Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 2

விளையாடி விளையாடித்  தமிழ் படிப்போம்

 

 

 

சொல்லதிகாரம்

 

 

ஒரு எழுத்துத் தனித்தோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்தோ ஒரு முளுப்பொருளைத் தருமாயின் அதற்குச் சொல் அல்லது பதம் எனப்பெயர்.
 

அதாவது சொல் என்பதற்கு அவசியம் அதன் பொருள் என்னவென்பதே.  எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று தொல்காப்பியரும்  எல்லாச் சொற்களும்  பொருள் உள்ள கருத்துள்ள சொற்களே  என்று  இலக்கண விதிகளும்  உண்டு.
 

இதற்கு விதிவிலக்கான சொற்களை அதாவது பொருள்  அற்ற சொற்களை அசைச் சொல்  எனவும் அழைத்தனர்.விதிவிலக்கான சொற்கள் என்பதற்கு சில உதாரணம் மியா எல்லா என்ற சொற்களும்  நாங்கள் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில்  ஹலோ என்ற சொல்லும் இன்னும் வேறுபலவும் இருக்கலாம்
மியா என்ற சொல் கேள் என்ற சொல்லுடன் சேர்ந்து வரும்போது கேண்மியா எனப்படும். இங்கே கேள் என்பதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியும். ஆனால் மியா என்றால் என்ன?? ஒன்றுமே இல்லை

 

அதேபோல எல்லா இளங்கிளியேஇன்னம் உறங்குதியோ என்ற ஆண்டாளின் திருப்பாவையில் இந்த எல்லா எனற் அசைச் சொல் இருக்கின்றது. இதற்கு அர்த்தம் இல்லை இன்று நாங்கள்  ஹலோ என்பதைப்போல பழங்காலத்தவர்கள் மற்றவர்களை அழைப்பதற்கு எல்லா என்ற அசைச்சொல்லைப் பயன்படுத்தினார்.

 

 

தமிழ் இலக்கணப்படி சொற்கள் ஒரு எழுத்தில் இருந்து
ஒன்பது எழுத்துக்கள் வரை கொண்டவையாக இருக்கின்றன.

ஒன்பது எழுத்துக்களுக்கு அதிகமான எழுத்துக்களைக் கொண்ட

விதிவிலக்கான சொற்களும் உள்ளன.
 

ஆ என்பது ஒரு எழுத்தாலான ஒரு  சொல்
இப்படிப்பல ஒரு எழுத்துச்சொற்கள் உள்ளன.
இப்படியான ஓர் எழுத்துச் சொற்களை இலக்கண அறிஞர்கள்

ஓரெழுத்தொருமொழி என அழைப்பர்.

 

ஓர் எழுத்துச் சொற்கள் 42 என நன்னூல் கூறுகின்றது.

 

உயிரெழுத்துக்கள்
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ

 

ம வர்க்கத்தில்
மா,மீ,மூ,மே,மை,மோ

 

த வர்க்கத்தில்
தா,தீ,தூ,தே,தை

 

ப வர்க்கத்தில்
பா,பூ,பே,பை,போ

 

ந வர்க்கத்தில்
நா, நீ,நே,நை,நோ

 

க வர்க்கத்தில்
கா,கூ,கை,கோ

 

வ வர்க்கத்தில்
வா,வீ,வை,வௌ

 

ச வர்க்கத்தில்
சா,சீ,சே,சோ

 

ய வர்க்கத்தில்
யா

 

என்பனவும்

 

குறில் எழுத்துக்களில்
 

நொ,து

 

என்பனவும் சேர்ந்து 42 ஓரெழுத்தொருமொழிகள் ஆகும் என நன்னூலார் கூறுகின்றார்.

 

 

சொற்களின் வகைகள்
 

சொற்கள் நான்கு வகைப்படும்
 

1.பெயர்ச்சொல்
2.வினைச்சொல்
3.இடைச்சொல்
4.உரிச்சொல்
என்பன அவையாகும்

 

அவற்றைப்  பற்றிப் பின்னர் அறிந்துகொள்வோம் 

 

 

 

பகுபத உறுப்புக்கள்

 

தமிழில் பெரும்பாலான சொற்கள் பிரிக்கப்படும்போதும் 

பொருள் தரும் வண்ணம் அமைந்துள்ளன.
அவ்வாறு பிரிக்கப்படும் வகையில் உள்ள சொற்களை
பகுபதம் என அழைப்பர். பகு என்றால் பிரி பதம் என்றால் சொல்.

