Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியம் எனப்படுவது இனமான உணர்ச்சியா? நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஷ்டி எனலாம். அதுபோலவே தமிழர்கள் மத்தியில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு வார்த்தை தேசியம் எனலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் இரண்டு கட்சிகளின் பெயர்களில் தேசியம் என்ற வார்த்தை உண்டு. இப்பொழுது மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும் தேசியம் என்ற வார்த்தை அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்றது. இதில் கூட்டமைப்பில் உள்ள தீவிரமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் பற்றிக் கதைக்கிறார்கள். மிதமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் கதைக்கின்றார்கள்.குறிப்பாக இணையத் தளப் பிரசாரங்களில் ''தேசியம் வெல்ல வாக்களிப்போம்' என்றெல்லாம் சுலோகங்கள் வருகின்றன.

சில மாதங்களிற்கு முன்பு எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவு நாள் கொண்டாடப்பட்டபோது யாழ். நகரில் அவருடைய நினைவுத்தூபியைச் சுற்றியிருக்கும் மதிலில் கட்டப்பட்டிருந்த ஒரு பதாகையில் ''தேசியத் தந்தை' என்று எழுதப்பட்டிருந்தது. 

 

எனக்குத் தெரிந்த சில இளம் ஊடகவியலாளர்களிடம் ஒரு நாள் கேட்டேன்,  உங்களுடைய ஊடகக் கொள்கை எது என்று. தேசியத்தைப் பாதுகாத்தால் சரி என்று சொன்னார்கள். நான் தொடர்ந்து கேட்டேன், ''தேசியம்' என்றால் என்ன? என்று. அவர்களால் துலக்கமான பதிலைச் சொல்ல முடியவில்லை.

அவர்கள் மட்டுமல்ல இன்று தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தீவிர தேசியவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் பலரிடமும் இக்கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். தேசியம் என்றால் என்ன? என்று. அவர்கள் கூறிய பதில்கள் வருமாறு........ ஒரு பகுதியினர் சொன்னார்கள் அது ஒரு இனமான உணர்ச்சி என்று.

 

இன்னொரு பகுதியினர் சொன்னார்கள், அது அடக்குமுறைக்கு எதிரான இன எதிர்ப்புணர்ச்சி என்று.

 

வேறு சிலர் சொன்னார்கள் அது தம்மை ஒரு தேசமாகக் கட்டமைத்துக் கொள்ள முற்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் திரட்டப்பட்ட உணர்ச்சி என்று. 

மேற்கண்ட பதில்களனைத்தையும் தொகுத்து அவற்றின் சாராம்சத்தின் அடிப்படையிற் கூறின் தேசியம் என்று அவர்கள் விளங்கி வைத்திருப்பது இனமானம் சார்ந்த ஒரு கூட்டு எதிர்ப்புணர்ச்சிதான். இது சரியா? அல்லது தேசியம் எனப்படுவது  அதைவிட அழமானதா?

 

தேசியம் எனப்படுவது அதைவிட ஆழமானதுதான். அது அதிக பட்சம் அறிவுபூர்வமானது. அதைவிடக் குறைந்த அளவே உணர்சசிகரமானது. ஆனால், பிரயோக நிலையில் அது அதிகபட்சம் உணர்ச்சிகரமானதாகவே காணப்படுகிறது. இக்கட்டுரையானது தேசியம் தொடர்பான புலமைசார் கோட்பாடுகளிற்குள் அதிகம் இறங்கப்போவதில்லை. ஒரு வாரப் பத்திரிகை அதற்குரிய இடமுமல்ல. பதிலாக, தேசியத்தை அதன் பிரயோக வடிவத்தில் வியாக்கியானம் செய்யும் அல்லது வரை விலக்கணம் செய்யும் ஒரு முயற்சியே இது. தூயதேசியம் பற்றியல்ல பிரயோக தேசியம் பற்றியே இங்கு உரையாடப்படுகின்றது. ஒரு தொடர் விவாதத்திற்கான தொடக்கப்புள்ளியாக இதை எடுத்துக் கொள்ளலாம். சரி. தேசியம் என்றால் என்ன?

 

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுப் பிரக்ஞை ஆகும்.

எந்தவொரு பொது அடையாளத்தின் நிமித்தம் ஒரு மக்கள் கூட்டம் பெருமைப்படுகின்றதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பேரால் ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு அரசியற் சக்தியாகத் திரட்டக் கூடியதாக உள்ளதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பெயரால் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகின்றதோ அல்லது அவமதிக்கப்படுகின்றதோ அந்த ஒரு அல்லது பல பொது அடையாளங்களின் பாற்பட்ட ஒரு கூட்டுப் பிரக்ஞையே தேசியம் என்பதாக பிரயோக நிலையில் காணப்படுகின்றது.

19ஆம் நூற்றாண்டின் மேற்கத்தையே நாகரிகத்தை அங்கு தோன்றிய தேசிய அலைகளே பெரிதும் வடிவமைத்தன.

கைத்தொழில் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட தொடர் வளர்ச்சிகள் காரணமாக போக்குவரத்துத் துறையில் வசதிகள் பெருகின. இதனால் வாழ்க்கை இலகுவாக்கப்பட்டது. சமுகம் ஒன்று திரட்டப்பட்டது. அச்சு இயந்திரத்தின் வருகையோடு அறிவும் தகவல்களும் முன்னெப்பொழுதையும்விட அதிகரித்த அளவிலும் அதிகரித்த வேகத்திலும் பரிமாறப்பட்டன,  மக்கள் மயப்பட்டன. இவ்விதமாக தகவலும், அறிவும் மக்கள் மயப்பட்டு வந்த ஒரு பின்னணியில் சமூகமானது விரைவாக ஒன்று திரட்டப்பட்டு, சமூக ஊடாட்டம் முன்னெப்பொழுதையும் விட வேகமாக நிகழ்ந்தபோது அங்கெல்லாம் தேசிய அலைகள் எழுச்சி பெறலாயின. அதாவது மக்களின் கூட்டுப் பிரக்ஞையானது விழிப்படைந்து சிலிர்த்தெழலாயிற்று.

