Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் அடம் பிடித்ததால்தான் தனி ஈழத்தைப் பிரிக்கவில்லை ராஜீவ்.. இளங்கோவன்

Featured Replies

ஈரோடு: பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது என்று புதுத் தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோ்டில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இப்படிப் பேசினார் ஈவிகேஎஸ். அவர் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. தற்போது கூட இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ. 48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது.

 

மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் தருவதுதான் அரசின் தலையாய கடமை. இதற்காகதான் மத்திய காங்கிரஸ் அரசு 87 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. ஆனால் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததால்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதாக எதிர்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஊழலை பற்றி யார் பேசினாலும் அதற்கு தகுதி வேண்டும். இப்போதைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விரைவில் சாசெய்யப்படும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் திமுக தலைவர் கூட்டணி பற்றி பேசுவார். காங்கிரஸ் தயவை நாடுவார். வெற்றி பெற்ற பின்னர் கூட்டணி இல்லை என்பார். கூட்டணியில் இருந்தபோதிலும் காங்கிரசை கருணாநிதி விமர்சித்தார். காரணம் காங்கிரசில் தட்டிக்கேட்க ஆளில்லை என்றார் அவர்.

http://tamil.oneindia.in/news/2013/09/01/tamilnadu-prabhakaran-has-be-blamed-the-failures-says-evks-elangovan-182543.html

  • தொடங்கியவர்
ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் தான் பிரிக்க முடியாமல் போய்விட்டது - EVKS.இளங்கோவன்    
1045085_647238681967748_105248565_n.jpg

//உன் சைசுக்கு இது பெரிய துண்டா தெரியல?....//

 
 

 

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். 

 

ஐயா இளங்கோவன். நாங்கள் உங்களை நம்ப விரும்புகிறோம். எங்களின் கனவு தமிழ் ஈழம். ஆர் குத்தியும் அரசியானால் சரி. ஆனால் நீங்கள் இப்படி சொல்லவதால் உங்களின் பழைய விசிறிகள் உங்கள் மீது கோபம் கொள்ளப்போகிறார்களே!

 

உயிரை கொடுத்தல்லாவா இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையும், சிங்களத்துடனான அயலுறவுக்கொள்கையும் பற்றி யாழில் பத்தி பத்தி எழுதியும், தட்டியும் கைவிரல்கள் நோவேறி ஒட்டதடம் போட்டு வைத்துக்கொண்டு சற்று பின்னால் நின்று ஆறுதலாக யாழை எட்டிப் பார்த்துக்கொண்டு யாழில் எப்ப வந்து திரும்ப எழுதலாம் என்று காவலிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இப்படி கையை விட்டு இந்தியாவுக்கு, தமிழீழத்துக்கு சுதத்ந்திரம் பெற்றுக்கொடுக்க ஆவல் இருந்தது என்று கூறி ஒரே கல்லாக தூக்கி போடுகிறீகள். அவர்களின் இதயம் சுக்கு சுக்கா வெடிக்கப் போகிறதே!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒன்றும் காலம் போகேல்லையே. இப்ப பிரபாகரன் இல்ல. அடம்பிடிக்க. அன்றிருந்த மிச்சாக்கள் இப்பவும் இருக்கினம். அவையிட்ட ஈழத்தை பிரிச்சு கொடுக்கிறது.

 

அன்று ஈழத்தை பிரிக்காததிற்கும் பிரபாகரன் தான் காரணம்.. இன்று பிரிக்கவும் அவர் தானா வேணும்..????!

 

முடியல்ல.. இவங்க காமடி. பிரபாகரனை வைச்சே இந்திய உபகண்ட அரசியல் நகர்ந்துகிட்டு இருக்குது. நம்மாக்கள் சிலருக்குத்தான் அந்தாளின் பவர் புரியல்ல..! :):rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய காங்கிரஸ் தமிழ் நாட்டில் இனிமேல் தலை தூக்க முடியாது.

ஹிந்தியர்களின் கணக்குப்படி எல்லாம் முடிந்து விட்ட பின்னரும் இவர் ஓலமிடுவதன் காரணம் என்ன ?

வரும் தேர்தலாக இருக்குமோ ???

  • கருத்துக்கள உறவுகள்
illankovan-seithy-150.jpg

பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழீழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தைப் பிரித்தால் நான்தான் அங்கு ஜனாதிபதியாக இருப்பேன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடம்பிடித்ததால் தமிழீழத்தை தனியாக பிரிக்க முடியாமல் போய்விட்டது' என்று இந்திய மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது. தற்போது கூட இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க 48 ஆயிரம் கோடி ரூபாவினை ஒதுக்கி 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

  

பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் ஜனாதிபதியாக இருப்பேன் என்று பிரபாகரன் பிடிவாதம் பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=91745&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களைப்போல் நாளுக்குநாள் பச்சோந்தியாக மாறி உப்புசப்பில்லாது இருக்கவேண்டுமாக்கும் 

  • தொடங்கியவர்

ஈழத்தைப் பிரித்தால் நான்தான் அங்கு ஜனாதிபதியாக இருப்பேன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடம்பிடித்ததால்... தமிழீழத்தை தனியாக பிரிக்க முடியாமல் போய்விட்டது' - மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

டேய் ,,,,, நீ என்ன மப்புல என்ன உளறுகிறாய் ????