 

சொல்  பகுக்க முடியாதவாறு அமைந்திருந்தால்
அவற்றைப் பகாப்பதம் என அழைப்பர்.

 

பகுபதங்களை ஆறுவகையாகப் பிரித்து அறிந்துகொள்ளலாம்
 

அவை
 

1.பகுதி
2.விகுதி.
3.இடை நிலை
4.சாரியை
5.சந்தி
6.விகாரம்
என்பனவாகும்.

 

பகுதி
 

சொல்லைப் பிரிக்கும்போது முதல் நிலையில் இருப்பது பகுதியாகும்.அப்பகுதி ஒரு முளுப்பொருளைத் தருவதாக அமைந்திருக்கும்  

 

விகுதி
 

ஒரு சொல்லைப் பிரிக்கும்போது இறுதியில் இருக்கும் சொல் விகுதி எனப்படும்.
 

இடை நிலை
 

ஒரு சொல்லை பகுதி , விகுதி எனப் பிரிக்கும்போது
இடையில் நிற்கும் உறுப்பிற்கு இடை நிலை என்று பெயர்.

 

சாரியை
 

இடை நிலைக்குப் பின்னரும் விகுதிக்கு முன்னருமாக வரும் பகுபத உறுப்பிற்கு சாரியை எனப்பெயர்

 

சந்தி
 

பகுபதங்களில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் உறுப்பிற்கு சந்தி எனப்பெயர்
 

விகாரம்
 

ஒரு சொல்லைப் பிரிக்கும்போது சந்தியாக வரும் எழுத்து இன்னொரு எழுத்தாக மாறலாம்,
பகுதியில் சில எழுத்துக்கள் திரிவுபடலாம் அல்லது இல்லாமற்போகலாம் இத்தகைய மாற்றத்தையே விகாரம் என அழைப்பர்.

Edited by வாத்தியார்

  • Replies 106
  • Views 36k
  • Created
  • Last Reply

வாத்தியார் ஒரு சின்ன சந்தேகம்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றால் கீ, கூ, கொர், உர், நச், உச் இப்படி ஒலியைக் குறிக்கும் சொற்கள் எதனுள் அடங்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஒரு சின்ன சந்தேகம்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றால் கீ, கூ, கொர், உர், நச், உச் இப்படி ஒலியைக் குறிக்கும் சொற்கள் எதனுள் அடங்கும்?

இதற்கு விதிவிலக்கான சொற்களை அதாவது பொருள்  அற்ற சொற்களை

அசைச் சொல்  எனவும் அழைத்தனர்.விதிவிலக்கான சொற்கள் என்பதற்கு சில உதாரணம் மியா, எல்லா,ஏய் என்ற சொற்களும்  ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு விதிவிலக்கான சொற்களை அதாவது பொருள்  அற்ற சொற்களை

அசைச் சொல்  எனவும் அழைத்தனர்.விதிவிலக்கான சொற்கள் என்பதற்கு சில உதாரணம் மியா, எல்லா,ஏய் என்ற சொற்களும்  ஆகும்

 

 என்ன வாத்தியார் நேரடியாக விடை கூறாமல் மழுப்புகிறீர்கள். என்னைப் போல ஆட்களுக்கு விளங்காதெல்லோ???

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 உணர்ச்சி ஒலிகள் :

1. மகிழ்ச்சி ஒலிகள் - ஆ, ஊ, ஏ, ஐ, ஆய், ஓ
2. நோவு ஒலிகள் - ஆ, ஈ, ஊ
3. வியப்பு - ஆ, ஆஆ, ஆகா, ஏ, ஐ. ஓ.
4. இழிவு ஒலிகள் - ஊ, ப
5. இரக்க ஒலிகள் - ஆ, ஆஆ, ஆவா
6. தெளிவு ஒலிகள் - ஓ, ஓஓ, ஓவோ, ஓகோ
 

 வாய்ச் செய்கை ஒலிகள் :
 