 

அமெரிக்க சுதந்திரப் போர், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகத் தோன்றிய மூன்றாவது நெப்போலியனின் ஆட்சிக் காலம், இத்தாலியின் ஒருங்கிணைப்பு, ஜேர்மனியின் ஒருங்கிணைப்பு மற்றும் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட நவீன மயமாக்கல் செயற்பாடுகள் போன்ற திருப்பகரமான மாற்றங்கள் எல்லாவற்றையும் அங்கு தோன்றிய தேசிய அலைகளே பெரிதும் வழி நடத்தின

.

ஒருங்கிணைக்கப்பட்ட ஜேர்மனியும், இத்தாலியும் ஐரோப்பாவில் இரு பெரும் புதிய சக்திகளாக எழுச்சி பெற்றன. இதனால் ஐரோப்பாவின் வலுச் சமநிலை குலையலாயிற்று. இருபதாம் நூற்றாண்டில் வெடித்த இரு உலகமகா யுத்தங்களிற்கு இதுவும் ஒரு காரணம். மேலும் நாஸிஸம், பாஸிஸம் போன்ற விகார வளர்ச்சிகளையும் இந்தப் பின்னணியில் வைத்து வியாக்கியானம் செய்வோரும் உண்டு. 

மேற்கைரோப்பாவானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட யுத்தங்களிற்; கூடாக தேசிய அலைகளைக் கடந்து வந்தபோதிலும்கூட அதை அதன் சரியான பொருளிற் கூறின் இரண்டாம் உலக மகா யுத்தத்துடன்தான் அது பெருமளவுக்குச் சாத்தியமாகியது எனலாம். ஆனால், கிழக்கைரோப்பாவானது அதற்கும் பல தசாப்தங்களின் பின்னரே அதைக் கடந்தது. 

மார்க்சியத்தின் எழுச்சியையடுத்து தேசிய அரசுகளைக் கடந்து சர்வதேசியம் பற்றிய ஒரு சிந்தனை பலமாகவும் தூலமாகவும் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டதற்கும் பின்னரே கிழக்கைரோப்பா அதன் தேசிய அலைகளைக் கடந்துவந்தது. கெடுபிடிப் போரின் முடிவையடுத்து கிழக்கைரோப்பாவில் தோன்றிய தேசிய அலையானது ஒருபுறம் அங்கே புதிய அரசுகளைத் தோற்றுவித்தது. மறுபுறம் மிகப்பயங்கரமான கொலைக் களங்களைத் திறந்துவிட்டது. முடிவில் நேட்டோ விரிவாக்கத்தின் பின்னணியில் அங்கு பெருமளவிற்குத் தேசிய அலைகள் கடக்கப்பட்டுவிட்டன.

ஆனால், அமெரிக்க ஐரோப்பிய அனுபவமும் ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க அனுபவங்களும் ஒன்றல்ல. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இப்பொழுதும் தேசிய உணர்ச்சிகள் எரிபற்று நிலையிற்தான் காணப்படுகின்றன.

 

ஐரோப்பாவின் தேசிய அலையெனப்படுவது அதன் இயல்பான சமூகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் திரண்டெழுந்த ஒன்றாகும். ஆனால், ஆசிய ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளின் நிலைமை அவ்வாறில்லை. இங்கெல்லாம் இருபதாம் நூற்றாண்டின் தேசிய எழுச்சிகளில் அநேகமானவை வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு எதிரானவைதான். அதாவது காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டங்கள்தான்.

ஆசிய ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க அனுபவங்களைப் பொறுத்தவரை இங்கு தோன்றிய அநேகமான தேசிய எழுச்சிகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவை அல்லது ஒடுக்குமுறைக்கு எதிரானவை என்பதற்காக முற்போக்கானவைகளாகக் கருதப்பட்டன.

 

எனினும்;, தேசிய எழுச்சிகளுக்குப் பின்னாலிருந்த கூட்டுப் பிரக்ஞைகள் யாவும் எல்லாக் களங்களிலும், எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைமைகளின்போதும் முழு அளவிற்கு முற்போக்கானவைகளாகத்தானிருந்தன என்பதற்கில்லை. ஏனெனில், ஒரு மக்கள் திரளின் கூட்டுப் பிரக்ஞையானது அதன் வேர் நிலையில் முற்போக்கானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதிற்கில்லை. அது குறிப்பிட்ட சமூகத்தின் சமூகப் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிகளின் பாற்பட்ட ஒன்றாகும். சில சமூகங்களில் அக்கூட்டுப் பிரக்ஞையானது ஒரு இனப்பிரக்ஞையாகவோ அல்லது மொழிப் பிரக்ஞையாகவோ இருந்தது. சில சமூகங்களில் அது மதப் பிரக்ஞையாகவோஅல்லது பிராந்தியப் பிரக்ஞையாகவோ காணப்பட்டது.அதன் வேர்கள் மிகப்புராதன காலமொன்றின் இருண்ட இடுக்குகளிற்குள்ளிருந்து புறப்பட்டு வரக்கூடும். அந்தந்தக் களத்திற்குரிய தனித்துவமான தேசிய சூழலுக்குட்பட்டு சில சமயங்களில் அது இனவெறியாகவோ, மொழிவெறியாகவோ அல்லது மதவெறியாகவோ அல்லது வேறெந்த வெறியுமாகவோ உருவாக முடியும். ஒரு சமூகத்தின் சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழலே அதைப் பெரிதும் தீர்மானிக்கின்றது. ''கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்' என்று மார்க்சியர்கள் கூறுவார்கள். ஆனால், கசப்பான யதார்த்தம் எதுவென்றால், கருத்து மக்களைப் பற்றிக்கொள்ள முன்பு, மதம், மொழி, இனம் போன்ற இன்னோரன்ன எப்பொழுதும் எரிபற்று நிலையிலிருக்கும் விவகாரங்கள் விரைவாக பொதுசனங்களைப் பற்றிக் கொள்கின்றன என்பதுதான். குறிப்பிட்ட சமூகத்தின் அகஜனநாயகச் சூழல் பண்பாட்டுச் செழிப்பு மற்றும் அடக்கு முறையின் தீவிரம், அனைத்துலகச் சூழல் போன்ற காரணிகள் இதைப் பெரிதும் தீர்மானிக்கின்றன. எனவே, ஒரு தேசிய பிரக்ஞையானது பொதுவாக அதன் வேரில் அதிகபட்சம் உணர்ச்சிகரமான விவகாரங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கக்கூடும்.

