Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தில் நாய் வளர்ப்போர் கவனம் !!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் நாய் வளர்ப்போரின்.. நாய்கள் மற்றவர்களைக் கடித்துக் கொன்றாலோ.. காயப்படுத்தினாலோ அதி உச்ச தண்டனையாக இரண்டு வருட சிறை என்றிருந்த நிலையை.. இங்கிலாந்து அரசு.. அதி உச்ச தண்டனையாக ஆயுள் தண்டனை என்று மாற்றி அமைக்க உள்ளது.

 

இங்கிலாந்தில் கடி நாய்களின்.. நாய் கடியில் பலர் இறந்தும்.. காயப்பட்டும் வருகின்றனர். குறிப்பாக தபால் விநியோகம் செய்யும் ஆண்கள்.. பெண்கள் அடிக்கடி.. இவற்றின் இலக்குகளாகி வருகின்றனர்.

 

மேலும் சிறுவர்கள் சிறுமியரும்.. இவற்றால் பாதிக்கப்படுவது அதிகம்.

 

_69131580_dog_bites_464.gif

 

ஆகவே பந்தாவுக்கு கடி நாயோடு வீதி உலா வரும் நாய் வளர்ப்போர் கவனமாக இருக்கவும்.

 

Killer dogs' owners in England and Wales could face life in prison.

 

_62373536_dangerousdog.jpg
 
 
Campaigners say existing laws on dangerous dogs are not working properly

 

(இதை ஏன் நாங்க ரெம்ப கவனமா பதியுறம் என்றால்.. எங்களுக்கு இந்தக் கடி நாய்களுக்கு ரெம்பப் பயம் சார். :lol: )

 

http://www.bbc.co.uk/news/uk-23578561

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப  இனி

எதிரி  எவராவது இருந்தால்

அவரது நாயிடம்  காலைக்கொடுத்தால்   சரி... :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப  இனி

எதிரி  எவராவது இருந்தால்

அவரது நாயிடம்  காலைக்கொடுத்தால்   சரி... :D

விசுகர், அருமையான யோசனை! :icon_idea:

 

காலோடை கதை முடிஞ்சால் நல்லம் தான்! ஆனால், இந்த நாய் வகைகள், கொஞ்சம் மேலையும் போகும்! பரவாயில்லையா? :o

 

எவ்வளவு 'கொஞ்சம்' எண்டு சொல்லுறது கஸ்டம்! ஆனால், இந்த வகை நாய்கள், இரத்தத்தைக் கண்டால், பொதுவாகக் கரை கண்டபிறகு தான், நிப்பாட்டும்! :rolleyes:

திருத்தம்= இரண்டு தடவைகள் பதியப்பட்டு விட்டது!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

 

விசுகர், அருமையான யோசனை! :icon_idea:

 

காலோடை கதை முடிஞ்சால் நல்லம் தான்! ஆனால், இந்த நாய் வகைகள், கொஞ்சம் மேலையும் போகும்! பரவாயில்லையா? :o

 

எவ்வளவு 'கொஞ்சம்' எண்டு சொல்லுறது கஸ்டம்! ஆனால், இந்த வகை நாய்கள், இரத்தத்தைக் கண்டால், பொதுவாகக் கரை கண்டபிறகு தான், நிப்பாட்டும்! :rolleyes:

 

 

 

என்னங்க  நீங்க???

இவ்வளவு  தூரம் தமிழர்களைப்புரிந்து கொள்ளாதவரா???

 

எமக்கு 2 கண்ணும் போனாலும  பரவாயில்லை

எதிரிக்கு ஒரு  கண்ணாவது போகணும்  என்பது தானே  எமது இலட்சிய வரிகள்....

(ஆனால் நீங்கள்  அதில்  கைவைத்தது கொஞ்சம் அதிர  வைத்துவிட்டது :lol:  :D )

  • கருத்துக்கள உறவுகள்

2005 ம் ஆண்டில் இருந்து 15 பேர் நாய்களினால் தாக்கப்பட்டு இறந்து போய் உள்ளனர்.

 

பணக் கஷ்டத்தில் இருக்கும், நண்பர்களிடேயே, 'ரோட்டில நாயோட யாரும் வந்தால், காலை கொடு. கடித்தால் £500 கிடைக்கும்' என நகைச்சுவையாக சொல்வதுண்டு.

 

(இது உண்மைதான், எனினும் காலைக் கொண்டு போய் சவட்டி, நெளித்துக் கொண்டு நாயின் மேல் காதல் பார்வை பார்க்காதீர்கள். கடிக்கக் கூடாத இடத்தில் கடித்து வைத்தால், முதலுக்கே மோசம்.)

  • கருத்துக்கள உறவுகள்

நாய் கடித்து தப்பித் தவறி நாய் இறந்து விட்டால் நாய் முதலாளிக்கு நஷ்டஈடு தரவேண்டி வரும் . கவனமப்பு !! :lol:

1148796_352724648193928_1634115129_n.jpg

 

மாடு மேச்சா கேவலமா பாக்குறாங்க ...

நாய் மேச்சா உசத்தியா பாக்குறாங்க 

என்னடா உலகம் இது ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் ஊரிலை இருக்கேக்கை கப்பாத்து எடுத்த நாயளையும் தாண்டி எத்தினை அலுவல் பாத்திருப்பம்......சின்னத்தம்பி வாத்தியார் தனக்கு ஆறும் பொம்புளைப்பிள்ளையள் எண்டு போட்டு காவலுக்கு மூண்டு கடிநாய் வளர்த்தவர். இதுக்கை தார்ப்பீப்பா தகரவேலி வேறை.......இது எல்லாத்தையும் தாண்டி.........வாத்தி சின்னதம்பியின்ரை மூண்டாவதை ஒருத்தன் தாயாக்கியிருக்கிறான் எண்டால் எங்கடை கடிநாயளின்ரை லட்சணத்தை பாருங்கோவன்....