1. வாய் திறத்தல் - ஆ, அ
2. வவ்வுதல் - அவ், கவ், கவ்வு
3. சிரித்தல் - ஈ, இளி
 

குறிப்பு ஒலிகள் - சீ, ப
 ஒப்பு ஒலிகள் - காகா, (காகம்) சரசர (சரவு, அரவு)
 விளி ஒலிகள் - ஏ, ஏய், ஓ, ஏலா, எல்லா
 குழந்தை வளர்ப்பு ஒலிகள் - மம், மம்மு (சோறு) இங்கா (பால்

 

:D  :D

 

ஒரு ஒலி விடுபட்டுவிட்டது. படுக்கையறை  ஒலி :D :D  அஆஆ,

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒலி விடுபட்டுவிட்டது. படுக்கையறை  ஒலி :D :D  அஆஆ,

 

வாத்தியார்.. காளானை பிடிச்சு வெளியில விடுங்கோ.. :D

 

வாத்தியார்.. காளானை பிடிச்சு வெளியில விடுங்கோ.. :D

 

 

மன்னிக்கோணும் வாத்தியார் அது கிளர்ச்சி ஒலி தானே :D

 

ஒரு எழுத்துத் தனித்தோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்தோ ஒரு முளுப்பொருளைத் தருமாயின் அதற்குச் சொல் அல்லது பதம் எனப்பெயர்.

 

இந்த கருத்தை ஏற்க என் மனம் மறுக்கிறது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று சொன்ன தொல்காப்பியர் சொல் என்றால் என்ன என்பதை வரையறை ஏதும் செய்யவில்லை.  
 
பொருளை, வினையை குறிக்க பயன்பட்ட எழுத்துக்கள் சொற்களா? அல்லது ஒலியை குறிக்க பயன்பட்ட எழுத்துக்கள் சொற்களா? முதலில் ஒலிதானே பிறந்தது?  
 
ஓர் உணர்வை வெளிப்படுத்துகின்ற ஒலி, தனித்து நின்றோ பல ஒலிகள் தொடர்ந்து நின்றோ ஒரு அர்த்தத் தருவது சொல் என்று கூறலாமா ? அப்படி ஏன் கூறக் கூடாது ?
 
யாரவது கொஞ்சம் இந்த மண்டைக்குள் ஏறுகிற மாதிரி சொல்லுங்களேன். யோசிச்சு யோசிச்சு மண்டை கனத்துப் போச்சு...

 

இந்த கருத்தை ஏற்க என் மனம் மறுக்கிறது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று சொன்ன தொல்காப்பியர் சொல் என்றால் என்ன என்பதை வரையறை ஏதும் செய்யவில்லை.  
 
பொருளை, வினையை குறிக்க பயன்பட்ட எழுத்துக்கள் சொற்களா? அல்லது ஒலியை குறிக்க பயன்பட்ட எழுத்துக்கள் சொற்களா? முதலில் ஒலிதானே பிறந்தது?  
 
ஓர் உணர்வை வெளிப்படுத்துகின்ற ஒலி, தனித்து நின்றோ பல ஒலிகள் தொடர்ந்து நின்றோ ஒரு அர்த்தத் தருவது சொல் என்று கூறலாமா ? அப்படி ஏன் கூறக் கூடாது ?
 
யாரவது கொஞ்சம் இந்த மண்டைக்குள் ஏறுகிற மாதிரி சொல்லுங்களேன். யோசிச்சு யோசிச்சு மண்டை கனத்துப் போச்சு...

 

 

சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு.

சொல்லைத் தொல்காப்பியம் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் பொதுமொழி எனப் பாகுபடுத்திப் பார்த்தது.

சுமார் 1600 ஆண்டுகளுக்குப் பின்னர் மொழியை ஆராய்த நன்னூல் ஈழெழுத்தொருமொழி என்னும் பகுப்பைக் கைவிட்டுவிட்டு 'தனியெழுத்துப் பதம்', 'தொடரெழுத்துப் பதம்' என இரண்டாகப் பாகுபடுத்திக் கொண்டுள்ளது.

மேலும் நன்னுல் சொல்லை ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி எனப் பெயரிட்டுக்கொண்டு வேறு மூன்று வகையில் கண்டது.