 

இந்த இடத்தில்தான் குறிப்பிட்ட தேசிய பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்பு அல்லது கட்சியின் முக்கியத்துவம் பற்றிக் கூறவேண்டியிருக்கிறது. பொதுசனங்கள் எப்பொழுதும் உணர்ச்சிகரமான விவகாரங்களின் பின்தான் செல்கின்றார்கள். சிக்கலான கோட்பாடுகளை விடவும் உணர்ச்சிகரமான சுலோகங்கள் அவர்களை இலகுவாகப் பற்றிக்கொள்கின்றன. இடதுசாரி அரசியலிலும் இதுவே நடந்தது. ஆனால், அந்த அரசியலுக்குத் தலைமை தாங்கும் அமைப்பும், அதன் பிரதானிகளும் கோட்பாட்டு விளக்கத்துடனிருக்க வேண்டும். கோர்பச்சேவ் ஒரு முறை சொன்னார். லெனினிற்குப் பின் சோவியத் யூனியனின் உயர் பீடத்தில் லெனின் அளவுக்கு புத்திஜீவிகள் தலைமைப் பொறுப்பிலிருக்கவில்லை என்று. இந்த உலகத்தின் அறிவனைத்தையும் கிரகித்துக் கொண்டால் தவிர ஒரு மார்க்சிஸ்டாக இருக்க முடியாது என்று மாரக்;சிய மூலவர்கள் கூறுவதுண்டு. சாதாரண ஜனங்களால் இது முடியாது. அவர்களை இயன்றளவுக்கு அரசியல் மயப்படுத்தலாம். ஆனால், தலைமைத்துவம்  கட்டாயமாக கோட்பாட்டுத் தெளிவுடன் இருக்க வேண்டும். பிளாட்டோ இதைத்தான் வேறு வார்த்தைகளில் ''ஞானிகளே தலைவர்களாக இருக்க வேண்டும்' என்றார்.

 

எனவே, ஒரு சமூகத்தின் தேசியப் பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்பானது குறிப்பிட்ட கூட்டுப் பிரக்ஞை அதன் வேர் நிலையில் எவ்வளவுதான் பிற்போக்கானதாக காணப்பட்டாலும் அதை முற்போக்கானதாக பண்பு மாற்றம் செய்ய வேண்டும். அதாவது கிழிருந்து மேலெழும் உணர்ச்சிகரமான அடி நிலைத் தேசிய உணர்வை மேலிருந்து கிழிறக்கப்படும் ஜனநாயக ஒளியின் மூலம் இருள் நீக்கம் செய்ய வேண்டும். வேர் நிலை உணர்ச்சிகரமான மூலக் கூறுகளை சாத்தியமான அளவு ஜனநாயக உள்ளடக்கத்தால் பிரதியீடு செய்யவேண்டும். அதாவது, மேற்கத்தைய அறிஞர்கள் கூறுவதுபோல், ''தேசியததின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும்'. இதை இன்னும் அழுத்தமாக செய்முறை விளக்கமாகக் கூறின் ஒரு சமூகத்தின் தேசிய அரசியலை முன்னெடுக்கும் அமைப்பு அல்லது கட்சியானது அந்த அரசியலின் அடித்தளம் ஜனநாயகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

எந்தவொரு தேசியப் பிரக்ஞையும் அதன் வேரில் இனமானம், இனத்தூய்மைவாதம்,இன மேலாண்மை வாதம், இனவீரம், இன எதிர்ப்பு, மொழித்தூய்மை, மதத் தூய்மை, சாதி அசமத்துவம், பால்அசமத்துவம் போன்ற இன்னோரன்ன உணர்ச்சிகரமான அம்சங்களின் சிக்கலான கலவையாகவே காணப்படுவதுண்டு.

 

ஆனால், இந்த உணர்ச்சிகரமான அம்சங்களை அறிவினால் அதாவது சாத்தியமான அளவு ஜனநாயகத்தால் பிரதியீடு செய்ய வேண்டிய பொறுப்பு, அத்தேசியப் பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்புக்கே உரியது. நோய்க்கூறான அம்சங்களை ஒரு ஜனநாயக இடை ஊடாட்டப் பரப்பிற் கூடாகத்தான் கடந்து செல்ல முடியும்.

 

அத்தகைய ஜனநாயகத்தை உள்ளடக்கமாகப் பெற்ற ஒரு தேசிய அரசியல்தான் அதன் ஒரு கட்ட முதிர்ச்சிக்குப் பின் சர்வதேசியமாக விரியும்.  இல்லையெனில் அது தானே தன்னுள் உட்சுருங்கும் குறுத்தேசிய வாதமாகத் தறுக்கணித்துப்போய்விடும்.

 

இதெல்லாம் குறிப்பிட்ட தேசிய உணர்சசிக்குத் தலைமை தாங்கும் அமைப்பு அல்லது கட்சியின் ஜனநாயக உள்ளடக்கத்திற்தான் பெருமளவுக்குத் தங்கியிருக்கின்றது. அந்தக் கட்சியிடம் இல்லாதது அது முன்னெடுக்கும் அரசியலிலும் இருக்காது.

 

இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே தமிழ்த் தேசியத்தையும் பார்க்க வேண்டும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் இறந்த காலத்தையும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.  அதிலிருந்து பாடங்களைக் கற்கத் துணிய வேண்டும்.

 

தேசியத்திற்கும் ஜனநாயகத்திற்குமிடையிலான பிரிக்கப்பட முடியாத வேர் நிலை உறவு குறித்து தமிழில் மிக அரிதாகவே நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் 1999இல் மு. திருநாவுக்கரசு எழுதிய நூலைத் தமிழ்த் தேசியர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

 

''தேசியமும் ஜனநாயகமும்' என்ற அந்த நூல் ஈழத்தமிழ் வாசகர்களை அதிகம் வந்தடையவில்லை என்றே தெரிகிறது. அந்நூலில் மு. திருநாவுக்கரசு பின்வருமாறு கூறுகிறார்.

