Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'13" ஆதரவுத் தீர்மானங்களால் அதிகாரங்கள் கிடைத்துவிடாது; வடக்கு கிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை என்கிறது அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 '13" ஆதரவுத் தீர்மானங்களால் அதிகாரங்கள் கிடைத்துவிடாது; வடக்கு கிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை என்கிறது அரசு 

13.jpg

"மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டா. 13ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதனூடாக இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது''  என்று அரசு நேற்று அறிவித்தது. வடக்கு கிழக்கு இணைப்பு இனி மேல்சாத்தியம் இல்லை என்றும் அது தெரிவித்தது.

காணி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலான உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புகள், 18ஆவது திருத்தம் ஆகியவற்றைக் கோடிகாட்டி கருத்து வெளியிட்டபோதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
13ஆவது திருத்தத்ததை பலப்படுத்த தீர்மானங்களை நிறைவேற்றுவதனூடாக இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும், இது விடயத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்­னயாப்பா, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலு வல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
இதன்போது, காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று ஊடவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை நாம் ஏற்கனவே அறிவித்து விட்டோம். இந்த அதிகாரங்கள் குறித்து இனி பிரச்சினை ஏற்படாது. 
 
காணி அதிகாரம் குறித்து உயர் நீதி மன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. அதனால் காணி அதிகாரம் குறித்து பிரச்சினை ஏற்படாது. அடுத்ததாக பொலிஸ் அதிகாரமானது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குக் கீழ்த் தான் இருக்கவேண்டும் என 18ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் பிரச்சினை ஏற்படாது.
 
இதேபோல், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் பிரச்சினை ஏற்படாது. இது விடயம் தொடர்பில் 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய அதை மேற்கொள்ள முடியாது''  என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்தார்.
 
வடக்கு, கிழக்கு மாகாணசபை இணைப்பு முறை தவறானது என்று தானே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங் கியுள்ளது என எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், "வடக்கு, கிழக்கு என்பது ஆரம்பத்தில் ஒரே மாகாணசபையாகவும், ஓர் ஆளுநரின் ஆட்சியின் கீழும் இருந்தது. 
 
ஆனால், தற்போது இவை இரண்டும் வெவ்வேறு மாகாணசபைகள். இரண்டு ஆளுநர்கள் இருக்கின்றனர். எனவே, வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படாது'' என்றார். 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=145402341405174523#sthash.9oDITiPN.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

அய்! அது தானே!

தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று, நம்மாளூ, மொகான் பீரீஸை சொல்ல வைத்தால், பிரச்சனை ஏற்படாது.

Edited by Nathamuni

மாகாணத்தில் சத்தியப் பிரமாணம் இன்னமும் எடுக்கவில்லை. அந்த நேரம் ஏற்படக்கூடிய சுமூக நிலையை மறுக்கவே இந்த முயற்சி. இது அதிகாரம் உள்ள அமைச்சர்களால் அதிகார பூர்வம் அற்ற முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. யார் யார் கொதித்தெழுவார்கள் என்றதை நாடி பிடித்துப்பார்த்துவிட்டு, சூடு அடங்கிய பின்னர்  தனது அதிகார பூர்வ அறிக்கையை அரசு வெளிவிடும்.

 

அரசியல் அமைப்பில் இருக்கும் உரிமை தமிழருக்கு மறுக்கப்படுகிறது. அதாவது இலங்கை மக்கள் வழங்கிய ஆணைக்கு மேலாக இலங்கை அரசு சென்றுவிட்டது. இலங்கை அரசை இனி ஜனநாயக முறையாக இலங்கை மக்களால் தெய்வு செய்யப்பட்ட அரசாக ஐ,நா. கருதக்கூடாது. 

 

இப்படி ஒரு நிலைமையை தெரிவுக்குழு முலம் கொண்டுவந்து சட்டப்படியாக மாற்ற அரசு முயன்றபோது தேவானந்த்தா எதிர்த்திருந்தார். சட்டத்திற்கு முரணாக சென்று நடந்துகொள்ளும் இதற்கு அவர் என்ன சொல்லப்போகிறார் என்பது சுவாரசியமாக இருக்கப்போகிறது.  இந்தக்கிழமைதான் மு.கா. 13ம் திருத்தத்தை முழுவதாக நிறைவேற்றக் கோரும் பிரேரணையை கிழக்கில் நிறைவேற்றி இருந்த்தது. அது வெறுமனவே வடக்கில் மு.கா. அடைந்த படு தோல்வியின் பிரதிபலிப்பா அல்லது உண்மையானதா என்றது இதற்கு கிழக்கு மாகாணத்தில் மு.கா. எப்படி நடந்து கொள்ளும் என்பதை பொறுத்து அறிந்து கொள்ள முடியும். சிங்கள அமைச்சர்கள்(இடதுசாரிகள்) சிலர் 13ம் திருத்தத்தை நீர்க்கப் பண்ணுவதை எதிர்த்தார்கள். இதனால் தெரிவுக்குழு சில இடர்ப்பாடுகளை கண்டிருந்தது. அவர்களின் முகங்களை தமிழர்கள் வடிவாக பார்த்துக்கொள்ள அரசு நல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கு. 