தொல்காபியத்தில், சொல்லுக்கு விளக்கம் தரும் பல நூற்பாக்கள் சொல்லதிகாரம் என்னும் பகுதியில் உள்ளன. அவ்வதிகாரத்தில் முதல் நூற்பாவில்  எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

சொல் எனப் படுப பெயரே வினையே என்று ,

ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே என்று சொற்கள் அடிப்படையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டே வகை என்றும் பிற சொல் வகைகள் (உரிச்சொல், இடைச்சொல் முதலியன) இவை இரண்டிலிருந்து மருவி வருவனவே என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. காட்டாக கை, தை, மை, வா, போ. இவ்வகைச்சொற்களுக்கு ஓரெழுத்தொருமொழி என்று பெயர்.

பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். அதாவது சேரடியா ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும். எடுத்துக் காட்டாக நாய், மரம், வா.

தமிழ் இலக்கணம் (நூல்) தரப்பட்ட எடுத்துக்காட்டுகள்:

நிலம், நீர், மரம் - பொயர்ப்பகாப்பதம்

நட, வா, உண் - வினைப்பகாப்பதம்

மற்று, ஏ, ஒ - இடைப்பகாப்பதம்

உறு, தவ, நனி - உரிப்பகாப்பதம்

பகுக்கப்படும் இயல்புடைய சொற்கள் பகுபதம் ஆகும். பகுபதங்களை பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரண்டாக பகுக்கலாம். வினைப்பகுபதம் தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.

ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,

இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,

மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45)

எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்

பதமாம் அது பகாப்பதம் பகுபதம் என

இரு பால் ஆகி இயலும் என் (நன்னூல் 128)

ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா

இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்

மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்

வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே (நன்னூல் 259)

ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி

பல பொருளன பொது இருமையும் ஏற்பன (நன்னூல் 260)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில்  உயிர் எழுத்துக்களின் முன்னால் ஓர் என்னும் சொல் தானே வரவேண்டும். நீங்கள் ஒரு என்பதையும் எழுதி உள்ளீர்களே. விளக்க  முடியுமா வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த கருத்தை ஏற்க என் மனம் மறுக்கிறது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று சொன்ன தொல்காப்பியர் சொல் என்றால் என்ன என்பதை வரையறை ஏதும் செய்யவில்லை.  
 
பொருளை, வினையை குறிக்க பயன்பட்ட எழுத்துக்கள் சொற்களா? அல்லது ஒலியை குறிக்க பயன்பட்ட எழுத்துக்கள் சொற்களா? முதலில் ஒலிதானே பிறந்தது?  
 
ஓர் உணர்வை வெளிப்படுத்துகின்ற ஒலி, தனித்து நின்றோ பல ஒலிகள் தொடர்ந்து நின்றோ ஒரு அர்த்தத் தருவது சொல் என்று கூறலாமா ? அப்படி ஏன் கூறக் கூடாது ?
 
யாரவது கொஞ்சம் இந்த மண்டைக்குள் ஏறுகிற மாதிரி சொல்லுங்களேன். யோசிச்சு யோசிச்சு மண்டை கனத்துப் போச்சு...

 

 

சொல் - ஓர் எழுத்தோ அன்றி பல எழுத்துக்களோ சேர்ந்து ஒரு கருத்தை விளக்கி நிற்பது சொல்லாகும். சில சொற்கள் எக்கருத்தையும் வலியுறுத்தாவிட்டாலும் சொல்லை அழகுபடுத்தச் சொல்லுடன் சேர்ந்து வரும். எடுத்துக்காட்டு : ஆண்டுதோறும், மற்று போன்ற சொற்கள். இவை இடைச் சொற்கள் எனப்படும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்! நான் பாஞ், உள்ளேன் ஐயா! :D 

 

நோவு ஒலிகள் - , , என்பனதான் எனக்கு வியப்பாகவும், புரியாமலும் இருக்கிறது வாத்தியார். :o 

 

எனக்கு நொந்தால் நான் 'ஐயோ ...!'  என்றுதான் கத்துறனான். இனிமேல் ஏதேனும் நோ ஏற்பட்டால் ஆ, , என்று கத்தி நான் தமிழ்வழியில் நடப்பேன் என இன்றுமுதல் உறுதி எடுத்துள்ளேன். :D 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாசி மாசம் ஆளான பொண்ணு பாடலில் வரும் "ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.." என்ன ஒலி வாத்தியார்?? :rolleyes::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாசி மாசம் ஆளான பொண்ணு பாடலில் வரும் "ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.." என்ன ஒலி வாத்தியார்?? :rolleyes::D