 

''தேசியம் என்பது வரலாற்றில் ஒரு புது அம்சமாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழத்தொடங்கியது. அதாவது இனம் பழையது அது முன்னரே இருந்தது. மொழி பழையது அதுவும் முன்னரே இருந்தது.  அவ்வாறு முன்னரே பழமையதானதாயிருந்த அந்த இனத்தோடு அல்லது மொழியோடு ஜனநாயகம் எனும் புதிய அம்சம் சேரும்போது அது தேசியம் என்றாயிற்று. அதலால் தேசியம் என்பது ஜனநாயகம் என்னும் புதிய அம்சத்தின் வரவைத் தன் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர வரலாற்று அம்சமாகும். ஜனநாயகத்திற்கான பயணத்தில் தேசியவாதம் ஒரு கட்டம் ஆகும். தேசிய வாதமானது ஜனநாயகத்தை அடைவதற்கான ஒரு வடிவமும் ஜனநாயகத்தைக் காவிச் செல்லும் ஒரு வாகனமும் ஆகும்' 

 

எனவே, தேசியம் தொடர்பில் உணர்ச்சிகரமான ஒரு சித்திரத்தை வரைந்து வைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் குறிப்பாக, அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் போன்ற அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்பினராகக் காணப்படும் அனைவரும் தமிழ்த் தேசியம் தொடர்பில் அதிக பட்சம் அறிவுபூர்வமான விவாதக் களங்களைத் திறக்க முன்வர வேண்டும். அவை விவாதக் களங்களாகவும், அதேசமயம் பிரேத பரிசோதனைக் களங்களாகவுமிருக்க வேண்டும். ஏனெனில், இறந்த காலத்தை வெட்டித் திறந்து பார்க்கவில்லை என்றால், இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்கவில்லையென்றால் தமிழ்த் தேசியம் எனப்படுவது செயலுக்குப் போகத் திராணியற்ற நடிப்புச் சுதேசிகள் பயன்படுத்தும் வெற்றுச் சுலோகமாகச் சுருங்கிப்போய்விடும். 

 

15-08-2013.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95398/language/ta-IN/--.aspx

 

 

தேசியத்திற்கும் ஜனநாயகத்திற்குமிடையிலான பிரிக்கப்பட முடியாத வேர் நிலை உறவு குறித்து தமிழில் மிக அரிதாகவே நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் 1999இல் மு. திருநாவுக்கரசு எழுதிய நூலைத் தமிழ்த் தேசியர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

 

''தேசியமும் ஜனநாயகமும்' என்ற அந்த நூல் ஈழத்தமிழ் வாசகர்களை அதிகம் வந்தடையவில்லை என்றே தெரிகிறது. அந்நூலில் மு. திருநாவுக்கரசு பின்வருமாறு கூறுகிறார்.

 

''தேசியம் என்பது வரலாற்றில் ஒரு புது அம்சமாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழத்தொடங்கியது. அதாவது இனம் பழையது அது முன்னரே இருந்தது. மொழி பழையது அதுவும் முன்னரே இருந்தது.  அவ்வாறு முன்னரே பழமையதானதாயிருந்த அந்த இனத்தோடு அல்லது மொழியோடு ஜனநாயகம் எனும் புதிய அம்சம் சேரும்போது அது தேசியம் என்றாயிற்று. அதலால் தேசியம் என்பது ஜனநாயகம் என்னும் புதிய அம்சத்தின் வரவைத் தன் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர வரலாற்று அம்சமாகும். ஜனநாயகத்திற்கான பயணத்தில் தேசியவாதம் ஒரு கட்டம் ஆகும். தேசிய வாதமானது ஜனநாயகத்தை அடைவதற்கான ஒரு வடிவமும் ஜனநாயகத்தைக் காவிச் செல்லும் ஒரு வாகனமும் ஆகும்' 

 

எனவே, தேசியம் தொடர்பில் உணர்ச்சிகரமான ஒரு சித்திரத்தை வரைந்து வைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் குறிப்பாக, அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் போன்ற அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்பினராகக் காணப்படும் அனைவரும் தமிழ்த் தேசியம் தொடர்பில் அதிக பட்சம் அறிவுபூர்வமான விவாதக் களங்களைத் திறக்க முன்வர வேண்டும். அவை விவாதக் களங்களாகவும், அதேசமயம் பிரேத பரிசோதனைக் களங்களாகவுமிருக்க வேண்டும். ஏனெனில், இறந்த காலத்தை வெட்டித் திறந்து பார்க்கவில்லை என்றால், இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்கவில்லையென்றால் தமிழ்த் தேசியம் எனப்படுவது செயலுக்குப் போகத் திராணியற்ற நடிப்புச் சுதேசிகள் பயன்படுத்தும் வெற்றுச் சுலோகமாகச் சுருங்கிப்போய்விடும். 

 

15-08-2013.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95398/language/ta-IN/--.aspx

 

 

மிகவும் அற்புதமான வரிகள். தற்போதை காலத்திற்கு மிகவும் அவசியமானானது. துதி பாடுவதே தேசியம் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை. எம்மை நாம் விட்ட தவறுகளை திருத்தி கொள்ள எமது தவறுகளை விவாதிப்பது மிகவும் முக்கியமானது. இவ்வாறான விவாதங்களில் வரும் கருத்து வேறுபாடுகளை சகிப்புதன்மையுடன் ஏற்றுகொண்டு எமது சமூகத்தை புதிய காலத்திற்கு நகர்த்தி செல்ல தலைமை வகிப்பவர்கள் தமிழ் அறிவுஜீவிகள்(புத்திஜீவிகள் அல்ல) முன்வரவேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அற்புதமான வரிகள். தற்போதை காலத்திற்கு மிகவும் அவசியமானானது. துதி பாடுவதே தேசியம் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை. எம்மை நாம் விட்ட தவறுகளை திருத்தி கொள்ள எமது தவறுகளை விவாதிப்பது மிகவும் முக்கியமானது. இவ்வாறான விவாதங்களில் வரும் கருத்து வேறுபாடுகளை சகிப்புதன்மையுடன் ஏற்றுகொண்டு எமது சமூகத்தை புதிய காலத்திற்கு நகர்த்தி செல்ல தலைமை வகிப்பவர்கள் தமிழ் அறிவுஜீவிகள்(புத்திஜீவிகள் அல்ல) முன்வரவேண்டும்.

 

 

 

பேசுபவர்கள் 4  வருடமாகப்பேசியது மட்டும் தான்

எந்தவித செயற்பாடுகளும்  இதுவரை ஒரு அங்குலமேனும் முன்னேறவில்லை

செயற்பாட்டாளர்களே  தேவை

அதை  அறிவீரோ?