உன்னைப்போல நாட்டு மக்களைச் சுரண்டி தின்றவர் அல்ல..
உன்னைப்போல நாட்டைக் கூறு போட்டு விற்றவர் அல்ல 
உன்னைப்போல தலையை வெட்டிய எதிரியிடம் கூனிக்குறுகி நின்றவர் அல்ல...
உன்னைப்போல தன் நாட்டு மக்களை நாய் போல வேட்டையாடியவர் அல்ல...
சொந்த மண்ணை மாற்றானுக்கு விட்டுக்கொடுத்தவர் அல்ல...

20 ஆண்டுகளாக தமிழீழ தேசத்தை ஆண்டுவந்தவர் பிரபாகரன்... தன் இரண்டு பிள்ளைகளையும் தாய்நாட்டுப் போரில் ஈடுபடுத்தியவர் 
எதிரி தேசத்து வீரர்களை மதித்தவர்.
பெண்களை சமமாய் நடத்தியவர்...
சாதியை, மதுவை ஒழித்தவர் 
பொருளாதாரத் தடை இருந்த போதும் மக்களுக்கு உணவளித்தவர்..

இன்னும் எத்தனையோ...... அவர் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட எந்த காங்கிரசு நாயிக்கும் இல்லை... ( நாய்கள் மன்னிக்கவும் )

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களை முட்டாள்களாக்க நினைக்கும் ஒரு கோணங்கியின் கோமாளித் தனமான கூற்று இது. தலைவர் ஒரு பொழுதும் பதவிக்காக ஆசைப்பட்டவர் இல்லை என்று இந்தக் கோமாளிக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் அநேகமாக அரிது!

  • கருத்துக்கள உறவுகள்
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது.

 

வரலாறு எப்படி மாறுகின்றது ...... :unsure: இது எப்போது நடந்தது ? 

தலைவர் ஒருபோதும் தான் அதிபராகவோ முதலமைச்சராகவோ நினைத்ததில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை அப்படி இருக்கையில் இந்த இளங்கோவன் ஏன் நடந்தவற்றை திரிவு படுத்துகின்றார். 

 

சோனியாவுடம் நல்ல பெயர் எடுக்கவா ?? அதற்க்கு எத்தனையோ வழி இருக்கின்றது இவரைப்போன்றவர்களுக்கு அதில் ஒன்றை தேர்ந்து எடுத்திருக்கலாம்.   

இந்தியா என்ன காரணத்துக்காக வரதரை அதிபராக்க முயன்றது? காரணம் சொல்லவில்லையே. அப்போது ஏன் தலைவர் தமிழீழ அதிபர்-பிரதமராக வந்திருக்க கூடாது என்கிறது இந்தியா?

 

இவர் இதை சொல்ல முதல் சிதம்பரத்துடன் பேசினாரா? போர் முடிந்தவுடன், இலங்கையுடன் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடிய காங்கிரஸ் சிதம்பரம், தாங்கள் சொல்லியபடி கேட்டு நடந்திருந்தால் பிரபாகரனை ஈழத்தின் முடிசூடா மன்னராகியிருப்போம் என்று சொன்னாரே? அதாவது சிதம்பரம் பிரபாகரனை தாம் சொல்வதை கேட்டு செய்ய வைத்தபின்னர், இளங்கோவன் அரவரை தள்ளி வைத்து இன்னொருவரை பதவியில் இருந்த முயன்றதாக சொல்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் கிடைச்சு இருந்தால் கூட அந்த நாட்டில் ஒரு சாதாரன ஒரு மனிதன் தான் அந்த நாட்டை ஆன்டு இருபார்...தலைவர் பணத்துக்கும் ஆசை பட்டது இல்லை...பதவிக்கும் ஆசை படுற ஆள் இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தைப் பிரித்தால் நான்தான் அங்கு ஜனாதிபதியாக இருப்பேன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடம்பிடித்ததால் தமிழீழத்தை தனியாக பிரிக்க முடியாமல் போய்விட்டது' என்று இந்திய மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகவல் வெளியிட்டுள்ளார். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களை முட்டாள்களாக்க நினைக்கும் ஒரு கோணங்கியின் கோமாளித் தனமான கூற்று இது. தலைவர் ஒரு பொழுதும் பதவிக்காக ஆசைப்பட்டவர் இல்லை என்று இந்தக் கோமாளிக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் அநேகமாக அரிது!

 

தமிழ் ஈழம் கிடைச்சு இருந்தால் கூட அந்த நாட்டில் ஒரு சாதாரன ஒரு மனிதன் தான் அந்த நாட்டை ஆன்டு இருபார்...தலைவர் பணத்துக்கும் ஆசை பட்டது இல்லை...பதவிக்கும் ஆசை படுற ஆள் இல்லை....

 

ஏதோ... ஒரு பத்திரிகைக்கு, தலைவர் பிரபாகரன் கொடுத்த பேட்டியில்....

"தமிழீழம் கிடைத்தவுடன்...  அதற்குப் பொறுப்பானவர்களிடம் கொடுத்து விட்டு, நானும் உங்களைப் போல் வேட்டி, சட்டையுடன்... சாதாரண குடிமகனாக வாழ விரும்புகின்றேன்." என்று பலவருடங்களுக்கு முன் கூறியதை வாசித்த நல்ல ஞாபகம் உள்ளது.

இவை... இளங்கோவன் போன்ற பம்மாத்து அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

அவர்கள் மொழியில்.... தமிழீழம் என்பது...  ஒரு வாக்கு வங்கியே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.