1148796_352724648193928_1634115129_n.jpg

 

மாடு மேச்சா கேவலமா பாக்குறாங்க ...

நாய் மேச்சா உசத்தியா பாக்குறாங்க 

என்னடா உலகம் இது ........

சுண்டலைப்போல உங்களுக்கும் சேம் கவலை ...............நியாயமான கவலை பாஸ் .... :D  :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1148796_352724648193928_1634115129_n.jpg

 

மாடு மேச்சா கேவலமா பாக்குறாங்க ...

நாய் மேச்சா உசத்தியா பாக்குறாங்க 

என்னடா உலகம் இது ........

 

 

மாடு மேய்க்கிறது காசில்லாதவின் தொழில் என்று யார் சொன்னது. ஒரு மாட்டின் விலை.. நாயின் விலையை விட அதிகம்.

 

மேலும் நாய் வளர்த்தால்.. பலன்.. என்று பெரிசா ஒன்றும் இல்லை. நாய் க்கு தீனியும்.. அதன் சிச்சா.. சுச்சாவை அள்ளுவதும் அகற்றுவதுமே தான் பலன். அத்தோடு.. உண்ணி.. தெள்ளு.. குட்டை தொல்லை வேற. விசர் பிடிக்காமல் இருக்க  ஊசி வேற போடனும். விருந்தினர் வாறது என்றால் அதனைப் பிடிச்சு வைச்சிருக்கனும். அது ஆத்திரத்தில நம்மளையே கடிச்சு வைச்சிரும். பிறகு ஆஸ்பத்திரி.. ஊசி என்று அலையனும்.

 

ஆனால் உம்பா வளர்த்தால்.. கன்றுக் குட்டி போடும். பால் தரும். கன்றுக் குட்டியோட ஓடிப் பிடிச்சு விளையாடலாம். கன்றுக் குட்டி அச்சாவா நிற்கும்...! இதில் கன்றுக் குட்டி.. நாம்பன் என்றால். (ஆண்).. அதுக்கு பல்வேறு பயிற்சி கொடுப்பினம். மாட்டு வண்டில் ஓட்டப் போட்டியில ஓடும்.. எங்களை யாரும் அடிக்க வந்தால் முட்டும்... அதுமட்டுமல்ல.. இறைச்சிக்கு என்று விற்க விரும்பிறவை.. (வளர்ப்பு மாடுகளை விற்க மனசே வராது..!) நல்ல காசுக்கு விற்கலாம்...! சுத்த பத்தமா வளர்த்தா.. உண்ணி.. தெள்ளு தொல்லை இல்லை. நாய் மாதிரி இல்லாமல் ஊர் மேயப் போவதை தடுப்பது இலகு. மேயப் போனாலும் புல்லைத் தின்றிட்டு.. நேரா காலத்துக்கு வீட்டுக்கு வருங்கள்...! வெற்றுக் காணிக்க கட்டிவிட்டால் அது புல்லைத் தின்று வளரும். அப்பப்ப.. நல்ல தீனி வைச்சால் போதும்..! மாட்டு வைத்தியரட்டச் சொன்னால் அவர் வந்து பார்த்து அவசியமுன்னா ஊசியைப் போடுவார். இல்லைன்னா அதுவும் தேவையில்லை..! என்ன உம்பா வளர்க்க கொஞ்சம் பெரிய இடம் அவசியம்..!

 

எங்க வீட்ட நாய் மட்டும். அம்மம்மா வீட்ட நாயும் உம்பாவும். அம்மம்மா.. சொந்த தயாரிப்பு பசு நெய் அதுஇதென்று கொண்டு வந்து தருவா. நாங்க கடையில வாங்கினதை தான் அவாக்குக் கொடுக்கிறது பரிசா. இப்ப புரிஞ்சுக்கோங்க.. எது திறமுன்னு..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இதில் கன்றுக் குட்டி.. நாகு என்றால். (ஆண்)..

 

நெடுக்கர்,

 

நாகு என்றால். ஆண்..  அல்ல, பெண்.

 

நாம்பன் தான் ஆண்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

 

நாகு என்றால். ஆண்..  அல்ல, பெண்.

 

நாம்பன் தான் ஆண்

 

 

சிறிய குழப்பம்.

 

தவறைச் சுட்டிக்காட்டி திருத்த உதவியமைக்கு நன்றிகள் முனி. :)

 

  • கருத்துக்கள உறவுகள்

1148796_352724648193928_1634115129_n.jpg

 

மாடு மேச்சா கேவலமா பாக்குறாங்க ...

நாய் மேச்சா உசத்தியா பாக்குறாங்க 

என்னடா உலகம் இது ........

மாடு மேத்தால் சிலருக்கு சாப்பாடு கிடைக்கும், நாய் மேத்தால் சிலருக்கு கொழுப்பு குறையும் அதுதான் வித்தியாசம்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

பெத்த பிள்ளைகள் சில வேளைகளில் தொல்லை தரும்.  வளர்க்கும் மிருகங்கள் எப்பவும் பாசத்தையும் வருமானத்தையுமே தரும்.

எட்டி உதைத்த போதிலும் கூட !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.