ஏற்றுக்கொண்டு

செயற்பாட்டுத்தளங்களில்  மட்டுமே பேச்சுக்கள்  அவசியம்

வெறும் வாய் மெல்லுதலில் இல்லை.............. :(  :(  :(

பேசுபவர்கள் 4  வருடமாகப்பேசியது மட்டும் தான்

எந்தவித செயற்பாடுகளும்  இதுவரை ஒரு அங்குலமேனும் முன்னேறவில்லை

செயற்பாட்டாளர்களே  தேவை

அதை  அறிவீரோ?

ஏற்றுக்கொண்டு

செயற்பாட்டுத்தளங்களில்  மட்டுமே பேச்சுக்கள்  அவசியம்

வெறும் வாய் மெல்லுதலில் இல்லை.............. :(  :(  :(

 

4 வருடங்களாக அல்ல அதற்கு முன்பு 25 வருடங்களாக சகல ஒத்தாசைகளும் பண உதவியும் செய்தவர்கள் நாம். அதை அறிவீரோ?

  • கருத்துக்கள உறவுகள்

4 வருடங்களாக அல்ல அதற்கு முன்பு 25 வருடங்களாக சகல ஒத்தாசைகளும் பண உதவியும் செய்தவர்கள் நாம். அதை அறிவீரோ?

 

அப்படியா?

நல்லது

உங்கள் கருத்துக்களை அதனூடு ஆரம்பியுங்கள்

 

அந்த 25  வருடத்திலிருந்தே எதுவும்  தொடரணும்

அது இல்லாது எதுவும்  இல்லை

அந்த அடிப்படையில்  தான் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கலாம்

பேசலாம்

தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி  கருத்துக்கு

நான் என்ன தவறாக கூறினேன் எமது தவறுகளுள் ஆராயபட்டு திருத்தப்படவேண்டும் என்று மட்டுமே கூறினேன். எமது என்பது என்னையும் சேர்த்து தானே. அதற்கு தங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன தவறாக கூறினேன் எமது தவறுகளுள் ஆராயபட்டு திருத்தப்படவேண்டும் என்று மட்டுமே கூறினேன். எமது என்பது என்னையும் சேர்த்து தானே. அதற்கு தங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்.

 

இதில்  எங்கே  ஐயா  கோபம்  இருக்கிறது

ஐனநாயகவாதிகள் பேசிப்பேசியே எம்மை  ஏமாற்றியதால்

பேசுவது என்றாலே கொஞ்சம் அலர்சி  எனக்கு

அதுவாக  இருக்கலாம்

மற்றும்படி  உங்கள்  கருத்தில்  எந்த கோபமுமில்லை.

தொடர்ந்து எழுதுங்கள்

தவறுகளைச்சுட்டிக்காட்டுங்கள்

(25  வருடமாக தவறான பாதையில்  நடந்தோம் என்று மட்டும் சொல்லாதீர்கள்)

25 வருடங்களாக தவறான பாதையில் நடந்தோம் என்று கூறவில்லை. தவறுகளும் நிறையவே செய்துள்ளோம் என்பதை நல்மனத்துடன் ஏற்றுக்கொள்வோம்.

25 வருடங்களாக தவறான பாதையில் நடந்தோம் என்று கூறவில்லை. தவறுகளும் நிறையவே செய்துள்ளோம் என்பதை நல்மனத்துடன் ஏற்றுக்கொள்வோம்.

 

என்ன தவறை செய்தீர்கள்...??? 

4 வருடங்களாக அல்ல அதற்கு முன்பு 25 வருடங்களாக சகல ஒத்தாசைகளும் பண உதவியும் செய்தவர்கள் நாம். அதை அறிவீரோ?

 

25 வருசமாக என்ன ஒத்தாசை செய்தீர்கள்...???   

என்ன தவறை செய்தீர்கள்...??? 

 

25 வருசமாக என்ன ஒத்தாசை செய்தீர்கள்...???   

 

ஒரு வாசகன் என்று ரீதியில் கருத்து களத்தில் இணைக்கபட்ட ஒரு கட்டுரையில் எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டு காட்டி அதன் யதாரத்தத்தை அது தொடர்பான எனது கருத்தை கூறியிருந்தேன். இக்கருத்தில் தவறு இருந்தால் அதற்கு எதிர்கருத்தை காரணத்துடன் கூறியிருக்க வேண்டும். நீ பங்களிப்புசெய்தாய்  என்று தனிபட்ட விபரங்களை கேட்பது கருத்து களத்தில் அழகல்ல. தெருச்சண்டையில் தான் அவ்வாறு கேட்பது வழக்கம்.  நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களை கேட்கும் உரிமையும் எனக்கு இல்லை. இது அவரவர் தனிபட்ட விடயம். இது மனித பண்பாடு மட்டுமல்ல தமிழ் பண்பாடும் அதுதான் என்று நினைக்கிறேன்.

ஒரு வாசகன் என்று ரீதியில் கருத்து களத்தில் இணைக்கபட்ட ஒரு கட்டுரையில் எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டு காட்டி அதன் யதாரத்தத்தை அது தொடர்பான எனது கருத்தை கூறியிருந்தேன். இக்கருத்தில் தவறு இருந்தால் அதற்கு எதிர்கருத்தை காரணத்துடன் கூறியிருக்க வேண்டும். நீ பங்களிப்புசெய்தாய்  என்று தனிபட்ட விபரங்களை கேட்பது கருத்து களத்தில் அழகல்ல. தெருச்சண்டையில் தான் அவ்வாறு கேட்பது வழக்கம்.  நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களை கேட்கும் உரிமையும் எனக்கு இல்லை. இது அவரவர் தனிபட்ட விடயம். இது மனித பண்பாடு மட்டுமல்ல தமிழ் பண்பாடும் அதுதான் என்று நினைக்கிறேன்.

நீங்கள் மொட்டையாக செய்த வியாக்கியானத்தையே விளக்கமாக சொல்லும் படி கேட்டிதேன்... கொந்தளிக்கும் அளவு அங்கை எதுவும் இல்லை... !

தமிழ் புரியவில்லை எண்றால் அதை தெளிவாக சொல்லவும்...

நீங்கள் மொட்டையாக செய்த வியாக்கியானத்தையே விளக்கமாக சொல்லும் படி கேட்டிதேன்... கொந்தளிக்கும் அளவு அங்கை எதுவும் இல்லை... !

தமிழ் புரியவில்லை எண்றால் அதை தெளிவாக சொல்லவும்...