 

 

சல்மான் குர்திஷ் இலங்கை வருகிறார். அதன் பின்னர் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டையும் பாவிக்க முயலவேண்டும். தேர்தலைபற்றித்தான் ஐ.நா. மனிதரிமை உரிமைகள் சபை, LLRC அறிக்கை மூலமாக பேசியிருந்தது. அந்த அறிக்கையில் இருக்கும் மீதமானவை எல்லாம் GREY AREA. எனவே தேர்தல் பற்றிய விடையங்கள் அங்கே திரும்ப எழுப்பப்பட வேண்டும். அதாவது  கூட்டமைப்புக்கு தேர்தல் முடிவுகளை  மனித உரிமைகளை மேம்படுத்த பாவிக்க முயல்வதை  அரசு மறுப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் பெற்றுக்கொள்ளாமல் நிலமையில் சீர்த்திருத்தம் வராது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காணி பொலிஸ் வேணும் என்று கேட்ட்கும் நிலையில்தான் இந்தியா இப்போது நிக்கிறது. கூட்டமைப்பு தொடர்ந்து இதையே வலியுறுத்தி இந்த்ஹியாவை முடிந்த்ஹளவுக்கு இந்த நிலைப்பாட்டில் இறுக்கிப் பிடிக்க வைக்கோணும்.

இந்தியா இறுக்கிப் பிடித்த பின் இலங்கையில் எந்த கொம்பனும் முடியாது என்று சொல்ல முடியாது.

இப்போ இந்தியாவின் சொல்லை யார் சிரமேற்கொண்டு நடக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சமந்தன் சுழியர், இந்தியா எள் என்றால் எண்ணையாய் நிப்பார். இப்படி பட்ட நெளிவு சுலிவு தெரிந்த தலைவர்கள்தான் இப்போதைக்குத் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் சுழியர் மட்டுமல்ல.. எலிப் புளுக்கை வேற. நல்லா காய்வார்.. தன்ர குடும்பத்தை வாழ வைக்க..! சிங்கக் கொடிக்கு கீழ இருந்து.. சொற்றினை வேதியனும் பாடக் கூடியவர்... புத்தம் சரணம் கச்சாமேயும் பாடக் கூடியவர். வந்தே மாதரமும் பாடுவார்.

 

உவரை நம்பிப் பின்னால போனா.. கடைசியில் தமிழ் மக்களின் நெற்றியில் பட்டை நாமம் தான் மிஞ்சும்..! சம்பந்தன் கூடாரத்தை தூக்கி எறியும் காலம் நெருங்கிட்டுது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்...

 

[mediai]



டிஸ்கி:

அஜித்து விஜய் .. ஏனாம் இப்ப நமிதா கட்சியில் சேரப்போறாவாம் அது எந்த கட்சி என்று டீப் டிஸ்கஸன் போய்ட்டு இருக்கு.. இதெல்லாம் சரிப்பட்டு வராது.. நீங்க  நேராக கிந்தியாக்கிட்ட பேசி வாங்கிக்கலாம்.. டெல்லி சவுத் பிளாக்குல வெத்தல பாக்கு வச்சி கூப்பிடுறாங்க..பிளீஸ் கோ கெட்

13 என்ன 14, 15, - 20 எண்டு எல்லாமே கிடைக்கும்... எல்லாத்தையும் தட்டிலை வைத்து சரவதேசம் குடுக்கும்... அப்படி குடுக்க வைக்கிற திறமை கூட்டமைப்பின் தலைமைக்கு இருக்கு...

புலம்பெயர்ந்தவை (மகிந்தவை) புண்ணாக்காமல், போர்குற்றம் தனிநாடு எண்டு கேக்காமல் வேலைக்கு போய் நல்லா மாடுமாதிரி உழைச்சு காசுகளை ஊருக்கு இலவசமாக அனுப்பி வைச்சாலே போதும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.