மூடி அழகு பார்த்தவர்கள்.. இன்னும் அனுபவிப்பார்கள்.

 

சிங்களவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.. இராணுவம் என்பது கூலிக்கு பதவிக்கு மாரடிக்கும்.. அரச இயந்திரமாக உள்ளதே அன்றி சிங்கள மக்களின் உணர்வுகளை உள்வாங்கியுள்ள ஒன்றல்ல. அப்படி இருந்திருந்தால்.. 1972 இலும் 1987/88 இலும் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் சாவுக்கு இது காரணமாக இருந்திருக்காது. :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் போர்நெறிக்கு மாறாக கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்த அமெரிக்கா இப்போது ஒருவர் இறந்ததுக்கு இந்தக் குதிகுதிப்பது ஏன்?ஏன்?ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.