 

விளக்கம்  மிகவும் தெளிவானது. கட்டுரையிலும் கூறப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் தலைமை தாங்கிய தரப்புகள் செய்த அரசியல் காத்திரமான விமர்சனத்தின் மூலம் பகுப்பாய்வு செய்யபட்டு அவர்களால் இழைக்கபட்ட தவறுகள் திருத்தி கொள்ளவேண்டும் என்றே கட்டுரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதை ஆமோதித்தே கருத்து எழுதினேன். கட்டுரையையை எழுதியவரும் யுத்தகாலத்தில் வன்னியில் இன்னல்களை அனுபவித்த மதிப்பு மிக்க ஆய்வாளராகும். காத்திரமான விமர்சனம் அதன்மூலமான பகுப்பாய்பவு என்பது உலக வரலாற்றில் சாதாரணமானது.

 

பேசுபவர்கள் 4  வருடமாகப்பேசியது மட்டும் தான்

எந்தவித செயற்பாடுகளும்  இதுவரை ஒரு அங்குலமேனும் முன்னேறவில்லை

செயற்பாட்டாளர்களே  தேவை

அதை  அறிவீரோ?

ஏற்றுக்கொண்டு

செயற்பாட்டுத்தளங்களில்  மட்டுமே பேச்சுக்கள்  அவசியம்

வெறும் வாய் மெல்லுதலில் இல்லை.............. :(  :(  :(

மிக யதார்த்தமான ஒரு கட்டுரை .

கடந்த நாலு வருடங்களும் நடந்தது எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை போலிருக்கு ,

உங்களுக்கு நாட்டில்  நாலு பேர்கள் சாகவேண்டும் நீங்கள் அதை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் .இதை விட வேறு எதுவும் தெரியாது .

போரின் ரணம் அறியததாதல் வரும் சிந்தனை உது .எமக்கு அரசியல் தீர்வு கிடைக்காவிட்டாலும் போர் என்ற ஒன்று இல்லாமல் அதனால் மரணம்  என்ற ஒன்று இல்லாமல் மக்கள் இருப்பதே மிக பெரிய நிம்மதிதான் .

கடந்த நாலு வருடங்களும் புலம் பெயர்ந்தவர்கள் ஊருக்கு போன எண்ணிக்கையும் நாட்டில் நடக்கும் திருவிழாக்களுமே அதற்கு சாட்சி .

நீங்கள் திருவிழாக்குள் ஒரு குண்டு வெடிக்காதா என ஏங்கிக்கொண்டு இருப்பது புரிகின்றது .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

Community or race of people with shared culture, traditions, history, and (usually) language, whether scattered or confined to one country. UK, for example, is a country inhabited mainly by people of four nations: the English, Irish, Scot, and Welsh. Whereas the term 'nation' emphasizes a particular group of people, 'country' emphasizes the physical dimensions and boundaries of a geographical area, and 'state' a self-governing legal and political entity.

 

 
மேலுள்ள விளக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதே.. ஐக்கிய இராச்சியத்தில் (UK), ஆங்கில, ஐரிஷ், ஸ்காட், வெல்ஷ் என்று நான்கு தேசியங்கள்.. இவை வாழும் நிலப்பரப்பின் வரையறை ஐக்கிய இராச்சியம் எனும் நாடு.
 
அதுபோல, இலங்கைத் தீவில் தமிழ், சிங்கள தேசியங்கள் உண்டு என நிறுவுவது தமிழரின் கடமை. சிங்களவர்களின் அரசியல் என்னவென்றால் எல்லோரும் சிறீலங்கன் தேசியம் என்பது.. இந்த சந்துக்குள் முஸ்லீம் சகோதரர்கள் தமக்கு தனியான ஒரு தேசியம் உண்டு என்று சிந்து பாடுகிறார்கள்.. :D
  • கருத்துக்கள உறவுகள்

 

''தேசியம் என்பது வரலாற்றில் ஒரு புது அம்சமாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழத்தொடங்கியது. அதாவது இனம் பழையது அது முன்னரே இருந்தது. மொழி பழையது அதுவும் முன்னரே இருந்தது.  அவ்வாறு முன்னரே பழமையதானதாயிருந்த அந்த இனத்தோடு அல்லது மொழியோடு ஜனநாயகம் எனும் புதிய அம்சம் சேரும்போது அது தேசியம் என்றாயிற்று. அதலால் தேசியம் என்பது ஜனநாயகம் என்னும் புதிய அம்சத்தின் வரவைத் தன் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர வரலாற்று அம்சமாகும். ஜனநாயகத்திற்கான பயணத்தில் தேசியவாதம் ஒரு கட்டம் ஆகும். தேசிய வாதமானது ஜனநாயகத்தை அடைவதற்கான ஒரு வடிவமும் ஜனநாயகத்தைக் காவிச் செல்லும் ஒரு வாகனமும் ஆகும்' 

 

 

 

இது கொஞ்சம் புதுமையான விளக்கமாக உள்ளது.. இனம், மொழி இவற்றோடு ஜனநாயகம் சேரும்போது தேசியம் உருவாகிறது என்றால், சீனாவில் ஜனநாயகம் இல்லாத நிலையில் சீனர்களுக்கென்று ஒரு தேசியம் கிடையாதா?

 

இந்த மாதிரி விளக்கத்தை அமெரிக்கா சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது.. :D ஏனென்றால் ஜனநாயகம் இல்லை என்று சொல்லி படை நடவடிக்கையை இலகுவாக செய்யலாம்.. :rolleyes::D

இது கொஞ்சம் புதுமையான விளக்கமாக உள்ளது.. இனம், மொழி இவற்றோடு ஜனநாயகம் சேரும்போது தேசியம் உருவாகிறது என்றால், சீனாவில் ஜனநாயகம் இல்லாத நிலையில் சீனர்களுக்கென்று ஒரு தேசியம் கிடையாதா?

 

இந்த மாதிரி விளக்கத்தை அமெரிக்கா சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது.. :D ஏனென்றால் ஜனநாயகம் இல்லை என்று சொல்லி படை நடவடிக்கையை இலகுவாக செய்யலாம்.. :rolleyes::D

ஏம்பா...??

கனக்க விளங்கின மாதிரி இங்கை நிறைய பேர் பாராட்டு தெரிவிச்சா அதை போட்டு உடைப்பீங்களா...??