 

உந்த, உப்பிடியான டவுட்டுக்குகளுக்கு வாத்தியார் திரும்பி நிக்கவிட்டு துவரம்கேட்டியாலை இரண்டுபோட பதில் தானாய் வரும் :D .....கோவிக்கக்கூடாது சொந்த அனுபவப்பா :(

  • கருத்துக்கள உறவுகள்

உந்த, உப்பிடியான டவுட்டுக்குகளுக்கு வாத்தியார் திரும்பி நிக்கவிட்டு துவரம்கேட்டியாலை இரண்டுபோட பதில் தானாய் வரும் :D .....கோவிக்கக்கூடாது சொந்த அனுபவப்பா :(

எல்லாம் வாத்தியார் தூரவா இருக்கிறார் என்கிற தைரியம்தான்.. :unsure::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 
பொருளை, வினையை குறிக்க பயன்பட்ட எழுத்துக்கள் சொற்களா? அல்லது ஒலியை குறிக்க பயன்பட்ட எழுத்துக்கள் சொற்களா? முதலில் ஒலிதானே பிறந்தது?  
 
ஓர் உணர்வை வெளிப்படுத்துகின்ற ஒலி, தனித்து நின்றோ பல ஒலிகள் தொடர்ந்து நின்றோ ஒரு அர்த்தத் தருவது சொல் என்று கூறலாமா ? அப்படி ஏன் கூறக் கூடாது ?
 

 

எழுதப்படுவதால் எழுத்தாகின்றன.

எழுதப்படுவதற்கு முன்னர் ஒலிகளாக இருக்கின்றன.

 

மொழிமுதற் காரண மாமணுத் திரளொளி

எழுத்தது முதல்சார் பெனஇரு வகைத்தே

 

என நன்னூல் கூறுகின்றது.

 

சொல்லிற்கு  முதற்காரணம் எழுத்துப்போல எழுத்திற்கு முதற்காரணம் ஒலியாகின்றது.

   

ஒலிக்கூட்டத்தின் செயல் எழுத்தானது போல

எழுத்துக் கூட்டங்கள் சொல்லானது என்கின்றது

 

தொல்காப்பியர் எழுத்து என்று கூறியதை  மொழி ஆராய்ச்சியாளர்கள் :rolleyes: ஒலியன் என அழைக்கின்றனர்.

 

சொல்லின் உறுப்பாகிய எழுத்துக்களின் மிகச்சிறிய கூறே ஒலியன் ஆகும்

சுருங்கக்கூறின் சொல்லிற்கு அடிப்படையான மிகச்சிறிய ஒலிக்கூற்றினை ஒலியன் எனக்கூறலாம்

 

அல்லது வாயிலிருந்து வெளிப்படுத்தப்படும் ஒலிக் கூறுகளுள் , சொல் உருவாகுவதற்கு அடிப்படையான மிகச் சிறிய கூறு எனவும் கூறலாம்.

 

ஒலிகள் எழுத்துக்களின் கூறுகளே தவிர எழுத்துக்களோ அல்லது எழுத்துக் கூட்டங்களோ ஆகாது என்பது எனது கருத்து

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்! நான் பாஞ், உள்ளேன் ஐயா! :D 

 

நோவு ஒலிகள் - , , என்பனதான் எனக்கு வியப்பாகவும், புரியாமலும் இருக்கிறது வாத்தியார். :o 

 

எனக்கு நொந்தால் நான் 'ஐயோ ...!'  என்றுதான் கத்துறனான். இனிமேல் ஏதேனும் நோ ஏற்பட்டால் ஆ, , என்று கத்தி நான் தமிழ்வழியில் நடப்பேன் என இன்றுமுதல் உறுதி எடுத்துள்ளேன். :D 

 

யாரிடமாவது அடிபட்டு நோ என்றாலும் ஐயோ என்றா கத்துவீர்கள் பாஞ்ச்??????  உதாரணம் : மனைவி ,வாத்தியார்

 

என் கேள்விக்கு என்ன பதில் வாத்தியார் ???