பிரித்தானியாவின் காலணித்துவத்துக்கு சார் நிலைக்காக பிரித்தானியாவால் உருவாக்க பட்ட முறைமைதான் இந்த ஜனநாயகம்... காந்தி மயிலிறகாலை வருடுற மாதிரி ஜனநாயக வளியில் பொராடினால் தானே நல்லாருக்கும்...

சரி எனக்கு ஒரு சந்தேகம்... ?? இந்தியா ஒரு பல்இன மொழி நாடு அதன் தேசிய அடையாளம் ஜனநாயகத்தின் படி என்ன...?? ஆராட்ச்சி செய்த தற்குறியை தான் கேக்கவேணும்...

பிரஞ்சு குடியரசு ஒரு சமதர்ம ( சோசலீச நாடு) அதற்கு தேசியம் இல்லை தானே..??

  • கருத்துக்கள உறவுகள்

மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியபோது பல்லினத் தேசியக் கூறுகளை இந்திய நடுவண் அரசு ஒத்துக்கொண்டு விட்டது.. அன்று நரிப்புத்தி கம்மியாக இருந்ததாலும், மலையாளிகளின் ஆதிக்கம் குறைவாக இருந்ததாலும் இது நிகழ்ந்திருக்கலாம்.. :D

இன்றைய சூழலில் என்றால் மொழிவாரி மாநிலங்களுக்கு இடமளித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.. இன்றைய மாநிலப் பிரிப்புகளுக்குள்ளும் சில உள்நோக்கங்கள் இருக்கலாம்.

வங்கப்போருக்குப் பின் தீவிரமாக "இந்திய தேசியத்தை" முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.. அமைதி மாநிலங்களில் தமிழகத்தில்தான் அது இப்போது சற்று ஆட்டம் கண்டு வருகிறது.. :unsure:

மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியபோது பல்லினத் தேசியக் கூறுகளை இந்திய நடுவண் அரசு ஒத்துக்கொண்டு விட்டது.. அன்று நரிப்புத்தி கம்மியாக இருந்ததாலும், மலையாளிகளின் ஆதிக்கம் குறைவாக இருந்ததாலும் இது நிகழ்ந்திருக்கலாம்.. :D

இன்றைய சூழலில் என்றால் மொழிவாரி மாநிலங்களுக்கு இடமளித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.. இன்றைய மாநிலப் பிரிப்புகளுக்குள்ளும் சில உள்நோக்கங்கள் இருக்கலாம்.

வங்கப்போருக்குப் பின் தீவிரமாக "இந்திய தேசியத்தை" முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.. அமைதி மாநிலங்களில் தமிழகத்தில்தான் அது இப்போது சற்று ஆட்டம் கண்டு வருகிறது.. :unsure:

இந்தியா மாநிலங்களை சில மொழி வாரியாக பிரிக்கப்பட்டு இருந்தாலும் பல மாநிலங்கள் ஹிந்தியை பேசுபவர்கள்... குறிப்பாக உத்தரப்பிரதேசம், உத்திரகண்ட் , பிஹார், மத்திய பிரதேசம் , ஜார்ச்கண்ட் போண்றன......... மேலும் வங்காள மொழி பேசும் மானிலங்கள் திரிபுராவும், மேற்கு வங்கமும் வங்காள மொழி பேசும் மானிலங்கள்...

இதிலையும் பல பல் மொழி மக்களை கொண்ட மானிலங்கள் இருக்கின்றன...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மாநிலங்களை சில மொழி வாரியாக பிரிக்கப்பட்டு இருந்தாலும் பல மாநிலங்கள் ஹிந்தியை பேசுபவர்கள்... குறிப்பாக உத்தரப்பிரதேசம், உத்திரகண்ட் , பிஹார், மத்திய பிரதேசம் , ஜார்ச்கண்ட் போண்றன......... மேலும் வங்காள மொழி பேசும் மானிலங்கள் திரிபுராவும், மேற்கு வங்கமும் வங்காள மொழி பேசும் மானிலங்கள்...

இதிலையும் பல பல் மொழி மக்களை கொண்ட மானிலங்கள் இருக்கின்றன...

 

மொழிவாரி மாநிலங்களுக்கு முன்னாலும் மாநிலங்கள் இருந்தன.. தெற்கில் சென்னையை தலைநகராகக் கொண்டு இருந்தது.. (இப்போது உள்ள தென்னக ரெயில்வே மாதிரி) பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாநோன்பிற்குப் பின்னர்தான் மொழிவாரியாகப் பிரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. அதாவது அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பதுபோல, தென்மாநிலங்கள் மொழியை அடிப்படையாகக்கொண்டு பிரிக்கப்பட்டன.. வடக்கின் சரித்திரம் எனக்கு சரியாகத் தெரியாது.. :unsure:

மொழிவாரி மாநிலங்களுக்கு முன்னாலும் மாநிலங்கள் இருந்தன.. தெற்கில் சென்னையை தலைநகராகக் கொண்டு இருந்தது.. (இப்போது உள்ள தென்னக ரெயில்வே மாதிரி) பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாநோன்பிற்குப் பின்னர்தான் மொழிவாரியாகப் பிரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. அதாவது அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பதுபோல, தென்மாநிலங்கள் மொழியை அடிப்படையாகக்கொண்டு பிரிக்கப்பட்டன.. வடக்கின் சரித்திரம் எனக்கு சரியாகத் தெரியாது.. :unsure:

எங்களுக்கு இப்ப அதுவா பிரச்சினை... ????:D

இந்திய தேசியம் என்கிறார்கள்  மேலை இருக்கும் கட்டுரைக்கு அது ஒத்து வருகுது இல்லையே  அது எப்பிடி...?? 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இப்ப அதுவா பிரச்சினை... ???? :D

இந்திய தேசியம் என்கிறார்கள்  மேலை இருக்கும் கட்டுரைக்கு அது ஒத்து வருகுது இல்லையே  அது எப்பிடி...?? 

 

ஏம்பா.. சிறீலங்கன் தேசியம் மட்டும் ஒத்துவருதா? :D அங்கையும் இடிக்குதே..

 

மேற்கில உள்ள பொதுஜனங்களுக்கு "இந்தியன்" என்று சொன்னால் எல்லாரும் ஒன்றுதான்.. அதுக்குள்ளை குஜராத்திக்கும், பிகாரிக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லத் தெரியாது.. ஆகவே அவர்களிடம் "இந்திய தேசியத்தை" விற்பது இலகு..

 

சீனாவில் பலவகையான டயலக்ட் பேசப்பட்டாலும் சீனர்கள் என்று தானே அழைக்கப்படுகிறார்கள்..

 

தேசியம் என்பது ஒரு இனத்தின் உரிமைக்கானது என நினைக்கிறேன். உங்கள் இனம் ஒரு தனித் தேசியம் என்று நீங்கள் அமைத்துக் கொள்ள விரும்பினால் (அதற்கான கூறூகள் இருக்கும் பட்சத்தில்) அதற்கான வெளியை அமைத்துக் கொடுப்பதுதான் இந்த தேசிய விளக்கம். ஆனால் ஒரு இனம் அது குறித்து கவலைப்படாவிட்டால் அது குறித்து மற்றவன் கவலைப்படப் போவதில்லை.

 

சிங்களவனோ, ஹிந்தியனோ சொல்வது, தனித்தேசியம் பற்றி கவலைப்படாதே.. நாட்டின் எல்லைகளை முதன்மைப்படுத்தும் பதத்தை தேசியம் என ஏற்றுக்கொள் என்பது..

இது கொஞ்சம் புதுமையான விளக்கமாக உள்ளது.. இனம், மொழி இவற்றோடு ஜனநாயகம் சேரும்போது தேசியம் உருவாகிறது என்றால், சீனாவில் ஜனநாயகம் இல்லாத நிலையில் சீனர்களுக்கென்று ஒரு தேசியம் கிடையாதா?

 

இந்த மாதிரி விளக்கத்தை அமெரிக்கா சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது.. :D ஏனென்றால் ஜனநாயகம் இல்லை என்று சொல்லி படை நடவடிக்கையை இலகுவாக செய்யலாம்.. :rolleyes::D

இசை அண்ணை, நீங்கள் கோடிட்டு காட்டியிருப்பது  தேசியம என்ற பண்பின்  உருவாக்கத்தின் இடம் என நினைக்கிறேன்.(மற்றது இது மு.திருநாவுக்கரசு அவர்களின் கருத்து )  கட்டுரையாளர் தேசியத்தினை பின்வருமாறு வரையறை செய்கிறார்.

எந்தவொரு பொது அடையாளத்தின் நிமித்தம் ஒரு மக்கள் கூட்டம் பெருமைப்படுகின்றதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பேரால் ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு அரசியற் சக்தியாகத் திரட்டக் கூடியதாக உள்ளதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பெயரால் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகின்றதோ அல்லது அவமதிக்கப்படுகின்றதோ அந்த ஒரு அல்லது பல பொது அடையாளங்களின் பாற்பட்ட ஒரு கூட்டுப் பிரக்ஞையே தேசியம். 

 

இது ஏற்றுக்கொள்ளகூடியதாகவும் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் யாழில்  வழைமை போல  நிலாந்தன் ஒரு எடுபிடி துரோகி என்று எழுதி விட்டிட்டு போறது எதுக்கு இத்தினை வியாக்கியனம்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணை, நீங்கள் கோடிட்டு காட்டியிருப்பது  தேசியம என்ற பண்பின்  உருவாக்கத்தின் இடம் என நினைக்கிறேன்.(மற்றது இது மு.திருநாவுக்கரசு அவர்களின் கருத்து )  கட்டுரையாளர் தேசியத்தினை பின்வருமாறு வரையறை செய்கிறார்.

எந்தவொரு பொது அடையாளத்தின் நிமித்தம் ஒரு மக்கள் கூட்டம் பெருமைப்படுகின்றதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பேரால் ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு அரசியற் சக்தியாகத் திரட்டக் கூடியதாக உள்ளதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பெயரால் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகின்றதோ அல்லது அவமதிக்கப்படுகின்றதோ அந்த ஒரு அல்லது பல பொது அடையாளங்களின் பாற்பட்ட ஒரு கூட்டுப் பிரக்ஞையே தேசியம். 

 

இது ஏற்றுக்கொள்ளகூடியதாகவும் இருக்கிறது. 

 

//அவ்வாறு முன்னரே பழமையதானதாயிருந்த அந்த இனத்தோடு அல்லது மொழியோடு ஜனநாயகம் எனும் புதிய அம்சம் சேரும்போது அது தேசியம் என்றாயிற்று.//

 

இந்த ஒரு வரி என்ன சொல்கிறது நேற்? ஜனநாயகம் சேரும்போதுதான் வருதாம்.. :unsure: அப்படியானால் ஜனநாயகம் சேராதவை தேசியம் அல்ல..

//அவ்வாறு முன்னரே பழமையதானதாயிருந்த அந்த இனத்தோடு அல்லது மொழியோடு ஜனநாயகம் எனும் புதிய அம்சம் சேரும்போது அது தேசியம் என்றாயிற்று.//

 

இந்த ஒரு வரி என்ன சொல்கிறது நேற்? ஜனநாயகம் சேரும்போதுதான் வருதாம்.. :unsure: அப்படியானால் ஜனநாயகம் சேராதவை தேசியம் அல்ல..

அண்ணா, இங்கே ஜனநாயகம் என்ற பதத்தின் சிக்கலான கருத்துருவாக்கம் தான் மயக்கத்தை தருகிறது என நினைக்கிறேன். வழி தவறி இருந்த அதிகாரம் சிறப்பான வடிவத்தை பெற்றுக்கொண்டது என்றும் அறிஸ்ரோட்டிலும்,

சமூக ஒப்பந்தம் ஒன்றினூடாக மக்களின் இறைமையை அரசு பெறுகின்றது அதனடிப்பைடையில் கட்டமைக்கப்படும் ஆட்சியே ஜனநாயகம் என்று ரூசோவும் கூறுகின்றனர். 

 

பழமையாக இருந்த மொழி அல்லது இனத்தோடு மேற்குறித்த ஜனாயகம் என்ற  பண்புகள் சேரும் போதில் தான் அது குறிப்பிட்ட ஒரு இனக்குழுமத்தின் இயல்பினை பிரதிபலிக்கிறது. 

அந்த தனித்துவமான இயல்பே தேசியம் என்று கொள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன். 

 

அண்ணா இது குறித்து விளக்கத்தினை பெற கட்டுரையாளரை தொடர்பு கொள்வோமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.