 

ஒலிக்கூட்டத்தின் செயல் எழுத்தானது போல

எழுத்துக் கூட்டங்கள் சொல்லானது என்கின்றது

 

தொல்காப்பியர் எழுத்து என்று கூறியதை  மொழி ஆராய்ச்சியாளர்கள் :rolleyes: ஒலியன் என அழைக்கின்றனர்.

 

சொல்லின் உறுப்பாகிய எழுத்துக்களின் மிகச்சிறிய கூறே ஒலியன் ஆகும்

சுருங்கக்கூறின் சொல்லிற்கு அடிப்படையான மிகச்சிறிய ஒலிக்கூற்றினை ஒலியன் எனக்கூறலாம்

 

அல்லது வாயிலிருந்து வெளிப்படுத்தப்படும் ஒலிக் கூறுகளுள் , சொல் உருவாகுவதற்கு அடிப்படையான மிகச் சிறிய கூறு எனவும் கூறலாம்.

 

ஒலிகள் எழுத்துக்களின் கூறுகளே தவிர எழுத்துக்களோ அல்லது எழுத்துக் கூட்டங்களோ ஆகாது என்பது எனது கருத்து

 

ஆகா !! அற்புதமான விளக்கம். சொல்லின் அடிப்படை ஒலியன்கள் என்று கூறிய வாத்தியாருக்கு எனது நன்றிகள். ஆனால் ஒலியன்கள் சொற்களின் கூறாகலாமே தவிர சொல்லாக முடியாது என்பதில் உடன்பட முடியவில்லை.

 

அதிக கேள்விகள் கேட்டு வகுப்பின் போக்கை மட்டுப்படுத்த விரும்பவில்லை :)

 

விளக்கம் சொன்ன கோவுக்கும், சுமேரியருக்கும் நன்றி.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெயர்ச்சொற்கள்
 

ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொற்கள் பெயர்ச்சொற்கள் எனப்படும்.
பெயர்ச்சொற்கள் ஆறுவகைப்படும்
 

1.பொருளாகு பெயர்
2.இடவாகு பெயர்
3.காலவாகு பெயர்
4.சினையாகு பெயர்
5.பண்பாகு பெயர்
6.தொழிலாகு பெயர்

என்பனவே அவை ஆறும்
 
 

 

திணை

 

திணை என்பது பல பொருளைக் கொண்ட ஒரு சொல்
அதற்கு ஒழுக்கம், குலம், இனம் எனப் பல வகைப் பொருட்கள் உண்டு
 

இலக்கணத்தார் இனம் என்ற அடிப்படையில்  திணை என்பதை இரண்டாக்கப் பிரித்து வைத்துள்ளார்கள்
 

1 உயர்திணை
 

சிறந்த ஒழுக்கமும் பகுத்தறிவும் உயர்ந்த உள்ளமும் கொண்ட பொருட்களை உயர்திணை என்பர்.
 

மனிதன் கடவுள் புலவர், பண்டிதர், உபாத்தியாயர்
 

 

2.அஃறிணை
 

சிறந்த ஒழுக்கமும் பகுத்தறிவும் உயர்ந்த உள்ளமும் இல்லாத  பொருட்களை அஃறிணை என்பர்
 

கிளி,மாடு,நூல்,நிலம் புத்தகம்

 

 

 

பால்
 

இரு வகையான திணைகளிலும் அடங்கிய எல்லாப்பொருட்களையும்

ஐம்பால்களாகப் பிரித்து வைத்துள்ளனர் முன்னோர்கள்
 

அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
என்பனவாகும்
 

ஆண்பால் பெண்பால் பலவின்பால் என்பன உயர்திணைக்குரியவையாகும்

 

இறைவன் உயர்திணை ஆண்பால்
அரசி உயர்திணைப் பெண்பால்

ஆடவர், மெண்டிர்,காளையர்.மக்கள் என்பன உயர்திணைப் பலவின்பால்

 

 

அஃறிணையில் ஒரு தனிப் பொருளைக் குறிப்பதற்கு ஒன்றன்பால் எனப்படும்
 

மிருகம்,புலி,காவடி

 

அஃறிணையில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பதற்கும்
பல பொருட்களைக் கூட்டமாகக் குறிப்பதற்கும் பலவின்பால் எனப்படும்
 

மான்கள் குயில்கள் புத்தகங்கள்
மந்தை பட்டி குவியல் விலங்குகள்

 

எண்
 

பொருட்களின் எண்ணிக்கையைத் தெரிவிப்பது எண் எனப்படும்

 

1. ஒருமை எண்
 

திணை எதுவாக இருந்தாலும் ஒரு பொருளைக் குறிக்க வரும்

பெயர் ஒருமை எண் எனப்படும்.

 

2.பன்மை எண்

 

 திணை எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக்

குறிக்க வரும் பெயர் பன்மை எண் எனப்படும்.

 

வாத்தியார் ஐயா இந்த அமலாப்பால் ஆவின்ப்பால் என்ன திணை என்பால் :unsure: :unsure: ??என்ரை டவுட்டை கிளியர் பண்ணுங்கோ :lol: :lol: :D .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழில்  உயிர் எழுத்துக்களின் முன்னால் ஓர் என்னும் சொல் தானே வரவேண்டும். நீங்கள் ஒரு என்பதையும் எழுதி உள்ளீர்களே. விளக்க  முடியுமா வாத்தியார்.

 

ஒன்று எனும் இலக்க எண்  இலக்கண விதியின் காரணமாக அதனுடன் சேரும் சொல்லைப் பொறுத்து ஒரு, ஓர் என விகற்பித்து வருகின்றது.

 

இவை இரண்டும் தனியே வரமாட்டாது.

எப்பொழுதும் பெயர்ச்சொற்களின் முன்னரே வரும்.

 

இவற்றுடன் சேரும் சொல் உயிரெழுத்தில் ஆரம்பித்தால் ஓர் என வரும்

 

ஒன்று (ஓர்)+ எழுத்து =ஓரெழுத்து ,

ஒன்று (ஓர்)+ ஊரில் =ஓரூரில் ,

ஒன்று (ஓர்)+ ஏணி  =ஓரேணி

என்பன உதாரணங்கள்

 

 

இவற்றுடன் சேரும் சொல் மெய்யெழுத்துடன் கூடிய உயிர்மெய்யெழுத்தாக  ஆரம்பித்தால் ஒரு  என வரும்

 

ஒன்று(ஒரு )+ கப்பல் = ஒருகப்பல்

ஒன்று (ஒரு)+ தட்டு = ஒருதட்டு

ஒன்று (ஒரு)+ மரம் = ஒருமரம்

என்பன உதாரணங்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஐயா இந்த அமலாப்பால் ஆவின்ப்பால் என்ன திணை என்பால் :unsure: :unsure: ??என்ரை டவுட்டை கிளியர் பண்ணுங்கோ :lol: :lol: :D .

 

என்ன கோமகன் இந்தச் சின்ன விசயத்தைக்கூடத் தெரியாமல் வாத்தியாரிட்டை கேட்டுக்கொண்டிருக்கிறியள். :(  நான் உங்களை என்னமோ என்று நினைத்திருந்தேன். :icon_idea:  அமலாவின்பால் - தாய்ப்பால், :wub:  ஆவின்பால் -  பசுப்பால். :D

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடமாவது அடிபட்டு நோ என்றாலும் ஐயோ என்றா கத்துவீர்கள் பாஞ்ச்??????  உதாரணம் : மனைவி ,வாத்தியார்

 

 

வாத்தியாரிடம் அடிவாங்குவது ஒன்றும் பெரிய நோ இல்லை சுமேரியர், :D  மனைவியிடம் அடிவாங்குவதுதான் ஐயோ! தாங்க முடியவில்லை!. :o  நாங்கள் இருப்பது பெரீ......ய வீடு. ஐயோ!, ஐயோ! என்று கத்தினாலும் பக்கத்திலுள்ள எந்தச் சின்னவீடுகளுக்கும் கேட்காது. :(  ஐயோ! அதுதான் பெரிய கொடுமை!. மெசொபொத்தேமியா சுமேரியர் :huh: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பிற்கு வருகை தந்த மாணவர்களுக்கு வாத்தியாரின் பணிவான வணக்கங்கள்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.